பக்தி இலக்கியம் – குறிப்புகள்

  • பக்தி இலக்கியம் பெரிதும் வளர்ந்த காலம் பல்லவர் காலம் ஆகும்.
  • தேவாரம்
    • தே+வாரம்=தேவாரம்
    • கடவுளுக்கு சூட்டப்படுகின்ற பாமாலை என்று பொருள்.
  • சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான்
  • சிவபெருமானின் ஐன்தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

பன்னிரு திருமுறைகள் பகுப்பு

  • சைவ சமயப் பெரியவர்கள் பாடிய பாடல்கள் திருமுறைகள் எனப்படும்.
  • 1 , 2, 3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர் (சம்பந்தர் தேவாரம்)
  • 4, 5 , 6 திருமுறைகள் – திருநாவுக்கரசர் (தேவாரம்)
  • 7ம் திருமுறை – சுந்தரர் (சுந்தரர் தேவாரம்)
  • 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்-திருவாசகம் மற்றும் திருக்கோவையார்
  • ஒன்பதாம் திருமுறை – 9 பேர்
  • பத்தாம் திருமுறை – திருமூலர்
  • பதினொன்றாம் திருமுறை – திரு ஆலவாய் உடையார் முதலாக பன்னிருவர்
  • பன்னிரண்டாம் திருமுறை – சேக்கிழார் (பெரியபுராணம்)
  • திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
    இவர் 11 திருமுறைகளை மட்டுமே தொகுத்தார்
    பெரியபுராணம் பின்னால் எழுதப்பட்டது.
  • திருமுறைகளைதொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன்
    முதலாம் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் எனப்படுகிறான்
  • முதல் ஏழு திருமுறைகள் மூவர் தேவாரம் எனப்படும்.
    இதற்கு மூவர் தமிழ் என்று வேறு பெயரும் உண்டு.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் – மூவர் முதலிகள்எனப்படுவர்.
  • சைவ சமயக் குரவர்கள் நால்வர்

1. திருஞானசம்பந்தர்

2. திருநாவுக்கரசர்

3. சுந்தரர்

4. மாணிக்கவாசகர்

  • பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.

திருஞானசம்பந்தர்

  • இயற்பெயர் : ஆளுடைய பிள்ளை
  • பெற்றோர் – சிவபாத இருதயர் – பகவதி அம்மையார்
  • பிறந்த ஊர் – சீர்காழி 
  • இவர் பாடியவை: 1,2,3 திருமுறைகள்

சிறப்பு:

  • 23 இசைகளில் பாடியுள்ளார்.
  • யாழ்முறி இவருக்கு மட்டுமே உரியது.
  • திராவிட சிசு – ஆதிசங்கரரால்  போற்றப்பட்டார்.
  • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் – சுந்தரர்

செய்த அற்புதங்கள்

  • மழவன் மகளுக்கு ஏற்பட்ட கடுமையான முயலகன் என்னும் நோயைப் போக்கினார்.
  • கூன் பாண்டியன் வெப்பு நோயைப் நீக்கினார்.
  • திருமறைக்காட்டுக் கோவிலின் கதவை தம் பாட்டால் மூடும்படி செய்தார்.
  • திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் செய்தார்.

திருநாவுக்கரசர்

  • இயற்பெயர்: மருள் நீக்கியார்
  • பெற்றோர் : புகழனார், மாதினியார்
  • அக்கா : திலகவதியார்
  • பிறந்த ஊர்: திருவாமூர்
  • இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
  • சிறப்பு பெயர்கள்:
    திருநாவுக்கரசர்,
    வாகீசர்,
    அப்பர்,
    ஆளுடைய அரசு,
    தாண்டக வேந்தர்,
    தருமசேனர்
  • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர் -தமக்கை திலகவதியார்
  • முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் .
  • கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறியவர்
  • திங்களூரில் பாம்பு தீண்டி இறந்தவரை உயிர்ப்பித்தார்.
  • திருமறைக்காட்டுக் கோவில் கதவை திறக்க செய்தார்.

சுந்தரர்

  • இயற்பெயர்: நம்பி ஆரூரார் / ஆரூரார்
  • பெற்றோரோர்: சடையனார் – மாதினியார்
  • இவர் பாடியவை: 7 திருமுறை

சிறப்பு பெயர்கள் :

  • வன் தொண்டர்
  • தம்பிரான் தோழர்
  • திருத்தொண்டத்தொகை பாடியவர் சுந்தரர்

மாணிக்கவாசகர்

  • இயற்பெயர் தெரியவில்லை
  • பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
  • இவர் பாடியவை: 8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

  • அருள் வாசகர்
  • மணிவாசகர்
  • அழுது அடியடைந்த அன்பர்
  • தென்னவன் பிரமராயர்
  • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

