மூன்றாம் பருவம் – அலகு 3- வினாக்களுக்கான விடைகள்

 மூன்றாம் பருவம்

அலகு – 3 – குறுவினாக்கள் மற்றும் விடைகள்

  • ஐரோப்பியர் காலம் 
    • கி.பி. 16 – கி.பி. 20
  • இராபர்ட் டி நொபிலி குறித்து எழுதுக. 
    • இத்தாலியிலிருந்து கி.பி.1606இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
    • தமிழையும் வடமொழியையும் கற்று, தன் பெயரை ‘தத்துவ போதகர்’ என்று மாற்றிக் கொண்டார்.
    • ‘முதல் உரைநடை நூலைத் தமிழில் எழுதினார்’.
  • தத்துவப்போதகர் என்று அழைக்கப்பட்டவர் யார்? 
    • தத்துவப்போதகர் என்று அழைக்கப்பட்டவர் இராபர்ட் டி நொபிலி ஆவார்.
  • இராபர்ட் டி நொபிலி எழுதிய நூல்களைப் பாட்டியலிடுக. 
    •  மந்திர மாலை
    • ஆத்தும நிரணயம்
    • கடவுள் நிர்ணயம்
    • நீதி மாலை
  • ஹென்றிக் பாதிரியார் குறித்து எழுதுக.
    • போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து தமிழகக் கடற்கரை மக்களுக்குத் தொண்டு புரிய வந்தவர்.
    • முதன் முதலில் தமிழ் எழுத்துக்களால் ‘விவிலியத்தை’ அச்சேற்றியதால் இவர் ‘தமிழ் அச்சின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
    • இயற்றிய நூல்கள்: தம்பிரான் வணக்கம், கிரீசித்தாணி வணக்கம்.
  • வீரமாமுனிவர் குறித்து வரைக.
    • இத்தாலியில் பிறந்த கான்சடன்டைன் ஜோசப் பெஸ்கி, 1710இல் தமிழகம் வந்தார்.
    • ‘சுப்பிரதீபக் கவிராயர்’ என்பவரிடம் தமிழ் கற்று, தன்பெயரை ‘வீரமாமுனிவர்’ என மாற்றிக் கொண்டார்.
    • எழுதிய நூல்கள்:
      • தொன்னூல் விளக்கம்
      • சதுரகராதி
      • பரமார்த்த குரு கதை
      • தேம்பாவணி
  • வீரமாமுனிவர் இயற்றிய நூல்களில் எவையேனும் நான்கினை எழுதுக. 
    • தொன்னூல் விளக்கம்
    • சதுரகராதி
    • பரமார்த்த குரு கதை
    • தேம்பாவணி
  • சுவடி தேடும் சாமியார் என்று அழைக்கப்பட்டவர் யார்? 
    • சுவடி தேடும் சாமியார் என்று அழைக்கப்பட்டவர் வீரமாமுனிவர் ஆவார்.
  • ஜி. யு. போப் பற்றி எழுதுக.
    • 1839இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்
    • தனது கல்லறையின்மீது ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று செதுக்கப்படவேண்டும் என எழுதி வைத்தார்.
    • 1886இல் முதன் முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
    • நாலடியார், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • ஜி. யு. போப் மொழிபெயர்த்துள்ள நூல்களைப் பட்டியலிடுக.
    • திருக்குறள்
    • திருவாசகம்
    • நாலடியார்
    • புறப்பொருள் வெண்பாமாலை
    • புறநானூறு 
  • டச்சுக்காரர்களின் வர்த்தக மையங்கள் யாவை? 
    • பழவேற்காடு 
    • பாட்னா
    • சூரத்
    • காசிம்பஜார்
    • சின்சுரா
  • டேனிஸ்காரர்கள் குறித்து எழுதுக.
    • டென்மார்க் நாட்டைச் சார்ந்த மக்கள் ‘டேனியர்கள்’ (டேனிஸ்காரர்கள்) என்று அழைக்கப்பட்டனர்.
    • கி.பி.1620இல் தரங்கம்பாடியிலும், 1676இல் வங்காளத்தில் உள்ள சீராம்பூரிலும் ‘வாணிப மையங்களை’ ஏற்படுத்தினர்.
  • பிரெஞ்சுகாரர்களின் முதல் வர்த்தக மையம்  எது?
    • சூரத்
  • ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் எப்போது யாரால் தொடங்கப்பட்டது? 
    • நூறு லண்டன் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து ‘ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி’யை தோற்றுவித்தனர். இக்கம்பெனிக்கு 31.12.1600 இல் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வியாபாரம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார்.
  • பாளையக்காரர்களின் அதிகார வரம்புகளைப் பட்டியலிடுக.
    • நிதித்துறை
    • நீதித்துறை
    • இராணுவம்
  • திருநெல்வேலி கூடிணைப்பு குறித்து எழுதுக.
    • ஆங்கிலேயரை எதிர்த்து தமிழகத்தில் மானத்தைக் காக்கவேண்டும் என வீரபாண்டியன் எண்ணி, திருநெல்வேலி பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு கூட்டணியை உருவாக்கினார்.
    • இதில் பாஞ்சாலங்குறிச்சி, சாத்தூர், குளத்தூர், நாகலாபுரம், மன்னார் கோட்டை, கோலார் பட்டி, கடல்குடி, ஏழாயிரம் பண்ணை, சென்னல்குடி ஆகிய பாளையங்கள் அடங்கும்.
  • வேலுநாச்சியார் குறித்து எழுதுக.
    • 1746இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்து வடுகநாதத் தேவருக்கு மகளாகப் பிறந்த வேலுநாச்சியார் பல மொழிகள் கற்று, ஆயுதப்பயிற்சி பெற்றார்.
    • மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்றுதிரட்டி ஓர் ‘எதிர்ப்புப்படையை’ உருவாக்கினர். வேலுநாச்சியார் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
    • ராணி வேலுநாச்சியார் சிவகங்கை சீமையின் முதல் ராணியாக முடிசூட்டப்பட்டார்.
    • இவர் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
  • மருதுபாண்டியர் குறிப்பு வரைக.
    • கி.பி. 1780 முதல் 1801 வரை சிவகங்கைச் சீமையை ஆண்டவர்கள் மருதுசகோதரர்கள் ஆவார்.
    • சின்னமருது, பெரியமருது என அழைக்கப்படும் இவர்களின் புரட்சிக் கோட்டையாக ‘காளையார் கோவில்’ விளங்கியது.
    • ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சியில் அனைவரும் இணைந்து செயல்பட மருதுசகோதரர்கள் ஒரு ‘சிவகங்கைக் கூட்டிணைப்பை’ உருவாக்கினர்.
  • திண்டுக்கல் கூடிணைப்பு குறித்து எழுதுக.
    • திண்டுக்கல் கூட்டிணைப்பில் தாராபுரம், தேவதானம், கரூர், கன்னிவாடி, காங்கேயம், கொழுமம், சங்ககிரி, மணப்பாறை ஆகிய பாளையங்கள் இருந்தன.
  • வேலூர் கலகம் குறித்து எழுதுக.
    • ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் புகுத்திய சில கட்டுப்பாடுகள் (இந்து வீரர்கள் சமயக் குறிகளை இடக்கூடாது, முஸ்லிம் வீரர்கள் தாடி மீசைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்) ராணுவ வீரர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தின. திப்புவின் பிள்ளைகளை ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினர்.
    • 9.7.1806இல் வேலூர் கோட்டையில் நடைப்பெற்ற திருமணத்தில் கலந்துகொள்ள வீரர்கள் கூடினர்.
    • நள்ளிரவில் இங்கு கூடியிருந்த வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களைத் தாக்கி ஜீலை 10ஆம் நாள் கோட்டையைக் கைப்பற்றினர்.
  • வ. உ. சிதம்பரம்பிள்ளை குறிப்பு வரைக.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் 5.9.1872இல் பிறந்தார்.
    • ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும், ‘கப்பலோட்டி தமிழன்’ என்றும் அழைக்கப்பட்டார்.
    • சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்து, தூத்துக்குடி – கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கினார்.
  • வ. உ. சிதம்பரம்பிள்ளையின் சிறப்புப்பெயர்களை எழுதுக. 
    • செக்கிழுத்த செம்மல்
    • கப்பலோட்டி தமிழன் 
  • பாரதியார் குறித்து எழுதுக. 
    • எட்டயபுரத்தில் 11.12.1882இல் பிறந்தார்.
    • சுதேசமித்ரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1907இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.
    • 1907இல் தமிழ் வாரப் பத்திரிக்கையான ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியரானார். அதே சமயத்தில் ‘பாலபாரதம்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டார்.
  • பாரதியார் நடத்திய  இதழ்களின் பெயர்களை எழுதுக.  
    • இந்தியா
    • பாலபாரதம்
  • திருப்பூர் குமரன் குறித்து எழுதுக.
    • ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் 1904இல் பிறந்தார்.
    • சாகும் தருவாயில் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
    • இவர் தமிழக வரலாற்றில் ‘கொடிகாத்த குமரன்’ என்று போற்றப்படுகிறார்.
  • காமராஜர் குறிப்பு வரைக.  
    • விருதுநகரில் 15.7.1903இல் காமராஜர் பிறந்தார்.
    • 1924இல் ‘வைக்கம் சத்தியாகிரகம்’ போராட்டத்தில் ஈடுபட்டதின் மூலம் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
    • காமராஜர் தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார்.
    • மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளைத் திறந்தது, இலவச கல்வி வழங்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக் கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பெருவினாக்கள்

  • ஐரோப்பியர்களின் இலக்கியப் பணி குறித்து எழுதுக. (அல்லது) ஐரோப்பியர் வரலாறு குறித்து கட்டுரை வரைக.

ஐரோப்பியர் கால வரலாறு

  • இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே வாணிபத் தொடர்பு அலெக்ஸாண்டர் வருகையால் மேலும் வளர்ச்சி அடைந்தது.
  • பட்டு, நறுமணப் பொருள்கள், மஸ்லின் கைத்தறி ஆடைகள், மிளகு, மிளகாய், பட்டை, இஞ்சி, தேங்காய், சர்க்கரை, சாயப்பொருள்கள் போன்றவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின.
  • முக்கிய மூன்று வாணிப வழித்தடங்கள் இருந்தன: 
    • ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் காஸ்பியன் கடல் வழியாக கருங்கடல், தரைப்பகுதி.
    • பாரசீகம் மற்றும் சிரியா வழியாக மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா.
    • அரபிக்கடல், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக கடல்மார்க்கம்.
  • கி.பி.1453இல் ஆட்டோமானிய துருக்கியர்கள் ‘காண்ஸ்டாண்டி நோபிள் நகரத்தைக்’ கைப்பற்றி ஐரோப்பிய வணிகர்களுக்கு இடையூறுத் தந்தனர் மற்றும் வாணிபத்திற்குத் தடைவிதித்தனர்.
  • இதனால் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு புதிய கடல்வழி காணும் முயற்சியில் இறங்கினர்.

ஐரோப்பியர் காலம்

  • கி.பி. 16இல் தொடங்கி கி.பி.20 வரை உள்ள காலப்பகுதி இது.
  • ஐரோப்பியாவில் இருந்து வந்த கிறித்தவர்கள் தமிழ்நாட்டில் சமயப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் வந்தனர்.
  • தமிழ் எழுத்து வடிவில் இருந்த குறைபாடுகளை நீக்கி தமிழ்மொழிக்கும், தமிழ் உரைநடைக்கும் மிகப்பெரிய தொண்டு செய்தனர்.

அச்சு இயந்திரமும் அச்சேறிய நூல்களும்

  • ‘கார்த்தில்யா’ (லிஸ்பன், 1554) – ‘முதல் தமிழ் நூல்’ ஆகும்; இதில் தமிழ் ஒலிகளைச் குறிக்க உரோமருடைய எழுத்துக்கள் கையாளப்பெற்றிருந்தன.
  • ‘தம்பிரான் வணக்கம்’ (கொல்லம், 1577) – தமிழில் இரண்டாவதாக அச்சேறிய நூல்.
  • ‘கிரிசித்தியாலி வணக்கம்’ (கொச்சி, 1579) – தமிழில் மூன்றாவதாக அச்சேறிய நூல்.

இராபர்ட்-டி-நோபிலி

  • இத்தாலியிலிருந்து கி.பி.1606இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
  • தமிழையும் வடமொழியையும் கற்று, தன் பெயரை ‘தத்துவ போதகர்’ என்று மாற்றிக் கொண்டார்.
  • ‘முதல் உரைநடை நூலைத் தமிழில் எழுதினார்’.
  • இவர் இயற்றிய நூல்களில் சில: ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிரணயம், சத்திய வேத இலட்சணம், கடவுள் நிர்ணயம், தத்துவ கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம்.

ஹென்றிக் பாதிரியார்

  • போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து தமிழகக் கடற்கரை மக்களுக்குத் தொண்டு புரிய வந்தவர்.
  • முதன் முதலில் தமிழ் எழுத்துக்களால் ‘விவிலியத்தை’ அச்சேற்றியதால் இவர் ‘தமிழ் அச்சின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
  • இயற்றிய நூல்கள்: தம்பிரான் வணக்கம், கிரீசித்தாணி வணக்கம்.
  • இவரது 70 மடல்களின் தொகுதி ‘Documenta Indica’ ஆகும்.
  • ஐரோப்பியருள் முதன் முதலில் தமிழ் கற்றுத் தமிழ் நூலை அச்சேற்றிய பெருமைக்கு உரியவர்.

சீகன்பால்கு

  • ஜெர்மனியில் 10.7.1682இல் பிறந்தார்.
  • தமிழ்நாட்டிற்கு வந்த ‘முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர்’ ஆவார்.
  • ‘தமிழ் மொழியே எனக்கு தாய்மொழியாகிவிட்டது’ என்று பெருமையாகப் பதிவுச் செய்தார்.
  • இந்தியாவில் முதன் முதலாகத் தமிழ்மொழியில் புதிய ஏற்பாட்டினைக் காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டார்.
  • திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திசூடி ஆகியவற்றை ஓலைச்சுவடியில் இருந்து காகிதத்தில் அச்சடித்துப் புத்தகமாக வெளியிட்டார்.
  • தரங்கம்பாடியில் சுமார் 300 நூல்கள் அடங்கிய நூலகத்தை உருவாக்கினார்.
  • பொறையாரில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, தமிழ் எழுத்துகள் தயாரிக்கும் கூடம் ஆகியவற்றை உருவாக்கித் தமிழ்நாட்டில் ‘அச்சுப்பண்பாடு’ வளரக் காரணமாக இருந்தார்.
  • தொழிலாளர்களுக்காக முதல் மிஷன் பாடசாலையையும் குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார்.
  • இந்தியாவில் பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கப் பெண்களுக்கெனத் தனியாக ‘முதல் பள்ளிக்கூடத்தை அமைத்தார்’; விதவைகளை ஆசிரியர்களாக்கி ‘சமுதாய புரட்சிக்கு’ வித்திட்டார்.
  • இலத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம், தமிழ் ஜெர்மன் அகராதி, கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி போன்ற நூல்களை இயற்றினார்.
  • இந்திய மொழிகளில் தமிழில் ‘வேதாகமத்தை’ முதன் முதலில் மொழிபெயர்த்து அச்சடித்து நூலாகத் தந்தவர்.
  • ‘இந்தியாவின் அச்சகத் தந்தை’ என போற்றப்படுகிறார்.

வீரமாமுனிவர்

  • இத்தாலியில் பிறந்த கான்சடன்டைன் ஜோசப் பெஸ்கி, 1710இல் தமிழகம் வந்தார்.
  • ‘சுப்பிரதீபக் கவிராயர்’ என்பவரிடம் தமிழ் கற்று, தன்பெயரை ‘வீரமாமுனிவர்’ என மாற்றிக் கொண்டார்.
  • உயிர்எழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துக்களில் நெடில் ஓசையை குறிப்பதற்காக ‘ஆ, ஏ’ எனவும், நெட்டெழுத்து கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே,பே) வழக்கத்தையும் உண்டாக்கினார். இவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
  • ‘தொன்னூல் விளக்கம்’ என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
  • ‘முதல் தமிழ் அகரமுதலி’யான தமிழ்-லத்தீன் அகராதியை உருவாக்கினார்.
  • ‘சதுரகராதி’ உருவாக்கி நிகண்டுக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
  • பரமார்த்த குரு கதை, தேம்பாவணி உள்ளிட்ட நூல்களை இயற்றினார்.
  • பேச்சு வழக்குத் தமிழிலும் உரைநடை எழுதியதால் ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என அழைக்கப்பட்டார்.
  • பட்டங்கள்: ‘சுவடி தேடும் சாமியார்’, ‘தமிழ் அகராதியின் தந்தை’, ‘செந்தமிழ் தேசிகர்’.

பெப்ரிஷியஸ்

  • ஜெர்மனியிலிருந்து 1740இல் இந்தியாவிற்கு வந்தார்.
  • தமிழகத்தில் 50 ஆண்டுகள் அருட்பணி புரிந்த பன்மொழிப் புலவர்.

டாக்டர் கால்டுவெல்

  • அயர்லாந்து நாட்டில் 7.5.1814இல் பிறந்தார்.
  • 1838இல் சென்னைக்கு வந்து தமிழகத்தின் இடையன்குடியில் மதப்பணியை மேற்கொண்டார்.
  • 50 ஆண்டு காலம் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டு, திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலை நிறுத்தினார்.
  • திருநெல்வேலியில் அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும் ஈமத்தாழிகள், நாணயங்கள் ஆகியவற்றையும் வெளிக் கொணர்ந்தார்.
  • பாண்டிய நாட்டின் ‘மீன் சின்னம்’ பொறித்த தங்கக் காசுகளைக் கண்டறிந்தார்.
  • ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ உள்ளிட்ட நூல்களை இயற்றினார்.

ஜி.யு. போப்

    • கனடாவில் 24.4.1820 இல் பிறந்தார்.
    • 1839இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்; 8 மாதங்களிலேயே தமிழை நன்குக் கற்றார்.
    • இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.
    • இவரது கடைசி விருப்பமாக, கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும்போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட ‘திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும்’ உடன் வைக்கவேண்டும்; தனது கல்லறையின்மீது ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று செதுக்கப்படவேண்டும் என எழுதி வைத்தார்.
    • ‘Elementary Tamil Grammar’ என்ற தமிழ் இலக்கணத்தை மூன்று பாகமாக எழுதி உள்ளார்.
    • தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றையும் வெளியிட்டார்.
    • 1886இல் முதன் முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
    • நாலடியார், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
    • இவரது திருவாசக மொழிபெயர்ப்பு சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.
    • ‘மறைநூற் புலவர்’ என்னும் பட்டம் பெற்றார்.
  • டச்சுக்காரர்கள் குறித்து எழுதுக.

டச்சுக்காரர்கள்

  • போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து இந்தியாவிற்கு வருகைப் புரிந்தனர்.
  • ‘நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி’ 1602ல் தொடங்கப்பட்டது.
  • மசூலிப்பட்டினத்தில் அவர்களின் வர்த்தக மையத்தை நிறுவினர்.
  • போர்ச்சுகீசியரிடமிருந்து அம்பாய்னாவையும் நாகப்பட்டினத்தையும் கைப்பற்றினர்.
  • ஆரம்பத்தில் ‘பழவேற்காடு’ டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது, பின்னர் 1690ல் நாகப்பட்டினத்திற்கு மாற்றினர்.
  • பட்டு, பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த பொருள்கள்.
  • கருப்பு மிளகு மற்றும் மற்ற நறுமணப் பொருள்கள்மீதான வியாபாரத்தில் அவர்கள் ஏகபோக உரிமைப் பெற்றிருந்தனர்.
  • 1623இல் டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் பத்து ஆங்கில வியாபாரிகள் மற்றும் ஒன்பது ஜப்பானியர்களைக் கொன்றனர்.
  • 1759இல் நடைப்பெற்ற ‘பெடரா போரில்’ ஆங்கிலேயர்கள் டச்சுக்காரர்களைத் தோற்கடித்தனர்.
  • 1795இல் டச்சுக்காரர்கள் தங்கள் குடியேற்றங்களை முழுமையாக ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்.
  • தமிழ்நாட்டில்: 1613இல் பழவேற்காட்டில் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.
  • நாகப்பட்டினம், புன்னக்காயல், பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் தேவனாம்பட்டினம் ஆகியன டச்சுக்காரர்களின் கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகள்.
  • பிரெஞ்சுக்காரர் குறித்து எழுதுக. 

பிரெஞ்சுக்காரர்கள்

  • ‘பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்’ மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான ‘கால்பர்ட்’ என்பவரால் 1664இல் உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவிற்கு வருகைத் தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு ‘பிரான்சு’ ஆகும்.
  • கரோன் என்பவர் சூரத்நகரில் முதல் பிரெஞ்சு வணிகமையத்தை நிறுவினார்.
  • மார்ட்டின் என்பவர் 1673இல் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார்; இது இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமானது.
  • பிரான்காய்ஸ் மாட்டின் பாண்டிச்சேரியில் ‘செயின்ட் லூயிஸ்’ எனப்படும் கோட்டையை கட்டினார்.
  • கல்கத்தாவுக்கு அருகே ‘சந்திரநாகூர்’ என்ற நகரை நிர்மாணித்தது.
  • 1742இல் ‘ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே’ பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
  • ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆதிக்கப்போட்டி இந்தியாவில் ‘கர்நாடக போர்’ எனப் பிரதிபலித்தது.
  • இறுதியில் ஆங்கிலேயர்கள் வெற்றிப் பெற்று இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர்; பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறினர்.
  • ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி குறித்து எழுதுக.

