-
0 Comments
அலகு – 1 : தமிழ் இலக்கிய வரலாறு அறிமுகம்
சிற்றிலக்கியம்
-
தமிழில் 96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளன.
-
இவை வடமொழியில் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
-
சிற்றிலக்கியத்தின் பாடுபொருளாக சிற்றின்பமும் பேரின்பமும் அமைகிறது.
-
உலா, அந்தாதி, தூது உள்ளிட்ட பல சிற்றிலக்கிய நூல்கள் இடம்பெறுவதால், பதினோராம் திருமுறை “பிரபந்த மாலை” என்று அழைக்கப்படுகிறது.
சிற்றிலக்கிய வகைகள்
1. குறவஞ்சி
-
பெயர்க்காரணம்: குறவர் குளத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளைத் தரும். இதில் குறத்தி குறி கூறுதல் மற்றும் அவளது செயல்கள் இடம்பெறுவதால் இப்பெயர் பெற்றது.
-
காலம்: நாயக்கர் காலம்.
-
வேறு பெயர்கள்: குறம், குறவஞ்சி நாடகம், குறத்திப் பாட்டு.
-
இலக்கணம்: பாட்டுடைத் தலைவன் உலா வரும்போது அவனைக் கண்டு காதல் கொண்டு தவிக்கும் தலைவிக்குக் குறத்தி குறி சொல்வதாக அமைவது குறவஞ்சி இலக்கியமாகும்.
-
முதல் குறவஞ்சி நூல்: திருக்குற்றாலக் குறவஞ்சி – இதனை இயற்றியவர் திரிகூடராசப்பக் கவிராயர்.
-
குறம் என்பது குறத்தி சார்ந்த நிகழ்ச்சிகளையும், குறவநாடகம் என்பது குறவன் சார்ந்த வேட்டையாடுதல் நிகழ்வுகளையும் குறிக்கும். இவை இரண்டும் சேர்ந்து மற்ற நிகழ்வுகளும் கலந்து வருவது குறவஞ்சி எனப்படும்.
2. கலம்பகம்
-
பெயர்க்காரணம்: கலம்பகம் என்பதற்கு கலவை என்று பொருள். (கலம்-12, பகம்-6 = 18 உறுப்புகள் உடையது).
-
இலக்கணம்: பலவகையான ஓசை நயமுடைய பாக்களும் இனங்களும் உறுப்புகளும் பயின்றுவரப் பாடப்படுவது கலம்பகம் ஆகும்.
-
தொல்காப்பிய அகத்துறை சார்ந்த உறுப்புகள்: அம்மானை, ஊசல், காலம், வண்டு, கைக்கிளை, பாண், தழை, இரங்கல், குறம், தூது.
-
முக்கிய உறுப்புகள் விளக்கம்:
-
புயவகுப்பு: கலம்பகத் தலைவனுடையத் தோள்களின் சிறப்பைக் கூறுவது.
-
காலம்: தலைவனைப் பிரிந்த தலைவி கார்கால வரவு கண்டு துன்பப்படுவது.
-
குறம்: தலைவியிடம் வந்த குறத்தி, தலைவன் விரைவில் வருவான் எனக் குறி கூறுவது.
-
மறம்: வீரனின் மகளை மணம்புரிய தூதனுப்பிய மன்னனை இகழ்ந்து மணம் மறுப்பதாகச் செய்யுள் செய்வது.
-
-
முதல் கலம்பக நூல்: நந்திக்கலம்பகம். இதன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
-
பாட்டுடைத் தலைவன்: மூன்றாம் நந்திவர்மன்.
3. உலா
-
பெயர்க்காரணம்: பாட்டுடைத் தலைவன் உலா வருவதாகப் பாடப்படும் இலக்கிய வகை.
-
வேறு பெயர்கள்: பவனி, பெண்பாற் கைக்கிளை, உலாப்புறம், உலாமாலை, புற உலா.
-
இலக்கணம்: உலாவிற்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியக் கூற்று: “ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப”.
-
தலைவன் வயது: 16-48 வயது வரை உள்ள ஆடவர்களுக்கு மட்டுமே உலா நூல் பாடப்படும் என பன்னிருபாட்டியல் கூறுகிறது.
-
பெண்களின் ஏழு பருவங்கள்: பேதை (5-7), பெதும்பை (8-11), மங்கை (12-13), மடந்தை (14-19), அரிவை (20-25), தெரிவை (26-32), பேரிளம்பெண் (33-40).
