மூன்றாம் பருவம் – அலகு 3- வினாக்களுக்கான விடைகள்

 மூன்றாம் பருவம்

அலகு – 3 – குறுவினாக்கள் மற்றும் விடைகள்

  • ஐரோப்பியர் காலம் 
    • கி.பி. 16 – கி.பி. 20
  • இராபர்ட் டி நொபிலி குறித்து எழுதுக. 
    • இத்தாலியிலிருந்து கி.பி.1606இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
    • தமிழையும் வடமொழியையும் கற்று, தன் பெயரை ‘தத்துவ போதகர்’ என்று மாற்றிக் கொண்டார்.
    • ‘முதல் உரைநடை நூலைத் தமிழில் எழுதினார்’.
  • தத்துவப்போதகர் என்று அழைக்கப்பட்டவர் யார்? 
    • தத்துவப்போதகர் என்று அழைக்கப்பட்டவர் இராபர்ட் டி நொபிலி ஆவார்.
  • இராபர்ட் டி நொபிலி எழுதிய நூல்களைப் பாட்டியலிடுக. 
    •  மந்திர மாலை
    • ஆத்தும நிரணயம்
    • கடவுள் நிர்ணயம்
    • நீதி மாலை
  • ஹென்றிக் பாதிரியார் குறித்து எழுதுக.
    • போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து தமிழகக் கடற்கரை மக்களுக்குத் தொண்டு புரிய வந்தவர்.
    • முதன் முதலில் தமிழ் எழுத்துக்களால் ‘விவிலியத்தை’ அச்சேற்றியதால் இவர் ‘தமிழ் அச்சின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
    • இயற்றிய நூல்கள்: தம்பிரான் வணக்கம், கிரீசித்தாணி வணக்கம்.
  • வீரமாமுனிவர் குறித்து வரைக.
    • இத்தாலியில் பிறந்த கான்சடன்டைன் ஜோசப் பெஸ்கி, 1710இல் தமிழகம் வந்தார்.
    • ‘சுப்பிரதீபக் கவிராயர்’ என்பவரிடம் தமிழ் கற்று, தன்பெயரை ‘வீரமாமுனிவர்’ என மாற்றிக் கொண்டார்.
    • எழுதிய நூல்கள்:
      • தொன்னூல் விளக்கம்
      • சதுரகராதி
      • பரமார்த்த குரு கதை
      • தேம்பாவணி
  • வீரமாமுனிவர் இயற்றிய நூல்களில் எவையேனும் நான்கினை எழுதுக. 
    • தொன்னூல் விளக்கம்
    • சதுரகராதி
    • பரமார்த்த குரு கதை
    • தேம்பாவணி
  • சுவடி தேடும் சாமியார் என்று அழைக்கப்பட்டவர் யார்? 
    • சுவடி தேடும் சாமியார் என்று அழைக்கப்பட்டவர் வீரமாமுனிவர் ஆவார்.
  • ஜி. யு. போப் பற்றி எழுதுக.
    • 1839இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்
    • தனது கல்லறையின்மீது ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று செதுக்கப்படவேண்டும் என எழுதி வைத்தார்.
    • 1886இல் முதன் முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
    • நாலடியார், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • ஜி. யு. போப் மொழிபெயர்த்துள்ள நூல்களைப் பட்டியலிடுக.
    • திருக்குறள்
    • திருவாசகம்
    • நாலடியார்
    • புறப்பொருள் வெண்பாமாலை
    • புறநானூறு 
  • டச்சுக்காரர்களின் வர்த்தக மையங்கள் யாவை? 
    • பழவேற்காடு 
    • பாட்னா
    • சூரத்
    • காசிம்பஜார்
    • சின்சுரா
  • டேனிஸ்காரர்கள் குறித்து எழுதுக.
    • டென்மார்க் நாட்டைச் சார்ந்த மக்கள் ‘டேனியர்கள்’ (டேனிஸ்காரர்கள்) என்று அழைக்கப்பட்டனர்.
    • கி.பி.1620இல் தரங்கம்பாடியிலும், 1676இல் வங்காளத்தில் உள்ள சீராம்பூரிலும் ‘வாணிப மையங்களை’ ஏற்படுத்தினர்.
  • பிரெஞ்சுகாரர்களின் முதல் வர்த்தக மையம்  எது?
    • சூரத்
  • ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் எப்போது யாரால் தொடங்கப்பட்டது? 
    • நூறு லண்டன் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து ‘ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி’யை தோற்றுவித்தனர். இக்கம்பெனிக்கு 31.12.1600 இல் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வியாபாரம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார்.
  • பாளையக்காரர்களின் அதிகார வரம்புகளைப் பட்டியலிடுக.
    • நிதித்துறை
    • நீதித்துறை
    • இராணுவம்
  • திருநெல்வேலி கூடிணைப்பு குறித்து எழுதுக.
    • ஆங்கிலேயரை எதிர்த்து தமிழகத்தில் மானத்தைக் காக்கவேண்டும் என வீரபாண்டியன் எண்ணி, திருநெல்வேலி பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு கூட்டணியை உருவாக்கினார்.
    • இதில் பாஞ்சாலங்குறிச்சி, சாத்தூர், குளத்தூர், நாகலாபுரம், மன்னார் கோட்டை, கோலார் பட்டி, கடல்குடி, ஏழாயிரம் பண்ணை, சென்னல்குடி ஆகிய பாளையங்கள் அடங்கும்.
  • வேலுநாச்சியார் குறித்து எழுதுக.
    • 1746இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்து வடுகநாதத் தேவருக்கு மகளாகப் பிறந்த வேலுநாச்சியார் பல மொழிகள் கற்று, ஆயுதப்பயிற்சி பெற்றார்.
    • மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்றுதிரட்டி ஓர் ‘எதிர்ப்புப்படையை’ உருவாக்கினர். வேலுநாச்சியார் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
    • ராணி வேலுநாச்சியார் சிவகங்கை சீமையின் முதல் ராணியாக முடிசூட்டப்பட்டார்.
    • இவர் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
  • மருதுபாண்டியர் குறிப்பு வரைக.
    • கி.பி. 1780 முதல் 1801 வரை சிவகங்கைச் சீமையை ஆண்டவர்கள் மருதுசகோதரர்கள் ஆவார்.
    • சின்னமருது, பெரியமருது என அழைக்கப்படும் இவர்களின் புரட்சிக் கோட்டையாக ‘காளையார் கோவில்’ விளங்கியது.
    • ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சியில் அனைவரும் இணைந்து செயல்பட மருதுசகோதரர்கள் ஒரு ‘சிவகங்கைக் கூட்டிணைப்பை’ உருவாக்கினர்.
  • திண்டுக்கல் கூடிணைப்பு குறித்து எழுதுக.
    • திண்டுக்கல் கூட்டிணைப்பில் தாராபுரம், தேவதானம், கரூர், கன்னிவாடி, காங்கேயம், கொழுமம், சங்ககிரி, மணப்பாறை ஆகிய பாளையங்கள் இருந்தன.
  • வேலூர் கலகம் குறித்து எழுதுக.
    • ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் புகுத்திய சில கட்டுப்பாடுகள் (இந்து வீரர்கள் சமயக் குறிகளை இடக்கூடாது, முஸ்லிம் வீரர்கள் தாடி மீசைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்) ராணுவ வீரர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தின. திப்புவின் பிள்ளைகளை ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினர்.
    • 9.7.1806இல் வேலூர் கோட்டையில் நடைப்பெற்ற திருமணத்தில் கலந்துகொள்ள வீரர்கள் கூடினர்.
    • நள்ளிரவில் இங்கு கூடியிருந்த வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களைத் தாக்கி ஜீலை 10ஆம் நாள் கோட்டையைக் கைப்பற்றினர்.
  • வ. உ. சிதம்பரம்பிள்ளை குறிப்பு வரைக.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் 5.9.1872இல் பிறந்தார்.
    • ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும், ‘கப்பலோட்டி தமிழன்’ என்றும் அழைக்கப்பட்டார்.
    • சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்து, தூத்துக்குடி – கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கினார்.
  • வ. உ. சிதம்பரம்பிள்ளையின் சிறப்புப்பெயர்களை எழுதுக. 
    • செக்கிழுத்த செம்மல்
    • கப்பலோட்டி தமிழன் 
  • பாரதியார் குறித்து எழுதுக. 
    • எட்டயபுரத்தில் 11.12.1882இல் பிறந்தார்.
    • சுதேசமித்ரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1907இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.
    • 1907இல் தமிழ் வாரப் பத்திரிக்கையான ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியரானார். அதே சமயத்தில் ‘பாலபாரதம்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டார்.
  • பாரதியார் நடத்திய  இதழ்களின் பெயர்களை எழுதுக.  
    • இந்தியா
    • பாலபாரதம்
  • திருப்பூர் குமரன் குறித்து எழுதுக.
    • ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் 1904இல் பிறந்தார்.
    • சாகும் தருவாயில் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
    • இவர் தமிழக வரலாற்றில் ‘கொடிகாத்த குமரன்’ என்று போற்றப்படுகிறார்.
  • காமராஜர் குறிப்பு வரைக.  
    • விருதுநகரில் 15.7.1903இல் காமராஜர் பிறந்தார்.
    • 1924இல் ‘வைக்கம் சத்தியாகிரகம்’ போராட்டத்தில் ஈடுபட்டதின் மூலம் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
    • காமராஜர் தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார்.
    • மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளைத் திறந்தது, இலவச கல்வி வழங்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக் கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பெருவினாக்கள்

  • ஐரோப்பியர்களின் இலக்கியப் பணி குறித்து எழுதுக. (அல்லது) ஐரோப்பியர் வரலாறு குறித்து கட்டுரை வரைக.