ஆங்கிலேயர்கள்

  • கி.பி. 1588இல் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான ‘ஸ்பானிய ஆர்மடா’வை தோற்கடித்து இங்கிலாந்து ஐரோப்பாவில் அதிக கடல் வலிமை பெற்ற நாடாக விளங்கியது.
  • நூறு லண்டன் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து ‘ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி’யை தோற்றுவித்தனர். இக்கம்பெனிக்கு 31.12.1600 இல் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வியாபாரம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார்.
  • 1608இல் வில்லியம் ஹாக்கின்ஸ் ஜஹாங்கீரின் அரசவைக்கு வியாபாரம் செய்யக் கோரிய அனுமதி கடிதத்துடன் வருகை புரிந்தார், ஆனால் தோல்வியடைந்தார்.
  • கி.பி. 1615இல் சர்தாமஸ்ரோ என்ற ஆங்கில வியாபாரி ஜஹாங்கீர் அரசவைக்கு வருகைப் புரிந்து இந்தியாவுடன் வியாபாரம் செய்வதற்கான அனுமதியைப் பெற்றார்.
  • குஜராத்தின் முகலாய ஆளுநரான இளவரசர் குர்ரம் ஆங்கிலேயருக்கு வணிக உரிமைகளை வழங்கினார்.
  • 1639இல் சந்திரகிரியின் அரசர் சென்னையை ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்குக் கொடுத்து, ‘புனித ஜார்ஜ் கோட்டை’ கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார். இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு முதன் முதலாகப் பெற்ற நிலப்பகுதி இதுவே ஆகும்.
  • 1652இல் சென்னை ஓர் மாகாணமாக்கப்பட்டது, மீண்டும் 1684இல் மாகாண அந்தஸ்தைப் பெற்றது.
  • 1688இல் சென்னை ஒரு மேயரையும், பத்து உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசைப் பெற்றிருந்தது.

கர்நாடகப் போர்கள் (1746-1763)

  • ஆங்கிலேயர் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்ட 1746 முதல் 1763 வரை பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மூன்று போர்களை நடத்தினர். இவை கர்நாடகப் பகுதியில் நடைப்பெற்றதால் ‘கர்நாடகப் போர்கள்’ என அழைக்கப்பட்டன.

முதல் கர்நாடகப் போர் (கி.பி. 1746-1748)

  • காரணம்: ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இந்தியாவில் எதிரொலித்தது, இதில் இங்கிலாந்து ஆஸ்திரியாவிற்கும், பிரான்ஸ் அதற்கு எதிராகவும் இருந்தன.
  • நிகழ்வுகள்: 
    • ஃபார்னெட் தலைமையிலான ஆங்கிலக் கப்பற்படை சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது.
    • ஃபிரான்சின் தீவின் ஆளுநராக இருந்த லா போர்டோனாய் எட்டு போர்க்கப்பல்களுடன் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்து பைடன் தலைமையிலான ஆங்கிலக் கப்பற்படையைத் தோற்கடித்தார் (6.7.1746).
    • வெற்றிப்பெற்ற பிரெஞ்சுக் கப்பற்படை, பாதுகாப்பு இல்லாமல் இருந்த சென்னையை 15.9.1746இல் கைப்பற்றியது.
    • துய்ப்ளே சென்னையைக் கைப்பற்றி நவாப்பிடமே ஒப்படைப்பதாகக் கூறி அன்வாருதீனை சமாதானப்படுத்தினார். ஆனால், பின்னர் வாக்குறுதியளித்தபடி சென்னையை ஒப்படைக்க மறுத்தார்.
    • நவாப் அன்வாருதீனின் மகன் மாபுஸ்கான் தலைமையிலான 10,000 வீரர்கள் சாந்தோம், அடையாறு போர்களில் பிரெஞ்சுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
  • விளைவு: 
    • 1748இல் ஐரோப்பாவில் இங்கிலாந்தும், பிரான்சும் ஐ.லா.சபேல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
    • இதன்படி, இந்தியாவில் ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் தங்கள் மோதல்களை முடித்துக்கொண்டனர்.
    • பிரெஞ்சுக்காரர் சென்னையை ஆங்கிலேயருக்குத் திருப்பித் தருவது என்றும், அதற்கு மாறாக வட அமெரிக்காவில் லூயிஸ்பர்க் என்ற இடத்தை பிரெஞ்சுக்காரருக்குக் கொடுப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் கர்நாடகப் போர் (1749-1754)

  • காரணம்: ஐரோப்பாவில் அமைதி நிலவினாலும், இந்தியாவில் காலனி நாடுகளால் அமைதியாக இருக்க முடியவில்லை. சுதேச அரசர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவரைத் தூண்டிவிட்டனர். ஆற்காடு, ஹைதராபாத் அரசுகளில் ஏற்பட்ட வாரிசுரிமைப் போர்களில் துய்ப்ளே பிரான்சின் செல்வாக்கை மேம்படுத்த விரும்பினார்.
  • வாரிசுரிமைப் போர்கள்: 
    • ஹைதராபாத்: 1748இல் நிஜாம் ஆசப்ஜா மரணமடைந்தவுடன், துய்ப்ளே அவரது பேரன் முசாபர் ஜங்கை ஆதரித்தார். ஆங்கிலேயர் எதிர் போட்டியாளரான நாசிர் ஐங்கை ஆதரித்தனர்.
    • ஆற்காடு: துய்ப்ளே முகமது அலிக்கு எதிராக சந்தா சாகிப்பை ஆதரித்தார். ஆங்கிலேயர் முகமது அலியையும் ஆதரித்தனர்.
  • நிகழ்வுகள்: 
    • பிரெஞ்சுக்காரர் நிஜாம், கர்நாடக நவாப் ஆகியோரிடையே ‘முக்கூட்டு உடன்படிக்கை’ ஏற்பட்டது.
    • 1749இல் நடைப்பெற்ற ஆம்பூர் போரில் நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்டார்.
    • பிரெஞ்சுப் படைகளால் நாசிர் ஐங் கொல்லப்பட்டு, முசாபர் ஐங் 1750 டிசம்பரில் ஹைதராபாத்தின் நிஜாமாக ஆக்கப்பட்டார்.
    • முசாபர் ஜங் கொல்லப்பட்ட பிறகு, பிரெஞ்சுத் தளபதி புஸ்ஸி பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டார்.
  • விளைவு: துய்ப்ளேயின் கனவு சில காலம் நனவாகலாம் என்ற நிலை இருந்தது. அவர் நிஜாமிடமிருந்தும், ஆற்காடு நவாப்பிடமிருந்தும் பெருமளவு பணத்தையும், நிலங்களையும் பெற்றார்.

மூன்றாம் கர்நாடகப் போர் (1756-1763)

  • காரணம்: ஐரோப்பாவில் 1756இல் தொடங்கிய ‘ஏழாண்டுப் போரின்’ விளைவே மூன்றாம் கர்நாடகப் போர் ஆகும்.
  • நிகழ்வுகள்: 
    • பிரெஞ்சு தளபதி கவுண்ட்-டி-லாலி, ஆங்கிலேயரின் புனித டேவிட் கோட்டையைக் கைப்பற்றினார்.
    • தளபதி புஸ்ஸி ஹைதராபாத்தைவிட்டு சென்னைக்கு வந்தபோது, ஆங்கிலேயர்கள் ஹைதராபாத்தைக் கைப்பற்றினர்.
    • புஸ்ஸி மற்றும் கவுண்ட்-டி-லாலி இருவரும் இணைந்து சென்னையைத் தாக்கினர்.
    • ஆங்கில தளபதி சர் அயர்கூட் பிரெஞ்சுப்படையை கி.பி. 1760இல் வந்தவாசி போர்க்களத்தில் தோற்கடித்தார். இது பிரெஞ்சுக்காரர்களுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது.
    • கி.பி. 1761இல் பிரெஞ்சுத்தளபதி ‘கவுண்ட்-டி-லாலி’ பாண்டிச்சேரியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் சரிவடைந்தது.
  • விளைவு: 
    • மூன்றாம் கர்நாடகப்போர் கி.பி. 1763இல் பாரிஸ் சமாதான உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது.
    • பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி, காரைக்கால், சந்திரநாகூர், மாஹி ஆகிய நிலப்பகுதிகளை திரும்பப்பெற்றனர், ஆனால் அங்குக் கோட்டைகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
    • பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் தங்களின் ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் ஒருசேர இழந்தனர். ஆங்கிலேயர்கள் வலிமை அடைந்தனர்.
  • வெற்றிக்கான காரணங்கள்: 
    • ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் தாய்நாட்டின் ஆதரவினையும், பொருளாதார உயர்நிலையையும் பெற்றிருந்தது.
    • ஆங்கிலேயரின் ‘கடற்படை வலிமை’ அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது.
    • பிரெஞ்சுத் தளபதிகளின் தவறான வியூகம் (சென்னையைக் கைப்பற்ற படையெடுத்தது).
    • பிரான்ஸ் முழுமனதோடு இப்போரில் ஈடுபடமுடியவில்லை, ஆனால் இங்கிலாந்து முழுமையான வெற்றியைப் பெற்றது.
    • இதுவே இந்திய வரலாற்றின் போக்கை மாற்றி, இந்தியாவை ஆளும் சக்தியாக இங்கிலாந்து வலுப்பெற்றது.

வங்காளம்

  • பிளாசிப் போர் (1757):
      • முகலாயப் பேரரசில் வளமான நிலப்பகுதியாக இருந்த வங்காளம் ‘அலிவர்திகான்’ தலைமையில் சுதந்திரமான பேரரசாக உருவானது. அவர் மறைவுக்குப் பிறகு அவரது பேரன் ‘சிராஜ்உத்-தௌலா’ வங்காளத்தின் நவாப் ஆனார்.
      • ஆங்கிலேயர்கள் அனுமதியின்றி கோட்டைகளைக் கட்டி வலிமைப்படுத்தியதை சிராஜ்உத்-தௌலா எதிர்த்தார். பிரான்ஸ் நவாப்பின் ஆணையை ஏற்றுக்கொண்டது, ஆனால் இங்கிலாந்து ஏற்கமறுத்தது.
      • ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் வியாபார சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தியதால், சிராஜ்உத்-தௌலா கோபமடைந்தார்.
      • சிராஜ்உத்-தௌலா பெரும்படையுடன் சென்று கல்கத்தாவைக் கைப்பற்றி 146 ஆங்கிலேயப் போர் வீரர்களைச் சிறையில் அடைத்தார்; அதில் 23 பேரே உயிருடன் இருந்தனர். இந்நிகழ்வு ‘கல்கத்தா இருட்டறை துயரச் சம்பவம்’ என அழைக்கப்படுகிறது.
      • இச்செய்தியைக் கேள்வியுற்ற சென்னை நிர்வாகம் தளபதி வாட்சன் மற்றும் ராபர்ட் கிளைவ் ஆகியோரை வங்காளத்திற்கு அனுப்பியது, அவர்கள் கல்கத்தாவைத் திரும்பக் கைப்பற்றினர்.
      • 23.5.1757இல் சிராஜ்உத்-தௌலா, ராபர்ட் கிளைவ் ஆகியோரின் படைகள் கல்கத்தாவிற்கு அருகே உள்ள பிளாசி என்ற இடத்தில் போரிட்டன. இப்போரில் சிராஜ்உத்-தௌலா தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
      • வங்காளத்தில் நிர்வாகியாக ‘மீர்ஜாபரை’ ஆங்கிலேயர்கள் நியமித்தனர், இவர் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் பொம்மையாகச் செயல்பட்டார்.
      • பின்னர், ஆங்கில நிர்வாகம் மீர்ஜாபரை அகற்றிவிட்டு அவரது மருமகன் மீர்காசிம்மை வங்காளத்தின் நவாப்பாக அறிவித்தது.
  • பக்சார் போர் (1764):
    • மீர்காசிம் வங்காள நவாப் ஆன பிறகு இந்திய வியாபாரிகளுக்கு உதவ சுங்கவரியை ரத்துச் செய்தார், இது ஆங்கிலேயர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.
    • ஆங்கிலேயப்படை மீர்காசிம்மைத் தோற்கடித்தது. தோற்கடிக்கப்பட்ட மீர்காசிம் அயோத்தியை ஆட்சிச் செய்த ஷூஜா உத்-தௌலாவிடம் அடைக்கலம் ஆனார்.
    • முகலாய பேரரசர் இரண்டாம் ஷாஆலம், ஷூஜா உத்-தௌலா, மீர்காசிம் ஆகிய மூன்று மன்னர்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரப் போரிடத் தயாரானார்கள்.
    • 22.10.1764இல் ‘பக்ஸார்’ என்ற இடத்தில் இந்திய மன்னர்களின் கூட்டுப்படை ஆங்கிலேயப் படையை எதிர்கொண்டன, ஆனால் தோற்கடிக்கப்பட்டன.
    • மீர்காசிம் போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடினார். இரண்டாம் ஷாஆலம், ஷூஜா உத்-தௌலா ஆகியோர் ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர்.
    • ஆங்கிலேயர்கள் பிளாசியில் பெற்ற வெற்றி பக்ஸாரில் நிலைநிறுத்தப்பட்டது.

மைசூர்ப் போர் (1767-1769)

  • முதல் ஆங்கில – மைசூர் போர்: 
    • ராபர்ட் கிளைவ் வங்காளத்தின் நிர்வாகியாக இருந்தபோது மைசூரில் ஹைதர்அலி வலிமை மிகுந்த ஒரு பேரரசை உருவாக்கி இருந்தார்.
    • ஹைதர்அலியின் வலிமையும், பிரான்ஸ் நாட்டோடு அவர் கொண்டு இருந்த நல்லுறவும் ஆங்கிலேய நிர்வாகத்திற்கு கவலையளித்தன.
    • நிகழ்வுகள்: 
      • கி.பி. 1766இல் ஹைதர்அலிக்கு எதிராக இங்கிலாந்து மராத்தியரோடும், ஹைதராபாத் நிஜாமோடும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது.
      • ஹைதர்அலி தனது மதிநுட்பத்தினாலும் கையூட்டின் மூலமாகவும் மராட்டியர்களையும், ஹைதராபாத் நிஜாமையும் நண்பர்களாக்கிக் கொண்டார்.
      • கி.பி. 1767இல் ஹைதர்அலி மற்றும் நிஜாமை ஆங்கிலேயர்கள் ‘சங்கமா’ என்ற இடத்தில் தோற்கடித்தனர்.
      • ஹைதர்அலி ஆம்பூர், மங்களூர் ஆகிய இடங்களைக் கைப்பற்றி, பின்னர் கரூர், தஞ்சாவூர், கடலூர், பாராமஹால் ஆகிய இடங்களையும் கைப்பற்றினார்.
      • ஹைதர்அலி சென்னையை முற்றுகையிட்டது ஆங்கிலேயர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
      • ஆங்கிலேயர்கள் கி.பி. 1769இல் ஹைதர்அலியோடு மதராஸ் (சென்னை) அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

இராபர்ட் கிளைவ்

  • கி.பி. 1765இல் வங்காளத்தின் கவர்னராக ராபர்ட் கிளைவ் பொறுப்பேற்றார். அவரது முதல் ஆட்சிக்காலத்தில் வெற்றி வீரராகவும், இரண்டாவது ஆட்சிக்காலத்தில் சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார்.
  • நிர்வாகச் சீர்திருத்தங்கள்: 
    • ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்கள் இந்தியர்களிடம் இருந்து அன்பளிப்பு பெறக்கூடாது என்றார்.
    • ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்யக்கூடாது என்றார், மேலும் ஊதியத்தை உயர்த்தினார்.
    • அமைதி காலத்தில் இராணுவ அதிகாரிகளுக்கு இரட்டை ஊக்கத்தொகை அளித்தார்.
    • கம்பெனி ஊழியர்கள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கு உதவ ‘கிளைவின் நிதி’ ஒன்றை உருவாக்கினார்.
    • முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமிடமிருந்து வங்காளத்தின் உரிமையியல் மற்றும் குற்றவியல் உரிமைகளைப் பெற்ற பிறகு, வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார்.
    • இந்த இரட்டை ஆட்சியின்படி, ஆங்கிலேயர்கள் அனைத்து அதிகாரத்தையும் பெற்றனர், ஆனால் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை; நவாப் அனைத்துப் பொறுப்பையும் ஏற்றார், ஆனால் அதிகாரம் பெறவில்லை.
    • மக்களின் நலனில் அக்கறை காட்டாததால், இந்த இரட்டை ஆட்சி முறை கி.பி. 1772இல் ரத்து செய்யப்பட்டு, வங்காளம் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது.
  • சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்து விளக்குக.   

பாளையக்காரர்கள்

  • கி.பி. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் எங்கும் ‘பாளையப்பட்டு ஆட்சிமுறை’ இருந்தது.
  • திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை நாட்டில் மட்டும் 72 பாளையப்பட்டுகள் இருந்தன. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்கள் அதிகம் இருந்தனர்.
  • பாளையப்பட்டு ஆட்சி முறை: 
    • பாளையக்காரர்களின் உள்நாட்டு ஆட்சியில் நாயக்கர் அரசோ, பிற அரசுகளோ தலையிடுவதில்லை.
    • நாட்டுப்படை, காவற்படை வருவாய், நீதி ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
    • அரசுக்கோ அல்லது பேரரசுக்கோ உரிய தண்டல் தொகையையும், தேவைப்படும்போது படை உதவியும் அளிப்பது இவர்களுக்குரிய கடமையாக இருந்தது.
  • பாளையங்களின் அதிகார வரம்புகள் 3 வகைகளாகப் பகுக்கப்பட்டிருந்தன: நிதித்துறை, நீதித்துறை, இராணுவம்
    • நிதித்துறை: குடிமக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் முழுப்பொறுப்பும் பாளையக்காரர்களிடம் இருந்தது. வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கை மைய அரசுக்கும், மற்றொரு பங்கைத் தம்மிடம் உள்ள இராணுவத்திற்கும், மீதமுள்ள பங்கைச் சொந்த நிர்வாகச் செலவிற்கும் பகிர்ந்து அளிக்குமாறு நாயக்கர் அரசால் நெறிப்படுத்தப்பட்டிருந்தனர்.
    • நீதித்துறை: பாளையப் பகுதிக்குள் கொண்டு வரப்படும் அனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கும் தலைமை நீதிமன்றமாகப் ‘பாளையக்காரர்கள்’ விளங்கினர்.
    • இராணுவம்: பாளையங்கள் தாங்கள் வசூல் செய்யும் வரியில் மூன்றில் ஒரு பங்கை இராணுவத்திற்குச் செலவிடும் உரிமைப்பெற்று இருந்தனர். ஆபத்துக் காலங்களில் படை உதவி அளித்தவர்களுக்கு வரிக்கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
  • பாளையக்காரர் முறை ஒழிப்பு: கி.பி. 1801இல் சென்னை கவர்னர் எடவாட கிளைவ், பாளையக்காரர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணை பிறப்பித்தார். பின்னர் பாளையக்காரர்கள் ‘ஜமீன்தார்கள்’ எனப் பெயர் பெற்றனர்.

பூலித்தேவன்

  • மேற்குப்பிரிவில் மறவர் பாளையக்காரர்களுக்கும், தெற்குப்பிரிவில் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் தலைவர்களாக நெல்கட்டும் சேவல் பாளையத்தின் பூலித்தேவனும், பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த கட்டபொம்மனும் இருந்தனர்.
  • இவ்விருவருமே நவாப்பிற்குச் செலுத்த வேண்டிய கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • 1755இல் மாபஸ்கான், பிரிட்டிஷ் படைத்தளபதி கர்னல் ஹெரானின் தலைமையிலான படைகளின் உதவியோடு பாளையக்காரர்கள் மீது படையெடுத்தார்.
  • பூலித்தேவனும், மறவர் பாளையக்காரர்களும் பிரிட்டிஷாருக்கு எதிராக உறுதியுடன் இருந்தனர்.
  • பூலித்தேவர் மறவர்களை ஒன்று சேர்த்து தனது நிலையை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டு, பிரிட்டிஷாருக்கு எதிராக மைசூரின் ஹைதர்அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் நாடினார்.
  • பிரிட்டிஷார் பூலித்தேவனையும் அவரது கூட்டாளிகளையும் அடக்கும் பொறுப்பை யூசுப்கானிடம் (கான்சாகிப்) ஒப்படைத்தனர்.
  • பூலித்தேவன் மதுரையைத் தாக்கி மாபஸ்கானிடமிருந்து அதனைக் கைப்பற்றினார். இது ஒரு இந்திய வீரர் பிரிட்டிஷாருக்கு எதிராக நின்று வெற்றிக்கொண்ட மகத்தான ராணுவ வெற்றியாகும்.
  • 1759இல் நெல்கட்டும் சேவல் மீது தாக்குதல் தொடர்ந்தது. 1767ல் அது கர்னல் காம்ப்பெல் என்பவரால் கைப்பற்றப்பட்டது. பூலித்தேவர் அங்கிருந்து தப்பியோடினார்.
  • பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும் என்ற தனது எண்ணம் நிறைவேறாமலேயே அவர் இறந்தார். தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தைத் துவக்கிய பெருமைக்கு உரியவர் பூலித்தேவனே ஆவார்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

  • கி.பி. 1790 முதல் 1799 வரை பாஞ்சாலங்குறிச்சியை வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்டார்.
  • ராமநாதபுரத்தில் கலெக்டர் ஜான்சன் கட்டபொம்மனை இழிவுப்படுத்திய முறைகளும், கைது செய்ய எடுத்த முயற்சிகளும் அவரைப் புரட்சி செய்யத் தூண்டின.
  • திருநெல்வேலிக் கூட்டிணைப்பு: ஆங்கிலேயரை எதிர்த்து தமிழகத்தில் மானத்தைக் காக்கவேண்டும் என வீரபாண்டியன் எண்ணி, திருநெல்வேலி பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு கூட்டணியை உருவாக்கினார். இதில் பாஞ்சாலங்குறிச்சி, சாத்தூர், குளத்தூர், நாகலாபுரம், மன்னார் கோட்டை, கோலார் பட்டி, கடல்குடி, ஏழாயிரம் பண்ணை, சென்னல்குடி ஆகிய பாளையங்கள் அடங்கும்.
  • ஆங்கிலேயரை எதிர்ப்பதற்கான காரணங்கள்: 
    • பாஞ்சாலங்குறிச்சி விடுதலை வேட்கையுடைய பாளையம்.
    • மருதுபாண்டியர் கூட்டிணைப்பால் தூண்டப்பட்டார்.
    • கலெக்டர் ஜாக்சனின் அடாவடிச் செயல்கள், அத்துமீறல்கள்.
    • ஆங்கிலேயரின் வரிவிதிப்பு முறையும், அதை வசூல் செய்யும் விதமும் பாளையங்களை பயங்கரச் சூழலில் கொண்டுபோய்விட்டது.
    • தாயக மக்கள் கட்டும் நிலவரி அன்னியரிடம் போகக் கூடாது என்ற தீவிர எதிர்ப்பு.
    • ஆங்கிலேய அதிகாரிகள் கட்டபொம்மனை அடிமையெனக் கருதி அவமானப்படுத்தியது.
    • “வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. நாங்கள் ஏன் உங்களுக்கு வரிகட்டவேண்டும்” என்று முழக்கமிட்டார்.
  • பானர்மேன் படையெடுப்பு: 
    • பாளையங்களை ஆங்கில நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரும் நோக்குடனும், அரசுக்கு எதிராகப் பாளையங்களைக் கூட்டிணைத்த கட்டபொம்மனைத் தண்டிக்கும் எண்ணத்துடனும் ஆங்கில அரசு பாஞ்சாலங்குறிச்சிமீது படையெடுக்கத் தீர்மானித்தது. மேஜர் பானர்மேனுக்கு இந்த அதிகாரம் தரப்பட்டது.
    • 5.9.1799இல் பாஞ்சாலங்குறிச்சிமீது பானர்மேன் படை தொடுத்தான்.
    • ஆங்கிலேயப்படை கோலார்ப்பட்டியில் கட்டபொம்மனிடம் போரிட்டு அவரைக் கைது செய்தது.
    • 16.10.1799இல் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டு ‘கயத்தாற்றில்’ தூக்கிலிடப்பட்டார்.