-
முதல் உலா நூல்: திருக்கைலாய ஞான உலா. இதனை எழுதியவர் சேரமான் பெருமான் நாயனார். இதற்கு ஆதி உலா என்ற வேறு பெயரும் உண்டு.
-
மூவருலா: ஒட்டக்கூத்தர் எழுதிய மூன்று உலா நூல்களின் தொகுப்பு: விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராச இராச சோழன் உலா.
4. பரணி
-
பெயர்க்காரணம்: பரணி என்பது நட்சத்திரத்தின் பெயர். இது காளியையும் எமனையும் தெய்வமாகக் கொண்ட நாள். காளியைத் தெய்வமாகக் கொண்டு பாடப்படுவதால் இப்பெயர் பெற்றது.
-
இலக்கணம்: “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” – இலக்கண விளக்கப் பாட்டியல்.
-
பெயர் அமையும் முறை: ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி பெற்ற வீரனைப் பற்றிப் பாடினாலும், இந்நூல் தோற்றவரின் பெயராலேயே அழைக்கப்பெறும்.
-
முதல் பரணி: கலிங்கத்துப்பரணி – இதனை எழுதியவர் செயங்கொண்டர். இவர் “பரணிக்கோர் செயங்கொண்டர்” என்று புகழப்படுகிறார்.
5. பள்ளு
-
பெயர்க்காரணம்: பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம்.
-
வேறு பெயர்கள்: உழத்திப்பாட்டு, பள்ளேசல், பள்ளு நாடகம்.
-
அமைப்பு: மூத்தப் பள்ளி, இளையப் பள்ளி என இரு பள்ளியர்கள் இருப்பர். ஒருவர் சிவன் அடியார், மற்றொருவர் திருமால் அடியார் ஆவர்.
-
முதல் பள்ளு நூல்: முக்கூடற்பள்ளு.
-
முக்கூடற்பள்ளு சிறப்புகள்: இது பள்ளு நூல்களில் தொன்மையானது. இது தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு ஆகிய மூன்று ஆறுகளைக் குறிக்கிறது.
6. பிள்ளைத்தமிழ்
-
பெயர்க்காரணம்: பாட்டுடைத்தலைவனையோ அல்லது தலைவியையோ பிள்ளைப் பருவமாக நினைத்து பாடுவது.
-
வகைகள்: ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ். ஒவ்வொன்றும் பத்து பருவங்களைக் கொண்டது.
-
ஆண்பாற் பிள்ளைத்தமிழின் இறுதிப் பருவங்கள்: சிற்றில் இழைத்தல், சிறுபறை முழக்கல், சிறுதேர்ப் பருவம்.
-
பெண்பாற் பிள்ளைத்தமிழின் இறுதிப் பருவங்கள்: நீராடற் பருவம், அம்மானைப் பருவம், ஊசல் பருவம்.
-
முத்தப் பருவம்: குழந்தையின் பதினோராம் மாதத்தில் பாடப்பெறுவதாகும்.
-
முதல் பிள்ளைத்தமிழ் நூல்: குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்.
-
மீனாட்சி அம்மைப் பிள்ளைத்தமிழ்: இதனைப் பாடியவர் குமரக்குருபரர்.
7. தூது
-
பயன்பாடு: ஒரு செய்தியைச் சொல்லி வருவதற்கும், பிரிந்த இதயங்களை ஒன்று சேர்ப்பதற்கும் மற்றொருவரை அனுப்புவது.
-
வகைகள்: அகத்தூது (காதல் நோயைத் தலைவனிடம் சொல்ல), புறத்தூது (மன்னர்கள் அனுப்பும் தூது).
-
அகத்தூதில் அஃறிதிணைப் பொருள்கள்: அன்னம், மயில், கிளி, மேகம், வண்டு ஆகியவை தூது செல்ல உரியன.
-
முதல் தூது நூல்: நெஞ்சுவிடு தூது – இதனை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார்.
-
தமிழ்விடு தூது: தலைவி தமிழைத் தூதாக மதுரை சொக்கநாதரிடம் அனுப்புவதாக அமைந்துள்ளது. இது 268 கண்ணிகள் கொண்டது.
8. அந்தாதி
-
இலக்கணம்: ஒரு செய்யுளின் ஈற்றில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி இவற்றில் ஒன்று அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையப் பாடுவது அந்தாதி ஆகும்.