ஐரோப்பியர் கால வரலாறு

  • இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே வாணிபத் தொடர்பு அலெக்ஸாண்டர் வருகையால் மேலும் வளர்ச்சி அடைந்தது.
  • பட்டு, நறுமணப் பொருள்கள், மஸ்லின் கைத்தறி ஆடைகள், மிளகு, மிளகாய், பட்டை, இஞ்சி, தேங்காய், சர்க்கரை, சாயப்பொருள்கள் போன்றவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின.
  • முக்கிய மூன்று வாணிப வழித்தடங்கள் இருந்தன: 
    • ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் காஸ்பியன் கடல் வழியாக கருங்கடல், தரைப்பகுதி.
    • பாரசீகம் மற்றும் சிரியா வழியாக மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா.
    • அரபிக்கடல், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக கடல்மார்க்கம்.
  • கி.பி.1453இல் ஆட்டோமானிய துருக்கியர்கள் ‘காண்ஸ்டாண்டி நோபிள் நகரத்தைக்’ கைப்பற்றி ஐரோப்பிய வணிகர்களுக்கு இடையூறுத் தந்தனர் மற்றும் வாணிபத்திற்குத் தடைவிதித்தனர்.
  • இதனால் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு புதிய கடல்வழி காணும் முயற்சியில் இறங்கினர்.

ஐரோப்பியர் காலம்

  • கி.பி. 16இல் தொடங்கி கி.பி.20 வரை உள்ள காலப்பகுதி இது.
  • ஐரோப்பியாவில் இருந்து வந்த கிறித்தவர்கள் தமிழ்நாட்டில் சமயப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் வந்தனர்.
  • தமிழ் எழுத்து வடிவில் இருந்த குறைபாடுகளை நீக்கி தமிழ்மொழிக்கும், தமிழ் உரைநடைக்கும் மிகப்பெரிய தொண்டு செய்தனர்.

அச்சு இயந்திரமும் அச்சேறிய நூல்களும்

  • ‘கார்த்தில்யா’ (லிஸ்பன், 1554) – ‘முதல் தமிழ் நூல்’ ஆகும்; இதில் தமிழ் ஒலிகளைச் குறிக்க உரோமருடைய எழுத்துக்கள் கையாளப்பெற்றிருந்தன.
  • ‘தம்பிரான் வணக்கம்’ (கொல்லம், 1577) – தமிழில் இரண்டாவதாக அச்சேறிய நூல்.
  • ‘கிரிசித்தியாலி வணக்கம்’ (கொச்சி, 1579) – தமிழில் மூன்றாவதாக அச்சேறிய நூல்.

இராபர்ட்-டி-நோபிலி

  • இத்தாலியிலிருந்து கி.பி.1606இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
  • தமிழையும் வடமொழியையும் கற்று, தன் பெயரை ‘தத்துவ போதகர்’ என்று மாற்றிக் கொண்டார்.
  • ‘முதல் உரைநடை நூலைத் தமிழில் எழுதினார்’.
  • இவர் இயற்றிய நூல்களில் சில: ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிரணயம், சத்திய வேத இலட்சணம், கடவுள் நிர்ணயம், தத்துவ கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம்.

ஹென்றிக் பாதிரியார்

  • போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து தமிழகக் கடற்கரை மக்களுக்குத் தொண்டு புரிய வந்தவர்.
  • முதன் முதலில் தமிழ் எழுத்துக்களால் ‘விவிலியத்தை’ அச்சேற்றியதால் இவர் ‘தமிழ் அச்சின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
  • இயற்றிய நூல்கள்: தம்பிரான் வணக்கம், கிரீசித்தாணி வணக்கம்.
  • இவரது 70 மடல்களின் தொகுதி ‘Documenta Indica’ ஆகும்.
  • ஐரோப்பியருள் முதன் முதலில் தமிழ் கற்றுத் தமிழ் நூலை அச்சேற்றிய பெருமைக்கு உரியவர்.

சீகன்பால்கு

  • ஜெர்மனியில் 10.7.1682இல் பிறந்தார்.
  • தமிழ்நாட்டிற்கு வந்த ‘முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர்’ ஆவார்.
  • ‘தமிழ் மொழியே எனக்கு தாய்மொழியாகிவிட்டது’ என்று பெருமையாகப் பதிவுச் செய்தார்.
  • இந்தியாவில் முதன் முதலாகத் தமிழ்மொழியில் புதிய ஏற்பாட்டினைக் காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டார்.
  • திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திசூடி ஆகியவற்றை ஓலைச்சுவடியில் இருந்து காகிதத்தில் அச்சடித்துப் புத்தகமாக வெளியிட்டார்.
  • தரங்கம்பாடியில் சுமார் 300 நூல்கள் அடங்கிய நூலகத்தை உருவாக்கினார்.
  • பொறையாரில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, தமிழ் எழுத்துகள் தயாரிக்கும் கூடம் ஆகியவற்றை உருவாக்கித் தமிழ்நாட்டில் ‘அச்சுப்பண்பாடு’ வளரக் காரணமாக இருந்தார்.
  • தொழிலாளர்களுக்காக முதல் மிஷன் பாடசாலையையும் குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார்.
  • இந்தியாவில் பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கப் பெண்களுக்கெனத் தனியாக ‘முதல் பள்ளிக்கூடத்தை அமைத்தார்’; விதவைகளை ஆசிரியர்களாக்கி ‘சமுதாய புரட்சிக்கு’ வித்திட்டார்.
  • இலத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம், தமிழ் ஜெர்மன் அகராதி, கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி போன்ற நூல்களை இயற்றினார்.
  • இந்திய மொழிகளில் தமிழில் ‘வேதாகமத்தை’ முதன் முதலில் மொழிபெயர்த்து அச்சடித்து நூலாகத் தந்தவர்.
  • ‘இந்தியாவின் அச்சகத் தந்தை’ என போற்றப்படுகிறார்.

வீரமாமுனிவர்

  • இத்தாலியில் பிறந்த கான்சடன்டைன் ஜோசப் பெஸ்கி, 1710இல் தமிழகம் வந்தார்.
  • ‘சுப்பிரதீபக் கவிராயர்’ என்பவரிடம் தமிழ் கற்று, தன்பெயரை ‘வீரமாமுனிவர்’ என மாற்றிக் கொண்டார்.
  • உயிர்எழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துக்களில் நெடில் ஓசையை குறிப்பதற்காக ‘ஆ, ஏ’ எனவும், நெட்டெழுத்து கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே,பே) வழக்கத்தையும் உண்டாக்கினார். இவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
  • ‘தொன்னூல் விளக்கம்’ என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
  • ‘முதல் தமிழ் அகரமுதலி’யான தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார்.
  • ‘சதுரகராதி’ உருவாக்கி நிகண்டுக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
  • பரமார்த்த குரு கதை, தேம்பாவணி உள்ளிட்ட நூல்களை இயற்றினார்.
  • பேச்சு வழக்குத் தமிழிலும் உரைநடை எழுதியதால் ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என அழைக்கப்பட்டார்.
  • பட்டங்கள்: ‘சுவடி தேடும் சாமியார்’, ‘தமிழ் அகராதியின் தந்தை’, ‘செந்தமிழ் தேசிகர்’.

பெப்ரிஷியஸ்

  • ஜெர்மனியிலிருந்து 1740இல் இந்தியாவிற்கு வந்தார்.
  • தமிழகத்தில் 50 ஆண்டுகள் அருட்பணி புரிந்த பன்மொழிப் புலவர்.

டாக்டர் கால்டுவெல்

  • அயர்லாந்து நாட்டில் 7.5.1814இல் பிறந்தார்.
  • 1838இல் சென்னைக்கு வந்து தமிழகத்தின் இடையன்குடியில் மதப்பணியை மேற்கொண்டார்.
  • 50 ஆண்டு காலம் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டு, திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலை நிறுத்தினார்.
  • திருநெல்வேலியில் அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும் ஈமத்தாழிகள், நாணயங்கள் ஆகியவற்றையும் வெளிக் கொணர்ந்தார்.
  • பாண்டிய நாட்டின் ‘மீன் சின்னம்’ பொறித்த தங்கக் காசுகளைக் கண்டறிந்தார்.
  • ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ உள்ளிட்ட நூல்களை இயற்றினார்.

