-
0 Comments
குறுவினாக்கள்
- தேவாரம் குறிப்பு வரைக.
-
- பன்னிரு திருமுறைகள்: பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளே தேவாரம் என அழைக்கப்படுகின்றன.
-
பாடியவர்கள்: தேவார மூவர் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரால் இவை பாடப்பட்டன.
- திருஞானசம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளைப் பாடினார்.
- திருநாவுக்கரசர் அடுத்த மூன்று திருமுறைகளைப் பாடினார்.
- சுந்தரர் ஏழாவது திருமுறையைப் பாடினார்.
- தேவார மூவர் யார்?
- திருஞானசம்பந்தர்
- திருநாவுக்கரசர் (அப்பர்)
- சுந்தரர்
- திருநாவுக்கரசர் குறித்து எழுதுக.
-
- இயற்பெயர்: மருள் நீக்கியார்
- பெற்றோர் : புகழனார், மாதினியார்
- அக்கா : திலகவதியார்
- பிறந்த ஊர்: திருவாமூர்
- இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
- சிறப்பு பெயர்கள்:
- திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்
- சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் -தமக்கை திலகவதியார்
- “நாமார்க்கும் குடியல்லோம்…..” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- “நாமார்க்கும் குடியல்லோம்…..” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் திருநாவுக்கரசர் ஆவார்.
- மாணிக்கவாசகர் குறித்து எழுதுக.
-
- இயற்பெயர்: தெரியவில்லை
- பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
- இவர் பாடியவை: 8 திருமுறை
சிறப்பு பெயர்கள்
-
- அருள் வாசகர்
- மணிவாசகர்
- அழுது அடியடைந்த அன்பர்
- தென்னவன் பிரமராயர்
- மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால்)
- கோகழி ஆண்ட குறுமனிதன் யார்?
- கோகழி ஆண்ட குறுமனிதன் சிவபெருமான் ஆவார்.
- வேகம் கெடுத்தாண்ட வேந்தன் யார்?
- வேகம் கெடுத்தாண்ட வேந்தன் சிவபெருமான் ஆவார்.
- முதல் ஆழ்வார்கள் மூவரின் பெயரினை எழுதுக.
- பொய்கையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- பொய்கையாழ்வார் குறித்து எழுதுக.
-
- பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
- காலம் : 7ம்நூற்றாண்டு
- எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
- பாடல்கள் : 100
- “வையந் தகளியா….”எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- “வையந் தகளியா….”எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் பொய்கையாழ்வார் ஆவார்.
- பூதத்தாழ்வார் குறித்து எழுதுக.
-
- பிறந்த ஊர் : மகாபலிபுரம்
- காலம் : 7ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
- “அன்பே தகளியா….” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- “அன்பே தகளியா….” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் பூதத்தாழ்வார் ஆவார்.
- பேயாழ்வார் குறிப்பு வரைக.
- பிறந்த ஊர் : மயிலாப்பூர்
- காலம்: ஏழாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
- “திருக்கண்டேன் பொன்மேனி….” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- “திருக்கண்டேன் பொன்மேனி….” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் பேயாழ்வார் ஆவார்.
- அன்பால் ஞான விளக்கினை ஏற்றியவர் யார்?
- அன்பால் ஞான விளக்கினை ஏற்றியவர் பூதத்தாழ்வார் ஆவார்.
- உலகினை விளக்காக கொண்டு விளக்கேற்றியவர் யார்? யாருக்காக ஏற்றினார்?
- உலகினை விளக்காக கொண்டு விளக்கேற்றியவர் பொய்கையாழ்வார் ஆவார்.
- நாராயணனுக்காக ஏற்றினார்.
- ஆண்டாள் குறித்து எழுதுக.
- பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
- வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
- காலம் : 9ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
- பாடிய பாடல் : 173
- “மார்கழி திங்கள்…” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- “மார்கழி திங்கள்…” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் ஆண்டாள்.
- மார்கழி மாத நோன்பு குறித்து எழுதுக.
- இறைவனை, குறிப்பாக கண்ணனை மணக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் ஆண்டாள் நாச்சியார் இந்த நோன்பை இருந்தார்.
- அதிகாலை எழுந்து நீராடி, வீட்டில் கோலமிட்டு, திருப்பாவை பாசுரங்களைப் பாடி, பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபடுவர்.
- திருமந்திரம் குறித்து எழுதுக.
- இது 3000 பாடல்களைக் கொண்ட ஒரு மெய்யியல் நூல்.
- ‘அன்பே சிவம்’ என்ற தத்துவத்தை வலியுறுத்துகிறது.
- ‘சிவமே அன்பு’ என்று கூறுகிறது.
- இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகப் போற்றப்படுகிறது.
- அன்பும் சிவமும் இரண்டென்பார் யார்?
- அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்.
- பட்டினத்தார் குறிப்பு வரைக.
- இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.
- பட்டினத்தாரின் இயற்பெயரினை எழுதுக.
- இயற்பெயர்: திருவெண்காடர்.
- கடுவெளி சித்தர் குறித்து எழுதுக.
- கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.
- நீர்மேல் குமிழி போன்றது எது?
- நீர்மேல் குமிழி போன்றது நம் உடல்.
- நால்வகைப் பகைகள் யாவை?
- காமம்
- குரோதம்
- மதம்
- மாற்சரியம்
- அட்டசித்திகளைப்/ எண்வகை சித்திகளைப் பட்டியலிடுக.