ஊமைத்துரை

  • கட்டபொம்மனின் உறவினர்கள் அனைவரும் ஆங்கிலேயரால் உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் இருந்த வீரர்கள் தமிழகத்தைக் காக்கச் சிக்கல் ஏதுமின்றித் தப்பித்தனர்.
  • அவர்கள் ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்தி ஊமைத்துரையின் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையினை வலுப்படுத்தினர். இவர்களுக்கு மருதுபாண்டியர்கள் உறுதுணையாக நின்றனர்.
  • மக்காலேயின் படையெடுப்பு: மக்காலே தலைமையில் அனுப்பப்பட்ட படையை ஊமைத்துரையின் படைகள் தாக்கின. மக்காலே தாக்குப் பிடிக்க முடியாமல் பாளையங்கோட்டைக்குப் பின்வாங்கினார். 1801ஆம் ஆண்டு மார்ச் இறுதியிலும், ஏப்ரல் ஆரம்பத்திலும் நடைப்பெற்ற மற்றொரு போரிலும் மக்காலே தோல்வி அடைந்தார்.
  • அக்னு படையெடுப்பு: 1801ஆம் ஆண்டு மே திங்களில் அக்னு என்பாரின் தலைமையில் பெரும்படையொன்று ஊமைத்துரையை தோற்கடிக்க அனுப்பப்பட்டது.
  • போர் பாஞ்சாலங்குறிச்சியில் கடுமையாக நடைப்பெற்றபோது ஊமைத்துரை படுகாயம் அடைந்தார். கிராமப்புற மகளிர் அவரைப் பெரியம்மையால் இறந்த இளைஞன் எனக் கூறி காப்பாற்றினார்கள்.
  • மருதுபாண்டியரை சிறுவயலுக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர். குணம் அடைந்தவுடன் மீண்டும் போருக்கு ஊமைத்துரை தயாரானார். அச்சமயத்தில் மருது சகோதரங்களும், அவர்களது படைகளும் ஆதரவு நல்கினர்.
  • தூக்கிலிடப்படுதல்: ஆங்கிலப்படையின் தலைவர் மேஜர் ஜோன்ஸ் ‘சத்திரப்பட்டி’ போர்க்களத்தில் ஊமைத்துரையைச் சந்தித்தார். போரில் ஊமைத்துரை தோல்வியடைந்து பின்வாங்கினார்.
  • இறுதியில் ‘வத்தலகுண்டு’ என்ற இடத்தில் அவரும், அவரது வீரர்கள் சிலரும் ஆங்கிலேயரால் சிறைப்படுத்தப்பட்டனர்.
  • 16.11.1801இல் பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைத்துரை தூக்கிலிடப்பட்டார்.

வேலுநாச்சியார்

  • 1746இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்து வடுகநாதத் தேவருக்கு மகளாகப் பிறந்த வேலுநாச்சியார் பல மொழிகள் கற்று, ஆயுதப்பயிற்சி பெற்றார்.
  • ஆங்கிலேயர் படையெடுப்பு: 1772இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார், நாட்டை மீட்டெடுக்க விருப்பாட்சியில் தங்கி காத்திருந்தார்.
  • வேலுநாச்சியார் ஹைதர்அலியை சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.
  • மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்றுதிரட்டி ஓர் ‘எதிர்ப்புப்படையை’ உருவாக்கினர். வேலுநாச்சியார் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
  • படை திரட்டல்: 1780ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும், 5000 போர் வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார்.
  • வேலுநாச்சியாரின் படைகள் வைகை ஆற்றின் வழியில் சோழவந்தான், சிலைமான், திருப்புவனம், முத்தனேந்தல் நகரங்களை வென்று, மானாமதுரை நகரத்தில் போர் பயிற்சி பெறாத மக்களின் துணைகொண்டு அன்னிய பரங்கியர்களை வெற்றிக்கொண்டனர்.
  • அதன் பிறகு ராணி வேலுநாச்சியார் சிவகங்கை சீமையின் முதல் ராணியாக முடிசூட்டப்பட்டார்.
  • பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25.12.1796இல் மறைந்தார்.
  • இவர் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

மருதுபாண்டியர்

  • கி.பி. 1780 முதல் 1801 வரை சிவகங்கைச் சீமையை ஆண்டவர்கள் மருதுசகோதரர்கள் ஆவார். சின்னமருது, பெரியமருது என அழைக்கப்படும் இவர்களின் புரட்சிக் கோட்டையாக ‘காளையார் கோவில்’ விளங்கியது.
  • இவர்கள் சிவகங்கை மன்னரான ‘முத்து வடுகநாத தேவர்’ அரசவையில் முதலில் சாதாரண ஊழியர்களாகப் பணியில் சேர்ந்தனர். மன்னர் குடும்பத்தின் நம்பிக்கையினைப் பெற்றனர்.
  • 1712இல் கர்நாடக நவாபின் ஆதிக்கம் நிலைபெற ஆற்காடு ஆங்கிலேயக் கூட்டுப்படையானது சிவகங்கையில் புகுந்தது. அப்போது மருது பாண்டியர்கள் அப்படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். போர் நடைப்பெற்றபோதே மன்னர் இறந்துவிட்டார்.
  • மன்னர் குடும்பத்தை மருதுபாண்டியர்கள் காப்பாற்றினர். பின்னர் மறைந்த மன்னரின் மனைவி ‘வேலுநாச்சியார்’ ஆட்சிக்கு வந்தார்.
  • வேலுநாச்சியாருக்குப்பின் இளவரசி ‘வெள்ளைச்சி அம்மாள்’ பெரியஉடையத் தேவரை மணந்ததால் அவர் சிவகங்கை மன்னர் ஆனார். அப்போது மருதுபாண்டியர் இருவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
  • கூட்டிணைப்பு: ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சியில் அனைவரும் இணைந்து செயல்பட மருதுசகோதரர்கள் ஒரு ‘சிவகங்கைக் கூட்டிணைப்பை’ உருவாக்கினர். 
    • இக்கூட்டமைப்பில் இராமநாதபுரம் பகுதியினைச் சேர்ந்த வேலப்பன், முத்துக்கருப்பதேவர், சிங்கம்செட்டி போன்றோரும், சிவகிரியின் மாப்பிள்ளை வன்னியனும் இடம்பெற்று இருந்தனர்.
    • மருதுபாண்டியரின் இக்கூட்டிணைப்புக்கு கட்டபொம்மனின் ‘திருநெல்வேலி கூட்டிணைப்பும்’, கோபாலனின் ‘திண்டுக்கல் கூட்டிணைப்பும்’ ஆதரவு நல்கின.
    • திருநெல்வேலி கூட்டிணைப்பில் பாஞ்சாலங்குறிச்சி, சாத்தூர், குளத்தூர், நாகலாபுரம், மன்னார் கோட்டை, கோலார் பட்டி, கடல்குடி, ஏழாயிரம் பண்ணை, சென்னல்குடி ஆகிய பாளையங்கள் இருந்தன.
    • திண்டுக்கல் கூட்டிணைப்பில் தாராபுரம், தேவதானம், கரூர், கன்னிவாடி, காங்கேயம், கொழுமம், சங்ககிரி, மணப்பாறை ஆகிய பகுதிகள் இருந்தன.
  • திருச்சிராப்பள்ளி அறிக்கை (1801): 
    • மருதுபாண்டியர் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் இந்தியமக்கள் அனைவரும் ஈடுபடவேண்டும் என்ற நோக்கில் இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
    • அனைத்து மக்களும் விடுதலைப் போரில் ஈடுபட வேண்டும் என்றும், இவ்வறிக்கை ஒவ்வொருவரும் படித்து அனைவருக்கும் எடுத்துக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
    • ஆங்கிலேயரைச் சுற்றி துதிபாடும் சதிகார சிற்றரசர்களைக் கடுமையாகக் கண்டித்தது.
    • அன்னியர் வரவால் நாடு வளம் சுருங்கி, நலம் கெட்டுப்போவதை எடுத்துக்காட்டி தூங்கும் மக்களைத் தட்டி எழுப்பியது.
    • விளைவுகள்: நாட்டுப்பற்றுக் கொண்ட நல்லோர்கள் ஒன்று சேர்ந்தார்கள். திருப்பத்தூர், திருப்புவனம், திருச்சுழி, பந்தல்குடி ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் நடைபெற்று கிளர்ச்சியாளர்கள் வசமாயின. கர்னர் அக்னு தலைமையில் செயல்பட்ட ஆங்கிலப்படை கடுமையான போருக்குப்பின் அப்பகுதிகளை மீட்டது.
    • காளையர் கோயிலில் கடும்போர் ஏற்பட்டது. மருதுபாண்டியரின் கொரில்லாத் தாக்குதலுக்குமுன் ஆங்கிலப்படை தாக்குப் பிடிக்காமல் பின்வாங்கியது.
  • ஆங்கிலேயரின் சூழ்ச்சி: வெள்ளையர் வெற்றிப் பெறுவது கடினம் எனக் கருதி, சிவகங்கை அரசகுடும்பத்தைச் சேர்ந்த உடையத் தேவரை அப்பகுதியின் உன்னராக்குவதாகக் கூறி கிளர்ச்சியாளர்களைப் பிளவடையச் செய்தனர். இதனால் மருதுபாண்டியர் ஆதரவாளர்கள் பிளவுபட்டு, ஆங்கிலேயர்கள் வலிவும் பொலிவும் பெற்றனர்.
  • மருதுபாண்டியர் இறத்தல்: 
    • ஆங்கிலேயரின் பெரும்படை காளையர்கோயில் நோக்கிப் புறப்பட்டது. அக்கோட்டையினை 1801ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் கைப்பற்றினர்.
    • அதே ஆண்டு அதே திங்களில் 19ஆம் நாள் சோழபுரத்தில் மருதுபாண்டியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இறுதிப்போர் ஏற்பட்டது.
    • மருதுசகோதரர்கள் ஆங்கிலேயரிடம் கைதிகளாயினர். அவர்களோடு ஆதரவாளர்களும் கைதிகளாயினர்.
    • திருப்பத்தூர் கோட்டையில் மருதுபாண்டியர், கோபாலன் உள்பட 73 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

  • இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு மிக முக்கிய பங்காற்றியது. பூலித்தேவன், கட்டபொம்மன், மருதுசகோதரர்கள், வேலுத்தம்பி போன்ற தலைவர்கள் தேசப்பற்று, தைரியம், சுயமரியாதை மற்றும் தியாகத்திற்குப் பெயர் பெற்றவர்கள்.
  • ஜி. சுப்பிரமணிய அய்யர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சி.ராஜகோபாலாச்சாரி, பெரியார் இ.வெ.ராமசாமி, திருப்பூர் குமரன், கே.காமராஜ் போன்ற தலைவர்களும், அறிஞர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

வேலூர் கலகம் (1805)

  • காரணங்கள்: ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் புகுத்திய சில கட்டுப்பாடுகள் (இந்து வீரர்கள் சமயக் குறிகளை இடக்கூடாது, முஸ்லிம் வீரர்கள் தாடி மீசைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்) ராணுவ வீரர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தின. திப்புவின் பிள்ளைகளை ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினர்.
  • நிகழ்வுகள்: 
    • 9.7.1806இல் வேலூர் கோட்டையில் நடைப்பெற்ற திருமணத்தில் கலந்துகொள்ள வீரர்கள் கூடினர்.
    • நள்ளிரவில் இங்கு கூடியிருந்த வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களைத் தாக்கி ஜீலை 10ஆம் நாள் கோட்டையைக் கைப்பற்றினர்.
    • திப்புவின் கொடி வேலூர் கோட்டையில் ஏற்றப்பட்டு, திப்புவின் இரண்டாவது மகன் பதேக் ஹைதர் அரசராக அறிவிக்கப்பட்டார்.
    • இருப்பினும் இக்கிளர்ச்சி ஆங்கிலேயர்களால் அடக்கப்பட்டது.

சென்னை மகாஜன சபை

  • சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்டப் படுத்தப்பட்ட முதல் அமைப்பு ‘சென்னை சுதேசி சங்கம்’ ஆகும். இதனை 1852இல் ஹார்லி, இலஷ்மி நரசுச்செட்டி மற்றும் சீனிவாசப்பிள்ளை ஆகியோர் நிறுவினர்.
  • 1884இல் சென்னை சுதேசிசங்கம், ‘சென்னை மகாஜன சபையுடன்’ இணைக்கப்பட்டது.
  • எஸ்.இராமசாமி முதலியார், பி.அனந்தாசாகுலு, இரங்கய்யா நாயுடு ஆகியோர் இதனை ஏற்படுத்தினர். சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக பி.இரங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சென்னை மகாஜன சபை சுதந்திரப் போராட்டத்தில், இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியது. 1920இல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டது.
  • 22.4.1930இல் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை சென்னையில் ஜார்ஜ் டவுன், யானைக்கவுனி, உயர்நீதிமன்றம் மற்றும் கடற்கரைப் பகுதியில் தலைமை ஏற்று நடத்தியது.
  • பல்வேறு அனைத்திந்திய கைத்தறி கண்காட்சி, சுதேசி பொருள்கள் கண்காட்சி மூலம் மக்கள் மனதில் தேசியப்பற்றை வளர்த்தது.
  • 24.10.1896இல் ‘தேசத்தந்தை மகாத்மா காந்தி’ சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார்.

வ.உ.சிதம்பரம்பிள்ளை

  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் 5.9.1872இல் பிறந்தார். ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும், ‘கப்பலோட்டி தமிழன்’ என்றும் அழைக்கப்பட்டார்.
  • திருநெல்வேலியில் வழக்குரைஞராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கினார். வியாபாரச் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் அமைப்பினை ஊக்குவித்தார்.
  • சுதேசி தர்ம சங்க நெசவாளிகள் சங்கம் மற்றும் சுதேசி கூட்டுறவு அங்காடிகளைத் தூத்துக்குடியில் தோற்றுவித்தார்.
  • பின்னர், சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்து, தூத்துக்குடி – கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கினார்.
  • 1905இல் மேற்கொள்ளப்பட்ட வங்காளப் பிரிவினை இவரை அரசியலில் ஈடுபடச் செய்தது. தூத்துக்குடி அருகில் பவள ஆலை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • 1907இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பாலகங்காதர திலகரை ஆதரித்தார்.
  • இவர்மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவருடைய வலதுகால் சங்கிலியால் கோர்க்கப்பட்டு மாடுபோல் சிறையில் செக்கிழுத்தார்.

சுப்பிரமணிய சிவா

  • திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த விடுதலைப் போராட்ட வீரராகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார்.
  • ஆங்கிலேயருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் 1908இல் சிறையில் இருந்தபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார்.
  • ஆங்கில அரசு இவருக்காகவே தொழுநோயாளிகள் இரயிலில் பயணம் செய்யக்கூடாது என்று சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக சுப்பிரமணிய சிவா உடல் முழுவதும் தொழுநோய் புண்களுடன் தமிழகம் முழுவதும் நீண்ட நடைப் பயணமாகவே சுற்றி வந்தார்.
  • தனது நோயின் காரணமாக 23.7.1925இல் காலமானார்.

சுப்பிரமணிய பாரதியார்

  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.12.1882இல் பிறந்தார்.
  • சுதேசமித்ரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1907இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.
  • பாலகங்காதர திலகர் மற்றும் அரவிந்தகோஷுடன் சேர்ந்து சுயராஜ்ஜியத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
  • 1907இல் தமிழ் வாரப் பத்திரிக்கையான ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியரானார். அதே சமயத்தில் ‘பாலபாரதம்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டார்.
  • 1908இல் சென்னையில் மாபெரும் கூட்டத்தை நடத்தி, சுயராஜ்ஜிய நாளை கொண்டாடினார். அவரது பாடல்களான ‘வந்தே மாதரம், அச்சமில்லை அச்சமில்லை, எந்தையும் தாயும்’ போன்றவை அச்சிடப்பட்டு தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
  • 1908இல் வ.உ.சி.க்கு எதிராக ஆங்கில அரசு தொடர்ந்த வழக்கில், வ.உ.சி.க்கு ஆதரவாக சாட்சி வழங்கினார். இதனால் ஆங்கில அரசு அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தது.
  • பாரதியார் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த புதுவைக்குத் தப்பி ஓடினார். அங்கிருந்து தனது படைப்பினைத் தொடர்ந்து வெளியிட்டார். ஆனால் ஆங்கில அரசு 1909இல் பாரதியின் படைப்புகளுக்குத் தடை விதித்தது.
  • முதல் உலகப்போருக்குப் பிறகு நவம்பர் 1918இல் கடலூருக்கு வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டார். மூன்று வார காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
  • சென்னையில் இருந்து ‘சுதேசமித்ரன் பத்திரிகையின்’ ஆசிரியராக மீண்டும் பணியாற்றினார். 11.9.1921இல் காலமானார்.

வாஞ்சிநாதன்

  • திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியாற்றினார்.
  • திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் என்பவர் நான்கு பேரைத் திருநெல்வேலியில் சுட்டுக் கொன்றார்.
  • இக்கொடுஞ்செயலுக்குப் பழிதீர்க்க எண்ணிய வாஞ்சிநாதன், மணியாச்சி புகைவண்டி நிலையத்திற்குச் சென்று 17.6.1911இல் மாவட்ட ஆட்சியர் ஆஷ் அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துகொண்டார்.
  • வாஞ்சிநாதன் இறந்தபின் அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்தில், ஆட்சியர் ஆஷின் கொலை சென்னை வரும் அரசர் ஐந்தாம் ஜார்ஜை கொலை செய்வதற்கான ஒத்திகையே ஆகும் என்று எழுதப்பட்டு இருந்தது.

தியாகி விஸ்வநாததாஸ்

  • திரைப்படம் வராத அந்தக்காலத்தில் மேடை நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் விடுதலைக் கனலை வளர்த்த நாடக நடிகர் தியாகி விஸ்வநாததாஸ் ஆவார்.
  • இவர் நாடகங்களில் மக்களுக்கு விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்கள் பல அமைந்து இருந்தன.
  • ‘கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா’ என்ற பாடல் புகழ் பெற்றது.
  • வ.உ.சி. அவர்கள் ஓட்டிய சுதேசிக் கப்பலைக் ‘கதர்க் கப்பல் வருகுதே’ என்று பாடிய பாடல் தேசிய சிந்தனையை ஊட்டுவதாக அமைந்தது.
  • இவர்தம் நாடகங்களின் மூலம் வசூலாகும் பணத்தைச் சுதந்திரப் போராட்டத்துக்கு அர்ப்பணித்து வாழ்ந்தார்.

திருப்பூர் குமரன்

  • ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் 1904இல் பிறந்தார். இவர் மாபெரும் கிளர்ச்சியாளர்.
  • தேசியக்கொடித் தடைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு காவல் துறையினரின் தாக்குதலால் உயிர் துறந்தார்.
  • சாகும் தருவாயில் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
  • இவர் தமிழக வரலாற்றில் ‘கொடிகாத்த குமரன்’ என்று போற்றப்படுகிறார்.