ஜி.யு. போப்

    • கனடாவில் 24.4.1820 இல் பிறந்தார்.
    • 1839இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்; 8 மாதங்களிலேயே தமிழை நன்குக் கற்றார்.
    • இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.
    • இவரது கடைசி விருப்பமாக, கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும்போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட ‘திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும்’ உடன் வைக்கவேண்டும்; தனது கல்லறையின்மீது ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று செதுக்கப்படவேண்டும் என எழுதி வைத்தார்.
    • ‘Elementary Tamil Grammar’ என்ற தமிழ் இலக்கணத்தை மூன்று பாகமாக எழுதி உள்ளார்.
    • தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றையும் வெளியிட்டார்.
    • 1886இல் முதன் முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
    • நாலடியார், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
    • இவரது திருவாசக மொழிபெயர்ப்பு சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.
    • ‘மறைநூற் புலவர்’ என்னும் பட்டம் பெற்றார்.
  • டச்சுக்காரர்கள் குறித்து எழுதுக.

டச்சுக்காரர்கள்

  • போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து இந்தியாவிற்கு வருகைப் புரிந்தனர்.
  • ‘நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி’ 1602ல் தொடங்கப்பட்டது.
  • மசூலிப்பட்டினத்தில் அவர்களின் வர்த்தக மையத்தை நிறுவினர்.
  • போர்ச்சுகீசியரிடமிருந்து அம்பாய்னாவையும் நாகப்பட்டினத்தையும் கைப்பற்றினர்.
  • ஆரம்பத்தில் ‘பழவேற்காடு’ டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது, பின்னர் 1690ல் நாகப்பட்டினத்திற்கு மாற்றினர்.
  • பட்டு, பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த பொருள்கள்.
  • கருப்பு மிளகு மற்றும் மற்ற நறுமணப் பொருள்கள்மீதான வியாபாரத்தில் அவர்கள் ஏகபோக உரிமைப் பெற்றிருந்தனர்.
  • 1623இல் டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் பத்து ஆங்கில வியாபாரிகள் மற்றும் ஒன்பது ஜப்பானியர்களைக் கொன்றனர்.
  • 1759இல் நடைப்பெற்ற ‘பெடரா போரில்’ ஆங்கிலேயர்கள் டச்சுக்காரர்களைத் தோற்கடித்தனர்.
  • 1795இல் டச்சுக்காரர்கள் தங்கள் குடியேற்றங்களை முழுமையாக ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்.
  • தமிழ்நாட்டில்: 1613இல் பழவேற்காட்டில் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.
  • நாகப்பட்டினம், புன்னக்காயல், பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் தேவனாம்பட்டினம் ஆகியன டச்சுக்காரர்களின் கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகள்.
  • பிரெஞ்சுக்காரர் குறித்து எழுதுக. 

பிரெஞ்சுக்காரர்கள்

  • ‘பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்’ மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான ‘கால்பர்ட்’ என்பவரால் 1664இல் உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவிற்கு வருகைத் தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு ‘பிரான்சு’ ஆகும்.
  • கரோன் என்பவர் சூரத்நகரில் முதல் பிரெஞ்சு வணிகமையத்தை நிறுவினார்.
  • மார்ட்டின் என்பவர் 1673இல் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார்; இது இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமானது.
  • பிரான்காய்ஸ் மாட்டின் பாண்டிச்சேரியில் ‘செயின்ட் லூயிஸ்’ எனப்படும் கோட்டையை கட்டினார்.
  • கல்கத்தாவுக்கு அருகே ‘சந்திரநாகூர்’ என்ற நகரை நிர்மாணித்தது.
  • 1742இல் ‘ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே’ பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
  • ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆதிக்கப்போட்டி இந்தியாவில் ‘கர்நாடக போர்’ எனப் பிரதிபலித்தது.
  • இறுதியில் ஆங்கிலேயர்கள் வெற்றிப் பெற்று இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர்; பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறினர்.
  • ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி குறித்து எழுதுக.

ஆங்கிலேயர்கள்

  • கி.பி. 1588இல் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான ‘ஸ்பானிய ஆர்மடா’வை தோற்கடித்து இங்கிலாந்து ஐரோப்பாவில் அதிக கடல் வலிமை பெற்ற நாடாக விளங்கியது.
  • நூறு லண்டன் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து ‘ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி’யை தோற்றுவித்தனர். இக்கம்பெனிக்கு 31.12.1600 இல் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வியாபாரம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார்.
  • 1608இல் வில்லியம் ஹாக்கின்ஸ் ஜஹாங்கீரின் அரசவைக்கு வியாபாரம் செய்யக் கோரிய அனுமதி கடிதத்துடன் வருகை புரிந்தார், ஆனால் தோல்வியடைந்தார்.
  • கி.பி. 1615இல் சர்தாமஸ்ரோ என்ற ஆங்கில வியாபாரி ஜஹாங்கீர் அரசவைக்கு வருகைப் புரிந்து இந்தியாவுடன் வியாபாரம் செய்வதற்கான அனுமதியைப் பெற்றார்.
  • குஜராத்தின் முகலாய ஆளுநரான இளவரசர் குர்ரம் ஆங்கிலேயருக்கு வணிக உரிமைகளை வழங்கினார்.
  • 1639இல் சந்திரகிரியின் அரசர் சென்னையை ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்குக் கொடுத்து, ‘புனித ஜார்ஜ் கோட்டை’ கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார். இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு முதன் முதலாகப் பெற்ற நிலப்பகுதி இதுவே ஆகும்.
  • 1652இல் சென்னை ஓர் மாகாணமாக்கப்பட்டது, மீண்டும் 1684இல் மாகாண அந்தஸ்தைப் பெற்றது.
  • 1688இல் சென்னை ஒரு மேயரையும், பத்து உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசைப் பெற்றிருந்தது.

கர்நாடகப் போர்கள் (1746-1763)

  • ஆங்கிலேயர் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்ட 1746 முதல் 1763 வரை பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மூன்று போர்களை நடத்தினர். இவை கர்நாடகப் பகுதியில் நடைப்பெற்றதால் ‘கர்நாடகப் போர்கள்’ என அழைக்கப்பட்டன.

முதல் கர்நாடகப் போர் (கி.பி. 1746-1748)

  • காரணம்: ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இந்தியாவில் எதிரொலித்தது, இதில் இங்கிலாந்து ஆஸ்திரியாவிற்கும், பிரான்ஸ் அதற்கு எதிராகவும் இருந்தன.
  • நிகழ்வுகள்: 
    • ஃபார்னெட் தலைமையிலான ஆங்கிலக் கப்பற்படை சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது.
    • ஃபிரான்சின் தீவின் ஆளுநராக இருந்த லா போர்டோனாய் எட்டு போர்க்கப்பல்களுடன் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்து பைடன் தலைமையிலான ஆங்கிலக் கப்பற்படையைத் தோற்கடித்தார் (6.7.1746).
    • வெற்றிப்பெற்ற பிரெஞ்சுக் கப்பற்படை, பாதுகாப்பு இல்லாமல் இருந்த சென்னையை 15.9.1746இல் கைப்பற்றியது.
    • துய்ப்ளே சென்னையைக் கைப்பற்றி நவாப்பிடமே ஒப்படைப்பதாகக் கூறி அன்வாருதீனை சமாதானப்படுத்தினார். ஆனால், பின்னர் வாக்குறுதியளித்தபடி சென்னையை ஒப்படைக்க மறுத்தார்.
    • நவாப் அன்வாருதீனின் மகன் மாபுஸ்கான் தலைமையிலான 10,000 வீரர்கள் சாந்தோம், அடையாறு போர்களில் பிரெஞ்சுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
  • விளைவு: 
    • 1748இல் ஐரோப்பாவில் இங்கிலாந்தும், பிரான்சும் ஐ.லா.சபேல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
    • இதன்படி, இந்தியாவில் ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் தங்கள் மோதல்களை முடித்துக்கொண்டனர்.
    • பிரெஞ்சுக்காரர் சென்னையை ஆங்கிலேயருக்குத் திருப்பித் தருவது என்றும், அதற்கு மாறாக வட அமெரிக்காவில் லூயிஸ்பர்க் என்ற இடத்தை பிரெஞ்சுக்காரருக்குக் கொடுப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் கர்நாடகப் போர் (1749-1754)

  • காரணம்: ஐரோப்பாவில் அமைதி நிலவினாலும், இந்தியாவில் காலனி நாடுகளால் அமைதியாக இருக்க முடியவில்லை. சுதேச அரசர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவரைத் தூண்டிவிட்டனர். ஆற்காடு, ஹைதராபாத் அரசுகளில் ஏற்பட்ட வாரிசுரிமைப் போர்களில் துய்ப்ளே பிரான்சின் செல்வாக்கை மேம்படுத்த விரும்பினார்.
  • வாரிசுரிமைப் போர்கள்: 
    • ஹைதராபாத்: 1748இல் நிஜாம் ஆசப்ஜா மரணமடைந்தவுடன், துய்ப்ளே அவரது பேரன் முசாபர் ஜங்கை ஆதரித்தார். ஆங்கிலேயர் எதிர் போட்டியாளரான நாசிர் ஐங்கை ஆதரித்தனர்.
    • ஆற்காடு: துய்ப்ளே முகமது அலிக்கு எதிராக சந்தா சாகிப்பை ஆதரித்தார். ஆங்கிலேயர் முகமது அலியையும் ஆதரித்தனர்.
  • நிகழ்வுகள்: 
    • பிரெஞ்சுக்காரர் நிஜாம், கர்நாடக நவாப் ஆகியோரிடையே ‘முக்கூட்டு உடன்படிக்கை’ ஏற்பட்டது.
    • 1749இல் நடைப்பெற்ற ஆம்பூர் போரில் நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்டார்.
    • பிரெஞ்சுப் படைகளால் நாசிர் ஐங் கொல்லப்பட்டு, முசாபர் ஐங் 1750 டிசம்பரில் ஹைதராபாத்தின் நிஜாமாக ஆக்கப்பட்டார்.
    • முசாபர் ஜங் கொல்லப்பட்ட பிறகு, பிரெஞ்சுத் தளபதி புஸ்ஸி பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டார்.
  • விளைவு: துய்ப்ளேயின் கனவு சில காலம் நனவாகலாம் என்ற நிலை இருந்தது. அவர் நிஜாமிடமிருந்தும், ஆற்காடு நவாப்பிடமிருந்தும் பெருமளவு பணத்தையும், நிலங்களையும் பெற்றார்.