- அணிமா
- மகிமா
- இலகிமா
- கரிமா
- பிராத்தி
- பிராகாமியம்
- ஈசத்துவம்
- வசித்துவம்
- எவையெல்லாம் பாவச்செயல்கள் என கடுவெளி சித்தர் குறிப்பிடுகிறார?
- உன்னைத் திட்டியவர் யாராக இருந்தாலும், அவரை நீயும் திருப்பி திட்டாதே.
- இவ்வுலக மக்கள் அனைவரும் பொய் சொன்னாலும் நீ மட்டும் பொய் கூறாதே.
- பிறர் திட்டும்படி வெறுக்கும்படியான, கீழ்த்தரமான செயல்களைச் செய்யாதே.
- கல்லை, பறவைகள்மீது எறியாதே. இவையெல்லாம் பாவச் செயல்கள் ஒருவர் இவற்றைச் செய்யக் கூடாது.
- இவையெல்லாம் பாவச்செயல்கள் என்கிறார் கடுவெளி சித்தர்.
- அட்டாங்கயோகம் – பட்டியலிடுக.
- இயமம்
- நியமம்
- ஆசனம்
- பிராணாயாமம்
- பிரத்தியாகாரம்
- தாரணை
- தியானம்
- சமாதி
- வீடுபேறு அளிப்பவர் யார்?
- வீடுபேறு அளிப்பவர் சிவபெருமான் ஆவார்.
- இராவண காவியம் குறித்து எழுதுக.
- இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை.
- இக்காப்பியம் தமிழக காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் – என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது.
- இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
- புலவர் குழந்தை குறிப்பு வரைக.
- 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.
- இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார்.
- ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார்.
- இராவண காவியத்தில் மைந்துள்ள காண்டங்களைப் பட்டியலிடுக.
- தமிழக காண்டம்
- இலங்கைக் காண்டம்
- விந்தக் காண்டம்
- பழிபுரி காண்டம்
- போர்க் காண்டம்
- தமிழை மக்கள் வளர்த்த விதத்தினை எழுதுக.
- தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.
- இருகண் பார்வை எது?
- இருகண் பார்வை தமிழ்மொழி ஆகும்.
- தாய்மொழிப்படலம் வழி படிப்பின் சிறப்பினை எழுதுக.
- தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை.
- கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை.
- செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை.
- வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை.
- நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை.
- யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.
நெடுவினாக்கள்
- திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களின் பொருளினை விளக்குக. (அல்லது) ‘நாமார்க்கும் குடியல்லோம்…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.
திருநாவுக்கரசர்
-
- இயற்பெயர்: மருள் நீக்கியார்
- பெற்றோர் : புகழனார், மாதினியார்
- அக்கா : திலகவதியார்
- பிறந்த ஊர்: திருவாமூர்
- இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
- சிறப்பு பெயர்கள்:
- திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்
- சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் -தமக்கை திலகவதியார்
பாடல் விளக்கம்
-
- மலர் போன்ற சிவபெருமானின் திருவடிகளை அடைக்கலமாக அடைந்தமையால், நாம் யாருக்கும் அடிமையாவதில்லை. மரணத்தைத் தருகின்ற இயமனுக்கு அஞ்சுவதில்லை. நரகத்தில் புகுந்து துன்பமடைவதில்லை. பொய்யும் புரட்டும் இனி நம்மை அணுகுவதில்லை. என்றும் ஆனந்தமாக இருப்போம். நோய் என்பதையே அறியாது இருப்போம்.
- வேறு யாரையும் பணிந்து நிற்க மாட்டோம். எந்நாளும் நமக்கு இன்பமே ஏற்படும். துன்பம் என்பதை நாம் அறிய மாட்டோம். யாருக்கும் அடிமையாகாதவனும், வெண்குழையைக் காதில் அணிந்த அரசனாகிய ஆதி சங்கரனுக்கு மட்டுமே நாம் அடிமையாக இருப்போம் என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.
- மாணிக்கவாசகர் பாடலின் பொருளினை விளக்குக.(அல்லது) ‘நமசிவாய வாழ்க…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) திருவாசகப் பாடலின் பொருளினை எழுதுக.
மாணிக்கவாசகர்
-
- இயற்பெயர் தெரியவில்லை
- பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
- இவர் பாடியவை: 8 திருமுறை
சிறப்பு பெயர்கள்
-
- அருள் வாசகர்
- மணிவாசகர்
- அழுது அடியடைந்த அன்பர்
- தென்னவன் பிரமராயர்
- மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )
பாடல் விளக்கம்
-
- திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.
- மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெல்க; பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் வெல்க; தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் வெல்க; கை குவித்து வணங்குவோர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெல்க; கைகளைத் தலைமேல் உயர்த்தி வணங்குவோரை வாழ்வில் உயரச் செய்கின்ற சிறப்புடையவனது திருவடி வெல்க என்று இறைவனின் திருவடிகளை வாழ்த்துகின்றார் மாணிக்கவாசகர்.
- முதல் ஆழ்வார்கள் மூவரின் பாடல்களின் பொருளினை எழுதுக.
முதலாழ்வார் மூவர்
-
- வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் எனப் போற்றப்படுகின்றனர்.