எஸ். சத்தியமூர்த்தி

  • காமராசரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி ஒரு சிறந்த அரசியல்வாதி, நாட்டுப் பற்றாளர்.
  • 1930இல் இராஜகோபாலாச்சாரியார் தனக்குப்பின் சத்தியமூர்த்தியை அகில இந்தியக் காங்கிரஸ் தமிழ்நாட்டுப் பிரிவின் தலைவர் ஆக்கினார்.
  • 19.8.1887இல் சென்னை மாகாணத்தில் உள்ள திருமயம் என்னும் ஊரில் பிறந்தார். வழக்கறிஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • 1939இல் சென்னை மேயராக இருந்தபோது சென்னையில் மிக மோசமான குடிநீர் பஞ்சம் நிலவியது. மக்களின் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்காக சென்னைக்கு மேற்கே 50கி.மீ தூரத்தில் உள்ள பூண்டி என்னும் இடத்தில் ஒரு குடிநீர்த் தேக்கம் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
  • இக்குடிநீர்த்தேக்கம் பின்னர் காமராசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சத்தியமூர்த்தியை நினைவுக்கூறும் வகையில் ‘சத்தியமூர்த்தி சாகர்’ என்று இந்த நீர்த்தேக்கத்திற்குப் பெயரிடப்பட்டது.
  • சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற இயக்கங்களில் பங்கேற்று, பலமுறை சிறை சென்றுள்ளார்.
  • இந்திய விடுதலைக்காகவும், சமுதாய நீதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த சத்தியமூர்த்தி அவர்கள் 28.3.1943இல் காலமானார்.

இராஜகோபாலாச்சாரி

  • இராஜாஜி என்று புகழப்பெற்ற இராஜகோபாலாச்சாரி 10.12.1878இல் தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். சட்டம் பயின்று வழக்கறிஞராக சேலத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • காந்தியின் தீவிர ஆதரவாளர் ஆனார். 1930இல் வேதாரண்யம் சத்தியாகிரகத்தைத் தலைமை ஏற்று நடத்தினார். திருச்சியில் இருந்து 100 தொண்டர்களுடன் வேதாரணியத்திற்குப் பயணம் மேற்கொண்டு, கடல் நீரில் இருந்து உப்பு காய்ச்சி உப்புச் சட்டங்களை மீறினார்.
  • 1939இல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண முதலமைச்சர் ஆனார். தனது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தினார். இந்திமொழியை கட்டாயப் பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தினார்.
  • இரண்டாவது உலகப்போரின்போது ஆங்கில அரசு இந்தியத் தலைவர்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து, 1939இல் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
  • சுதந்திர இந்தியாவின் ‘முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக’ பொறுப்பேற்றார். மீண்டும் தமிழக முதலமைச்சராக 1952இல் பதவி ஏற்றார்.
  • தமிழகத்தில் ‘குலக்கல்வித் திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார், ஆனால் காமராஜர் மற்றும் பெரியார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 1954இல் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரசில் இருந்தும் வெளியேறினார்.
  • சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்து ‘இளம் இந்தியா’ என்ற பத்திரிகையை நடத்தினார்.
  • ‘சக்கரவர்த்தி திருமகன் (இராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்)’ போன்றவை இவர் எழுதிய உரைநடை நூல்கள் ஆகும்.
  • 1955இல் இவருக்கு ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது. இவர் 25.12.1972இல் காலமானார். இவருடைய அரசியல் தந்திர செயல்களால் ‘சாணக்கியர்’ எனப் போற்றப்படுகிறார்.

காமராஜர்

  • விருதுபட்டி என்று அழைக்கப்பட்ட விருதுநகரில் 15.7.1903இல் காமராஜர் பிறந்தார்.
  • 1924இல் ‘வைக்கம் சத்தியாகிரகம்’ போராட்டத்தில் ஈடுபட்டதின் மூலம் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
  • 1930இல் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது தமிழகத்தில் இராஜாஜியுடன் சேர்ந்து வேதாரண்ய உப்புச்சத்தியாகிரகத்தை மேற்கொண்டார். இதனால் கைதுச் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
  • 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்ட நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது சத்தியமூர்த்தியின் வீட்டில் ‘இந்திய தேசியக் கொடியை’ ஏற்றினார்.
  • காமராஜர் தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார். மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளைத் திறந்தது, இலவச கல்வி வழங்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக் கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
  • தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகித்தார். இதனால் ‘அரசை உருவாக்குவர்’ எனப் போற்றப்பட்டார்.
  • லால்பகதூர் சாஸ்திரியை 1964இல் இந்தியப் பிரதமராகவும், அவரது மறைவிற்குப் பிறகு இந்திரா காந்தியை 1966இல் இந்தியப் பிரதமராகவும் உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார்.
  • ‘காமராஜர் திட்டம்’ என்ற திட்டத்தின்படி கட்சிப் பணிக்காகத் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
  • 2.10.1975இல் காலமானார். இவரை மக்கள் அன்போடு ‘பெருந்தலைவர்’ என்றும் ‘கர்மவீரர்’ என்றும் அழைத்தனர்.
  • பாளையக்காரர்கள் ஆட்சிமுறை குறித்து விவரி. 

பாளையக்காரர்கள்

  • கி.பி. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் எங்கும் ‘பாளையப்பட்டு ஆட்சிமுறை’ இருந்தது.
  • திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை நாட்டில் மட்டும் 72 பாளையப்பட்டுகள் இருந்தன. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்கள் அதிகம் இருந்தனர்.
  • பாளையப்பட்டு ஆட்சி முறை: 
    • பாளையக்காரர்களின் உள்நாட்டு ஆட்சியில் நாயக்கர் அரசோ, பிற அரசுகளோ தலையிடுவதில்லை.
    • நாட்டுப்படை, காவற்படை வருவாய், நீதி ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
    • அரசுக்கோ அல்லது பேரரசுக்கோ உரிய தண்டல் தொகையையும், தேவைப்படும்போது படை உதவியும் அளிப்பது இவர்களுக்குரிய கடமையாக இருந்தது.
  • பாளையங்களின் அதிகார வரம்புகள் 3 வகைகளாகப் பகுக்கப்பட்டிருந்தன: நிதித்துறை, நீதித்துறை, இராணுவம்
    • நிதித்துறை: குடிமக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் முழுப்பொறுப்பும் பாளையக்காரர்களிடம் இருந்தது. வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கை மைய அரசுக்கும், மற்றொரு பங்கைத் தம்மிடம் உள்ள இராணுவத்திற்கும், மீதமுள்ள பங்கைச் சொந்த நிர்வாகச் செலவிற்கும் பகிர்ந்து அளிக்குமாறு நாயக்கர் அரசால் நெறிப்படுத்தப்பட்டிருந்தனர்.
    • நீதித்துறை: பாளையப் பகுதிக்குள் கொண்டு வரப்படும் அனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கும் தலைமை நீதிமன்றமாகப் ‘பாளையக்காரர்கள்’ விளங்கினர்.
    • இராணுவம்: பாளையங்கள் தாங்கள் வசூல் செய்யும் வரியில் மூன்றில் ஒரு பங்கை இராணுவத்திற்குச் செலவிடும் உரிமைப்பெற்று இருந்தனர். ஆபத்துக் காலங்களில் படை உதவி அளித்தவர்களுக்கு வரிக்கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

பாளையக்காரர் முறை ஒழிப்பு: கி.பி. 1801இல் சென்னை கவர்னர் எடவாட கிளைவ், பாளையக்காரர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணை பிறப்பித்தார். பின்னர் பாளையக்காரர்கள் ‘ஜமீன்தார்கள்’ எனப் பெயர் பெற்றனர்.

 

முதல் பருவம் அலகு 1- வினா விடை

  • தொல்காப்பியம் நூல் அமைப்பு குறித்து எழுதுக. அல்லது தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் பெயர்களை எழுதுக.
    • தொல்காப்பியம் 3 அதிகாரங்களைக் கொண்டது. அவை, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவை ஆகும்.
  • தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தை எழுதியவர் யார்?
    • பனம்பாரனார்
  • அகத்தினைக்குரிய முப்பொருள்கள் யாவை?
    • முதற்பொருள் 
    • கருப்பொருள்
    • உரிப்பொருள்
  • அன்பின் ஐந்திணை என்று அழைக்கப்படுபவை…..
    • குறிஞ்சி
    • முல்லை
    • மருதம்
    • நெய்தல்
    • பாலை
  • முதற்சங்கத்தை நிறுவியவர் யார்?
    • காய்சினவழுதி
  • இடைச்சங்கத்தை நிறுவியவர் யார்?
    • வெண்டேர் செழியன்
  • கடைச்சங்கத்தை நிறுவியவர் யார்?
    • முடத்திருமாறன்
  • நம்பி அகப்பொருளினை இயற்றியவர் யார்?
    • நாற்கவிராச நம்பி
  • கற்பு பிரிவின் வகைகள் 
    • கற்பு வாழ்க்கையில் பிரிவு 6 வகைப்படும். அவை,  
      • ஓதற்பிரிவு
      • தூதிற்பிரிவு
      • துணைவயிற்பிரிவு
      • பொருள்வயிற்பிரிவு
      • காவல் பிரிவு
      • பரத்தையிற்பிரிவு
  • புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றியவர் யார்?
    • ஐயனாரிதனார்
  • வெட்சித்திணை என்றால் என்ன?
    • பகைவரது பசுக்கூட்டத்தைக் கவர்ந்து வருவது வெட்சித்திணை ஆகும்.
  • பாடாண் திணை என்றால் என்ன?
    • பாடப்படக்கூடிய ஆண்மகனது வீரம்,கொடை, வெற்றி ஆகியவற்றை புகழ்ந்து பாடுவது பாடாண் திணை ஆகும்.
  • பொதுவியல் திணை என்றால் என்ன?
    • எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைக் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
  • நன்னூல் எழுதியவர் யார்?
    • பவணந்தி முனிவர்
  • நன்னூலின் நூல் அமைப்பு குறித்து எழுதுக.
    • இரண்டு அதிகாரங்களைக் கொண்டது. அவை,
      • எழுத்ததிகாரம்
      • சொல்லதிகாரம்
  • தண்டியலங்காரம் எந்த நூலை அடியொற்றி எழுதப்பட்டது?
    • வடமொழி நூலான காவியதரிசனம் என்ற நூலை அடியொற்றி எழுதப்பட்டது.
  • தன்மையணி என்றால் என்ன?
    • ஒரு பொருளின் இயல்புத்தன்மையை நேரில் கண்டாற்போல உள்ளபடி விளக்குவது தன்மையணி ஆகும்.
  • உவமையணி என்றால் என்ன?
    • ஒருவன் தான் கூறக் கருதியப் பொருளை அதனோடு ஒப்புமை உடைய மற்றொரு பொருளோடு இயைபுபடுத்திக் கூறுவது ‘உவமையணி’ ஆகும்.
  • உருவக அணி என்றால் என்ன?
    • உவமைக்கும், பொருளுக்கும் வேற்றுமையின்றி இரண்டையும் ஒன்றாகக் கூறுவது ‘உருவக அணி’ ஆகும்.
  • தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன?
    • இயல்பாக நிகழும் நிகழ்ச்சி மீது கவிஞன் தன்னுடையக் கருத்தை ஏற்றி கூறுவது ‘தற்குறிப்பேற்ற அணி’ ஆகும்.
  • புகழா புகழ்ச்சி அணி என்றால் என்ன?
    • ஒன்றைப் பழிப்பது போல புகழ்ந்து கூறுவது  ‘புகழா புகழ்ச்சி அணி’ ஆகும்.
  • யாப்பருங்கலக்காரிகை நூலினை இயற்றியவர் யார்?
    • அமிர்தசாகரர்
  • எட்டுத்தொகையில் அமைந்துள்ள அகம் சார்ந்த நூல்களின் பெயர்களை எழுதுக.
    • நற்றிணை
    • குறுந்தொகை
    • ஐங்குறுநூறு
    • கலித்தொகை
    • அகநானூறு
  • எட்டுத்தொகையில் அமைந்துள்ள புறம் சார்ந்த நூல்களின் பெயர்களை எழுதுக.
    • புறநானூறு
    • பதிற்றுப்பத்து
  • எட்டுத்தொகையில் அமைந்துள்ள அகம்புறம் சார்ந்த நூலின் பெயரினை எழுதுக.
    • பரிபாடல்
  • நற்றிணை குறிப்பு வரைக.
    • வேறுபெயர் : நற்றிணை நானூறு
    • பாடல் எண்ணிக்கை: 400
    • அடிவரையறை: 9-12
    • தொகுப்பித்தவர்: பாண்டியன் மாறன்வழுதி
  • குறுந்தொகை குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: குறுகிய அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.
    • அடிவரையறை: 4-8
    • பாடல் எண்ணிக்கை: 4௦௦
    • வேறுபெயர்: நல்ல குறுந்தொகை
    • தொகுத்தவர்: பூரிக்கோ 
  • நாழிகை கணக்கர் என்பவர் யார்?
    • இரவில் தூங்காது காலக்கணக்கை ஆராய்பவர்.
  • ஐங்குறுநூறு பெயர்க்காரணம் தருக.
    • பெயர்க்காரணம்: ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் குறுகிய அடிகளைக் கொண்ட ஐந்நூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் ஐங்குறுநூறு எனும் பெயர் பெற்றது. 
  • அகநானூறு குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: அகம் சார்ந்த நானூறு பாடல்களை கொண்டு அமைந்துள்ளதால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
    • பாடல் எண்ணிக்கை:4௦௦
    • அடிவரையறை: 13- 31
  • புறநானூறு பெயர்க்காரணம் தருக.
    • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் இப்பெயர் பெற்றது.
  • ஆற்றுப்படை நூல்களின் பெயர்களை எழுதுக.
    • திருமுருகாற்றுப்படை
    • பொருநராற்றுப்படை
    • சிறுபாணாற்றுப்படை
    • பெரும்பாணாற்றுப்படை
    • கூத்தராற்றுப்படை
  • பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்களின் பெயர்களை எழுதுக.
    • குறிஞ்சிப்பாட்டு
    • முல்லைப்பாட்டு
    • பட்டினப்பாலை
  • ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக. 
    • சிலப்பதிகாரம்
    • மணிமேகலை
    • சீவகசிந்தாமணி
    • வளையாபதி
    • குண்டலகேசி
  • கம்பராமாயணத்தில் அமைந்துள்ள கண்டங்கள்…
    • 6 கண்டங்கள் உள்ளன.
      • பாலகாண்டம்
      • அயோத்தியா காண்டம்
      • ஆரண்ய காண்டம்
      • கிட்கிந்தா காண்டம்
      • சுந்தர காண்டம்
      • யுத்த காண்டம்
  • சைவ சமயக் குரவர் நால்வரின் பெயர்களை எழுதுக.
    • திருஞானசம்பந்தர்
    • திருநாவுக்கரசர்
    • சுந்தரர் 
    • மாணிக்கவாசகர்
  • தேவாரம் என்பதன் பொருள்
    • கடவுளுக்கு சூட்டப்படும் பாமாலை என்பது பொருள் ஆகும்.
    • முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.
  • பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்
    • நம்பியாண்டார் நம்பி
  • நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
    • நாதமுனிகள்
  • முதல் ஆழ்வார்கள் மூவர் பெயரினை எழுதுக.
    • பொய்கையாழ்வார்
    • பூதத்தாழ்வார்
    • பேயாழ்வார்
  • இராவண காவியம் குறிப்பு வரைக.
    • எழுதியவர்: புலவர் குழந்தை
    • இக்காப்பியம் ஐந்து காண்டங்களால் ஆனது. அவை,
      • தமிழகக் காண்டம்
      • இலங்கைக் காண்டம்
      • விந்தக் காண்டம்
      • பழிபுரி காண்டம்
      • இலங்கைக் காண்டம்.

பெருவினாக்கள்

  • தொல்காப்பியம் குறித்து எழுதுக.
    • தொல்காப்பியம்

      • பழந்தமிழ் நூல்களுள் தொன்மையும் முதன்மையும் உடையது தொல்காப்பியம்

      செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

       முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

       புலந்தொகுத் தோனே

      என்கிறார் பனம்பாரனார்.

    • தொல்காப்பியம் அமைப்பு 

      • தொல்காப்பியம் எழுத்து, சொல். பொருள் என்ற அதிகாரங்களையும், 9 இயல்களாக மொத்தம் 27 இயல்களை உடை 1610 நூற்பாக்களால் ஆனது.

      எழுத்ததிகாரம் 

      • எழுத்ததிகாரம், நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உறுப்பியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என 9 இயல்களைக் கொண்டது.
      • தமிழ்மொழியின் எழுத்துக்களையும், சார்பெழுத்துக்களையும் பற்றி குறிப்பிடுகின்றது
      • மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களையும், மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களையும், இவ்விரு எழுத்துக்களும் பிறக்கும் முறையினையும் பற்றிய செய்திகளைத் தருகிறது.

      சொல்லதிகாரம் 

      • சொல்லதிகாரம், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என 9 இயல்களைக் கொண்டது.
      • திணை, பால், எண். முதலியனவும், வேற்றுமை வகைகளும், சொல்லின் முதல், ஈறு, இடை சந்தி, சாரியை, விகாரம் என்னும் 6 உறுப்புகளும், பெயர், வினை எச்சங்களும், இடை உரிச்சொற்களும் பற்றி குறிப்பிடுகிறது.
      • இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொற்களும் இடம்பெறுகின்றன
      • ஆறுதொகை வகைகளும், 10 வகை எச்சங்களும், சொல்மரபுகளும், அவைகளை ஆளும் முறைகளும் அமைந்துள்ளன.
      • வடசொற்கள் ஏற்றுக்கொள்ளும் முறையை

      வடசொற்கிளவி வடவெழுத்து ஓரீஇ 

      எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

      என்கிறார் தொல்காப்பியர்

      பொருளதிகாரம் 

      • பொருளதிகாரம், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என 9 இயல்களைக் கொண்டது.
      • இல்வாழ்க்கைப் பற்றிய செய்திகள் அகப்பொருள் என்றும், மற்ற அனைத்தும் புறப்பொருள் என்றும் அழைக்கப்படுகின்றன
      • ஆணும் பெண்ணும் இணைந்து அன்பால் சேர்ந்து வாழும் வாழ்க்கைஅகவாழ்க்கைஆகும்
      • வீரம் விளங்க கொடையில் சிறந்து புகழ்பெற்று வாழும் வாழ்க்கைபுறவாழ்க்கைஆகும்.
      • குறிஞ்சி .முல்லை மருதம், நெய்தல்,பாலை கைக்கிளை, பெருந்திணை என்னும் ஏழும் அகத்திணைக்கு உரிய ஒழுக்கங்கள் ஆகும்
      • குறிஞ்சி .முல்லை மருதம், நெய்தல், பாலை ஐந்தும்அன்பின் ஐந்திணைஎனப்படும்
      • கைக்கிளை’  என்பதுஒரு தலைக்காமம்ஆகும்
      • பெருந்திணைஎன்பதுபொருந்தாக் காமம்ஆகும்.
      • திருமணத்திற்கு முன்னர் தலைவனும், தலைவியும் பிறர் அறியாமல் சந்தித்து அன்பை வளர்த்துக் கொள்வதுகளவுஆகும்.
      • மணம் நிகழ்ந்தபின் அவர்கள் ஊடியும் கூடியும் வாழும் வாழ்க்கைகற்புஆகும்.
      • தொல்காப்பியம், 1 முதற்பொருள் 2. கருப்பொருள், 3. உரிப்பொருள் என முப்பொருள்பற்றி பேசுகிறது
        • நிலமும் பொழுதும்முதற்பொருள்ஆகும்
        • தெய்வம்,உணவு,விலங்கு, மரம், பறை,தொழில், யாழ் என்பனகருப்பொருள்கள்ஆகும்
        • புணர்ச்சி, பிரிவு, இருத்தல், இரங்கல், ஊடல் என்பன முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற திணைக்குரியஉரிப்பொருள்கள்ஆகும்.

      உரை எழுதியோர் 

      • தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் தெய்வச்சிலையார், கல்லாடர், பேராசிரியர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.
  • முச்சங்கம் பற்றி எழுதுக.
    • சங்கம்

      முதல் சங்கம்

      இடைச் சங்கம்

      கடைச் சங்கம்

      இடம்

      தென் மதுரை

      கபாடபுரம்

      வட மதுரை

      காலம்

      4440

      3700

      1850

      புரந்த அரசர்

      காய்சினவழுதி முதலாக கடுங்கோன் ஈறாக 89 பேர்

      வெண்டேர் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பேர்

      முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 பேர்

      சங்க உறுப்பினர்

      549

      59

      49

      புலவர்கள்

      4449, அகத்தியர், சிவபெருமான், முருகன், முரஞ்சியூர் முடிநாகராயர்

      3700, அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழி, வெள்ளூர் காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை

      449, சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன்,

      மருதனிளநாகனார், நக்கீரனார்

      நூல்கள்

      அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு

      அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம், கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, அகவல்

      அகத்தியம், தொல்காப்பியம்,

      நெடுந்தொகை,குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, குற்றிசை, பேரிசை

  • நம்பியகப்பொருள் நூல் அமைப்பு குறித்து எழுதுக. 

நம்பியகப் பொருள்

    • கி.பி.13ஆம் நூற்றாண்டில் தோன்றியநம்பி அகப்பொருள்என்ற நூல் அகப்பொருள் இலக்கணத்துக்கு என ஒரு தனிப்பெரும் நூல் ஆகும்.
    • எழுதியவர் : நாற்கவிராச நம்பி

நாற்கவிராச நம்பி 

    • நம்பியகப்பொருளின் ஆசிரியர் நாற்கவிராச நம்பி
    • இயற்பெயர் நம்பி 
    • ஊர் புளிங்குடி 
    • சமண சமயத்தை சார்ந்தவர்
    • தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர்
    • ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி. வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் பெற்றவர். அதனால் இவர். “நாற்கவிராசன் என அழைக்கப்பட்டார்
    • நம்பி தம் அகப்பொருள் நூலுக்கு அகப்பொருள் விளக்கம் என்று பெயரிட்டும், இந்நூலுக்கு உரையும் எழுதினார்
    • தம் நூலைப் பாண்டியன் குலசேகரன் அவையில் அரங்கேற்றினார்.

