பதினெண்கீழ்க்கணக்கு – குறிப்புகள்

  • வெண்பா யாப்பினைப் பயன்படுத்தி, குறைவான அடிகளால் ஐம்பது முதல் ஐந்நூறு பாடல்களைக் கொண்டு விளங்குவது கீழ்க்கணக்கு என்றும் கூறுகிறது பன்னிரு பாட்டியல்.
  •  இத்தொகுப்பில்  பதினெட்டு நூல்கள் அடங்கும். இப்பதினெட்டு நூல்களையும்
    • நீதி நூல்கள் (11 நூல்கள்)

1) திருக்குறள்
2)நாலடியார் 
3) இன்னா நாற்பது
4) இனியவை நாற்பது 
5)நான்மணிக்கடிகை
6)ஆசாரக்கோவை 
7) சிறுபஞ்சமூலம்
8) ஏலாதி
9)திரிகடுகம் 
10)முதுமொழிக்காஞ்சி
11) பழமொழி நானூறு

    • அக நூல்கள் (6 நூல்கள்)

1) ஐந்திணை ஐம்பது
2)ஐந்திணை எழுபது 
3) திணைமொழி ஐம்பது
4)  திணைமாலை நூற்று ஐம்பது
5) கைந்நிலை
6)கார் நாற்பது 

    • புற நூல் (ஒன்று)

1)களவழி நாற்பது

என மூன்று பிரிவுகளுள் அடக்கலாம்.

திருக்குறள்

பெயர்க்காரணம்:

  • குறள் வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளதால்  இப்பெயர் பெற்றது.
  • திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”
  • ஆசிரியர் – திருவள்ளுவர்
  • பாவகை – குறள் வெண்பா

திருக்குறளின் வேறு பெயர்கள்:

  • திருவள்ளுவம்
  • தமிழ் மறை
  • பொதுமறை
  • முப்பால்
  • பொய்யாமொழி
  • தெய்வநூல்

நூல் பகுப்பு முறை:

  • பால் – 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
  • அதிகாரம் – 133
  • பாடல்கள் – 1330
  • இயல்கள் – 9

நாலடியார்

பெயர்க்காரணம்:

  • நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
  • ஆசிரியர் – சமண முனிவர்கள்
  • தொகுத்தவர் – பதுமனார்
  • பாடல்கள் – 400
  • பொருள் – அறம்
  • பா வகை – வெண்பா

வேறு பெயர்கள்:

  • நாலடி நானூறு
  • வேளாண் வேதம்

நூல் பகுப்பு:

  • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
    • அறத்துப்பால் – 13 அதிகாரங்கள்
    • பொருட்பால் – 24 அதிகாரங்கள்
    • இன்பத்துப்பால் – 3 அதிகாரங்கள்

நூலின் சிறப்பு:

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.

நான்மணிக்கடிகை

பெயர்க்காரணம்:

  • நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற  அணிகலன் போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள்  இடம்பெறுவதால் நான்மணிக்கடிகை எனும் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – விளம்பி நாகனார்
  • ஊர் – விளம்பி
  • பாடல்கள் -104
  • பாவகை – வெண்பா

இன்னா நாற்பது

பெயர்க்காரணம்:

  • இன்னா – துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால்  இன்னா நாற்பது எனப்படுகிறது.
  • ஆசிரியர் – கபிலர்
  • பாடல்கள் – 1 + 40
  • பாவகை – வெண்பா

இனியவை நாற்பது

பெயர்க்காரணம்:

  • இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – பூதஞ்சேந்தனார்
  • பாடல்கள் – 1 + 40
  • பாவகை – வெண்பா

திரிகடுகம்

பெயர்க்காரணம்:

  • சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
  • திரி – மூன்று
  • கடுகம் – காரமுள்ள பொருள்
  • ஆசிரியர் – நல்லாதானர்
  • பாடல்கள் – 100 + 1
  • பாவகை – வெண்பா

ஆசாரக்கோவை

பெயர்க்காரணம்:

  • மனித வாழ்விற்கு இன்றியமையாத ஒழுக்கநெறிகள் பலவற்றையும் ஒன்றிணைத்துக் கூறும் ஒரு தொகுப்பு நூல் என்பதால் அப்பெயர் பெற்றது.
  • ஆசிரியர் -பெருவாயின் முள்ளியார்
  • பாடல்கள் – 100
  • பாவகை – பல்வேறு வெண்பா வகைகள்

பழமொழி நானூறு

பெயர்க்காரணம்:

  • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி  இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
  • ஆசிரியர் -முன்றுறை அரையனார்
  • பாடல்கள் – 400
  • பாவகை – வெண்பா

சிறுபஞ்சமூலம்

பெயர்க்காரணம்:

  • கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.
  • ஆசிரியர் – காரியாசான்
  • பாடல்கள் – கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
  • பாவகை – வெண்பா

முதுமொழிக்காஞ்சி

பெயர்க்காரணம்

  • மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
  • ஆசிரியர் – மதுரைக் கூடலூர்க்கிழார்
  • பாடல்கள் – 100
  • பாவகை – குறள் தாழிசை

ஏலாதி

பெயர்க்காரணம்:

  • ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
  • ஆசிரியர் – கணிமேதாவியார்
  • பாடல்கள் – பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
  • பாவகை – வெண்பா

ஐந்திணை ஐம்பது

பெயர்க்காரணம்:

  • ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – மாறன் பொறையனார்
  • பாடல்கள் – 50(5 X 10 = 50)
  • திணை – ஐந்து அகத்திணை
  • திணை வைப்பு முறை – முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
  • பாவகை – வெண்பா

ஐந்திணை எழுபது

  • ஐந்து தினைகளுக்கும் பதினாங்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் -மூவாதியார்
  • பாடல்கள் – 70(5*14=70)
  • திணை – ஐந்து அகத்தினணகளும்
  • திணை வைப்பு முறை – குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
  • பாவகை  – வெண்பா

திணைமொழி ஐம்பது

பெயர்க்காரணம்:

  • திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.
  • ஆசிரியர் – கண்ணஞ் சேந்தனார்
  • பாடல்கள் – 50(5*10=50)
  • திணை – ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை – குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
  • பாவகை  – வெண்பா

திணைமாலை நூற்றைம்பது

பெயர்க்காரணம்:

  • திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – கணிமேதாவியார்
  • பாடல்கள் – 150(5*30=150)
  • திணை – ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை – குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
  • பாவகை – வெண்பா

கைந்நிலை

பெயர்க்காரணம்:

  • கை = ஒழுக்கம்
  • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – புல்லாங்காடனார்
  • பாடல்கள் – 60(5*12=60)
  • திணை – ஐந்து அகத்திணைகளும்
  • பாவகை – வெண்பா

கார் நாற்பது

  • கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையினாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது. 
  • இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.
  • ஆசிரியர் – மதுரைக் கன்னங் கூத்தனார்
  • பாடல்கள் – 40(அகநூல்களில் அளவில் சிறியது)
  • திணை – அகத்திணை – முல்லைத்திணை
  • பாவகை – வெண்பா

களவழி நாற்பது

பெயர்க்காரணம்:

  • களம் = போர்க்களம்.
  • போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – பொய்கையார்
  • பாடல் – 40
  • திணை – புறத்திணை – வாகைத்திணை
  • பாவகை – வெண்பா

 

எண்

நூல்

பொருள்

பாடல்

ஆசிரியர்

1

நாலடியார்

அறம்

400

சமண முனிவர்கள்

2

நான்மணிக்கடிகை

அறம்

106

விளம்பிநாகனார்

3

இன்னா நாற்பது

அறம்

40

கபிலர்

4

இனியவை நாற்பது

அறம்

40

பூதஞ்சேந்தனார்

5

திருக்குறள்

அறம்

1330

திருவள்ளுவர்

6

திரிகடுகம்

அறம்

100

நல்லாதனார்

7

ஆசாரக்கோவை

அறம்

100

பெருவாயில் முள்ளியார்

8

பழமொழி நானூறு

அறம்

400

முன்றுறை அரையனார்

9

சிறுபஞ்சமூலம்

அறம்

102

காரியாசான்

10

முதுமொழிக் காஞ்சி

அறம்

100

கூடலூர் கிழார்

11

ஏலாதி

அறம்

80

கணிமேதாவியார்

12

கார் நாற்பது

அகம்

40

கண்ணன் கூத்தனார்

13

ஐந்திணை ஐம்பது

அகம்

50

மாறன் பொறையனார்

14

ஐந்திணை எழுபது

அகம்

70

மூவாதியார்

15

திணைமொழி ஐம்பது

அகம்

50

கண்ணன் சேந்தனார்

16

திணைமாலை நூற்றைம்பது

அகம்

150

கணிமேதாவியார்

17

கைந்நிலை

அகம்

60

புல்லாங்காடனார்

18

களவழி நாற்பது

புறம்

40

பொய்கையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

wpChatIcon
error: Content is protected !!