நூல்கள்

  • திருக்கோவையாரும் திருவாசகமும் இவர் பாடியவை

ஒன்பதாம் திருமுறை ( திருவிசைப்பா

  • 9 பேர் பாடியது

பத்தாம் திருமுறை ( திருமந்திரம்) 

  • திருமூலர்
  • திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை
  • திருமந்திரத்தின் வேறு பெயர்கள்: தமிழ் மூவாயிரம்
  • முதல் சித்த நூல் யோக நெறியை கூறும் தமிழர் நூல்
    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்நூலின் சிறப்பு

பதினொன்றாம் திருமுறை (பிரபந்த மாலை)

  • 12 பேர் பாடியுள்ளனர்
  • 40 நூல்கள் உள்ளன
  • திருவாலவாயுடையார் (1)
  • காரைக்காலம்மையார் (நான்கு நூல்கள்)
  • கல்லாடர் (1)
  • நக்கீரர் (10)
  • கபிலர் (3)
  • பரணர் (1)
  • அதிரா அடிகள் 1
  • இளம்பெருமான் அடிகள் (1)
  • ஐயடிகள் (1)
  • சேரமான் பெருமான் நாயனார் (3)
  • பட்டினத்தார் (5)
  • நம்பியாண்டார் நம்பி (ஒன்பது நூல்கள் )
  • தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் நம்பியாண்டார் நம்பி
    64 நாயன்மார்களை பற்றி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்

காரைக்கால் அம்மையார்

  • இயற்பெயர் புனிதவதியார் 
  • காரைக்கால் – வணிக மரபினர்
  • சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி

12ம் திருமுறை (பெரியபுராணம்)

  • சேக்கிழார்
  • இயற்பெயர்: அருண்மொழித்தேவர்

சிறப்பு பெயர்கள் :

  • உத்தம சோழப் பல்லவன்
  • தொண்டர் சீர் பரவுவார்

நூல் அமைப்பு:

  • இரண்டு காண்டம் 13 சருக்கம் 4286 பாடல்கள்
  • உலகெலாம் என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்ட நூல்

 63 நாயன்மார்களில் மூவர் பெண்கள்

  • காரைக்கால்
  • அம்மையார்
  • இசைஞானியார்
  • மங்கையர்க்கரசி

நாலாயிர திவ்ய பிரபந்தம்

  • ஆழ்வார்களின் பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன. திராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
  • ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் – அன்பில் – அருளில் – தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம். 
  • முதலாழ்வார்கள்:
    பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

ஆழ்வார்கள் – பாசுரங்களின் எண்ணிக்கை

1.பொய்கை ஆழ்வார்- 100
2.பூதத்தாழ்வார்- 100
3.பேயாழ்வார்- 100
4.திருமழிசை ஆழ்வார்- 216
5.மதுரகவி ஆழ்வார்- 11
6.நம்மாழ்வார்- 1296
7.குலசேகர ஆழ்வார்-105
8.பெரியாழ்வார்- 473
9.ஆண்டாள்- 173
10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்- 55
11.திருப்பாணாழ்வார்- 10
12.திருமங்கை ஆழ்வார்- 1137
பொய்கையாழ்வார்
  • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
  • காலம் : 7ம்நூற்றாண்டு
  • நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் 
  • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பூதத்தாழ்வார்

  • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
  • காலம் :  7ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பேயாழ்வார்

  • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
  • காலம்: ஏழாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

திருமழிசையாழ்வார்

  • பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
  • காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
  • பாடல்கள் : 216

பெரியாழ்வார்

  • பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • காலம்: 9ம் நூற்றாண்டு 
  • எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
  • பாடிய பாடல் : 473

ஆண்டாள்

  • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
  • காலம் : 9ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
  • பாடிய பாடல் : 173

தொண்டரடி பொடியாழ்வார்

  • இயற்பெயர் : விப்ர நாராயணன்
  • பிறந்த ஊர் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு 
  • எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
  • பாடிய பாடல் : 55

திருமங்கையாழ்வார்

  • பிறந்த இடம் : திருக்குறையலூர்
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,   திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை,  பெரிய திருமடல்,சிறிய திருமடல்.
  • பாடிய பாடல் : 1253 
திருப்பாணாழ்வார்
  • பிறந்த ஊர் : உறையூர் (திருச்சி)
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : அமலனாதிபிரான்
  • பாடிய பாடல் : 10

குலசேகர ஆழ்வார்

  • பிறந்த இடம் : திருவஞ்சைக்களம்
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
  • பாடிய பாடல்  : 105

நம்மாழ்வார்

  • பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி
  • பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
  • எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
  • பாடல்கள் : 1296

மதுரகவி ஆழ்வார்

  • பிறந்த ஊர் : திருக்கோளூர்
  • காலம் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
  • எழுதிய நூல் : கண்ணி நுண் சிறுத்தாம்பு
  • பாடல்கள் : 96

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

wpChatIcon
error: Content is protected !!