-
மண்டலித்தல்: பாடும் நூலின் ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமைய வைத்தல் மண்டலித்தல் எனப்படும்.
-
முதல் அந்தாதி நூல்: அற்புதத் திருவந்தாதி – காரைக்கால் அம்மையார்.
-
திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி “குட்டித் திருவாசகம்” என்று அழைக்கப்படுகிறது.
தனிப்பாடல் அறிமுகம்
-
தோன்றிய இடங்கள்: வேந்தர், சிற்றரசர், நிலப்பிரபுக்கள் சபை; கோவில்கள்; மதச்சார்புடைய மடங்கள்.
-
தனிப்பாடல்கள் தோன்றுவதற்கான காரணங்கள்: புலவர்களின் வறுமை, இன்ப துன்ப உணர்ச்சிகள், உள்ளத் தூண்டல்கள், புலமைச் செருக்கு, வள்ளல்களின் ஆர்வம், இறைபக்தி.
-
காளமேகப் புலவர்: கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
-
காளமேகப் புலவரின் படைப்புகள்: திருவானைக்கா உலா, சமுத்திர விலாசம், சித்திர மடல், களவகுப்பு.
-
பாடுநெறிகள்: தனிப்பாடற்றிரட்டில் சிலேடை, மடக்கு, விடுகதை, அங்கதம், நகைச்சுவை, சீட்டுக் கவி போன்ற தன்மைகள் காணப்படுகின்றன.
இக்கால இலக்கியம்
1. கவிதை
-
சுப்பிரமணிய பாரதியார் (1882-1921):
-
புனைபெயர்கள்: ஷெல்லிதாசன், காளிதாசன்.
-
முப்பெரும் பாடல்கள்: கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்.
-
“தமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்,” என்று முழங்கினார்.
-
வசன கவிதைகளும் பாடினார்.
-
-
பாரதிதாசன் (1891-1964):
-
இயற்பெயர்: சுப்புரத்தினம்.
-
நூல்கள்: புரட்சிக்கவி, பாண்டியன் பரிசு, குடும்பவிளக்கு, அழகின் சிரிப்பு.
-
“கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்” என்று பாடியுள்ளார்.
-
-
நாமக்கல் கவிஞர் (வே. இராமலிங்கம் பிள்ளை):
-
காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.
-
1949 இல் அரசவைக் கவிஞரானார்.
-
தன் வரலாறு நூல்: ‘என் கதை’.
-
உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்ற நடைபயணப் பாடல் பாடினார்.
-
-
சுரதா:
-
இயற்பெயர் இராஜகோபால்.
-
‘உவமைக் கவிஞர்’ என அழைக்கப்பட்டார்.
-
படைப்புகள்: துறைமுகம், தேன்மழை.
-
-
கண்ணதாசன் (1927-1981):
-
படைப்புகள்: இயேசு காவியம், மாங்கனி, அர்த்தமுள்ள இந்துமதம் (10 பாகங்கள்), சேரமான் காதலி.
-
தன் வரலாறு நூல்கள்: வனவாசம், மனவாசம்.
-
புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ
-
அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் ‘Leaves of Grass’ என்று வசன கவிதைகளைப் படைத்துப் பிரபலப்படுத்தினார்.
-
பாரதியாரின் ‘காட்சிகள்’ அனைத்தும் வசன கவிதைகளே.
-
மணிக்கொடி, எழுத்து, வானம்பாடி போன்ற சிற்றிதழ்கள் புதுக்கவிதை வளர்ச்சிக்கு உதவின.
-
அப்துல் ரகுமானின் ‘ஆலாபனை’ 1988 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது பெற்றது.
-
ஹைக்கூ: மூன்று அடிகளில் அமைய வேண்டும். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளே தமிழ் ஹைக்கூக்களுக்குக் காரணம்.
2. சிறுகதை
-
சிறுகதைக்கான இலக்கணம்: அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் ‘எட்கார் ஆலன்போ’.
-
ராஜாஜி உவமை: புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம்.
-
முதல் அச்சில் வந்த கதை: வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதை’.
-
தமிழ்ச் சிறுகதை உலகின் தந்தை: வ.வே.சு. ஐயர். இவரது முதல் சிறுகதை ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’.
-
புதுமைப்பித்தன் (சொ.விருத்தாச்சலம்): ‘சிறுகதை மன்னன்’, ‘தமிழ்நாட்டின் மாப்பசான்’ எனப் போற்றப்பட்டார்.