மூன்றாம் கர்நாடகப் போர் (1756-1763)

  • காரணம்: ஐரோப்பாவில் 1756இல் தொடங்கிய ‘ஏழாண்டுப் போரின்’ விளைவே மூன்றாம் கர்நாடகப் போர் ஆகும்.
  • நிகழ்வுகள்: 
    • பிரெஞ்சு தளபதி கவுண்ட்-டி-லாலி, ஆங்கிலேயரின் புனித டேவிட் கோட்டையைக் கைப்பற்றினார்.
    • தளபதி புஸ்ஸி ஹைதராபாத்தைவிட்டு சென்னைக்கு வந்தபோது, ஆங்கிலேயர்கள் ஹைதராபாத்தைக் கைப்பற்றினர்.
    • புஸ்ஸி மற்றும் கவுண்ட்-டி-லாலி இருவரும் இணைந்து சென்னையைத் தாக்கினர்.
    • ஆங்கில தளபதி சர் அயர்கூட் பிரெஞ்சுப்படையை கி.பி. 1760இல் வந்தவாசி போர்க்களத்தில் தோற்கடித்தார். இது பிரெஞ்சுக்காரர்களுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது.
    • கி.பி. 1761இல் பிரெஞ்சுத்தளபதி ‘கவுண்ட்-டி-லாலி’ பாண்டிச்சேரியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் சரிவடைந்தது.
  • விளைவு: 
    • மூன்றாம் கர்நாடகப்போர் கி.பி. 1763இல் பாரிஸ் சமாதான உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது.
    • பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி, காரைக்கால், சந்திரநாகூர், மாஹி ஆகிய நிலப்பகுதிகளை திரும்பப்பெற்றனர், ஆனால் அங்குக் கோட்டைகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
    • பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் தங்களின் ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் ஒருசேர இழந்தனர். ஆங்கிலேயர்கள் வலிமை அடைந்தனர்.
  • வெற்றிக்கான காரணங்கள்: 
    • ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் தாய்நாட்டின் ஆதரவினையும், பொருளாதார உயர்நிலையையும் பெற்றிருந்தது.
    • ஆங்கிலேயரின் ‘கடற்படை வலிமை’ அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது.
    • பிரெஞ்சுத் தளபதிகளின் தவறான வியூகம் (சென்னையைக் கைப்பற்ற படையெடுத்தது).
    • பிரான்ஸ் முழுமனதோடு இப்போரில் ஈடுபடமுடியவில்லை, ஆனால் இங்கிலாந்து முழுமையான வெற்றியைப் பெற்றது.
    • இதுவே இந்திய வரலாற்றின் போக்கை மாற்றி, இந்தியாவை ஆளும் சக்தியாக இங்கிலாந்து வலுப்பெற்றது.

வங்காளம்

  • பிளாசிப் போர் (1757):
      • முகலாயப் பேரரசில் வளமான நிலப்பகுதியாக இருந்த வங்காளம் ‘அலிவர்திகான்’ தலைமையில் சுதந்திரமான பேரரசாக உருவானது. அவர் மறைவுக்குப் பிறகு அவரது பேரன் ‘சிராஜ்உத்-தௌலா’ வங்காளத்தின் நவாப் ஆனார்.
      • ஆங்கிலேயர்கள் அனுமதியின்றி கோட்டைகளைக் கட்டி வலிமைப்படுத்தியதை சிராஜ்உத்-தௌலா எதிர்த்தார். பிரான்ஸ் நவாப்பின் ஆணையை ஏற்றுக்கொண்டது, ஆனால் இங்கிலாந்து ஏற்கமறுத்தது.
      • ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் வியாபார சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தியதால், சிராஜ்உத்-தௌலா கோபமடைந்தார்.
      • சிராஜ்உத்-தௌலா பெரும்படையுடன் சென்று கல்கத்தாவைக் கைப்பற்றி 146 ஆங்கிலேயப் போர் வீரர்களைச் சிறையில் அடைத்தார்; அதில் 23 பேரே உயிருடன் இருந்தனர். இந்நிகழ்வு ‘கல்கத்தா இருட்டறை துயரச் சம்பவம்’ என அழைக்கப்படுகிறது.
      • இச்செய்தியைக் கேள்வியுற்ற சென்னை நிர்வாகம் தளபதி வாட்சன் மற்றும் ராபர்ட் கிளைவ் ஆகியோரை வங்காளத்திற்கு அனுப்பியது, அவர்கள் கல்கத்தாவைத் திரும்பக் கைப்பற்றினர்.
      • 23.5.1757இல் சிராஜ்உத்-தௌலா, ராபர்ட் கிளைவ் ஆகியோரின் படைகள் கல்கத்தாவிற்கு அருகே உள்ள பிளாசி என்ற இடத்தில் போரிட்டன. இப்போரில் சிராஜ்உத்-தௌலா தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
      • வங்காளத்தில் நிர்வாகியாக ‘மீர்ஜாபரை’ ஆங்கிலேயர்கள் நியமித்தனர், இவர் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் பொம்மையாகச் செயல்பட்டார்.
      • பின்னர், ஆங்கில நிர்வாகம் மீர்ஜாபரை அகற்றிவிட்டு அவரது மருமகன் மீர்காசிம்மை வங்காளத்தின் நவாப்பாக அறிவித்தது.
  • பக்சார் போர் (1764):
    • மீர்காசிம் வங்காள நவாப் ஆன பிறகு இந்திய வியாபாரிகளுக்கு உதவ சுங்கவரியை ரத்துச் செய்தார், இது ஆங்கிலேயர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.
    • ஆங்கிலேயப்படை மீர்காசிம்மைத் தோற்கடித்தது. தோற்கடிக்கப்பட்ட மீர்காசிம் அயோத்தியை ஆட்சிச் செய்த ஷூஜா உத்-தௌலாவிடம் அடைக்கலம் ஆனார்.
    • முகலாய பேரரசர் இரண்டாம் ஷாஆலம், ஷூஜா உத்-தௌலா, மீர்காசிம் ஆகிய மூன்று மன்னர்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரப் போரிடத் தயாரானார்கள்.
    • 22.10.1764இல் ‘பக்ஸார்’ என்ற இடத்தில் இந்திய மன்னர்களின் கூட்டுப்படை ஆங்கிலேயப் படையை எதிர்கொண்டன, ஆனால் தோற்கடிக்கப்பட்டன.
    • மீர்காசிம் போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடினார். இரண்டாம் ஷாஆலம், ஷூஜா உத்-தௌலா ஆகியோர் ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர்.
    • ஆங்கிலேயர்கள் பிளாசியில் பெற்ற வெற்றி பக்ஸாரில் நிலைநிறுத்தப்பட்டது.

மைசூர்ப் போர் (1767-1769)

  • முதல் ஆங்கில – மைசூர் போர்: 
    • ராபர்ட் கிளைவ் வங்காளத்தின் நிர்வாகியாக இருந்தபோது மைசூரில் ஹைதர்அலி வலிமை மிகுந்த ஒரு பேரரசை உருவாக்கி இருந்தார்.
    • ஹைதர்அலியின் வலிமையும், பிரான்ஸ் நாட்டோடு அவர் கொண்டு இருந்த நல்லுறவும் ஆங்கிலேய நிர்வாகத்திற்கு கவலையளித்தன.
    • நிகழ்வுகள்: 
      • கி.பி. 1766இல் ஹைதர்அலிக்கு எதிராக இங்கிலாந்து மராத்தியரோடும், ஹைதராபாத் நிஜாமோடும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது.
      • ஹைதர்அலி தனது மதிநுட்பத்தினாலும் கையூட்டின் மூலமாகவும் மராட்டியர்களையும், ஹைதராபாத் நிஜாமையும் நண்பர்களாக்கிக் கொண்டார்.
      • கி.பி. 1767இல் ஹைதர்அலி மற்றும் நிஜாமை ஆங்கிலேயர்கள் ‘சங்கமா’ என்ற இடத்தில் தோற்கடித்தனர்.
      • ஹைதர்அலி ஆம்பூர், மங்களூர் ஆகிய இடங்களைக் கைப்பற்றி, பின்னர் கரூர், தஞ்சாவூர், கடலூர், பாராமஹால் ஆகிய இடங்களையும் கைப்பற்றினார்.
      • ஹைதர்அலி சென்னையை முற்றுகையிட்டது ஆங்கிலேயர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
      • ஆங்கிலேயர்கள் கி.பி. 1769இல் ஹைதர்அலியோடு மதராஸ் (சென்னை) அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