பொய்கையாழ்வார்
-
- பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
- காலம் : 7ம்நூற்றாண்டு
- எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
- பாடல்கள் : 100
பாடல் விளக்கம்
-
- “பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.
பூதத்தாழ்வார்
-
- பிறந்த ஊர் : மகாபலிபுரம்
- காலம் : 7ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
பாடல் விளக்கம்
-
- “பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.
பேயாழ்வார்
-
- பிறந்த ஊர் : மயிலாப்பூர்
- காலம்: ஏழாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
பாடல் விளக்கம்
-
- “பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்” என்று மனமுருகிப் பாடுகின்றார்.
- பொய்கை ஆழ்வார் பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) ‘வையந் தகளியா…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.
பொய்கையாழ்வார்
-
- பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
- காலம் : 7ம்நூற்றாண்டு
- எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
- பாடல்கள் : 100
பாடல் விளக்கம்
-
- “பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.
- பூதத்தாழ்வார் பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) ‘அன்பே தகளியா…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.
பூதத்தாழ்வார்
-
- பிறந்த ஊர் : மகாபலிபுரம்
- காலம் : 7ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
பாடல் விளக்கம்
-
- “பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.
- பேயாழ்வார் பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) ‘திருக்கண்டேன் பொன்மேனி…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.
பேயாழ்வார்
-
- பிறந்த ஊர் : மயிலாப்பூர்
- காலம்: ஏழாம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
- பாடல்கள் : 100
பாடல் விளக்கம்
-
- “பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்” என்று மனமுருகிப் பாடுகின்றார்.
- திருப்பாவை முதல் பாடலின் பொருளினை எழுதுக. (அல்லது) பாவை நோன்பு மேற்கொள்ளும் விதத்தினை திருப்பாவை வழி விளக்குக. (அல்லது) ‘மார்கழி திங்கள்…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.
ஆண்டாள்
-
- பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
- வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
- காலம் : 9ம் நூற்றாண்டு
- எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
- பாடிய பாடல் : 173
திருப்பாவை – முதல் பாடல்
பாடல் விளக்கம்
-
- அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
- திருமூலர் பாடலின் பொருளினை எழுதுக.
திருமந்திரம் – திருமூலர்
-
- திருமூலர் 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். இவர் இயற்றிய திருமந்திரத்தைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர். இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில் (இயல்கள்) மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. ‘மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது’ என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம்.
- வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும்.
அன்புடைமை – பாடல் விளக்கம்
-
- அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.
- பொன்னைக் காட்டிலும் ஒளி வீசுகின்ற புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான். வானில் மின்னுகின்ற பிறைச் சந்திரனைத் தன் சடை முடியில் சூடியிருப்பவன். சுடுகாட்டில் எஞ்சியிருக்கும் சூடான சாம்பலைப் பொடி போல திருமேனி எங்கும் பூசிக் கொள்பவன். அநதச் சாம்பலின் பொடி மீது திருநடனம் ஆடுகின்றவன். அப்படிப்பட்ட இறைவனிடம் நான் கொண்டுள்ள அன்பும், இறைவன் என் மீது கொண்டுள்ள அன்பும் இரண்டறக் கலந்துள்ளது.
- உள்ளம் உருக இறைவனைப் போற்றி வழிபடுங்கள். உடலை விட்டு உயிர் பிரியும் முன்பே அனைத்து உயிர்களின் மீதும் அன்பை செலுத்தி, அதன் மூலம் இறைவனைத் தேடுங்கள். அப்படிச் செய்தால், உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் தனது அளவில்லாத பெருங்கருணையைக் கொடுத்து இறைவன் நம்மோடு இருப்பார்.
- தானே சுயமாகத் தோன்றியவன். தம்மை அன்போடு வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும் காலம் வரை அவர்களோடு வழித்துணையாக வருபவன். கொன்றை மலர்களைத் தன் இடப்பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவன். அப்படிப்பட்ட சிவபெருமான் பேரன்பின் உருவமாக என்னுடன் கலந்து நிற்கின்றான்.
- கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை நான் கண்டு கொண்டேன். அறியாமையாகிய யானையைக் கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாகத் தன் மேல் போர்த்திக் கொண்டனின் அழகிய கழல்களை நான் கண்டு கொண்டேன். தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருடிகளை நான் கண்டு கொண்டேன். இறைவன் மீது நான் கொண்ட பேரன்பால் அழகிய கழல்களை அணிந்து அன்பு உருவமாக நிற்கின்ற சிவனின் திருமேனியை நான் கண்டு கொண்டேன்.
- பட்டினத்தார் – திருவிடைமருதூர் – பாடல்களின் பொருளினை விளக்குக.
பட்டினத்தார்
-
- இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.
திருவிடைமருதூர் – பாடல் விளக்கம்
-
- உள்ளத்தில் ஒழுக்கம் இல்லாமல் முற்றும் துறந்து விட்டேன் என்று பொய் பேசிக் கொண்டு காட்டில் வாழ்வதால் பயன் இல்லை. காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதாலும் பயன் இல்லை. கந்தல் துணிகளை உடுத்திக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தி பிறரிடம் இரந்து உண்டு வாழ்வதாலும் பயன் இல்லை. அவை யாவும் மற்றவர்களுக்காக போடப்படும் வேஷம்தான். ஆனால் இல்லறத்தில் இருந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தாலும், உள்ளத்தில் ஒழுக்கமாக இருப்பவனே இறைவனின் திருவடியை அடைவான். பேரின்பத்தைப் பெறுவான்.