அகச்செய்திகள்

    • ஓர் ஆணுக்கும். ஒரு பெண்ணும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அமைவதுஅகப்பொருள் இலக்கணம்ஆகும்

நூலின் அமைப்பு 

    • நாற்கவிராச நம்பியால் இயற்றப்பெற்ற அகப்பொருள் விளக்கம் 
    1. அகத்திணையியல்(116)
    2. களவியல்(54)
    3. வரைவியல்(29)
    4. கற்பியல்(10)
    5. ஒழிபியல்(43) 

என்ற ஐந்து பகுதிகளை உள்ளடக்கியது. 252 நூற்பாக்களைக் கொண்டது ஆகும்.

  • அகத்திணையியல் 
    • அகத்திணையியலில் ஐந்திணைப்பாகுபாடுகள். முதல் கரு. உரிப்பொருள் பற்றியச் செய்திகள் உள்ளன
  • களவியல் 
    • களவின் இலக்கணங்களாக எண்வகைத் திருமணம் பற்றியும். கைக்கிளையின் பாகுபாடுகளாக காட்சி. ஐயம், துணிவு. குறிப்பறிதல் பற்றியச் செய்திகளும் உள்ளன.
  • வரையியல்
    • வரைவியலில் திருமணம் செய்தல், அறத்தொடு நிற்றல், தலைவி, தோழி, செவிலி அறத்தோடு நிற்கும் திறம் பற்றி கூறுகிறது
  • கற்பியல் 
  •  
    • கற்பியலில் இல்லறம் நடத்தும் கிழவன், கிழத்தியின் பாங்கும். கற்பின் சிறப்பும், கற்பிற்குரிய இலக்கணத்தை பற்றியும் பேசுகிறது. இல்வாழ்க்கையில் பிரிவானது,
    1. பரத்தையிற் பிரிவு
    2. ஓதல் பிரிவு
    3. காவல் பிரிவு
    4. தூது பிரிவு
    5. துணைவயிற் பிரிவு
    6. பொருள்வயிற் பிரிவு

என 6 வகைப்படும்.

    • ஒழிபியல் 
    • ஒழிபியலில் அகப்பாட்டு உறுப்புகள் 12 ஆகும். அவை, திணை, கைக்கோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை ஆகும்
  • புறப்பொருள் வெண்பாமாலை நூல் அமைப்பு குறித்து எழுதுக. (அல்லது) புறத்திணைகளைப் பட்டியலிடுக. (அல்லது) பன்னிரு திணைகள் விவரி.

1. வெட்சி :  ஆக்களைக் கவர்தல்

2.கரந்தைத் திணை : கவர்ந்த பசுக்களைப் பகைவரிடம் இருந்து மீட்பது

3.வஞ்சித் திணை: பகைநாட்டின் மீது போர் தொடுத்து செல்வது  

4.காஞ்சித் திணை : எதிர்த்துப் போர் செய்வது 

5. நொச்சித்திணை : மதில் காப்பது

6. உழிஞைத் திணை : மதிலை முற்றுகையிடுதல் 

7.தும்பைத் திணை : இருவேந்தர் போரிடுவது 

8.வாகைத் திணை : வெற்றியைக் கொண்டாடுவது 

9.பாடாண் திணை : ஆண்மகனது வெற்றி, கொடை, புகழ் ஆகியவற்றை சிறப்பித்துப் பாடுவது 

10.பொதுவியல் : புறத்திணைகளுக்கு எல்லாம் பொதுவாக கூறும் செய்திகள்

11.கைக்கிளை: ஒரு தலைக்காமமே கைக்கிளைஆகும்.

12.பெருந்திணை : பெருந்திணை என்பது பொருந்தாக் காதலை குறிக்கும்.

  • அணி வகைகள் விவரி.
    1. தன்மையணி : ஒரு பொருளின் இயல்புத் தன்மையை நேரில் கண்டாற்போல உள்ளப விளக்குவதுதன்மையணி’.
    2. உவமையணி : ஒருவன் தான் கூறக் கருதியப் பொருளை அதனோடு ஒப்புயை உடைய மற்றொரு பொருளோடு இயைபுபடுத்திக் கூறுவதுஉவமையணி
    3. உருவகயணி : உவமைக்கும் பொருளுக்கும் வேற்றுமையின்றி இரண்டையும் ஒன்றாகக் கூறுவதுஉருவக அணி’.
    4. தீவக அணி : தீவகம் என்பது விளக்கு ஆகும். ஓரிடத்தில் வைக்கப்பட்ட விளக்கு பல இடங்களிலும் உள்ள பொருளை விளக்க காட்டும். அதுபோல ஓரிடத்தில் நின்ற சொல் பல இடங்களிலும் சென்று பொருளை விளக்குவதுதீவக அணி’.
    5. பின்வரு நிலையணி : முன்னர் வந்த சொல்லாவது, பொருளாவது பல இடத்தும் வருமாயின் அதுபின்வருநிலை அணி’.
    6. முன்னவிலக்கணி : கவிஞன் ஒரு பொருளைக் குறிப்பால் மறுத்து மேன்மை தோன்றச் சொல்லுவதுமுன்னவிலக்கணி
    7. ஒட்டணி : கவிஞன் தான் கூறக் கருதிய ஒன்றை நேரே கூறாமல் விடுத்து அதனை ஒப்புமை உடைய பொருளோடு ஒட்டிக் கூறுவான் அதன் வாயிலாகச் சொல்லக் கருதியதைக் குறிப்பாக உணர்த்துவான். ஒட்டிக் கூறுவதால்ஒட்டணிஎன பெயர் பெற்றது.
    8. அதிசய அணி : கவிஞனின் கூற்றானது சான்றோருக்கும் வியப்பைத் தருவதாய் உலக இயல்புக்கு மாறானதாய் அமைவதேஅதிசய அணி’.
    9. தற்குறிப்பேற்ற அணி : இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒன்றின் மேல் கவிஞன் தான் கூறக் கருதிய பொருளை ஏற்றிச் சுவைபட உரைப்பதுதற்குறிப்பேற்ற அணி’.
    10. நிரல்நிறையணி : கவிஞர் தம் செய்யுள்களில் முதலில் சொற்பொருள்களை வரிசைப்படுத்துவர். அவற்றோடு தொடர்புடையவற்றைப் பின்னர் அதே முறையில் பொருள்படுமாறு வரிசைப்படுத்திப் பாடுவர். இவ்வாறு அமைவதேநிரல்நிறை அணிஆகும்.
    11. ஆர்வமொழி அணி : உள்ளத்தின்கண் நிகழும் ஆர்வத்தின் காரணமாக நிகழ்ச்சிகளை மிகுதிபடுத்திக் கூறுவதுஆர்வமொழி அணி’.
    12. தன்மேம்பாட்டுரையணி : ஒருவனுடைய ஆற்றலைப் பிறர் அறியார். அவ்இடங்களில் தன்னுடைய ஆற்றலைத் தானே எடுத்துக் கூறுவர். இவ்வாறு எடுத்து மொழிவதேதன்மேம்பாட்டுரை அணி’.

    13. சிலேடையணி : செய்யுளில் இடம்பெறும் ஒரு சொல்லோ தொடரோ தனித்து நின்றும் பிரிந்து நின்றும் பல பொருள்களைத் தரும். அவ்வாறு பல பொருள்பட அமைவதுசிலேடை அணி’.

    14. மாறுபடு புகழ்நிலையணி : கவிஞன் தான் பழிக்கக் கருதிய பொருளைக் கூறாது மற்றொரு பொருளைப் புகழ்ந்து கூறுவான். இதனைமாறுபடு புகழ்நிலை அணி”.
    15. புகழாப் புகழ்ச்சியணி : ஒன்றைப் பழித்துக் கூறுவது போன்ற தன்மையால் அப்பொருளுக்கு மேம்பாடு தோன்றும் படியாக உரைப்பதுபுகழாப்புகழ்ச்சி அணி’.

    16. வாழ்த்தணி: இவருக்கு இன்னது பொருந்து என்று கவிஞன் தாம் நினைத்தை விரித்துச் சொல்லுவதுவாழ்த்தணி’.

    1.  
  •  பா வகைகள் குறித்து எழுதுக.

வெண்பா

    • ஈற்றடி முச்சீரும் ஏனைய அடி நாற்சீரும் பெற்று வரும்
    • மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய வெண்பாத் தளைகளையே பெற்று வரவேண்டும்
    • ஈற்றுச் சீர் ஓரசையாலோ, ஓரசையுடன் குற்றியலுகரமோ பெற்று முடிதல் வேண்டும்
    • இவ்வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக் கொண்டது.

ஆசிரியப்பா

    • உரைநடை போன்று அமைவதே ஆசிரியப்பா
    • ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடிகளால் அமைவது இது
    • எதுகை, மோனைகளால் சிறப்புப் பெறுவது. குறைந்தது மூன்றடிகளைப் பெற்று வரும்
    • அடி மிகுதிக்கு எல்லை இல்லை.

கலிப்பா

    • நிரை முதலாகிய வெண்பாவுரிச்சீர் ( புளிமாங்காய், கருவிளங்காய்) மிகுந்துவரும்.
    • கலிப்பாவுக்குரிய கலித்தளைகளுடன் பிறதளைகளும் கலந்துவரும்.
    • கலிப்பாவுக்குரிய அடி அளவடி. அம்போதரங்க உறுப்பில் குறளடி, சிந்தடிகளும், அராக உறுப்பில் நெடிலடி, கழிநெடிலடிகளும் வரும்.
    • கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசை.
    • கலிப்பா ஒன்றையொன்று தொடரும் உறுப்புகளால் ஆகியது. அவை தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறுமாகும்.

வஞ்சிப்பா

    • வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களால் ஆயது வஞ்சிப்பா. சிறுபான்மை காய்ச்சீர்களும் கலந்து வரலாம்.
    • ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும் வரும். சிறுபான்மை பிறதளைகளும் வரலாம்.
    • வஞ்சிப்பாவிற்குரிய அடி குறளடியும் சிந்தடியும் ஆகும். அதாவது ஒரு வஞ்சிப்பா முழுமையும் குறளடிகளாய் வரும் ; அல்லது சிந்தடிகளாய் வரும். வஞ்சிப்பாவின் அடிச்சிறுமை மூன்றடி ;பெருமைக்கு வரம்பு இல்லை.
    • வஞ்சியடிகளின் இறுதியில் ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு வஞ்சிப்பா முடிவடையும்.
  • வல்லினம் மிகும் இடங்களைப் பட்டியலிடுக.
    • வல்லினம் மிகும் இடங்கள் என்பது ஒரு சொல்லின் இறுதியில் வல்லின மெய்யெழுத்துக்கள் (க், ச், த், ப்) மிகுந்து வரும் இடங்களைக் குறிக்கும்.

சுட்டு, வினா எழுத்துக்களை அடுத்து:

    • , , , , போன்ற சுட்டு மற்றும் வினா எழுத்துக்களை அடுத்து வரும் போது வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “ + குடம் = அக்குடம்“, “இந்த + பக்கம் = இந்தப்பக்கம்“, “ + கேள்வி = எக்கேள்வி” 

உவமைத் தொகையில்:

    • ஒரு பொருளை வேறொரு பொருளுடன் ஒப்பிட்டு கூறும் போது வல்லினம் மிகும்.
    • எடுத்துக்காட்டாக, “தாமரை + முகம் = தாமரைமுகம்“, “மயில் + தோகை = மயில்தோகை

இரண்டாம் வேற்றுமை உருபு () மறைந்து வரும்போது:

    • இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும்போது வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “பாலை + உண்டான் = பாலைஉண்டான்“, “பழத்தைத் தின்றான் = பழத்தின்றான்

பெயரெச்சம், வினையெச்சம்:

    • பெயரெச்சம் மற்றும் வினையெச்சம் ஆகியவற்றின் பின் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “ஓடிய + குதிரை = ஓடியக்குதிரை“, “செய்து + பார்த்தான் = செய்துப்பார்த்தான்

வினைத்தொகை:

    • வினைத்தொகையில் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “சுட்டு + களம் = சுட்டுக்களம்“, “வீசு + தென்றல் = வீசுதென்றல்

எதிர்மறைப் பெயரெச்சம்:

    • எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “கண்ட + காட்சி = கண்டகாட்சி“, “செல்லாத + பாதை = செல்லாதப்பாதை

பண்புத்தொகை:

    • பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “செம்மை + தாமரை = செந்தாமரை“, “வெண்மை + புறா = வெண்புறா” 

உரிச்சொற்றொடர்களில்:

    • உரிச்சொற்றொடர்களில் வல்லினம் மிகும்.
    • எடுத்துக்காட்டாக, “சால + சிறந்தது = சாலச்சிறந்தது“, “தவ + பெரிது = தவப்பேரிது” 

உம்மைத்தொகை:

    • உம்மைத்தொகையில் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “இரவும் + பகலும் = இரவுபகலும்“, “கையும் + காலும் = கைகால்கள்

இரட்டைக்கிளவி:

    • இரட்டைக்கிளவி சொற்களில் வல்லினம் மிகும்
    • எடுத்துக்காட்டாக, “சலசல + என்றது = சலசலத்தது“, “படபட + என்றது = படபடத்தது“.
  • வல்லினம் மிகா இடங்களைப் பட்டியலிடுக.
    • வல்லினம் மிகா இடங்கள் என்பவை, தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல்லின் இறுதியில் உள்ள வல்லின எழுத்துக்கள் (க், ச், ட், த், ப், ற்) அடுத்த சொல்லின் முதலில் வரும்போது மிகாமல், அதாவது தோன்றாமல் வருவது ஆகும்.

எழுவாய் சொற்களை அடுத்து:

    • உதாரணத்திற்கு, “தம்பி படித்தான்என்ற இடத்தில், ‘தம்பிஎன்ற எழுவாய்க்குப் பின் வல்லினம் மிகாது

அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து

    • அது சென்றது“, “இது பெரியது“, “எது கிடைத்ததுபோன்ற இடங்களில் வல்லினம் மிகாது

பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றின் பின்

    • எழுதிய பாடல்“, “எழுதாத பாடல்போன்ற இடங்களில் வல்லினம் மிகாது

இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை): 

    • கற்றல் நூல்” (கற்ற நூலை) என்ற இடத்தில், ‘உருபு மறைந்து வந்தாலும், வல்லினம் மிகாது

சுட்டு, வினா சொற்களை அடுத்து:

    • அது பறந்தது“, “எது தங்கம்“, “எவை சென்றனபோன்ற இடங்களில் வல்லினம் மிகாது

, , போன்ற வினா எழுத்துக்களின் பின்

    • உயிரெழுத்துகளின் பின்: “வாழ்க தமிழ்போன்ற இடங்களில், உயிரெழுத்தானவிற்கு பின் வல்லினம் மிகாது
  • எட்டுத்தொகை நூல்கள் குறித்து விவரி.
    • அகம் சார்ந்த நூல்கள்
      1. நற்றிணை
      2. குறுந்தொகை
      3. ஐங்குறுநூறு
      4. கலித்தொகை
      5. அகநானூறு
    • புறம் சார்ந்த நூல்கள்
      1. புறநானூறு
      2. பதிற்றுப்பத்து
    • அகமும் புறமும்  சார்ந்த நூல்
      1. பரிபாடல்

அகம் சார்ந்த நூல்கள்

நற்றிணை

    • நல்ல திணை 
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 9-12
    • பாடல் எண்ணிக்கை: 400
    • பாடிய புலவர்கள்:175
    • வேறுபெயர்: நற்றிணை நானூறு
    • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி

குறுந்தொகை

    • நல்ல குறுந்தொகை
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 4 – 8
    • பாடல் எண்ணிக்கை: 400
    • தொகுத்தவர்: பூரிக்கோ

ஐங்குறுநூறு 

    • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 3-6
    • பாடல் எண்ணிக்கை: 500
    • பாடிய புலவர்கள்: 5

கலித்தொகை

    • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: அகம்
    • பாடல் எண்ணிக்கை: 150
    • பாடிய புலவர்கள்: 5

அகநானூறு

    • அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 13-31
    • பாடல் எண்ணிக்கை: 400
    • பாடிய புலவர்கள்: 145 

புறம் சார்ந்த நூல்கள்

புறநானூறு

    • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்புறம் 
    • பாடல் எண்ணிக்கை – 400
    • வேறுபெயர்புறம்,புறப்பாட்டு

பதிற்றுப்பத்து

    • பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்புறம் 
    • பாடல் எண்ணிக்கை– 100 (கிடைத்தவை 80 )
    • பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
    • இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.

அகமும் புறமும் சார்ந்த நூல்

பரிபாடல்

    • பரிந்து செல்லும் ஓசையுடைய பாடல்களை கொண்டுள்ளதால் பரிபாடல் எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்– அகம் புறம் சார்ந்தது.
    • பாடல் எண்ணிக்கை-70(கிடைத்தவை 22)
      • திருமால்-6
      • முருகன்-8
      • வையை-8
    • அடிவரையறை – 25-40
    • பாடிய புலவர்கள்– 13
  • எட்டுத்தொகையில் அமைந்துள்ள அகம் சார்ந்த நூல்களைப் பட்டியலிடுக.
    • அகம் சார்ந்த நூல்கள்
      1. நற்றிணை
      2. குறுந்தொகை
      3. ஐங்குறுநூறு
      4. கலித்தொகை
      5. அகநானூறு

நற்றிணை

    • நல்ல திணை 
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 9-12
    • பாடல் எண்ணிக்கை: 400
    • பாடிய புலவர்கள்:175
    • வேறுபெயர்: நற்றிணை நானூறு
    • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி

குறுந்தொகை

    • நல்ல குறுந்தொகை
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 4 – 8
    • பாடல் எண்ணிக்கை: 400
    • தொகுத்தவர்: பூரிக்கோ

ஐங்குறுநூறு 

    • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 3-6
    • பாடல் எண்ணிக்கை: 500
    • பாடிய புலவர்கள்: 5

கலித்தொகை

    • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: அகம்
    • பாடல் எண்ணிக்கை: 150
    • பாடிய புலவர்கள்: 5

அகநானூறு

    • அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: அகம்
    • அடிவரையறை : 13-31
    • பாடல் எண்ணிக்கை: 400
    • பாடிய புலவர்கள்: 145
  • எட்டுத்தொகையில் அமைந்துள்ள புறம் சார்ந்த நூல்கள் குறித்து எழுதுக.

புறம் சார்ந்த நூல்கள்

    1. புறநானூறு
    2. பதிற்றுப்பத்து

புறநானூறு

    • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: புறம் 
    • பாடல் எண்ணிக்கை – 400
    • வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு

பதிற்றுப்பத்து

    • பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.
    • பாடுபொருள்: புறம் 
    • பாடல் எண்ணிக்கை- 100 (கிடைத்தவை 80 )
    • பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
    • இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.
  • பத்துப்பாட்டு நூல்களைப் பட்டியலிடுக.
    • ஆற்றுப்படை நூல்கள்
      • திருமுருகாற்றுப்படைநக்கீரர்
      • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்
      • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
      • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
      • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்
    • அகம் சார்ந்த நூல்கள்
      • முல்லைப்பாட்டு : நப்பூதனார்
      • குறிஞ்சிப்பாட்டுகபிலர்
      • பட்டினப்பாலைகடியலூர் உருத்திரங்கண்ணனார்
    • புறம் சார்ந்த நூல்கள்
      • திருமுருகாற்றுப்படைநக்கீரர்
      • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்
      • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
      • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
      • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்
      • மதுரைக்காஞ்சி: மாங்குடி மருதனார்
    • அகம் புறம் சார்ந்த நூல்
      • நெடுநல்வாடை
    • பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது.

திருமுருகாற்றுப்படை

    • பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.
    • இது 317 அடிகள் கொண்டது
    • முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
    • இயற்றியவர் நக்கீரர்
    •  இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

பொருநராற்றுப்படை

    • சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.
    • இயற்றியவர்முடத்தாமக் கண்ணியார் 
    • இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
    • போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பெரும்பாணாற்றுப் படை

    • இயற்றியவர்கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
    • பாட்டுடைத் தலைவன்காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.
    •  500 அடிகள் கொண்டது
    • பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.

சிறுபாணாற்றுப் படை

    • இயற்றியவர்இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
    • பாட்டுடைத் தலைவன்ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்
    • இது 269 அடிகள் கொண்டது.
    • சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.

மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)

    • இயற்றியவர்இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
    • பாட்டுடைத் தலைவன்நன்னன் சேய் நன்னன்
    •  583 அடிகள் கொண்டது.
    • பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.
    • மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

மதுரைக் காஞ்சி

    • பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது.
    • இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றியது.
    • மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சிநிலையாமை).

குறிஞ்சிப் பாட்டு

    • இயற்றியவர்  – கபிலர்
    • இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.
    • குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.
    • பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.
    • இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது

முல்லைப் பாட்டு

    • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.
    • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
    • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
    • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.

பட்டினப்பாலை

    • பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது  பொருள்
    • 301 அடிகள் கொண்டது.
    • இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.
    • இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.
    • இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
    • பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.
    • அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.

நெடுநல்வாடை

    • இது 188 அடிகள் கொண்டது.
    • இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
    • காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.
  • பத்துப்பாட்டில் அமைந்துள்ள ஆற்றுப்படை நூல்கள் குறித்து விவரி.

திருமுருகாற்றுப்படை

      • பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.
      • இது 317 அடிகள் கொண்டது. 
      • முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
      • இயற்றியவர் நக்கீரர். 
      •  இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

பொருநராற்றுப்படை

      • சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.
      • இயற்றியவர் – முடத்தாமக் கண்ணியார் 
      • இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
      • போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பெரும்பாணாற்றுப் படை

      • இயற்றியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
      • பாட்டுடைத் தலைவன் – காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.
      •  500 அடிகள் கொண்டது. 
      • பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.

சிறுபாணாற்றுப் படை

      • இயற்றியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
      • பாட்டுடைத் தலைவன் -ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்
      • இது 269 அடிகள் கொண்டது.
      • சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.

மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)

      • இயற்றியவர் – இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
      • பாட்டுடைத் தலைவன் – நன்னன் சேய் நன்னன்
      •  583 அடிகள் கொண்டது.
      • பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.
      • மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
  • பத்துப்பாட்டில் அமைந்துள்ள அகம் சார்ந்த நூல்கள் குறித்து எழுதுக.

குறிஞ்சிப் பாட்டு

      • இயற்றியவர்  – கபிலர்
      • இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.
      • குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.
      • பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.
      • இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. 

முல்லைப் பாட்டு

      • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.
      • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
      • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
      • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.

பட்டினப்பாலை

      • பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது  பொருள். 
      • 301 அடிகள் கொண்டது.
      • இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.
      • இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.
      • இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
      • பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.
      • அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து எழுதுக.

நீதி நூல்கள் (11 நூல்கள்)

1) திருக்குறள்
2)நாலடியார் 
3) இன்னா நாற்பது
4) இனியவை நாற்பது 
5)நான்மணிக்கடிகை
6)ஆசாரக்கோவை 
7) சிறுபஞ்சமூலம்
8) ஏலாதி
9)திரிகடுகம் 
10)முதுமொழிக்காஞ்சி
11) பழமொழி நானூறு

அக நூல்கள் (6 நூல்கள்)

1) ஐந்திணை ஐம்பது
2)ஐந்திணை எழுபது 
3) திணைமொழி ஐம்பது
4)  திணைமாலை நூற்று ஐம்பது
5) கைந்நிலை
6)கார் நாற்பது 

புற நூல் (ஒன்று)

1)களவழி நாற்பது

என மூன்று பிரிவுகளுள் அடக்கலாம்.

திருக்குறள்

      • பெயர்க்காரணம்: குறள் வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளதால்  இப்பெயர் பெற்றது.
      • திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்
      • ஆசிரியர்திருவள்ளுவர்
      • பாவகைகுறள் வெண்பா

திருக்குறளின் வேறு பெயர்கள்:

          • திருவள்ளுவம்
          • தமிழ் மறை
          • பொதுமறை
          • முப்பால்
          • பொய்யாமொழி
          • தெய்வநூல்

நூல் பகுப்பு முறை:

          • பால் – 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
          • அதிகாரம் – 133
          • பாடல்கள் – 1330
          • இயல்கள் – 9

நாலடியார்

      • பெயர்க்காரணம்: நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
      • ஆசிரியர்சமண முனிவர்கள்
      • தொகுத்தவர்பதுமனார்
      • பாடல்கள் – 400
      • பொருள்அறம்
      • பா வகைவெண்பா

வேறு பெயர்கள்:

        • நாலடி நானூறு
        • வேளாண் வேதம்

நூல் பகுப்பு:

        • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
          • அறத்துப்பால் – 13 அதிகாரங்கள்
          • பொருட்பால் – 24 அதிகாரங்கள்
          • இன்பத்துப்பால் – 3 அதிகாரங்கள்

நூலின் சிறப்பு:

        • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.

நான்மணிக்கடிகை

        • பெயர்க்காரணம்: நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற  அணிகலன் போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள்  இடம்பெறுவதால் நான்மணிக்கடிகை எனும் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்விளம்பி நாகனார்
        • ஊர்விளம்பி
        • பாடல்கள் -104
        • பாவகைவெண்பா

இன்னா நாற்பது

        • பெயர்க்காரணம்: இன்னாதுன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால்  இன்னா நாற்பது எனப்படுகிறது.
        • ஆசிரியர்கபிலர்
        • பாடல்கள் – 1 + 40
        • பாவகைவெண்பா

இனியவை நாற்பது

        • பெயர்க்காரணம்: இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்பூதஞ்சேந்தனார்
        • பாடல்கள் – 1 + 40
        • பாவகைவெண்பா

திரிகடுகம்

        • பெயர்க்காரணம்: சுக்குமிளகுதிப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பானஅதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
        • திரிமூன்று
        • கடுகம்காரமுள்ள பொருள்
        • ஆசிரியர்நல்லாதானர்
        • பாடல்கள் – 100 + 1
        • பாவகைவெண்பா

ஆசாரக்கோவை

        • பெயர்க்காரணம்: மனித வாழ்விற்கு இன்றியமையாத ஒழுக்கநெறிகள் பலவற்றையும் ஒன்றிணைத்துக் கூறும் ஒரு தொகுப்பு நூல் என்பதால் அப்பெயர் பெற்றது.
        • ஆசிரியர்பெருவாயின் முள்ளியார்
        • பாடல்கள் – 100
        • பாவகைபல்வேறு வெண்பா வகைகள்

பழமொழி நானூறு

        • பெயர்க்காரணம்: ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி  இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
        • ஆசிரியர்முன்றுறை அரையனார்
        • பாடல்கள் – 400
        • பாவகைவெண்பா

சிறுபஞ்சமூலம்

        • பெயர்க்காரணம்:கண்டங்கத்திரிசிறு வழுதுணைசிறுமல்லிபெருமல்லிநெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.
        • ஆசிரியர்காரியாசான்
        • பாடல்கள்கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
        • பாவகைவெண்பா

முதுமொழிக்காஞ்சி

        • பெயர்க்காரணம்: மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
        • ஆசிரியர்மதுரைக் கூடலூர்க்கிழார்
        • பாடல்கள் – 100
        • பாவகைகுறள் தாழிசை

ஏலாதி

        • பெயர்க்காரணம்: ஏலம்இலவங்கம்நாககேசரம்சுக்குமிளகுதிப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
        • ஆசிரியர்கணிமேதாவியார்
        • பாடல்கள்பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
        • பாவகைவெண்பா

ஐந்திணை ஐம்பது

        • பெயர்க்காரணம்: ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்மாறன் பொறையனார்
        • பாடல்கள் – 50(5 X 10 = 50)
        • திணைஐந்து அகத்திணை
        • திணை வைப்பு முறைமுல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
        • பாவகைவெண்பா

ஐந்திணை எழுபது

        • ஐந்து தினைகளுக்கும் பதினாங்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்மூவாதியார்
        • பாடல்கள் – 70(5*14=70)
        • திணைஐந்து அகத்தினணகளும்
        • திணை வைப்பு முறைகுறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
        • பாவகை  – வெண்பா

திணைமொழி ஐம்பது

        • பெயர்க்காரணம்:திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.
        • ஆசிரியர்கண்ணஞ் சேந்தனார்
        • பாடல்கள் – 50(5*10=50)
        • திணைஐந்து அகத்திணைகளும்
        • திணை வைப்பு முறைகுறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
        • பாவகை  – வெண்பா

திணைமாலை நூற்றைம்பது

        • பெயர்க்காரணம்:திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்கணிமேதாவியார்
        • பாடல்கள் – 150(5*30=150)
        • திணைஐந்து அகத்திணைகளும்
        • திணை வைப்பு முறைகுறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
        • பாவகைவெண்பா

கைந்நிலை

        • கை = ஒழுக்கம்
        • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்புல்லாங்காடனார்
        • பாடல்கள் – 60(5*12=60)
        • திணைஐந்து அகத்திணைகளும்
        • பாவகைவெண்பா

கார் நாற்பது

        • கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையினாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது
        • இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.
        • ஆசிரியர்மதுரைக் கன்னங் கூத்தனார்
        • பாடல்கள் – 40(அகநூல்களில் அளவில் சிறியது)
        • திணைஅகத்திணைமுல்லைத்திணை
        • பாவகைவெண்பா

களவழி நாற்பது

        • களம் = போர்க்களம்.
        • போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
        • ஆசிரியர்பொய்கையார்
        • பாடல் – 40
        • திணைபுறத்திணைவாகைத்திணை
        • பாவகை – வெண்பா
  • ஐம்பெரும்காப்பியங்கள் குறித்து எழுதுக.

ஐம்பெரும் காப்பியங்கள்

    1. சிலப்பதிகாரம்
    2. மணிமேகலை
    3. சீவகசிந்தாமணி
    4. வளையாபதி
    5. குண்டலகேசி

சிலப்பதிகாரம்

    • இயற்றியவர்– இளங்கோவடிகள்
    • சமயம்சமணம்

பெயர்க்காரணம்:

    • காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

    • குடிமக்கள் காப்பியம்
    • முத்தமிழ் காப்பியம்
    • உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்

நூல் அமைப்பு

    • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.

மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்


      • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
        உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
        ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்  

காப்பியக் கதை

    • கோவலன் கண்ணகி திருமணத்தில் தொடங்கி, மாதவியின் நடனத்தால் மையல் கொண்ட கோவலன், கண்ணகியை விடுத்து, மாதவி மாட்டு விடுதலறியாவிருப்பினன் ஆகி, மணிமேகலையை மகளாய்ப் பெற்று, பல ஆண்டுகளுக்குப் பின் இந்திர விழாவில் கானல் வரிபாடும் நிலையில் ஊழ்வினை காரணமாக மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் மாதவி என அவளைப் பழித்து நீங்கி, கண்ணகியைத் தஞ்சமடைந்து, கவுந்தியடிகள் துணையுடன் மதுரை சென்று, மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக்கி, மதுரை வீதியில் பொற்கொல்லனிடம் சிலம்பு விற்கச் சென்று கள்வன் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு, மன்னன் கொன்று வா என ஆணையிடக் கொலைக் களத்தில் கோவலன் கொலைப்பட, வண்ணச் சீறடி மண்மகள் அறியாது புகாரில் வாழ்ந்த கண்ணகி மதுரை வீதியில் சீற்றமே உருவாய் அரண்மனை வாயில் புகுந்து மன்னனிடம் தன் கணவன் கள்வனல்லன் என்பதைச் சிலம்பை உடைத்து, மாணிக்கத்தைக் காட்டி தெளிவுப்படுத்த அதனால் குற்றம் செய்தேன் என மன்னன் மடிய, கோப்பெருந்தேவி உயிர் துறக்க,சினம் அடங்காப் பத்தினி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கி, வஞ்சி மாநகர் புகுந்து அங்குள்ள மலைக்குறவர் காண, விமானத்தில் ஏறி விண்ணுலகு சென்றாள். இதுவே சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகி கோவலன் கதையாகும்.

மணிமேகலை

    • இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்
    • சமயம்பௌத்தம்

பெயர்க்காரணம்

    • காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்மணிமேகலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

    • இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)
    • இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.

நூல் அமைப்பு

    • முப்பது காதைகள் கொண்டது.

மூன்று கருத்துகள்

    • இளமை நிலையாமை
    • யாக்கை நிலையாமை
    • செல்வம் நிலையாமை 

காப்பியக் கதை 

    • கோவலன் கொலை செய்யப்பட, செய்தியறிந்த மாதவியும். அவள் மகள் மணிமேகலையும் பௌத்த சமயத்தில் சேர்ந்துதுறவியாகின்றனர். புத்தபிரானுக்கு மலர் வேண்டி மலர்வனம் புகுகின்றாள் மணிமேகலை. மணிமேகலை மீது காமம் கொண்ட இளவரசன் உதயகுமரன் அவளைப் பின் தொடர்கிறாள். தன்னைப் பொருள்விலையாட்டி எளக் கூறி இகழ்ந்தும் உதயகுமரன் பின்னால் தன் மனம் செல்வதையறிந்து வருந்துகிறாள் மணிமேகலை. இந்நிலையில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விட்டுவிடுகிறது. அங்குப் பழம்பிறப்பு அறிந்து, மூன்று மந்திரங்களும் பெறுகிறாள். ஆபுத்திரனின் அமுத சுரபியும் கோமுகிப் பொய்கையிலிருந்து கிடைக்கிறது. மந்திரத்தின் உதவியால் விண்ணில் பறந்து புகார் வந்து பசியால் வாடியோர்க்கு உண்டி கொடுத்து உயிர்கொடுக்கிறாள் உதயகுமரன்தரும் துன்பம் நீங்கமந்திரத்தின் உதவியால் காயசண்டிகை வடிவத்தை எடுத்துக்கொள்கிறாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமரன் தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொன்ற பழி மணிமேகலையை வந்தடைகிறது. அரசன் மகளைக் கொன்றதால் சோழ மன்னன் மணிமேகலையைர் சிறையில் அடைக்கிறான். மகனைப் பறி கொடுத்த அரசி. மணிமேகலையைப் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துகிறாள். தவவலிமையால் அவற்றிலிருந்து விடுபடுகிறாள். உண்மை உணர்ந்த அரசி அவளை விடுவித்துத் தன்னை மன்னிக்க வேண்டுகிறாள். பின்னர் மணிமேகலை காஞ்சி சென்று பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்பி அறவண அடிகளிடம் ஆசி பெறுகிறாள். இதுவே மணிமேகலையின் கதையாகும்.

சீவகசிந்தாமணி

    • இயற்றியவர்திருத்தக்கதேவர்
    • தமிழில் விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி ஆகும்.
    • மணநூல் என்று அழைக்கப்படுகிறது.
    • சமயம்சமணம்

நூல் அமைப்பு

    • 13 இலம்பகங்கள் 
    • 3145 பாடல்கள் கொண்டது.

காப்பியக் கதை 

    • காப்பியத்தலைவன் சீவகன். ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன், மனைவி விசயை. நாட்டை மறந்து அந்தப்புரத்தில் அடைக்கலமாகும் மன்னன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைக்கின்றான். அமைச்சன் தக்க நேரம் பார்த்துப் படையுடன் வந்து மன்னனைக் கொல்கிறான். அமைச்சன் சதியறிந்த மன்னன், மனைவி விசயையை மயிற்பொறியில் ஏற்றி வானில் பறக்கும்படிச்செய்கிறான். உயிர்தப்பிய விசயை சுடுகாட்டில் இறங்குகிறாள். அங்கு அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. சீவகன் என்று பெயர் மட்டும் சூட்டி மகனோடு வாழ முடியாது தாய் விசயை மறைந்து வாழ்கிறாள். கந்துக்கடன் எனும் வணிகன் சீவகனை எடுத்துச்சென்று, அச்சணந்தி அடிகளிடம் கல்வி பயில அனுப்புகிறான். கல்வி கேள்விகளில் சிறந்தவனாக வளர்கின்றான். இளமைப் பருவம் எய்திய சீவகன் தன் அழகாலும் ஆண்மையாலும் போட்டிகளில் வெற்றி பெற்றுகாந்தருவ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எண்மரை மணக்கிறான். கட்டியங்காரனைப் போரில் கொன்று தன் தந்தையின் நாட்டை மீட்டு அரசாள்கிறான். மனைவியரோடு மகிழ்ச்சியாய், நற்புதல்வர்களைப் பெற்று இருக்குங்காலை தோட்டத்தில் பார்த்த ஒரு காட்சியால் வாழ்க்கையில் விரக்தியுற்றுத் துறவு பூண்டு முக்தி அடைகிறான். இதுவே சீவக சிந்தாமணி தரும் சீவகனின் கதையாகும்.

வளையாபதி

    • ஆசிரியர் பெயர் தெரியவில்லை
    • சமண சமயம் சார்ந்த நூல்

காப்பியக் கதை 

    • நவகோடி நாராயணன் ஒரு வணிகன். இவன் வேறு சாதிப் பெண்ணை மணந்தான். இதனால் அவன் குலத்தோர் வெறுக்க, வெறுப்பைத் தாங்க இயலாது அவனும் அயல் நாடு சென்றுவிட, அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான். வைசிய புராணம் தரும் கதை இதுவேயாகும்.

குண்டலகேசி

    • குண்டலகேசி என்பதற்கு  சுருண்ட கூந்தலை உடையவள் என்பது பொருள் ஆகும்.
    • இயற்றியவர்நாதாகுத்தனார்
    • 25 பாடல்கள் கிடைத்துள்ளன.
    • சமயம்பௌத்தம்

காப்பியக் கதை 

    • வணிகன் மகள் பத்தரை. இவள் காளன் என்ற கள்வனை விரும்புகிறாள். மகளின் வற்புறுத்தலால் தந்தையும் கள்வனைச் சிறையிலிருந்து மீட்டு அவளுக்கு மணம் செய்து வைக்கிறார். இன்பமான வாழ்க்கையின் இடையில் ஊடலின்போது சினத்தில் பத்தரை தன் கணவனை நீ கள்வன் தானே? என்று கூறிவிட அதனால் சினங்கொண்ட காளன் (கணவன்) தெய்வத்தை வணங்க என்று பொய் கூறி மலையுச்சிக்கு அவளை அழைத்துச் சென்று கொல்லப் போவதாகக் கூறுகின்றான். கணவனுக்கு அறிவுரை கூறியும் அவன் திருந்தாத நிலையில் அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து கணவனை மலையுச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகின்றாள். தான் செய்த பாவம் நீங்கிடப் பௌத்த சமயத்தில் சேர்ந்து அறக் கருத்துக்களைப் பரப்பி இறுதியில் புத்தபிரானின் திருவடியை அடைகிறாள்.
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றி எழுதுக.

ஐஞ்சிறுகாப்பியங்கள்

நாககுமார காவியம்

    • ஆசிரியர்பெயர் தெரியவில்லை
    • காலம்கி.பி.16ஆம் நூற்றாண்டு
    • பாடல்கள் – 170
      சருக்கம் – 5
      பாவகைவிருத்தப்பா
    • சமயம்சமணம்
    • பெயர்க்காரணம்:
      கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.
    • வேறு பெயர்: நாகபஞ்சமி கதை

உதயணகுமார காவியம்

    • ஆசிரியர்பெயர் தெரியவில்லை
    • காலம்கி.பி.15ஆம் நூற்றாண்டு
    • பாடல்கள் = 369
      காண்டம் = 6
      காண்டங்கள்:

      • உஞ்சைக் காண்டம்
      • இலாவண காண்டம்
      • மகத காண்டம்
        வத்தவ காண்டம்
      • நரவாகன காண்டம்
      • துறவுக் காண்டம்
    • வேறு பெயர்உதயணன் கதை

யசோதர காவியம்

    • ஆசிரியர்வெண்ணாவலூர் உடையார் வேள்
    • காலம் – 13ஆம் நூற்றாண்டு
    • பாடல்கள் – 320
      சருக்கங்கள் – 5
    • பாவகைவிருத்தம்
    • சமயம்சமணம்

நீலகேசி

    • ஆசிரியர்பெயர் தெரியவில்லை
    • காலம் – 6ஆம் நூற்றாண்டு
    • பாடல்கள் – 894
      சருக்கம் – 10
    • பாவகைவிருத்தம்
    • சமயம் = சமணம்
    • வேறு பெயர்:
      நீலகேசி தெருட்டு
      நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)
    • நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்

சூளாமணி

    • ஆசிரியர்தோலாமொழித் தேவர்
    • காலம்கி.பி.பத்தாம் நூற்றாண்டு
    • பாடல்கள் – 2330
      சருக்கம் – 12
    • பாவகைவிருத்தம்
    • சமயம்சமணம்
    • பெயர்க்காரணம்: மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.
  • சமயக் காப்பியங்கள் குறித்து எழுதுக.
    • மணிமேகலை பௌத்தத்தைப் போற்றும் நிலையில் எழுந்தது. சீவகசிந்தாமணி சமணம் பரப்ப எழுந்தது.
    • வளையாபதி சமண சமயத்தது.
    • குண்டலகேசி பௌத்தத்தைப் போற்றுவது.
    • ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தனவாகும்.
    • கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வைணவ சமயக் காப்பியங்களாகும்.
    • பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் முதலின சைவ சமயக் காப்பியங்களாகும்.
    • சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியம்.
    • இயேசு காவியம் கிறித்துவக் காப்பியம் ஆகும்.
    • சமயம் பரப்பும் நோக்கில்தான் காப்பியங்களின் வளர்ச்சி அமைந்தது என்றே உறுதிபடக் கூறலாம்.

கம்பராமாயணம்

    • இயற்றியவர்கம்பர்
    • பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது

காப்பிய அமைப்பு

    • இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.
    • இந்த ஆறு காண்டங்களின் சிறு பிரிவுகளாக 113 படலங்கள் உள்ளன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 10,500 ஆகும்.
    • கம்பராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழவேண்டும் என்ற உண்மையை ஏகபத்தினி விரதனாம்இராமன் மூலம் தெரிவிக்கின்றது.

வில்லிபாரதம்

    • இயற்றியவர்: வில்லிபுத்துரார்
    • காலம்: 16-ஆம் நூற்றாண்டு.
    • பருவங்கள்:
      வில்லிபாரதம் 10 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
      • பருவங்களின் பெயர்கள்:

        • ஆதி பருவம்
        • சபா பருவம்
        • ஆரணிய பருவம்
        • விராட பருவம்
        • உத்தியோக பருவம்
        • வீடும பருவம்
        • துரோண பருவம்
        • கன்ன பருவம்
        • சல்லிய பருவம்
        • சௌப்திக பருவம்

    • 4351 விருத்தப் பாடல்களைக் கொண்டது.

பெரியபுராணம்

    • இயற்றியவர்: சேக்கிழார்
    • பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.
    • இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.
    • 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.

திருவிளையாடற் புராணம்

    • இயற்றியவர்: பரஞ்சோதி முனிவர்
    • காண்டங்கள்:
      3 காண்டங்கள் உள்ளன.
      • மதுரைக் காண்டம்
      • கூடல் காண்டம்
      • திருவாலவாய்க் காண்டம்
    • படலங்கள்:
      மொத்தம் 64 படலங்கள் உள்ளன.
    • மதுரைக் காண்டம்: 18 படலங்கள்.
    • கூடல் காண்டம்: 30 படலங்கள்.
    • திருவாலவாய்க் காண்டம்: 16 படலங்கள்.
    • பாடல்கள்:
      இந்த நூல் 3363 பாடல்களைக் கொண்டுள்ளது.