இராபர்ட் கிளைவ்

  • கி.பி. 1765இல் வங்காளத்தின் கவர்னராக ராபர்ட் கிளைவ் பொறுப்பேற்றார். அவரது முதல் ஆட்சிக்காலத்தில் வெற்றி வீரராகவும், இரண்டாவது ஆட்சிக்காலத்தில் சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார்.
  • நிர்வாகச் சீர்திருத்தங்கள்: 
    • ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்கள் இந்தியர்களிடம் இருந்து அன்பளிப்பு பெறக்கூடாது என்றார்.
    • ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்யக்கூடாது என்றார், மேலும் ஊதியத்தை உயர்த்தினார்.
    • அமைதி காலத்தில் இராணுவ அதிகாரிகளுக்கு இரட்டை ஊக்கத்தொகை அளித்தார்.
    • கம்பெனி ஊழியர்கள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கு உதவ ‘கிளைவின் நிதி’ ஒன்றை உருவாக்கினார்.
    • முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமிடமிருந்து வங்காளத்தின் உரிமையியல் மற்றும் குற்றவியல் உரிமைகளைப் பெற்ற பிறகு, வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார்.
    • இந்த இரட்டை ஆட்சியின்படி, ஆங்கிலேயர்கள் அனைத்து அதிகாரத்தையும் பெற்றனர், ஆனால் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை; நவாப் அனைத்துப் பொறுப்பையும் ஏற்றார், ஆனால் அதிகாரம் பெறவில்லை.
    • மக்களின் நலனில் அக்கறை காட்டாததால், இந்த இரட்டை ஆட்சி முறை கி.பி. 1772இல் ரத்து செய்யப்பட்டு, வங்காளம் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது.
  • சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்து விளக்குக.   

பாளையக்காரர்கள்

  • கி.பி. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் எங்கும் ‘பாளையப்பட்டு ஆட்சிமுறை’ இருந்தது.
  • திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை நாட்டில் மட்டும் 72 பாளையப்பட்டுகள் இருந்தன. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்கள் அதிகம் இருந்தனர்.
  • பாளையப்பட்டு ஆட்சி முறை: 
    • பாளையக்காரர்களின் உள்நாட்டு ஆட்சியில் நாயக்கர் அரசோ, பிற அரசுகளோ தலையிடுவதில்லை.
    • நாட்டுப்படை, காவற்படை வருவாய், நீதி ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
    • அரசுக்கோ அல்லது பேரரசுக்கோ உரிய தண்டல் தொகையையும், தேவைப்படும்போது படை உதவியும் அளிப்பது இவர்களுக்குரிய கடமையாக இருந்தது.
  • பாளையங்களின் அதிகார வரம்புகள் 3 வகைகளாகப் பகுக்கப்பட்டிருந்தன: நிதித்துறை, நீதித்துறை, இராணுவம்
    • நிதித்துறை: குடிமக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் முழுப்பொறுப்பும் பாளையக்காரர்களிடம் இருந்தது. வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கை மைய அரசுக்கும், மற்றொரு பங்கைத் தம்மிடம் உள்ள இராணுவத்திற்கும், மீதமுள்ள பங்கைச் சொந்த நிர்வாகச் செலவிற்கும் பகிர்ந்து அளிக்குமாறு நாயக்கர் அரசால் நெறிப்படுத்தப்பட்டிருந்தனர்.
    • நீதித்துறை: பாளையப் பகுதிக்குள் கொண்டு வரப்படும் அனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கும் தலைமை நீதிமன்றமாகப் ‘பாளையக்காரர்கள்’ விளங்கினர்.
    • இராணுவம்: பாளையங்கள் தாங்கள் வசூல் செய்யும் வரியில் மூன்றில் ஒரு பங்கை இராணுவத்திற்குச் செலவிடும் உரிமைப்பெற்று இருந்தனர். ஆபத்துக் காலங்களில் படை உதவி அளித்தவர்களுக்கு வரிக்கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
  • பாளையக்காரர் முறை ஒழிப்பு: கி.பி. 1801இல் சென்னை கவர்னர் எடவாட கிளைவ், பாளையக்காரர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணை பிறப்பித்தார். பின்னர் பாளையக்காரர்கள் ‘ஜமீன்தார்கள்’ எனப் பெயர் பெற்றனர்.

பூலித்தேவன்

  • மேற்குப்பிரிவில் மறவர் பாளையக்காரர்களுக்கும், தெற்குப்பிரிவில் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் தலைவர்களாக நெல்கட்டும் சேவல் பாளையத்தின் பூலித்தேவனும், பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த கட்டபொம்மனும் இருந்தனர்.
  • இவ்விருவருமே நவாப்பிற்குச் செலுத்த வேண்டிய கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • 1755இல் மாபஸ்கான், பிரிட்டிஷ் படைத்தளபதி கர்னல் ஹெரானின் தலைமையிலான படைகளின் உதவியோடு பாளையக்காரர்கள் மீது படையெடுத்தார்.
  • பூலித்தேவனும், மறவர் பாளையக்காரர்களும் பிரிட்டிஷாருக்கு எதிராக உறுதியுடன் இருந்தனர்.
  • பூலித்தேவர் மறவர்களை ஒன்று சேர்த்து தனது நிலையை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டு, பிரிட்டிஷாருக்கு எதிராக மைசூரின் ஹைதர்அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் நாடினார்.
  • பிரிட்டிஷார் பூலித்தேவனையும் அவரது கூட்டாளிகளையும் அடக்கும் பொறுப்பை யூசுப்கானிடம் (கான்சாகிப்) ஒப்படைத்தனர்.
  • பூலித்தேவன் மதுரையைத் தாக்கி மாபஸ்கானிடமிருந்து அதனைக் கைப்பற்றினார். இது ஒரு இந்திய வீரர் பிரிட்டிஷாருக்கு எதிராக நின்று வெற்றிக்கொண்ட மகத்தான ராணுவ வெற்றியாகும்.
  • 1759இல் நெல்கட்டும் சேவல் மீது தாக்குதல் தொடர்ந்தது. 1767ல் அது கர்னல் காம்ப்பெல் என்பவரால் கைப்பற்றப்பட்டது. பூலித்தேவர் அங்கிருந்து தப்பியோடினார்.
  • பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும் என்ற தனது எண்ணம் நிறைவேறாமலேயே அவர் இறந்தார். தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தைத் துவக்கிய பெருமைக்கு உரியவர் பூலித்தேவனே ஆவார்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

  • கி.பி. 1790 முதல் 1799 வரை பாஞ்சாலங்குறிச்சியை வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்டார்.
  • ராமநாதபுரத்தில் கலெக்டர் ஜான்சன் கட்டபொம்மனை இழிவுப்படுத்திய முறைகளும், கைது செய்ய எடுத்த முயற்சிகளும் அவரைப் புரட்சி செய்யத் தூண்டின.
  • திருநெல்வேலிக் கூட்டிணைப்பு: ஆங்கிலேயரை எதிர்த்து தமிழகத்தில் மானத்தைக் காக்கவேண்டும் என வீரபாண்டியன் எண்ணி, திருநெல்வேலி பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு கூட்டணியை உருவாக்கினார். இதில் பாஞ்சாலங்குறிச்சி, சாத்தூர், குளத்தூர், நாகலாபுரம், மன்னார் கோட்டை, கோலார் பட்டி, கடல்குடி, ஏழாயிரம் பண்ணை, சென்னல்குடி ஆகிய பாளையங்கள் அடங்கும்.
  • ஆங்கிலேயரை எதிர்ப்பதற்கான காரணங்கள்: 
    • பாஞ்சாலங்குறிச்சி விடுதலை வேட்கையுடைய பாளையம்.
    • மருதுபாண்டியர் கூட்டிணைப்பால் தூண்டப்பட்டார்.
    • கலெக்டர் ஜாக்சனின் அடாவடிச் செயல்கள், அத்துமீறல்கள்.
    • ஆங்கிலேயரின் வரிவிதிப்பு முறையும், அதை வசூல் செய்யும் விதமும் பாளையங்களை பயங்கரச் சூழலில் கொண்டுபோய்விட்டது.
    • தாயக மக்கள் கட்டும் நிலவரி அன்னியரிடம் போகக் கூடாது என்ற தீவிர எதிர்ப்பு.
    • ஆங்கிலேய அதிகாரிகள் கட்டபொம்மனை அடிமையெனக் கருதி அவமானப்படுத்தியது.
    • “வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. நாங்கள் ஏன் உங்களுக்கு வரிகட்டவேண்டும்” என்று முழக்கமிட்டார்.
  • பானர்மேன் படையெடுப்பு: 
    • பாளையங்களை ஆங்கில நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரும் நோக்குடனும், அரசுக்கு எதிராகப் பாளையங்களைக் கூட்டிணைத்த கட்டபொம்மனைத் தண்டிக்கும் எண்ணத்துடனும் ஆங்கில அரசு பாஞ்சாலங்குறிச்சிமீது படையெடுக்கத் தீர்மானித்தது. மேஜர் பானர்மேனுக்கு இந்த அதிகாரம் தரப்பட்டது.
    • 5.9.1799இல் பாஞ்சாலங்குறிச்சிமீது பானர்மேன் படை தொடுத்தான்.
    • ஆங்கிலேயப்படை கோலார்ப்பட்டியில் கட்டபொம்மனிடம் போரிட்டு அவரைக் கைது செய்தது.
    • 16.10.1799இல் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டு ‘கயத்தாற்றில்’ தூக்கிலிடப்பட்டார்.