- வாழ்வதற்குரிய செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் பெற்ற தாயும் நமக்குப் பகையாவார். நம் வாழ்வின் பாதியாக விளங்கும் மனைவியும் பகையாவார். நம் மூலமாக இந்த உலகிற்கு வந்த பி்ள்ளைகளும் பகையாவார். உற்றார் உறவினர் அனைவரும் பகையாவர். இவர்கள் அனைவரும் நம்மை விட்டு நீங்கினாலும் சிவபெருமானின் பொன்னடிகளைப் போற்றிக் கொண்டே இருந்தால், அவரின் திருவடி நமக்கு எப்போதும் துணையாக இருக்கும். என் நெஞ்சே! அவருடைய திருவடிகளில் அன்பு செலுத்து. அதுவே உனக்கு இந்த உலகத்தின் ஆசைகளில் இருந்து விடுதலை தரும்.
- கடுவெளிசித்தர் – “பாவஞ்செய் யாதிரு மனமே…” பாடல்களின் பொருளினை எழுதுக.
கடுவெளிச்சித்தர்
-
- கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.
பாடல் விளக்கம்
-
- என் மனமே! நீ ஒருவருக்குமே எந்த ஒரு சிறு பாவமும் செய்யாதிருப்பாயாக. ஏனெனில் நீ பாவம் செய்தால் இயமன் கோபம் அடைவான். அவன் அவ்வாறு கோபப்பட்டு உடனே உன் உயிரைப் பறித்துக் கொண்டு சென்று விடுவான். அதனா சிறிதும் பாவம் செய்யாது இருப்பாயாக.
- மனமே! மற்றவர் நமக்குத் தீமை செய்தால் அதற்காக நாம் அவர் வாழ்வே அழியும்படியாகச் சாபம் கொடுக்கலாமா? நிச்சயமாகக் கூடாது. விதி (வாழ்) என்ற ஒன்றை நம்மால் தடுத்து நிறுத்த முடியுமா?முடியாது. நம்மிடம் ஒருவர் கோபம் கொள்வதால் பதிலுக்கு நாமும் அவரிடம் கோபம் கொள்ளலாமா? கூடாது. பிறர் பொருள்மேல் ஆசை உண்டாக்கும் எண்ணத்தை பிறரிடம் நாம் வளர்க்கலாமா? கூடாது.
நேசிப்புத்தன்மை
-
- மனமே! சொல்லுதற்கு அரிய அதாவது, சொல்லும்போதே பாவம் உண்டாக்கக் கூடிய தீய செயல்களான சூது, பொய், மோசம் இவற்றைச் செய்யாமல் விட்டு ஒழிக்கவேண்டும். சூது. பொய், மோசம் இம்மூன்று பாவச் செயல்களையும் ஒருவர் செய்தால் அவருடைய உறவினர் அவரை விட்டு நீங்கி விடுவர். இறுதியில் அவருக்கு அழிவுதான் உண்டாகும்.
-
- இறைவனிடம் நல்ல புத்தியும், நல்ல நம்பிக்கையும் கொள்ள வேண்டும். மனிதர்களிடம் அன்பு செலுத்தவேண்டும். மொத்தத்தில் நல்ல புத்தி. நல்ல நம்பிக்கை, நல்ல அன்பு இவற்றைக் கைக்கொண்டு இறைவனையும். மனிதர்களையும் நேசிக்க வேண்டும்.
- மனமே! இந்த உடலானது நீர்மேல் தோன்றி மறையும் குமிழிபோன்று நிலையற்றது. சில நாள்களில் இவ்வுடலைவிட்டு உயிர் பிரிந்து விடும். இந்த மாயத்தை நீ அறிந்து கொள்வாயாக. இவ்வுலக ஆசைகளில் நீ பற்றுக் கொள்ளாது இருப்பாயாக, அங்ஙனம் நீ பற்றுக் கொள்ளாதிருப்பதற்கு யோகம் செய்வதே நல்லதோர் தந்திரம் ஆகும்.
இறைநிலை அடைதல்
-
- தாயின் வயிற்றில் பத்து மாதம் தங்கி ஒருவன் இவ்வுலகில் பிறந்தான். பிறந்த பின்பு இறைவனைத் தியானிக்காமல், தேவையற்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டு. பிறந்தது யோகம் செய்து இறைநிலையை அடைவதற்காகத்தான் என்னும் காரணத்தை அறிந்து கொள்ளாமலேயே அவன் வீணே இறந்துவிட்டான். மனமே! நீ அத்தகைய எளிய மனிதன்போல் இருக்காமே. யோகப்பயிற்சி செய்து இறைநிலையை அடைவாயாக.
(நந்தவனம் தாயின் கருப்பை. குயவன் இறைவன்.நாலாறு
மாதங்கள் = 4+6= 10 மாதங்கள். தாய் வயிற்றில் கருவாக இருக்கும் கால அளவு)
எமப்பயம்
-
- மனமே!நீ யாரையும் பழித்துப் பேசாதே !நீ தேடி வைக்கின்ற சொத்தில் சிறுபகுதி கூட நிலையாக உன்னிடம் நிற்காது. தீயவற்றைப் பார்ப்பதும், தீயவற்றைக் கேட்பதும், தீயவற்றைச் சொல்வதும் ஆகிய ஏடணை மூன்றும் பொல்லாதவை. எனவே, அவற்றைச் செய்யாதே. சிவபெருமான் மேல்பக்தி வைத்தால் இயமபயம் உன்னை நெருங்காது.