-
மௌனி (மணி): இவரைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைத்தார்.
-
தமிழ்ச்சிறுகதையின் மலர்ச்சிக்குக் களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும்.
3. நாடகம்
-
நாடகம்: “உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி”.
-
நாடக வகைகள்: வேத்தியல் (அரசர்க்கென ஆடப்படுவது), பொதுவியல் (பொது மக்களுக்கென ஆடுவது).
-
திரைச்சீலை: சிலப்பதிகார காலத்தில் “கரந்து வரல் எழினி” என அழைக்கப்பட்டது.
-
நாடக இலக்கிய வளர்ச்சி: 1891-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் நாடகம் முழு வடிவம் பெற்று வளர்ந்தது. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் அவ்வாறு வெளிவந்த முதல் நாடகம்.
-
சங்கரதாஸ் சுவாமிகள்: நாடக உலகைச் சீர்திருத்தியவர். இவரை நாடக உலகின் இமயம் என்றும் நாடகத் தந்தை என்றும் அழைப்பர்.
-
பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயணசாஸ்த்திரி): நாடக இலக்கண நூலான “நாடகவியல்” (1897) எழுதினார்.
-
எம். கந்தசாமி முதலியார்: இவர் “நாடக மறுமலர்ச்சித் தந்தை” என அழைக்கப்படுகின்றார்.
-
பாலாமணி அம்மையார்: முதன்முதலாகப் பெண்களைக் கொண்டு நாடக கம்பெனியை நடத்தியவர்.
4. உரைநடை
-
தொல்காப்பியர் கூறும் நான்கு வகை உரைநடைகள்: பாட்டிடை வைத்த குறிப்பு, பா இன்று எழுந்த கிளவி, பொருளொடு புணர்ந்த நகைமொழி, பொருள் மரபில்லாக பொய்ம்மொழி.
-
சிலப்பதிகாரத்தில் உரைநடைப் பகுதிகள்: “உரைபெறு கட்டுரை”, “உரைப்பாட்டு மடை”.
-
உரையாசிரியர்கள்: 11-ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை உரைநடை வளர்ச்சிக்கு ஆக்கம் புரிந்தனர் (எ.கா: இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர்).
-
மணிப்பிரவாள நடை: தமிழும் வடமொழியும் கலந்தநடை.
-
மறைமலையடிகள்: தனித்தமிழ் இயக்கத்திற்குத் தூண் போல் அமைந்தவர். இவர் நடை “ஆற்றல் சார்ந்த அறிவுநடை” என்பர்.
-
திரு.வி.க.: சின்னஞ்சிறு வாக்கியங்களால் ஆன அழகிய தெள்ளிய இனிய நடை இவருடையது. செய்தித்தாள் துறையில் அழகு தமிழைப் பயன்படுத்தியவர்.
-
புதுமைப்பித்தன்: வட்டார மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு மதிப்பு தேடித் தந்தவர்.
-
அண்ணாதுரை: கடித இலக்கியம் இவரால் புதிய ஆக்கம் பெற்றது. இவருடைய கடித நடை விறுவிறுப்பும் ஆற்றலும் பெற்றுள்ளது.
5. திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்
-
பெரியார் ஈ. வெ. ரா.: குடியரசு, விடுதலை இதழ்கள் மூலம் ஆற்றலும் வேகமும்மிக்க தமிழைப் பரப்பினார். தமிழ் எழுத்துச் சீர்மையில் சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார்.
-
அறிஞர் அண்ணா: மேடைப் பேச்சு நடையில் ஒரு காலக்கட்டத்தையே உருவாக்கினார். பெரியார் தமிழ் தோண்டியெடுத்த வைரம் என்றால், அண்ணாவின் தமிழ் பட்டை தீட்டிய வைரம் போன்றது.
-
கலைஞர் மு. கருணாநிதி: “முரசொலி” மூலம் தமிழைப் பரப்பிவந்தார். இவரது “தென்பாண்டிச் சிங்கம்” தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாமன்னன் இராசராசன் விருது பெற்றது (1990). குறளோவியம் நிகரற்ற சிறப்பினது.
-
புலவர் குழந்தை: இராவணனைக் கதைத்தலைவனாகக் கொண்டு இராவண காவியம் என்ற புரட்சிக் காப்பியம் படைத்தார்.