ஊமைத்துரை

  • கட்டபொம்மனின் உறவினர்கள் அனைவரும் ஆங்கிலேயரால் உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் இருந்த வீரர்கள் தமிழகத்தைக் காக்கச் சிக்கல் ஏதுமின்றித் தப்பித்தனர்.
  • அவர்கள் ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்தி ஊமைத்துரையின் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையினை வலுப்படுத்தினர். இவர்களுக்கு மருதுபாண்டியர்கள் உறுதுணையாக நின்றனர்.
  • மக்காலேயின் படையெடுப்பு: மக்காலே தலைமையில் அனுப்பப்பட்ட படையை ஊமைத்துரையின் படைகள் தாக்கின. மக்காலே தாக்குப் பிடிக்க முடியாமல் பாளையங்கோட்டைக்குப் பின்வாங்கினார். 1801ஆம் ஆண்டு மார்ச் இறுதியிலும், ஏப்ரல் ஆரம்பத்திலும் நடைப்பெற்ற மற்றொரு போரிலும் மக்காலே தோல்வி அடைந்தார்.
  • அக்னு படையெடுப்பு: 1801ஆம் ஆண்டு மே திங்களில் அக்னு என்பாரின் தலைமையில் பெரும்படையொன்று ஊமைத்துரையை தோற்கடிக்க அனுப்பப்பட்டது.
  • போர் பாஞ்சாலங்குறிச்சியில் கடுமையாக நடைப்பெற்றபோது ஊமைத்துரை படுகாயம் அடைந்தார். கிராமப்புற மகளிர் அவரைப் பெரியம்மையால் இறந்த இளைஞன் எனக் கூறி காப்பாற்றினார்கள்.
  • மருதுபாண்டியரை சிறுவயலுக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர். குணம் அடைந்தவுடன் மீண்டும் போருக்கு ஊமைத்துரை தயாரானார். அச்சமயத்தில் மருது சகோதரங்களும், அவர்களது படைகளும் ஆதரவு நல்கினர்.
  • தூக்கிலிடப்படுதல்: ஆங்கிலப்படையின் தலைவர் மேஜர் ஜோன்ஸ் ‘சத்திரப்பட்டி’ போர்க்களத்தில் ஊமைத்துரையைச் சந்தித்தார். போரில் ஊமைத்துரை தோல்வியடைந்து பின்வாங்கினார்.
  • இறுதியில் ‘வத்தலகுண்டு’ என்ற இடத்தில் அவரும், அவரது வீரர்கள் சிலரும் ஆங்கிலேயரால் சிறைப்படுத்தப்பட்டனர்.
  • 16.11.1801இல் பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைத்துரை தூக்கிலிடப்பட்டார்.

வேலுநாச்சியார்

  • 1746இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்து வடுகநாதத் தேவருக்கு மகளாகப் பிறந்த வேலுநாச்சியார் பல மொழிகள் கற்று, ஆயுதப்பயிற்சி பெற்றார்.
  • ஆங்கிலேயர் படையெடுப்பு: 1772இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார், நாட்டை மீட்டெடுக்க விருப்பாட்சியில் தங்கி காத்திருந்தார்.
  • வேலுநாச்சியார் ஹைதர்அலியை சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.
  • மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்றுதிரட்டி ஓர் ‘எதிர்ப்புப்படையை’ உருவாக்கினர். வேலுநாச்சியார் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
  • படை திரட்டல்: 1780ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும், 5000 போர் வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார்.
  • வேலுநாச்சியாரின் படைகள் வைகை ஆற்றின் வழியில் சோழவந்தான், சிலைமான், திருப்புவனம், முத்தனேந்தல் நகரங்களை வென்று, மானாமதுரை நகரத்தில் போர் பயிற்சி பெறாத மக்களின் துணைகொண்டு அன்னிய பரங்கியர்களை வெற்றிக்கொண்டனர்.
  • அதன் பிறகு ராணி வேலுநாச்சியார் சிவகங்கை சீமையின் முதல் ராணியாக முடிசூட்டப்பட்டார்.
  • பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25.12.1796இல் மறைந்தார்.
  • இவர் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

மருதுபாண்டியர்

  • கி.பி. 1780 முதல் 1801 வரை சிவகங்கைச் சீமையை ஆண்டவர்கள் மருதுசகோதரர்கள் ஆவார். சின்னமருது, பெரியமருது என அழைக்கப்படும் இவர்களின் புரட்சிக் கோட்டையாக ‘காளையார் கோவில்’ விளங்கியது.
  • இவர்கள் சிவகங்கை மன்னரான ‘முத்து வடுகநாத தேவர்’ அரசவையில் முதலில் சாதாரண ஊழியர்களாகப் பணியில் சேர்ந்தனர். மன்னர் குடும்பத்தின் நம்பிக்கையினைப் பெற்றனர்.
  • 1712இல் கர்நாடக நவாபின் ஆதிக்கம் நிலைபெற ஆற்காடு ஆங்கிலேயக் கூட்டுப்படையானது சிவகங்கையில் புகுந்தது. அப்போது மருது பாண்டியர்கள் அப்படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். போர் நடைப்பெற்றபோதே மன்னர் இறந்துவிட்டார்.
  • மன்னர் குடும்பத்தை மருதுபாண்டியர்கள் காப்பாற்றினர். பின்னர் மறைந்த மன்னரின் மனைவி ‘வேலுநாச்சியார்’ ஆட்சிக்கு வந்தார்.
  • வேலுநாச்சியாருக்குப்பின் இளவரசி ‘வெள்ளைச்சி அம்மாள்’ பெரியஉடையத் தேவரை மணந்ததால் அவர் சிவகங்கை மன்னர் ஆனார். அப்போது மருதுபாண்டியர் இருவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
  • கூட்டிணைப்பு: ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சியில் அனைவரும் இணைந்து செயல்பட மருதுசகோதரர்கள் ஒரு ‘சிவகங்கைக் கூட்டிணைப்பை’ உருவாக்கினர். 
    • இக்கூட்டமைப்பில் இராமநாதபுரம் பகுதியினைச் சேர்ந்த வேலப்பன், முத்துக்கருப்பதேவர், சிங்கம்செட்டி போன்றோரும், சிவகிரியின் மாப்பிள்ளை வன்னியனும் இடம்பெற்று இருந்தனர்.
    • மருதுபாண்டியரின் இக்கூட்டிணைப்புக்கு கட்டபொம்மனின் ‘திருநெல்வேலி கூட்டிணைப்பும்’, கோபாலனின் ‘திண்டுக்கல் கூட்டிணைப்பும்’ ஆதரவு நல்கின.
    • திருநெல்வேலி கூட்டிணைப்பில் பாஞ்சாலங்குறிச்சி, சாத்தூர், குளத்தூர், நாகலாபுரம், மன்னார் கோட்டை, கோலார் பட்டி, கடல்குடி, ஏழாயிரம் பண்ணை, சென்னல்குடி ஆகிய பாளையங்கள் இருந்தன.
    • திண்டுக்கல் கூட்டிணைப்பில் தாராபுரம், தேவதானம், கரூர், கன்னிவாடி, காங்கேயம், கொழுமம், சங்ககிரி, மணப்பாறை ஆகிய பகுதிகள் இருந்தன.
  • திருச்சிராப்பள்ளி அறிக்கை (1801): 
    • மருதுபாண்டியர் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் இந்தியமக்கள் அனைவரும் ஈடுபடவேண்டும் என்ற நோக்கில் இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
    • அனைத்து மக்களும் விடுதலைப் போரில் ஈடுபட வேண்டும் என்றும், இவ்வறிக்கை ஒவ்வொருவரும் படித்து அனைவருக்கும் எடுத்துக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
    • ஆங்கிலேயரைச் சுற்றி துதிபாடும் சதிகார சிற்றரசர்களைக் கடுமையாகக் கண்டித்தது.
    • அன்னியர் வரவால் நாடு வளம் சுருங்கி, நலம் கெட்டுப்போவதை எடுத்துக்காட்டி தூங்கும் மக்களைத் தட்டி எழுப்பியது.
    • விளைவுகள்: நாட்டுப்பற்றுக் கொண்ட நல்லோர்கள் ஒன்று சேர்ந்தார்கள். திருப்பத்தூர், திருப்புவனம், திருச்சுழி, பந்தல்குடி ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் நடைபெற்று கிளர்ச்சியாளர்கள் வசமாயின. கர்னர் அக்னு தலைமையில் செயல்பட்ட ஆங்கிலப்படை கடுமையான போருக்குப்பின் அப்பகுதிகளை மீட்டது.
    • காளையர் கோயிலில் கடும்போர் ஏற்பட்டது. மருதுபாண்டியரின் கொரில்லாத் தாக்குதலுக்குமுன் ஆங்கிலப்படை தாக்குப் பிடிக்காமல் பின்வாங்கியது.
  • ஆங்கிலேயரின் சூழ்ச்சி: வெள்ளையர் வெற்றிப் பெறுவது கடினம் எனக் கருதி, சிவகங்கை அரசகுடும்பத்தைச் சேர்ந்த உடையத் தேவரை அப்பகுதியின் உன்னராக்குவதாகக் கூறி கிளர்ச்சியாளர்களைப் பிளவடையச் செய்தனர். இதனால் மருதுபாண்டியர் ஆதரவாளர்கள் பிளவுபட்டு, ஆங்கிலேயர்கள் வலிவும் பொலிவும் பெற்றனர்.
  • மருதுபாண்டியர் இறத்தல்: 
    • ஆங்கிலேயரின் பெரும்படை காளையர்கோயில் நோக்கிப் புறப்பட்டது. அக்கோட்டையினை 1801ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் கைப்பற்றினர்.
    • அதே ஆண்டு அதே திங்களில் 19ஆம் நாள் சோழபுரத்தில் மருதுபாண்டியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இறுதிப்போர் ஏற்பட்டது.
    • மருதுசகோதரர்கள் ஆங்கிலேயரிடம் கைதிகளாயினர். அவர்களோடு ஆதரவாளர்களும் கைதிகளாயினர்.
    • திருப்பத்தூர் கோட்டையில் மருதுபாண்டியர், கோபாலன் உள்பட 73 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

  • இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு மிக முக்கிய பங்காற்றியது. பூலித்தேவன், கட்டபொம்மன், மருதுசகோதரர்கள், வேலுத்தம்பி போன்ற தலைவர்கள் தேசப்பற்று, தைரியம், சுயமரியாதை மற்றும் தியாகத்திற்குப் பெயர் பெற்றவர்கள்.
  • ஜி. சுப்பிரமணிய அய்யர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சி.ராஜகோபாலாச்சாரி, பெரியார் இ.வெ.ராமசாமி, திருப்பூர் குமரன், கே.காமராஜ் போன்ற தலைவர்களும், அறிஞர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

வேலூர் கலகம் (1805)

  • காரணங்கள்: ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் புகுத்திய சில கட்டுப்பாடுகள் (இந்து வீரர்கள் சமயக் குறிகளை இடக்கூடாது, முஸ்லிம் வீரர்கள் தாடி மீசைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்) ராணுவ வீரர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தின. திப்புவின் பிள்ளைகளை ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினர்.
  • நிகழ்வுகள்: 
    • 9.7.1806இல் வேலூர் கோட்டையில் நடைப்பெற்ற திருமணத்தில் கலந்துகொள்ள வீரர்கள் கூடினர்.
    • நள்ளிரவில் இங்கு கூடியிருந்த வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களைத் தாக்கி ஜீலை 10ஆம் நாள் கோட்டையைக் கைப்பற்றினர்.
    • திப்புவின் கொடி வேலூர் கோட்டையில் ஏற்றப்பட்டு, திப்புவின் இரண்டாவது மகன் பதேக் ஹைதர் அரசராக அறிவிக்கப்பட்டார்.
    • இருப்பினும் இக்கிளர்ச்சி ஆங்கிலேயர்களால் அடக்கப்பட்டது.

சென்னை மகாஜன சபை

  • சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்டப் படுத்தப்பட்ட முதல் அமைப்பு ‘சென்னை சுதேசி சங்கம்’ ஆகும். இதனை 1852இல் ஹார்லி, இலஷ்மி நரசுச்செட்டி மற்றும் சீனிவாசப்பிள்ளை ஆகியோர் நிறுவினர்.
  • 1884இல் சென்னை சுதேசிசங்கம், ‘சென்னை மகாஜன சபையுடன்’ இணைக்கப்பட்டது.
  • எஸ்.இராமசாமி முதலியார், பி.அனந்தாசாகுலு, இரங்கய்யா நாயுடு ஆகியோர் இதனை ஏற்படுத்தினர். சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக பி.இரங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சென்னை மகாஜன சபை சுதந்திரப் போராட்டத்தில், இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியது. 1920இல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டது.
  • 22.4.1930இல் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை சென்னையில் ஜார்ஜ் டவுன், யானைக்கவுனி, உயர்நீதிமன்றம் மற்றும் கடற்கரைப் பகுதியில் தலைமை ஏற்று நடத்தியது.
  • பல்வேறு அனைத்திந்திய கைத்தறி கண்காட்சி, சுதேசி பொருள்கள் கண்காட்சி மூலம் மக்கள் மனதில் தேசியப்பற்றை வளர்த்தது.
  • 24.10.1896இல் ‘தேசத்தந்தை மகாத்மா காந்தி’ சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார்.

வ.உ.சிதம்பரம்பிள்ளை

  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் 5.9.1872இல் பிறந்தார். ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும், ‘கப்பலோட்டி தமிழன்’ என்றும் அழைக்கப்பட்டார்.
  • திருநெல்வேலியில் வழக்குரைஞராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கினார். வியாபாரச் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் அமைப்பினை ஊக்குவித்தார்.
  • சுதேசி தர்ம சங்க நெசவாளிகள் சங்கம் மற்றும் சுதேசி கூட்டுறவு அங்காடிகளைத் தூத்துக்குடியில் தோற்றுவித்தார்.
  • பின்னர், சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்து, தூத்துக்குடி – கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கினார்.
  • 1905இல் மேற்கொள்ளப்பட்ட வங்காளப் பிரிவினை இவரை அரசியலில் ஈடுபடச் செய்தது. தூத்துக்குடி அருகில் பவள ஆலை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • 1907இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பாலகங்காதர திலகரை ஆதரித்தார்.
  • இவர்மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவருடைய வலதுகால் சங்கிலியால் கோர்க்கப்பட்டு மாடுபோல் சிறையில் செக்கிழுத்தார்.

சுப்பிரமணிய சிவா

  • திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த விடுதலைப் போராட்ட வீரராகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார்.
  • ஆங்கிலேயருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் 1908இல் சிறையில் இருந்தபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார்.
  • ஆங்கில அரசு இவருக்காகவே தொழுநோயாளிகள் இரயிலில் பயணம் செய்யக்கூடாது என்று சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக சுப்பிரமணிய சிவா உடல் முழுவதும் தொழுநோய் புண்களுடன் தமிழகம் முழுவதும் நீண்ட நடைப் பயணமாகவே சுற்றி வந்தார்.
  • தனது நோயின் காரணமாக 23.7.1925இல் காலமானார்.

சுப்பிரமணிய பாரதியார்

  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.12.1882இல் பிறந்தார்.
  • சுதேசமித்ரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1907இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.
  • பாலகங்காதர திலகர் மற்றும் அரவிந்தகோஷுடன் சேர்ந்து சுயராஜ்ஜியத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
  • 1907இல் தமிழ் வாரப் பத்திரிக்கையான ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியரானார். அதே சமயத்தில் ‘பாலபாரதம்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டார்.
  • 1908இல் சென்னையில் மாபெரும் கூட்டத்தை நடத்தி, சுயராஜ்ஜிய நாளை கொண்டாடினார். அவரது பாடல்களான ‘வந்தே மாதரம், அச்சமில்லை அச்சமில்லை, எந்தையும் தாயும்’ போன்றவை அச்சிடப்பட்டு தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
  • 1908இல் வ.உ.சி.க்கு எதிராக ஆங்கில அரசு தொடர்ந்த வழக்கில், வ.உ.சி.க்கு ஆதரவாக சாட்சி வழங்கினார். இதனால் ஆங்கில அரசு அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தது.
  • பாரதியார் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த புதுவைக்குத் தப்பி ஓடினார். அங்கிருந்து தனது படைப்பினைத் தொடர்ந்து வெளியிட்டார். ஆனால் ஆங்கில அரசு 1909இல் பாரதியின் படைப்புகளுக்குத் தடை விதித்தது.
  • முதல் உலகப்போருக்குப் பிறகு நவம்பர் 1918இல் கடலூருக்கு வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டார். மூன்று வார காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
  • சென்னையில் இருந்து ‘சுதேசமித்ரன் பத்திரிகையின்’ ஆசிரியராக மீண்டும் பணியாற்றினார். 11.9.1921இல் காலமானார்.

வாஞ்சிநாதன்

  • திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியாற்றினார்.
  • திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் என்பவர் நான்கு பேரைத் திருநெல்வேலியில் சுட்டுக் கொன்றார்.
  • இக்கொடுஞ்செயலுக்குப் பழிதீர்க்க எண்ணிய வாஞ்சிநாதன், மணியாச்சி புகைவண்டி நிலையத்திற்குச் சென்று 17.6.1911இல் மாவட்ட ஆட்சியர் ஆஷ் அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துகொண்டார்.
  • வாஞ்சிநாதன் இறந்தபின் அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்தில், ஆட்சியர் ஆஷின் கொலை சென்னை வரும் அரசர் ஐந்தாம் ஜார்ஜை கொலை செய்வதற்கான ஒத்திகையே ஆகும் என்று எழுதப்பட்டு இருந்தது.