இறைவனை வணங்குதல்
-
- மனமே !நீ எப்பொழுதும் நல்ல வழியையே நாடவேண்டும் . எப்பொழுதும், எந்த நாளும் இறைவனை ஆர்வமுடன் தேடவேண்டும். மனம், மொழி, மெய்யால் தூயவர்களாய் விளங்கும் நல்லவர்களுடன் விரும்பிச் சேரவேண்டும். யாவற்றையும் மனிதர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகிய இறைவனை நீ என்றென்றும் வணங்குவாயாக.
அறங்கள்
-
- மனமே! நல்லவர்களை ஒதுக்காதே. தலைமையான அறங்கள் பனிரெண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று கூட செய்யாமல் விட்டுவிடாதே. பொல்லாங்கு எதுவும் சொல்லதே. ஒருவரைப் பற்றி, மற்றவரிடம் அவதூறாகப் பேசும் செயலைச் (கோள் மூட்டுதல்) செய்யாதே.
(அறம் நால் எட்டு 4 x 8 -32 அறங்கள்)
யோகம் செய்தல்
-
- மனமே! வேதம் கூறும் நல்வழியில் நிற்பாயாக. நல்லவர்கள் எவ்வழிகளை விரும்பி வாழ்வில் செய்கிறார்களோ, நீயும் அவர்கள் செல்லும் வழியிலேயே செல்வாயாக, அனைவருக்கும் நல்லனவற்றையே சொல்வாயாக கோபம் என்பது அனைத்துப் பாவங்களுக்கும் காரணமானது. அதனை, யோகம் செய்து நீக்குவாயாக.
ஆர்வத்துடன் இருத்தல்
-
- மனமே! நீ பிச்சையென்று எந்த ஒரு பொருளையும் எவரிடமும் பெறாதே. அழகான பெண்மேல் ஆசை கொண்டு அழியாதே. ஆசை உன்னை ஆட்டும்படி அதற்கு அடிமையாகி விடாதே. ஆனால் சிவபெருமானை எவ்வாறேனும் காணவேண்டும் என்னும் ஆசையில் இருந்து மீண்டுவிடாதே. தொடர்ந்து அவனைக் காணவேண்டும் என்னும் ஆர்வத்துடன் இருப்பாயாக,
மெய்ஞ்ஞானம்
-
- மனமே! இறைவனைக் காணவேண்டும் என்பதுதான் மெய்ஞ்ஞானப் பாதை ஆகும். நீ அந்தப் பாதையில் செல்வாயாக, வேட்ட வெளியாகத் திகழும் இறைவனைக் கண்டறிவாயாக. இறைநம்பிக்கை அற்றோர் கூறும் அஞ்ஞானம் உன்னிடத்தில் இருந்தால் அதனை உடனே தோண்டி எறிவாயாக உன்னை நாடியவர்களுக்கு நாடியவர்களுக்கு எல்லாம் இறைவனுடனான உன் பேரின்ப அனுபவத்தை அவர்கள் மனம் ஏற்கும்படிக் கூறுவாயாக
(மெய்ஞ்ஞானம் இறைவனை நாடும் அறிவு. அஞ்ஞானம் இறைவன் இருப்பதை மறுக்கும் அறிவு)
நல்ல புத்தி
-
- மனமே! உண்மைக் குருவின் சொல்லை என்றுமே மீறி நடக்காதே. நல்ல நன்மைகளைப் பிறர்க்குச் செய்வதைக் குறைத்துக் கொள்ளாதே. அந்த நற்செயலைப் பெருக்கிக் கொள்வாயாக. தெரியாத ஒன்றைத் தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ளாதே. இறைவன் கொடுத்த நல்ல புத்தியைப் பொய்யான வழியில் செலுத்தி வாழ்வை வீணாக்கிக் கொள்ளாதே.
வீடுபேறு
-
- மனமே! நம்முடன் இறுதி வரை வருவது ஒன்றுமில்லை. புழு போன்ற துர்நாற்றம் வீசும் உடலை எடுத்து இவ்வுலகில் நடமாடுவது தொல்லை தேடுவதற்கு அரிய வீடுபேற்றினை அடைவதே எமது எல்லை. ஆந்த அரிய வழியைத் தேடித் தெளிவோர் இவ்வுலகில் எவருமில்லை.
முக்தி
-
- மனமே ! இந்த உடல். ஐம்புலன்களால் சூழ்ந்த காடாகும். ஐம்புலன்களால் உமாதேவியாரின் கணவராகிய சிவபெருமானை நீ நாடு. அவரை எங்ஙனமேனும் வருந்தி தேடு. அந்த மூலப்பொருளை அடைந்துவிட்டால் அதுவே முத்தியடையும் வீடாகும்.
நான்கு பகை
-
- மனமே!உன் உள்ளேயே காமம். குரோதம். மதம். மாற்சரியம் என்னும் நால்வகைத் தீய குணங்களை ஒருவரும் அசைக்க முடியாதபடி கோட்டையாக அமைத்துள்ளாய். ஆனால் இவ்வுடலானது நல்ல நாடு போன்றதாகும். இந்த நான்கு பகைகளையும் ஓட ஓட விரட்டினால் உடல் என்னும் நாடு நம் வசப்படும். அதற்கு மனமே! நீ முதலில் என் வசப்பட வேண்டும்.
- கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்னும் ஐந்து புலன்களும் கள்ளப் புலன்கள் ஆகும். ஏனெனில், மனிதனை அறிவுநிலை அடையவிடாமல் இவைதான் தடுக்கின்றன. இவற்றை மனதால் மட்டுமே வசப்படுத்த முடியும். மனதை, தியானம் மற்றும் யோகப் பயிற்சியினால் மட்டுமே வசப்படுத்த முடியும். இவ்வழியில் அதனை வசப்படுத்தி, இந்த ஐம்புலன்கள் என்னும் காட்டை கனலில் இட்டால் பேரின்பமாகிய வீடுபேறு கிடைக்கும்.
காசியும் கங்கையும்
-
- மனமே! எண்ணற்ற பாவங்களை வாழ்நாளில் செய்துவிட்டு அதனைப் போக்கிக் கொள்ள காசிக்குச் சென்றால் அந்தப் பாவங்கள் தொலையுமோ? தொலையாது. கங்கையிலே நீராடினாலாவது முத்தி விடைக்குமா என்றால் கிடைக்காது. மற்றவரிடம் நம் பாவங்களை எடுத்துச் சொல்லிப் புலம்புவதால் பாவங்கள் தீருமா என்றால் தீரா. நான் உயர்ந்தவன். நீ தாழ்ந்தவன் என்றும் வேறுபாடு. மேற்கண்ட செயல்களை எல்லாம் நாம் செய்வதால் போகுமோ? போகாது. அவரவர் செய்த வினைகளின் பலன்களை அவரவரே அனுபவிக்க வேண்டும். வினைகளினின்றும் விடுபடுதல் அரிது.
பொய்வேடம்
-
- மனமே! இவ்வுலகில் பலரும் பொய் வேடமிட்டுத் திரிகின்றனர். அதுமட்டும் அல்லாமல், ஒருவரின் புறத்தோற்றத்தைக் கண்டு மட்டுமே இவ்வுலகம் அவரைப் பாராட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் பொய்க்கோலம் ஒருவன் இறந்து போகும் காலத்தில்தான் அழிகிறது.
- ஒருவன் மரண மடையும் காலத்தில்தான் செய்த பாவங்களை எண்ணி வேதனைப் படும் நிலை வாய்க்கிறது. இதனால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. இவையெல்லாம் சுத்த மாயை, இதுபோன்று பொய்வேடமிட்டுத் திரிவதனால் உலகில் யார்க்கு என்ன நன்மை?ஒருவருக்கும் இல்லை. எனவே மனமே! நீ பாவம் செய்யாதிரு.
முடிவில்லாதவன்
-
- மனமே! இறைவன் சிறிதும் குற்றமற்றவன். பத்தரை மாற்றுத் தங்கம் போன்றவன். அவனையே கதி என்று நினைப்பவர்க்கு எந்த நாளும் தாழ்வில்லை. இறைவன் முடிவில்லாதவன். எங்கும் ஆனந்தமாய் நிரம்பியவன்
அட்டசித்தி
-
- மனமே!இவ்வுலகிலேயே உயர்ந்தது பக்திதான். அதைத் தவிர வேறு எதுவுமே உயர்ந்ததல்ல. இறைவன் மேல் பக்தன் கொள்ளும் ஆழ்ந்த அன்பே இறுதியில் வீடுபேற்றை அளிக்கும் சிவபெருமான் மேல் தொடர்ந்து பக்தி செலுத்தி வந்தால், அட்ட சித்திகளும் விரைவிலேயே கைகூடும். (அட்ட சித்தி- எண்வகை சித்திகள். அணிமா, மகிமா, இலகிமா கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்)
தியானம்
-
- மனமே!அன்பு என்னும் நல்ல மலரினைத் தூவி,பரமானந்தமயமாய் விளங்கும் இறைவனின் திருவடிகளை வணங்குவாயாக. உடல், ஆவி இவ்விரண்டையும் முத்தியடையச் செய்ய இவ்வுலகிலேயே தியானத்தின் மூலம் பழகுவாயாக. அவ்வாறு செய்வதற்கு மனமே! நீ உன்னைப் பழக்கிக் கொள்வாயாக.
வீடுபேறு
-
- மனமே! இம்மண்ணுலகில் பிறந்த பிறப்பை ஒழிக்கும் வழியை அறிந்து கொண்டு, வீடுபேறு அடையும் வழியைக் கண்டு கொண்டு, எவ்விதக் மனவெறுப்பும் இல்லாமல், எல்லாம் வல்ல கோபமும் இல்லாமல், மன சிவபெருமானுக்குத் தொண்டு செய்தால் வீடுபேறு அடையலாம்.
கொண்டாட்டம்
-
- மனமே! இந்த உடலில் ஆன்மா புகுந்து, உடலை அதன் விருப்பப்படி ஆட்டிப் படைக்கிறது. இந்த உடலில் இருந்து ஆன்மா(உயிர்) நீங்கிவிட்டால்?. இவ்வுடல் வாட்டமடைந்து விடுகிறது. வீடுபேறு அடையவதிலேயே நீ பெருவிருப்பம் கொண்டு இருந்தால் உனக்கு எப்பொழுதும் கொண்டாட்டம்தான்.