கந்தபுராணம்

    • இயற்றியவர்: கச்சியப்ப சிவாச்சாரியார்
    • முருகனின் வரலாற்றைக் கூறும் நூல்
    • ஆறுகாண்டங்கள்
      • உற்பத்தி காண்டம்
      • அசுர காண்டம்
      • மஹேந்திர காண்டம்
      • யுத்த காண்டம்
      • தேவ காண்டம்
      • தக்ஷ காண்டம்
    • 142 படலங்கள்
    • 2967 பாடல்கள்

சீறாப்புராணம்

    • ஆசிரியர் : உமறுப்புலவர்
    • சீறாஎன்ற அரபுச் சொல்லுக்கு வாழ்க்கை அல்லது வாழ்க்கை வரலாறு என்று பொருள். ‘புராணம்என்றால்வரலாறுஎன்று பொருள்எனவே, சீறாப்புராணம் என்பது ‘நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் ஆகும்
    • மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.

தேம்பாவணி

    • ஆசிரியர்: வீரமாமுனிவர்
    • மூன்று காண்டங்கள்
    • 36 படலங்கள்
    • 3615 விருத்தப் பாடல்கள்
    • கதையின் பாடுபொருள்:
      • தேம்பாவணி நூல் புனித யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் பெருமையைப் பாடுகிறது.
      • இது தமிழ் மரபுக்கு ஏற்ற ஒரு காப்பியமாக இருந்தாலும், கிறிஸ்தவக் கருத்துக்களை முன்வைக்கிறது

இயேசு காவியம்

    • இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.
    • இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.
  • பன்னிரு திருமுறைகள் பற்றி விவரி. (அல்லது) நாயன்மார்கள் குறித்து எழுதுக.
    • பக்தி இலக்கியம் பெரிதும் வளர்ந்த காலம் பல்லவர் காலம் ஆகும்.
    • தேவாரம்
      • தே+வாரம்=தேவாரம்
      • கடவுளுக்கு சூட்டப்படுகின்ற பாமாலை என்று பொருள்.
    • சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான்
    • சிவபெருமானின் ஐன்தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

பன்னிரு திருமுறைகள் பகுப்பு

    • சைவ சமயப் பெரியவர்கள் பாடிய பாடல்கள் திருமுறைகள் எனப்படும்.
    • 1 , 2, 3 திருமுறைகள்திருஞானசம்பந்தர் (சம்பந்தர் தேவாரம்)
    • 4, 5 , 6 திருமுறைகள்திருநாவுக்கரசர் (தேவாரம்)
    • 7ம் திருமுறைசுந்தரர் (சுந்தரர் தேவாரம்)
    • 8ம் திருமுறைமாணிக்கவாசகர்திருவாசகம் மற்றும் திருக்கோவையார்
    • ஒன்பதாம் திருமுறை – 9 பேர்
    • பத்தாம் திருமுறைதிருமூலர்
    • பதினொன்றாம் திருமுறைதிரு ஆலவாய் உடையார் முதலாக பன்னிருவர்
    • பன்னிரண்டாம் திருமுறைசேக்கிழார் (பெரியபுராணம்)
    • திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
      இவர் 11 திருமுறைகளை மட்டுமே தொகுத்தார்
      பெரியபுராணம் பின்னால் எழுதப்பட்டது.
    • திருமுறைகளைதொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன்
      முதலாம் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் எனப்படுகிறான்
    • முதல் ஏழு திருமுறைகள் மூவர் தேவாரம் எனப்படும்.
      இதற்கு மூவர் தமிழ் என்று வேறு பெயரும் உண்டு.
    • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்மூவர் முதலிகள்எனப்படுவர்.
    • சைவ சமயக் குரவர்கள் நால்வர்
    1. திருஞானசம்பந்தர்
    2. திருநாவுக்கரசர்
    3. சுந்தரர்
    4. மாணிக்கவாசகர்
    • பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.

திருஞானசம்பந்தர்

    • இயற்பெயர் : ஆளுடைய பிள்ளை
    • பெற்றோர்சிவபாத இருதயர்பகவதி அம்மையார்
    • பிறந்த ஊர்சீர்காழி 
    • இவர் பாடியவை1,2,3 திருமுறைகள்

சிறப்பு:

    • 23 இசைகளில் பாடியுள்ளார்.
    • யாழ்முறி இவருக்கு மட்டுமே உரியது.
    • திராவிட சிசுஆதிசங்கரரால்  போற்றப்பட்டார்.
    • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்சுந்தரர்

செய்த அற்புதங்கள்

    • மழவன் மகளுக்கு ஏற்பட்ட கடுமையான முயலகன் என்னும் நோயைப் போக்கினார்.
    • கூன் பாண்டியன் வெப்பு நோயைப் நீக்கினார்.
    • திருமறைக்காட்டுக் கோவிலின் கதவை தம் பாட்டால் மூடும்படி செய்தார்.
    • திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் செய்தார்.

திருநாவுக்கரசர்

    • இயற்பெயர்: மருள் நீக்கியார்
    • பெற்றோர் : புகழனார், மாதினியார்
    • அக்கா : திலகவதியார்
    • பிறந்த ஊர்: திருவாமூர்
    • இவர் பாடியவை4,5,6 திருமுறைகள்
    • சிறப்பு பெயர்கள்:
      • திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்
    • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர்தமக்கை திலகவதியார்
    • முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் .
    • கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறியவர்
    • திங்களூரில் பாம்பு தீண்டி இறந்தவரை உயிர்ப்பித்தார்.
    • திருமறைக்காட்டுக் கோவில் கதவை திறக்க செய்தார்.

சுந்தரர்

    • இயற்பெயர்: நம்பி ஆரூரார் / ஆரூரார்
    • பெற்றோரோர்: சடையனார்மாதினியார்
    • இவர் பாடியவை7 திருமுறை

சிறப்பு பெயர்கள் :

    • வன் தொண்டர்
    • தம்பிரான் தோழர்
    • திருத்தொண்டத்தொகை பாடியவர் சுந்தரர்

மாணிக்கவாசகர்

    • இயற்பெயர் தெரியவில்லை
    • பெற்றோர் : சம்புபாதசாரியார்சிவஞானவதி
    • இவர் பாடியவை8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

    • அருள் வாசகர்
    • மணிவாசகர்
    • அழுது அடியடைந்த அன்பர்
    • தென்னவன் பிரமராயர்
    • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

நூல்கள்

    • திருக்கோவையாரும் திருவாசகமும் இவர் பாடியவை

ஒன்பதாம் திருமுறை ( திருவிசைப்பா

    • 9 பேர் பாடியது

பத்தாம் திருமுறை ( திருமந்திரம்

    • திருமூலர்
    • திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை
    • திருமந்திரத்தின் வேறு பெயர்கள்தமிழ் மூவாயிரம்
    • முதல் சித்த நூல் யோக நெறியை கூறும் தமிழர் நூல்
      ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்நூலின் சிறப்பு

பதினொன்றாம் திருமுறை (பிரபந்த மாலை)

    • 12 பேர் பாடியுள்ளனர்
    • 40 நூல்கள் உள்ளன
    • திருவாலவாயுடையார் (1)
    • காரைக்காலம்மையார் (நான்கு நூல்கள்)
    • கல்லாடர் (1)
    • நக்கீரர் (10)
    • கபிலர் (3)
    • பரணர் (1)
    • அதிரா அடிகள் 1
    • இளம்பெருமான் அடிகள் (1)
    • ஐயடிகள் (1)
    • சேரமான் பெருமான் நாயனார் (3)
    • பட்டினத்தார் (5)
    • நம்பியாண்டார் நம்பி (ஒன்பது நூல்கள் )
    • தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் நம்பியாண்டார் நம்பி
      64 நாயன்மார்களை பற்றி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்

காரைக்கால் அம்மையார்

    • இயற்பெயர் புனிதவதியார் 
    • காரைக்கால்வணிக மரபினர்
    • சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி

12ம் திருமுறை (பெரியபுராணம்)

    • சேக்கிழார்
    • இயற்பெயர்: அருண்மொழித்தேவர்

சிறப்பு பெயர்கள் :

    • உத்தம சோழப் பல்லவன்
    • தொண்டர் சீர் பரவுவார்

நூல் அமைப்பு:

    • இரண்டு காண்டம் 13 சருக்கம் 4286 பாடல்கள்
    • உலகெலாம் என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்ட நூல்

 63 நாயன்மார்களில் மூவர் பெண்கள்

    • காரைக்கால்
    • அம்மையார்
    • இசைஞானியார்
    • மங்கையர்க்கரசி
  • நாலாயிர திவ்ய பிரபந்தம் குறித்து எழுதுக.

நாலாயிர திவ்ய பிரபந்தம்

    • ஆழ்வார்களின் பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றனதிராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
    • ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில்அன்பில்அருளில்தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம்
    • முதலாழ்வார்கள்:
      பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

ஆழ்வார்கள்பாசுரங்களின் எண்ணிக்கை

1.பொய்கை ஆழ்வார்– 100

2.பூதத்தாழ்வார்– 100

3.பேயாழ்வார்– 100

4.திருமழிசை ஆழ்வார்– 216

5.மதுரகவி ஆழ்வார்– 11

6.நம்மாழ்வார்– 1296

7.குலசேகர ஆழ்வார்-105

8.பெரியாழ்வார்– 473

9.ஆண்டாள்– 173

10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்– 55

11.திருப்பாணாழ்வார்– 10

12.திருமங்கை ஆழ்வார்– 1137

பொய்கையாழ்வார்

    • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்பொய்கையில் அவதரித்தவர்,
    • காலம் : 7ம்நூற்றாண்டு
    • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பூதத்தாழ்வார்

    • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
    • காலம் :  7ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பேயாழ்வார்

    • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
    • காலம்: ஏழாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

திருமழிசையாழ்வார்

    • பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
    • காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
    • பாடல்கள் : 216

பெரியாழ்வார்

    • பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
    • காலம்: 9ம் நூற்றாண்டு 
    • எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
    • பாடிய பாடல் : 473

ஆண்டாள்

    • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
    • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
    • காலம் : 9ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
    • பாடிய பாடல் : 173

தொண்டரடி பொடியாழ்வார்

    • இயற்பெயர் : விப்ர நாராயணன்
    • பிறந்த ஊர் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
    • காலம் : எட்டாம் நூற்றாண்டு 
    • எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
    • பாடிய பாடல் : 55

திருமங்கையாழ்வார்

    • பிறந்த இடம் : திருக்குறையலூர்
    • காலம் : எட்டாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,   திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கைபெரிய திருமடல்,சிறிய திருமடல்.
    • பாடிய பாடல் : 1253 

திருப்பாணாழ்வார்

    • பிறந்த ஊர் : உறையூர் (திருச்சி)
    • காலம் : எட்டாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : அமலனாதிபிரான்
    • பாடிய பாடல் : 10

குலசேகர ஆழ்வார்

    • பிறந்த இடம் : திருவஞ்சைக்களம்
    • காலம் : எட்டாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
    • பாடிய பாடல்  : 105

நம்மாழ்வார்

    • பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி
    • பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
    • எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
    • பாடல்கள் : 1296

மதுரகவி ஆழ்வார்

    • பிறந்த ஊர் : திருக்கோளூர்
    • காலம் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
    • எழுதிய நூல் : கண்ணி நுண் சிறுத்தாம்பு
    • பாடல்கள் : 96
  • பகுத்தறிவு இலக்கியம் குறித்து எழுதுக.
    • பகுத்தறிவு என்பதற்கு ஒன்றினைப் பகுத்து அறிதல் என்று பொருள்.
    • சமூகத்தில் நிகழும் நிகழ்வினை மனிதன் ஆராய்ந்து தெளிவுபெற வேண்டும் என்பதே பகுத்தறிவு இலக்கியங்களின் நோக்கம் ஆகும்.
    • கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த கிறித்தவ பாதிரிமார்கள் கல்வி கற்றல், கணவன் இறந்த பின்பு கைம்பெண்களை மறுதிருமணம் செய்ய ஊக்குவித்தல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல் எனப் பல்வேறு கருத்துக்களைக் கூறி மக்களை நல்வழிப்படுத்தினர்.

சுயமரியாதைக் இயக்கம்

    • பெரியார் 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்கினார்.
    • சமமான கல்வி, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நீதி, பொருளாதார பொதுவுடைமை, மூடபழக்கத்தை ஒழித்தல் போன்றவை சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களாக அமைந்தன.

சித்தர் இலக்கியம்

    • மனிதர்களிடம் காணப்படாத வியக்கத்தக்க ஆற்றல் கொண்டவர்களைச் சித்தர்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் மெய்ஞ்ஞானம் நிரம்பியவர்கள்.   கொண்டவை.
    • சித்தர்கள் பலர் இருப்பினும் வழக்கில் பதினெண்சித்தர்கள் என்று கூறப்படும் மரபு காணப்படுகின்றது.

1.அகத்தியர் 2.இடைக்காடர் 3.உரோமமுனி  4.கருவூரார்   5.காகபுண்டர் 6.கொங்கணர் 7.கோரக்கர் 8.சட்டைமுனி 9.மச்சமுனி 10.போகர் 11.திருமூலர் 12.நந்தி 13. புண்ணாக்கீசர்   14. தேரையர் 15. யூகிமுனி 16.  காலாங்கி நாதர் 17.புலத்தியர் 18. தன்வந்திரி

திருமூலர்

    • இவர் சித்தர் தத்துவத்தின் மூலமுதல்வர்.
    • இவர் பாடிய திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
    • 3000 பாடல்கள் இயற்றினார்.
    • இத்திருமந்திரம் நிலையாமை உண்மைகளை வலியுறுத்துகின்றதுஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்பன போன்ற புகழ் பெற்ற தொடர்கள் இந்நூலில் இடம்பெற்றவையே.

இராவண காவியம்

    • இயற்றியவர்: புலவர் குழந்தை
    • இக்காப்பியம் ஐந்து காண்டங்களால் ஆனது. அவை1) தமிழகக் காண்டம், 2) இலங்கைக் காண்டம், 3) விந்தக் காண்டம், 4) பழிபுரி காண்டம், 5) இலங்கைக் காண்டம்.
    • இக்காப்பியக் காண்டம் ஒவ்வொன்றும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நூலில் அமைந்துள்ள மொத்தப் படலங்கள் ஐம்பத்தேழாகும். பாயிரம் உட்பட ஐந்து காண்டத்திலும் உள்ள மொத்தப் பாக்கள் 3100.
    • புலவர் குழந்தை தாம் படைத்த இக்காவியத்தைத் தமிழர்க்குக் காணிக்கையாக்கியுள்ளார். தமிழர்கள் தம் பண்பாட்டுச் சிறப்பை அறிந்து வாழ்வதற்காக இராவணனின் பெருமை படைப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்

    • புலவர் குழந்தை ஓலவலசுப் பண்ணைக்காரர்குடியில் 1-7-1906இல் பிறந்தார்.
    • முத்துச்சாமிக் கவுண்டர், சின்னம்மையார் என்பவர்களின் ஒரே மகனாவார்.
    • இவர் திண்ணைப் பள்ளியில் கற்ற காலம் மொத்தமாக எட்டு மாதங்களேயாம்.
    • இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர்.
    • இசைப் பாடல்களே இவர் முதன் முதலாகப் பாடிய பாடல்கள்.
    • ஆசிரியர் உதவியின்றித் தாமே முயன்று தமிழ் கற்றுச் சீரிய புலமை எய்தினார்
    • 1934இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் புலவர் பட்டம் பெற்றார்.
    • ஆசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பிற படைப்புகள்

    • இராவண காவியத்தைத் தவிர, புலவர் குழந்தை மரபுவழி யாப்பில் அமைந்த அரசியலரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல் ஆகியவற்றைப் படைத்துள்ளார்
    • திருக்குறள், தொல்காப்பியப் பொருளதிகாரம், நீதிக்களஞ்சியம் ஆகியவை அவரால் விளக்கவுரை எழுதப்பட்ட நூல்களாகும்.

முதல் பருவம் – அலகு – 1 பாடக்குறிப்புகள்

அலகு – 1 –  தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு அறிமுகம்

  • தமிழ் இலக்கிய வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

  • அவ்வாண்டுகளில் தோன்றிய இலக்கியங்கள் தமிழ்மொழியை வளப்படுத்தின. ஒரு மொழிக்கு ஒழுங்கையும் சீர்மையையும் தருவதுஇலக்கணம்ஆகும்

இலக்கிய மின்றி இலக்கணம் இன்றே 

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே 

எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல 

இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்

என்னும் அகத்திய நூற்பா இலக்கிய, இலக்கணம் பற்றி குறிப்பிடுகிறது.

தொல்காப்பியம்

  • பழந்தமிழ் நூல்களுள் தொன்மையும் முதன்மையும் உடையது தொல்காப்பியம்

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

 முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

 புலந்தொகுத் தோனே

என்கிறார் பனம்பாரனார்.

  • எழுதியோர் பெயரால் நூல் பெயர் அமையும் மரபு உண்டு. .கா..

எழுதியவர்

நூல் பெயர்

வாய்ப்பியன்

வாய்ப்பியம்

பனம்பாரன்

பனம்பாரம்

நற்றத்தன்

நற்றத்தம்

காக்கைப்பாடினி

காக்கைப்பாடினியம்

 

  • இது போன்று தொல்காப்பியர் எழுதியமையால் தொல்காப்பியம் எனப் பெயர் பெற்றது.

தொல்காப்பியம் அமைப்பு 

  • தொல்காப்பியம் எழுத்து, சொல். பொருள் என்ற அதிகாரங்களையும், 9 இயல்களாக மொத்தம் 27 இயல்களை உடை 1610 நூற்பாக்களால் ஆனது.

எழுத்ததிகாரம் 

  • எழுத்ததிகாரம், நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உறுப்பியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என 9 இயல்களைக் கொண்டது.

  • தமிழ்மொழியின் எழுத்துக்களையும், சார்பெழுத்துக்களையும் பற்றி குறிப்பிடுகின்றது

  • மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களையும், மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களையும், இவ்விரு எழுத்துக்களும் பிறக்கும் முறையினையும் பற்றிய செய்திகளைத் தருகிறது.

சொல்லதிகாரம் 

  • சொல்லதிகாரம், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என 9 இயல்களைக் கொண்டது.

  • திணை, பால், எண். முதலியனவும், வேற்றுமை வகைகளும், சொல்லின் முதல், ஈறு, இடை சந்தி, சாரியை, விகாரம் என்னும் 6 உறுப்புகளும், பெயர், வினை எச்சங்களும், இடை உரிச்சொற்களும் பற்றி குறிப்பிடுகிறது.

  • இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொற்களும் இடம்பெறுகின்றன

  • ஆறுதொகை வகைகளும், 10 வகை எச்சங்களும், சொல்மரபுகளும், அவைகளை ஆளும் முறைகளும் அமைந்துள்ளன.

  • வடசொற்கள் ஏற்றுக்கொள்ளும் முறையை

வடசொற்கிளவி வடவெழுத்து ஓரீஇ 

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

என்கிறார் தொல்காப்பியர்

பொருளதிகாரம் 

  • பொருளதிகாரம், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என 9 இயல்களைக் கொண்டது.

  • இல்வாழ்க்கைப் பற்றிய செய்திகள் அகப்பொருள் என்றும், மற்ற அனைத்தும் புறப்பொருள் என்றும் அழைக்கப்படுகின்றன

  • ஆணும் பெண்ணும் இணைந்து அன்பால் சேர்ந்து வாழும் வாழ்க்கைஅகவாழ்க்கைஆகும்

  • வீரம் விளங்க கொடையில் சிறந்து புகழ்பெற்று வாழும் வாழ்க்கைபுறவாழ்க்கைஆகும்.

  • குறிஞ்சி .முல்லை மருதம், நெய்தல்,பாலை கைக்கிளை, பெருந்திணை என்னும் ஏழும் அகத்திணைக்கு உரிய ஒழுக்கங்கள் ஆகும்

  • குறிஞ்சி .முல்லை மருதம், நெய்தல், பாலை ஐந்தும்அன்பின் ஐந்திணைஎனப்படும்

  • கைக்கிளை’  என்பதுஒரு தலைக்காமம்ஆகும்

  • பெருந்திணைஎன்பதுபொருந்தாக் காமம்ஆகும்.

  • திருமணத்திற்கு முன்னர் தலைவனும், தலைவியும் பிறர் அறியாமல் சந்தித்து அன்பை வளர்த்துக் கொள்வதுகளவுஆகும்.

  • மணம் நிகழ்ந்தபின் அவர்கள் ஊடியும் கூடியும் வாழும் வாழ்க்கைகற்புஆகும்.

  • தொல்காப்பியம், 1 முதற்பொருள் 2. கருப்பொருள், 3. உரிப்பொருள் என முப்பொருள்பற்றி பேசுகிறது

    • நிலமும் பொழுதும்முதற்பொருள்ஆகும்

    • தெய்வம்,உணவு,விலங்கு, மரம், பறை,தொழில், யாழ் என்பனகருப்பொருள்கள்ஆகும்

    • புணர்ச்சி, பிரிவு, இருத்தல், இரங்கல், ஊடல் என்பன முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற திணைக்குரியஉரிப்பொருள்கள்ஆகும்.

உரை எழுதியோர் 

  • தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் தெய்வச்சிலையார், கல்லாடர், பேராசிரியர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

இறையனார் களவியல் 

  • களவு, கற்பின் இலக்கணத்தை உரைக்கும் இறையனார் களவியல்  நூலில் 33 நூற்பாக்களும், கற்பு பிரிவில் 27 நூற்பாக்களுமாக மொத்தம் 60 நூற்பாக்கள் உள்ளன

  • இந்நூற்பாக்களுக்கான உரை நக்கீரரால் இயற்றப்பட்டு, ‘இறையனார் களவியல் உரைஎனப் பெயர் பெற்றது.

இறையனார் களவியல் உரை

  • நக்கீரர்கீரங்கொற்றனார்தேனூர்கிழார்இவ்வாறு வாய்மொழியாக எட்டு தலைமுறைகள் கடந்து முசிறி நீலகண்டரால் எழுதப்பட்டது என்ற செய்தி உள்ளது.