தியாகி விஸ்வநாததாஸ்

  • திரைப்படம் வராத அந்தக்காலத்தில் மேடை நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் விடுதலைக் கனலை வளர்த்த நாடக நடிகர் தியாகி விஸ்வநாததாஸ் ஆவார்.
  • இவர் நாடகங்களில் மக்களுக்கு விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்கள் பல அமைந்து இருந்தன.
  • ‘கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா’ என்ற பாடல் புகழ் பெற்றது.
  • வ.உ.சி. அவர்கள் ஓட்டிய சுதேசிக் கப்பலைக் ‘கதர்க் கப்பல் வருகுதே’ என்று பாடிய பாடல் தேசிய சிந்தனையை ஊட்டுவதாக அமைந்தது.
  • இவர்தம் நாடகங்களின் மூலம் வசூலாகும் பணத்தைச் சுதந்திரப் போராட்டத்துக்கு அர்ப்பணித்து வாழ்ந்தார்.

திருப்பூர் குமரன்

  • ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் 1904இல் பிறந்தார். இவர் மாபெரும் கிளர்ச்சியாளர்.
  • தேசியக்கொடித் தடைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு காவல் துறையினரின் தாக்குதலால் உயிர் துறந்தார்.
  • சாகும் தருவாயில் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
  • இவர் தமிழக வரலாற்றில் ‘கொடிகாத்த குமரன்’ என்று போற்றப்படுகிறார்.

எஸ். சத்தியமூர்த்தி

  • காமராசரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி ஒரு சிறந்த அரசியல்வாதி, நாட்டுப் பற்றாளர்.
  • 1930இல் இராஜகோபாலாச்சாரியார் தனக்குப்பின் சத்தியமூர்த்தியை அகில இந்தியக் காங்கிரஸ் தமிழ்நாட்டுப் பிரிவின் தலைவர் ஆக்கினார்.
  • 19.8.1887இல் சென்னை மாகாணத்தில் உள்ள திருமயம் என்னும் ஊரில் பிறந்தார். வழக்கறிஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • 1939இல் சென்னை மேயராக இருந்தபோது சென்னையில் மிக மோசமான குடிநீர் பஞ்சம் நிலவியது. மக்களின் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்காக சென்னைக்கு மேற்கே 50கி.மீ தூரத்தில் உள்ள பூண்டி என்னும் இடத்தில் ஒரு குடிநீர்த் தேக்கம் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
  • இக்குடிநீர்த்தேக்கம் பின்னர் காமராசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சத்தியமூர்த்தியை நினைவுக்கூறும் வகையில் ‘சத்தியமூர்த்தி சாகர்’ என்று இந்த நீர்த்தேக்கத்திற்குப் பெயரிடப்பட்டது.
  • சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற இயக்கங்களில் பங்கேற்று, பலமுறை சிறை சென்றுள்ளார்.
  • இந்திய விடுதலைக்காகவும், சமுதாய நீதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த சத்தியமூர்த்தி அவர்கள் 28.3.1943இல் காலமானார்.

இராஜகோபாலாச்சாரி

  • இராஜாஜி என்று புகழப்பெற்ற இராஜகோபாலாச்சாரி 10.12.1878இல் தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். சட்டம் பயின்று வழக்கறிஞராக சேலத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • காந்தியின் தீவிர ஆதரவாளர் ஆனார். 1930இல் வேதாரண்யம் சத்தியாகிரகத்தைத் தலைமை ஏற்று நடத்தினார். திருச்சியில் இருந்து 100 தொண்டர்களுடன் வேதாரணியத்திற்குப் பயணம் மேற்கொண்டு, கடல் நீரில் இருந்து உப்பு காய்ச்சி உப்புச் சட்டங்களை மீறினார்.
  • 1939இல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண முதலமைச்சர் ஆனார். தனது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தினார். இந்திமொழியை கட்டாயப் பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தினார்.
  • இரண்டாவது உலகப்போரின்போது ஆங்கில அரசு இந்தியத் தலைவர்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து, 1939இல் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
  • சுதந்திர இந்தியாவின் ‘முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக’ பொறுப்பேற்றார். மீண்டும் தமிழக முதலமைச்சராக 1952இல் பதவி ஏற்றார்.
  • தமிழகத்தில் ‘குலக்கல்வித் திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார், ஆனால் காமராஜர் மற்றும் பெரியார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 1954இல் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரசில் இருந்தும் வெளியேறினார்.
  • சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்து ‘இளம் இந்தியா’ என்ற பத்திரிகையை நடத்தினார்.
  • ‘சக்கரவர்த்தி திருமகன் (இராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்)’ போன்றவை இவர் எழுதிய உரைநடை நூல்கள் ஆகும்.
  • 1955இல் இவருக்கு ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது. இவர் 25.12.1972இல் காலமானார். இவருடைய அரசியல் தந்திர செயல்களால் ‘சாணக்கியர்’ எனப் போற்றப்படுகிறார்.

காமராஜர்

  • விருதுபட்டி என்று அழைக்கப்பட்ட விருதுநகரில் 15.7.1903இல் காமராஜர் பிறந்தார்.
  • 1924இல் ‘வைக்கம் சத்தியாகிரகம்’ போராட்டத்தில் ஈடுபட்டதின் மூலம் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
  • 1930இல் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது தமிழகத்தில் இராஜாஜியுடன் சேர்ந்து வேதாரண்ய உப்புச்சத்தியாகிரகத்தை மேற்கொண்டார். இதனால் கைதுச் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
  • 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்ட நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது சத்தியமூர்த்தியின் வீட்டில் ‘இந்திய தேசியக் கொடியை’ ஏற்றினார்.
  • காமராஜர் தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார். மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளைத் திறந்தது, இலவச கல்வி வழங்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக் கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
  • தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகித்தார். இதனால் ‘அரசை உருவாக்குவர்’ எனப் போற்றப்பட்டார்.
  • லால்பகதூர் சாஸ்திரியை 1964இல் இந்தியப் பிரதமராகவும், அவரது மறைவிற்குப் பிறகு இந்திரா காந்தியை 1966இல் இந்தியப் பிரதமராகவும் உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார்.
  • ‘காமராஜர் திட்டம்’ என்ற திட்டத்தின்படி கட்சிப் பணிக்காகத் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
  • 2.10.1975இல் காலமானார். இவரை மக்கள் அன்போடு ‘பெருந்தலைவர்’ என்றும் ‘கர்மவீரர்’ என்றும் அழைத்தனர்.
  • பாளையக்காரர்கள் ஆட்சிமுறை குறித்து விவரி. 

பாளையக்காரர்கள்

  • கி.பி. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் எங்கும் ‘பாளையப்பட்டு ஆட்சிமுறை’ இருந்தது.
  • திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை நாட்டில் மட்டும் 72 பாளையப்பட்டுகள் இருந்தன. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்கள் அதிகம் இருந்தனர்.
  • பாளையப்பட்டு ஆட்சி முறை: 
    • பாளையக்காரர்களின் உள்நாட்டு ஆட்சியில் நாயக்கர் அரசோ, பிற அரசுகளோ தலையிடுவதில்லை.
    • நாட்டுப்படை, காவற்படை வருவாய், நீதி ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
    • அரசுக்கோ அல்லது பேரரசுக்கோ உரிய தண்டல் தொகையையும், தேவைப்படும்போது படை உதவியும் அளிப்பது இவர்களுக்குரிய கடமையாக இருந்தது.
  • பாளையங்களின் அதிகார வரம்புகள் 3 வகைகளாகப் பகுக்கப்பட்டிருந்தன: நிதித்துறை, நீதித்துறை, இராணுவம்
    • நிதித்துறை: குடிமக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் முழுப்பொறுப்பும் பாளையக்காரர்களிடம் இருந்தது. வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கை மைய அரசுக்கும், மற்றொரு பங்கைத் தம்மிடம் உள்ள இராணுவத்திற்கும், மீதமுள்ள பங்கைச் சொந்த நிர்வாகச் செலவிற்கும் பகிர்ந்து அளிக்குமாறு நாயக்கர் அரசால் நெறிப்படுத்தப்பட்டிருந்தனர்.
    • நீதித்துறை: பாளையப் பகுதிக்குள் கொண்டு வரப்படும் அனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கும் தலைமை நீதிமன்றமாகப் ‘பாளையக்காரர்கள்’ விளங்கினர்.
    • இராணுவம்: பாளையங்கள் தாங்கள் வசூல் செய்யும் வரியில் மூன்றில் ஒரு பங்கை இராணுவத்திற்குச் செலவிடும் உரிமைப்பெற்று இருந்தனர். ஆபத்துக் காலங்களில் படை உதவி அளித்தவர்களுக்கு வரிக்கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

பாளையக்காரர் முறை ஒழிப்பு: கி.பி. 1801இல் சென்னை கவர்னர் எடவாட கிளைவ், பாளையக்காரர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணை பிறப்பித்தார். பின்னர் பாளையக்காரர்கள் ‘ஜமீன்தார்கள்’ எனப் பெயர் பெற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

wpChatIcon
error: Content is protected !!