ஆனந்தவெள்ளம்
-
- மனமே!வாசி என்னும் மூச்சுப் பயிற்சியின் மூலம் எண்வகை சித்திகளையும் அறிந்து கொண்டு, உன்னுள் மறைந்திருக்கும் அனைத்து இரகசியங்களையும் தெரிந்து கொண்டு. வெட்டவெளியாய்த் திகழும் இறைவனைச் சார்ந்து, ஆனந்த வெள்ளத்தில் மூழ்க வேண்டும். மனமே! இதனை நீ உணர்ந்து கொள்வாயாக.
இறைவனை எண்ணுதல்
-
- மனமே! இவ்வுலகம் முள்போன்று துன்பம் நிறைந்தது. எனவே இவ்வுலக வாழ்விலே பேராசை வைக்காமல் அதை உதறித் தள்ளுவாயாக. தியான நிலையில் அமர்ந்து, அதன் மூலம் கிடைக்கும் பேரின்ப வெள்ளத்தை அனுபவிப்பாயாக. அதனையே தொடர்ந்து உண்பாயாக அதாவது, எப்பொழுதும் யோகநிலையிலேயே அமர்ந்து இறைவனை எண்ணிக் கொண்டு இருப்பாயாக.
தீயவர்களுடன் சேராமை
-
- மனமே! வேதம் கூறும் செய்திகளைக் கேட்காதே. அவை இறைவனை அடைய உதவமாட்டா. வேதநூல் பயின்று, அதன்படி தாங்களும் வாழ்வில் கடைப்பிடிக்காதவர்களாகிய குருமார்களின் அறிவுரையையும் கேட்காதே. கண்ணில் மைதீட்டி, வாழ்வைப் பாழாக்கும் சில தீய பெண்களைச் சேராதே. தவறான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் தீயவர்களுடன் விருப்பப்பட்டுச் சேராதே.
பாவச்செயல்கள்
-
- மனமே! உன்னைத் திட்டியவர் யாராக இருந்தாலும், அவரை நீயும் திருப்பி திட்டாதே. இவ்வுலக மக்கள் அனைவரும் பொய் சொன்னாலும் நீ மட்டும் பொய் கூறாதே. பிறர் திட்டும்படி வெறுக்கும்படியான, கீழ்த்தரமான செயல்களைச் செய்யாதே. கல்லை, பறவைகள்மீது எறியாதே. இவையெல்லாம் பாவச் செயல்கள் ஒருவர் இவற்றைச் செய்யக் கூடாது.
சன்மார்க்கம்
-
- மனமே! சிவபெருமானைத் தவிர வேறு தெய்வம் எதனையும் வேண்டாதே. மற்றவர்களுக்குள் தீமையை உண்டாக்கும் சண்டையைத் தூண்டிவிடாதே. தவநிலையில் இருந்து விலகாதே. சன்மார்க்கம் கற்பிக்கும் நூலைத் தவிர. மற்ற நூல்களை விரும்பாதே .
ஆணவம்
-
- மனமே ! பாம்பினைக் கையில் பிடித்து, அவற்றுக்கு எவ்விதத தீமையும் செய்யாதே. கற்புநெறி தவறாத பெண்களைப் பழிக்காதே. வேம்புபோலக் கசக்கும் செயல்களையும், பேச்சுக்களையும் உலகில் பரப்பாதே நான்தான் பெரியன் என்று ஆணவம் கொண்டு வீறாப்புடன் இருக்காதே
தீயசெயல்
-
- மனமே! நீ பூசை முதலிய சடங்குகளை விரும்பாதே. மற்றவர்கள் உன்னைப் போலியாகப் புகழவேண்டும் என எண்ணாதே, பிறர் பழிக்கும் வாழ்வை நினையாதே. பிறர் தாழும்படியான தீயசெயல் எதுவும் செய்யாதே.
மோசமான வழி
-
- மனமே! கஞ்சா என்னும் போதைப் பொருளையும், பீடி போன்றவற்றைப் யுகைக்காதே. இனிய மயக்கம் தரும் என மகிழ்ந்து கள்ளைக் குடிக்காதே. ய்யந்து இறக்காதே. புத்தியை மழுங்க வைக்கும் இறை உண்மையை மறுக்கும் நூல்களைப் படிக்காதே. அவ்வழியில் செல்லாதே.
வாய்மை
-
- மனமே! நீ பக்தியென்னும் உருவாகவே மாறி, சொந்த பந்தங்களில் இருந்து விலகி, வாய்மையையே எப்பொழுதும் பேசி, சமயங்களில் இருந்து நீங்கி, இறைவனை யோக சாதனைகள் மூலம் உன்வசமாக்கிக் கொள்வாயாக.
அட்டாங்க யோகம்
-
- மனமே! எண்ணற்றவையாய் இருக்கும் இன்பம் எல்லாம் ஒரு நாளில் நம்மைவிட்டுச் சென்றுவிடும் சிற்றின்பங்கள்தான் என எண்ணி, ‘சீ‘ இவை இழிந்தவை என அவற்றை விலக்கி, உண்மையான இறைவடிவை நாட வேண்டும். இவ்வுலகில் ஈடு இணையற்றதாக விளங்கும் எட்டுவித யோகமுறைகளை நன்கு பயின்று. அதுதான் உண்மை இன்பம் என்பதை மனமே! நீ அறிந்து கொள்வாயாக.
(அட்டாங்கயோகம் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி)
போதித்தல்
-
- மனமே! நல்ல நீதிகள் எந்தெந்த நூல்களில் உள்ளனவோ அவை அனைத்தையும் எடுத்து, மக்களுக்குப் போதிக்கவேண்டும். பல்வேறு சாதிகளும், அவை மக்களைப் படுத்தும் பாடுகளும் ஒவ்வாது என்பதை அறிந்து உள்ளுக்குள்ளே குடியிருக்கும் இறைவனை மனமே !நீ வணங்குவாயாக.
பகையை வளர்க்காதே
-
- மனமே!இறைவனை உண்மையான முறையில் நாடாமல் தவம் மறைந்து தீயவை செய்வதன் பொருட்டு போலிச் சாமியார் வேடம் புனையாதே. பாவங்கள் பலவற்றையும் செய்துவிட்டு, கங்கையிலே போய் நீராடுவதால் அப்பாவங்கள் போகும் என எண்ணாதே. மற்றவர்களுடைய பொருளை அபகரிக்க எண்ணாதே. நட்பாக இருக்கும்போது முகம் மலரப் பேசி. பிரிந்தபோது கோள்மூட்டிப் பகையை வளர்க்காதே.
வீடுபேறு அளிப்பவன்
-
- மனமே! எங்கும் அருட்பெருஞ்சோதியாய் விளங்குபவன் இறைவன். அவன் அன்பர்களின் இதயத்தில் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டு இருப்பவன். அவன் அடியவர்க்கு அடியவன். தன்னை விரும்பி வணங்கும் அடியவர்களுக்கு வீடுபேறு அளிப்பவன்.
- இராவண காவியம் – தாய்மொழிப் படலம் வழி தமிழ் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க. (அல்லது) தாய்மொழிப்படலம் – கருத்துக்களைத் தொகுத்துரைக்க. (அல்லது) பண்டைய தமிழர் தமிழ்மொழியைப் போற்றி வளர்த்த விதத்தினை தய்மொழிப்படலம் வழி விளக்குக.
இராவண காவியம்
-
-
- இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் – என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார்.
-
தாய்மொழிப்படலம் – பாடல் விளக்கம்
-
- தமிழை மக்கள் கற்றவிதம்
- இராவணனின் இலங்கை சிறப்புகள் பல பொருந்திய நாடு. கல்வி கேள்விகளால் அறிவு பெற்ற மக்கள் நிரம்பிய நாடு. அந்நாட்டில் கல்வி பயிலும் ஏடுகள் இல்லாமல் ஒருவரையும் பார்க்க இயலாது. இயல், இசை கற்காதவர் அந்த நாட்டில் இல்லை. தமிழிசையைப் பாடி மகிழாதவர் இல்லை. கல்விக் கூடங்களுக்குச் சென்று கல்வியறிவு பெறாதவர்கள் இல்லை. தமிழிசையைப் போற்றி ஆடல் தொழிலை மேற்கொள்ளாதவரும் இல்லை. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பயனை அடையாதவர்கள் இல்லை. நற்றமிழின் வளர்ச்சியை விரும்பாதவர்களும் இல்லை என்று அந்நாட்டின் சிறப்பு கூறப்படுகின்றது.
- தமிழ் ஒன்றே எனது உரிமை
- அந்நாட்டு மக்கள் தமிழைத் தங்கள் உயிராக மதித்தனர். தமிழ் தங்களின் இரு கண்களில் இருந்து வருகின்ற பார்வை என்றும், மானத்தைக் காக்கின்ற போர்வை என்றும், உயிரைக் காக்கும் கருவி என்றும், உள்ளத்தின் சிந்தனை என்றும், செல்வங்கள் பொதிந்திருக்கின்ற பெட்டி என்றும், உயர்வின் உறைவிடம் என்றும் மதித்து தமிழைப் போற்றி வாழ்ந்தனர்.
- நாடெல்லாம் புலவர் கூட்டம் நகரம் எல்லாம் பள்ளி ஈட்டம்
- அந்நாட்டில் புலவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். நகர் முழுவதும் பள்ளிக்கூடங்கள் காணப்பட்டன. வீடுகள் யாவும் தமிழ்த்தாய் உறைகின்ற கோயில்களாகக் காட்சியளித்தன. கொண்டாடும் விழாக்கள் அனைத்திலும் தமிழின் மேன்மைகள் ஓங்கின. வயல்வெளிகளிலும் தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. தமிழ்க் கூத்துகள் மக்களை மகிழ்வித்தன. திரும்பிய திசையெல்லாம் தமிழ்ச்சொற்கள் ஒலித்தன. வண்டமிழ்ச் சிறப்பினை அறிந்த மக்கள் நிரம்பிய நாடாகக் காட்சியளித்தது.
- தமிழை மக்கள் கற்றவிதம்
நாடெல்லாம் புலவர் கூட்டம்
நகரெல்லாம் பள்ளி ஈட்டம்
வீடெல்லாம் தமிழ்த்தாய்க் கோட்டம்
விழாவெல்லாம் தமிழ் கொண்டாட்டம்
-
- படிப்பின் சிறப்பு
- தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை. கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை. செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை. வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை. நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை. யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.
- தமிழை மக்கள் வளர்த்தல்
- தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.
- படிப்பின் சிறப்பு