  • நான்கு வகை உரைகருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை

  • செவிலியை இந்நூல் கோடாய்(பெற்றுக் கொள்ளும் தாய்) என குறிப்பிடப்படுகிறது.

  • முச்சங்கங்கள் குறித்த செய்திகளை முதலில் குறிப்பிடும் நூல் இறையனார் களவியல் உரை ஆகும்.

 

சங்கம்

முதல் சங்கம்

இடைச் சங்கம்

கடைச் சங்கம்

இடம்

தென் மதுரை

கபாடபுரம்

வட மதுரை

காலம்

4440

3700

1850

புரந்த அரசர்

காய்சினவழுதி முதலாக கடுங்கோன் ஈறாக 89 பேர்

வெண்டேர் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பேர்

முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 பேர்

சங்க உறுப்பினர்

549

59

49

புலவர்கள்

4449, அகத்தியர், சிவபெருமான், முருகன், முரஞ்சியூர் முடிநாகராயர்

3700, அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழி, வெள்ளூர் காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை

449, சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன்,

மருதனிளநாகனார், நக்கீரனார்

நூல்கள்

அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு

அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம், கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, அகவல்

அகத்தியம், தொல்காப்பியம்,

நெடுந்தொகை,குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, குற்றிசை, பேரிசை

 

நம்பியகப் பொருள்

  • கி.பி.13ஆம் நூற்றாண்டில் தோன்றியநம்பி அகப்பொருள்என்ற நூல் அகப்பொருள் இலக்கணத்துக்கு என ஒரு தனிப்பெரும் நூல் ஆகும்.

  • எழுதியவர் : நாற்கவிராச நம்பி

நாற்கவிராச நம்பி 

  • நம்பியகப்பொருளின் ஆசிரியர் நாற்கவிராச நம்பி

  • இயற்பெயர் நம்பி 

  • ஊர் புளிங்குடி 

  • சமண சமயத்தை சார்ந்தவர்

  • தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர்

  • ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி. வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் பெற்றவர். அதனால் இவர். “நாற்கவிராசன் என அழைக்கப்பட்டார்

  • நம்பி தம் அகப்பொருள் நூலுக்கு அகப்பொருள் விளக்கம் என்று பெயரிட்டும், இந்நூலுக்கு உரையும் எழுதினார்

  • தம் நூலைப் பாண்டியன் குலசேகரன் அவையில் அரங்கேற்றினார்.

அகச்செய்திகள்

  • ஓர் ஆணுக்கும். ஒரு பெண்ணும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அமைவதுஅகப்பொருள் இலக்கணம்ஆகும்

நூலின் அமைப்பு 

  • நாற்கவிராச நம்பியால் இயற்றப்பெற்ற அகப்பொருள் விளக்கம் 

  1. அகத்திணையியல்(116)

  2. களவியல்(54)

  3. வரைவியல்(29)

  4. கற்பியல்(10)

  5. ஒழிபியல்(43) 

என்ற ஐந்து பகுதிகளை உள்ளடக்கியது. 252 நூற்பாக்களைக் கொண்டது ஆகும்.

  • அகத்திணையியல் 

  • அகத்திணையியலில் ஐந்திணைப்பாகுபாடுகள். முதல் கரு. உரிப்பொருள் பற்றியச் செய்திகள் உள்ளன

  • களவியல் 

  • களவின் இலக்கணங்களாக எண்வகைத் திருமணம் பற்றியும். கைக்கிளையின் பாகுபாடுகளாக காட்சி. ஐயம், துணிவு. குறிப்பறிதல் பற்றியச் செய்திகளும் உள்ளன.

  • வரையியல்

  • வரைவியலில் திருமணம் செய்தல், அறத்தொடு நிற்றல், தலைவி, தோழி, செவிலி அறத்தோடு நிற்கும் திறம் பற்றி கூறுகிறது

  • கற்பியல் 

  • கற்பியலில் இல்லறம் நடத்தும் கிழவன், கிழத்தியின் பாங்கும். கற்பின் சிறப்பும், கற்பிற்குரிய இலக்கணத்தை பற்றியும் பேசுகிறது. இல்வாழ்க்கையில் பிரிவானது,

  1. பரத்தையிற் பிரிவு

  2. ஓதல் பிரிவு

  3. காவல் பிரிவு

  4. தூது பிரிவு

  5. துணைவயிற் பிரிவு

  6. பொருள்வயிற் பிரிவு

என 6 வகைப்படும்.

  • ஒழிபியல் 

  • ஒழிபியலில் அகப்பாட்டு உறுப்புகள் 12 ஆகும். அவை, திணை, கைக்கோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை ஆகும்

 

புறப்பொருள் வெண்பாமாலை

 

  • பொருள் இலக்கணத்தின் ஒரு கூறாகிய புறப்பொருள் பற்றிப் பேசுவதால் புறப்பொருள் எனப் பெயர் பெற்றது

  • இயற்றியவர்ஐயனாரிதனார்

  • மாலை என்பதன் பொருள் வரிசை ஆகும். பூக்களைக் கொண்டு தொடர்ச்சி மாறாமல் ஓர் ஒழுங்கு முறையில் வரிசையாகத் தொடுப்பதால் பூமாலையாக உருப்பெற்றது. அதுபோல, வெண்பா, யாப்பு என்ற பூவைக் கொண்டு போர் பற்றிய ஒழுகலாறுகளைத் தொடர்ச்சி மாறாத வண்ணம் ஓர் ஒழுங்குறத் தொடுக்கப்பட்டமை கருதி மாலை என்ற சொல்புறப்பொருள் வெண்பாஎன்பதன் பின் வைக்கப்பட்டு உள்ளது. ஆதலால்புறப்பொருள் வெண்பா மாலைஎனப் பெயர் பெற்றது.

  • தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் புறப்பொருள் வெண்பாமாலையை வழிநூல்என்கிறார்

பன்னிரு திணைகள் 

  • பொதுவாழ்வில் காணப்படும் வீரம், கல்வி, கொடை, புகழ் பற்றியும், நிலையாமை பற்றியும் புறப்பாடல்களில் இடம்பெறும். வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனப் பன்னிரெண்டு திணையாகப்புறப்பொருள் வெண்பாமாலைஅமைந்து உள்ளது.

  1. வெட்சி : ஆக்களைக் கவர்தல்

  • பண்டையக் காலத்தில் பகை நாட்டின்மீது போர் தொடுக்க விரும்பும் அரசன், பகை நாட்டுப் பசுக்களைப் போரில் இறந்துப் போகாமல் காக்கத் தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வரச் செய்வான். அவ்வாறு பசுக்களைக் கவர்ந்து வரச் செல்வோர்  ‘வெட்சிப் பூவைச்‘  சூடிச் செல்வர்.

2.கரந்தைத் திணை : கவர்ந்த பசுக்களைப் பகைவரிடம் இருந்து மீட்பது

  • பசுக்கூட்டத்தைக் கவர்ந்து செல்வோரிடமிருந்து பசுக்கூட்டதை மீட்பது உண்டு. அப்படி மீட்போர்கரந்தைப் பூவைஅணிந்து செல்வர்.

3.வஞ்சித் திணை: மண்ணாசை கொண்டு, பகை வேந்தனது நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில்வஞ்சிப்பூச் சூடிச்செல்வது வழக்கம் ஆகும்.

4.காஞ்சித் திணை : மண்ணாசை கொண்டு போர்தொடுத்த பகைவர் படையைத் தன்னாட்டு எல்லைக்குள் புகாதவாறுகாஞ்சிப் பூவைச் சூடி நின்று தடுப்பது ஆகும்.

  1. நொச்சித் திணை : மதிலை வளைத்துக் கொண்ட பகைவர்களை உள்ளே புகாதவாறு தடுத்துக் காக்கநொச்சிப்பூச்அணிவர்.

  2. உழிஞைத் திணை : மாற்றான் மதிலை முற்றுகையிடுவது உழிஞைத் திணை ஆகும். அத்தகு செயலில் ஈடுபடுவோர்உழிஞைப்பூஅணிவர்.

7.தும்பைத் திணை : வேந்தர் இருவர் மாறுபாடு கொண்டு எதிர் நின்று போரிடுவது தும்பைத் திணை ஆகும். அதற்கு அடையாளமாகத்தும்பைப் பூஅணிவர்.

8.வாகைத் திணை : போரில் வெற்றி பெற்ற அரசன் சூடுவதுவாகைப்பூஆகும். வாகைப் பூச்சூடி ஆரவாரிக்கும் நிலைவாகைத் திணைஆகும்.

9.பாடாண் திணை : பாடப்பெறும் அரசனுடைய வீரம், கொடை, புகழ் முதலிய அரும்பண்புகளைப் போற்றிப் பாடுவது ஆகும். பாடாண்திணை = பாடு ஆண் + திணை எனப்பிரியும். பாடப்படும் ஆண் மகனின் ஒழுகலாறு எனப் பொருள்படும்.

10.பொதுவியல் : புறத்திணைகளுக்கு எல்லாம் பொதுவாக கூறும் செய்திகள்பொதுவியல்ஆகும்.

11.கைக்கிளை : தலைமகன், தலைமகள் என்ற இருவரிடத்தில் ஒருவரிடம் மட்டும் தோன்றுகின்ற ஒரு தலைக்காமமே கைக்கிளைஆகும்.

12.பெருந்திணை : பெருந்திணை என்பது பொருந்தாக் காதலை குறிக்கும். இஃது இருபாலாரிடத்தும் தோன்றும்.

நன்னூல்

 

  • பவணந்தி முனிவரால் நன்னூல் இயற்றப்பட்டது

  • இந்நூல் எழுத்து சொல் ஆகிய இரண்டு இலக்கணங்களையும் கூறுகிறது.

  •  ‘அருங்கலை விநோதன்என்ற பட்டப்பெயர் பெற்ற சீயகங்கன் என்ற அரசனின் வேண்டுகோளின்படிநன்னூல்இயற்றப்பட்டது

  • இந்நூலுக்கு மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப் பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுக நாவலர் ஆகியோர் உரை எழுதி உள்ளனர்.

 

நன்னூலின் அமைப்பு

 

  • நன்னூல் பாயிரம் 55 சூத்திரங்களை உடையது

  • எழுத்து அதிகாரம் 5 இயல்களும், 202 நூற்பாக்களும் உடையது.

  • சொல் அதிகாரம் 5 இயல்களும், 205 நூற்பாக்களும் உடையது.

எழுத்து இலக்கணம்

  • எழுத்திலக்கணத்தின் பகுதி

  • எழுத்து வகை :இரண்டு ஆகும் அவை 1. முதலொழுத்து 2. சார்பெழுத்து

  • முதலெழுத்து வகை : முப்பது

  • சார்பெழுத்து வகை : பத்து

  • சார்பெழுத்து விரி: உயிர்மெய் (216), முற்றாய்தம் (8), உயிரளவு (21) ஒற்றளவு (42), குற்றியலிகரம் (37), குற்றியலுகரம் (36). ஐகாரக் குறுக்கம் (3). ஒளகாரக்குறுக்கம் (1). மகரக் குறுக்கம் (3), ஆய்தம் (2).

  • பெயர் வகை: நான்கு ஆகும். அவை 1. இடுகுறிப் பொதுப்பெயர் 2. இடுகுறிச் சிறப்பு பெயர் 3. காரணப் பெயர் 4. காரணச் சிறப்புப் பெயர்

  • குற்றெழுத்து : ஐந்து ஆகும். அவை , , , , ஆகும்.

  • நெட்டெழுத்து : ஏழு ஆகும். அவை , , , , , ,

  • சுட்டெழுத்து மூன்று ஆகும். அவை . .

  • சுட்டெழுத்து வகை இரண்டு ஆகும். அவை 1 அகச்சுட்டு 2. புறச்சுட்டு

  • பதம் இரண்டு ஆகும். அவை 1. பகுபதம், பகாாபதம்

  • ஓரெழுத்தொரு மொழி 42

  • புணர்ச்சி இரண்டு ஆகும். 1. இயல்புப் புணர்ச்சி, 2. விகாரப் புணர்ச்சி

  • வேற்றுமை உருபு : .ஆல்,கு,இன், அது, கண்

சொல் இலக்கணம் 

  • மொழி வகை: மூன்று ஆகும். அவை

  1. ஒரு மொழி

  2. தனிமொழி

  3. தொடர்மொழி

  • திணை இரண்டு ஆகும்.

  1. உயர்திணை 2. அஃறிணை

  • பால் ஐந்து ஆகும். அவை,

  1. ஆண்பால், 2.பெண்பால், 3. பலர் பால், 4. ஒன்றன் பால், 5. பலவின் பால்

  • இடம் மூன்று ஆகும். அவை

  1. தன்மை

  1. முன்னிலை

  2. படர்க்கை

  • சொல்வகை நான்கு ஆகும். அவை,

  1. இயற்சொல்

  2. திரிசொல் 

  3. திசைக்சொல்

  4. வடசொல்

  • பொருள்கோள் எட்டு ஆகும். அவை.

  1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்

  2. மொழிமாற்று பொருள்கள்

  3. நிரனிறை பொருள்கோள்

  4. விற்பூண் பொருள்கோள்

  1. தாப்பிசை பொருள்கோள்

  2. அளைமறியாப்பு பொருள்கோள்

  3. கொண்டு கூட்டு பொருள்கோள்

  4. அடிமறிமாற்று பொருள்கோள்

தண்டியலங்காரம்

  • தொல்காப்பியத்தை அடுத்து அணி இலக்கணம் பயிலப் பெரிதும் பயன்படுவதுதண்டியலங்காரம்’. இந்நூல் தொல்காப்பியத்தையும், வடமொழி நூலான காவியதரிசனத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது

  • இந்நூலை இயற்றியவர்தண்டிஆவார்

  • 35 அணிகளை உடையது.

  1. தன்மையணி : ஒரு பொருளின் இயல்புத் தன்மையை நேரில் கண்டாற்போல உள்ளப விளக்குவதுதன்மையணி’.

  2. உவமையணி : ஒருவன் தான் கூறக் கருதியப் பொருளை அதனோடு ஒப்புயை உடைய மற்றொரு பொருளோடு இயைபுபடுத்திக் கூறுவதுஉவமையணி

  3. உருவகயணி : உவமைக்கும் பொருளுக்கும் வேற்றுமையின்றி இரண்டையும் ஒன்றாகக் கூறுவதுஉருவக அணி’.

  4. தீவக அணி : தீவகம் என்பது விளக்கு ஆகும். ஓரிடத்தில் வைக்கப்பட்ட விளக்கு பல இடங்களிலும் உள்ள பொருளை விளக்க காட்டும். அதுபோல ஓரிடத்தில் நின்ற சொல் பல இடங்களிலும் சென்று பொருளை விளக்குவதுதீவக அணி’.

  5. பின்வரு நிலையணி : முன்னர் வந்த சொல்லாவது, பொருளாவது பல இடத்தும் வருமாயின் அதுபின்வருநிலை அணி’.

  6. முன்னவிலக்கணி : கவிஞன் ஒரு பொருளைக் குறிப்பால் மறுத்து மேன்மை தோன்றச் சொல்லுவதுமுன்னவிலக்கணி’.

  7. வேற்றுப் பொருள் வைப்பணி : கவிஞன் ஒரு பொருளைச் சிறப்பிக்கக் கருதுவான் அதற்கு உலகமறிந்த வலிவுடைய பிறிதொரு பொருளை எடுத்துக்காட்டி முடிப்பான் இதுவேவேற்றுப் பொருள் வைப்பு அணி

  8. வேற்றுமையணி : கவிஞன் ஒப்புமை உடைய இரு பொருள்களை எடுத்துக் கொண்டு முன்னர் அவற்றுக்குரிய ஒப்புமையைக் கூறுவான். பின்னர் வேற்றுமையையும் கூறி வேறுபடுத்துவதுவேற்றுமை அணி’.

  9. விபாவனை அணி : கவிஞன் ஒன்றன் வினையைக் குறிப்பிடுகின்ற பொழுது அதற்குப் பலரால் அறியப்படும் காரணத்தைக் கூறாமல் பிறிதொரு காரணத்தைக் குறிப்பாகப் புலப்படும்படி இயல்பாக உரைப்பதுவிபாவனை அணி’.

  10. ஒட்டணி : கவிஞன் தான் கூறக் கருதிய ஒன்றை நேரே கூறாமல் விடுத்து அதனை ஒப்புமை உடைய பொருளோடு ஒட்டிக் கூறுவான் அதன் வாயிலாகச் சொல்லக் கருதியதைக் குறிப்பாக உணர்த்துவான். ஒட்டிக் கூறுவதால்ஒட்டணிஎன பெயர் பெற்றது.

  11. அதிசய அணி : கவிஞன் தான் கூறக் கருதிய ஒருபொருளின் உண்மைத் தன்மையினை உள்ளபடி கூறாமல் உயர்த்திக் கூறுதலை விரும்புவான். அக்கவிஞனின் கூற்றானது சான்றோருக்கும் வியப்பைத் தருவதாய் உலக இயல்புக்கு மாறானதாய் அமைவதேஅதிசய அணி’.

  12. தற்குறிப்பேற்ற அணி : இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒன்றின் மேல் கவிஞன் தான் கூறக் கருதிய பொருளை ஏற்றிச் சுவைபட உரைப்பதுதற்குறிப்பேற்ற அணி’.

  13. ஏதுவணி : ஒரு பொருளில் தோன்றும் தன்மைக்கு இதனாலேயே இது நிகழ்ந்தது எனக் காரணத்தை மிகுந்துச் சொல்லுவதுஏது அணி’.

  14. நுட்பவணி : பிறருடைய கருத்தை அறிந்து. அதற்குரிய மறுமொழியை சொல்லாமல் வெளிப்படுத்தாமல் குறிப்பாலோ செயலாலோ அரிதா உய்த்துணரும்படி புலப்படுத்துவதுநுட்ப அணி’.

  15. இலேசவணி : ஒருவர் தன்னிடத்தில் வெளிப்படும் மெய்ப்பாடு உணர்விற்குரிய மெய்யான காரணத்தை மறைத்து அது வேறொன்றால் நிகழ்ந்ததாக கூறுவதுஇலேச அணி’.

  16. நிரல்நிறையணி : கவிஞர் தம் செய்யுள்களில் முதலில் சொற்பொருள்களை வரிசைப்படுத்துவர். அவற்றோடு தொடர்புடையவற்றைப் பின்னர் அதே முறையில் பொருள்படுமாறு வரிசைப்படுத்திப் பாடுவர். இவ்வாறு அமைவதேநிரல்நிறை அணிஆகும்.

  17. ஆர்வமொழி அணி : உள்ளத்தின்கண் நிகழும் ஆர்வத்தின் காரணமாக நிகழ்ச்சிகளை மிகுதிபடுத்திக் கூறுவதுஆர்வமொழி அணி’.

18.சுவையணி : உள்ளத்தின்னகண் நிகழும் தன்மைகளைப் பிறர் அறியும் வகையில் உடலால் புலப்படுத்திக் காட்டுவது மெய்ப்பாடு ஆகும். அவை நகை அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி என்பலை இவை எட்டும் சுவை என்றும் கூறப்படும். இச்சுவையினை விளக்குவதேசுவையணிஆகும்.

19.தன்மேம்பாட்டுரையணி : ஒருவனுடைய ஆற்றலைப் பிறர் அறியார். அவ்இடங்களில் தன்னுடைய ஆற்றலைத் தானே எடுத்துக் கூறுவர். இவ்வாறு எடுத்து மொழிவதேதன்மேம்பாட்டுரை அணி’.

20.பரியாயவணி : கவிஞன் தான் கூறக் கருதிய ஒன்றனை அவ்விடத்துக் கூறுதல் தகாது எனக் கருதிப் பிறிதொன்றால் அப்பொருளை விளக்குவதுபரியாயவணி

  1. சமாயிதவணி : தன்னால் முயலப்பட்ட தொழல் ஒன்று. அதற்குரிய பயனைத் தரவில்லை. அப்பயன் வேறொன்றினால் தரப்பட்டதாக முடிக்கப்படுவதுசமாயிதவணி’.

  2. உதாத்தவணி : ஒருவருடைய பொருள் செல்வத்தையும், உள்ளத்தின் செல்வத்தையும் வியக்கத்தக்கதாக உயர்த்திக் கூறுவர். அதுவேஉதாத்தம் அணி’.

  3. அவநுதியணி : யாதானும் ஒரு பொருளின் உண்மைத் தன்மையை மறுத்துப் பிறிதொரு தன்மையை அதன்கண் ஏற்றி உரைப்பதுஅவநுதி அணி’.

  4. சிலேடையணி : செய்யுளில் இடம்பெறும் ஒரு சொல்லோ தொடரோ தனித்து நின்றும் பிரிந்து நின்றும் பல பொருள்களைத் தரும். அவ்வாறு பல பொருள்பட அமைவதுசிலேடை அணி’.

  5. விசேடவணி : ஒரு பொருளுக்குக் குணம். தொழில், சாதி. உறுப்புப் போன்றவற்றால் ஏதேனும் ஒரு குறைபாடு தோன்றும். அக்குறைபாடு காரணமாக அப்பொருளுக்கு மேம்பாடு தோன்ற உரைப்பதுவிசேட அணி’.

  6. ஒப்புமைக் கூட்டவணி : கவிஞன் தான் கருதிய பொருளைச் சொல்லுமிடத்து அப்பொருளின் குணத்தைவிட மிகுந்த குணமுடைய வேறுபொருள்களை ஒருங்கே சொல்லுவதுஒப்புமைக் கூட்டவணி

  7. விரோதவணி : இவ்வுலகத்தில் ஒன்றற்கொன்று மாறுபட்ட சொற்களும் உண்டு. பொருள்களும் உண்டு. அவற்றைக் கொண்டு மாறுபாட்டுத் தன்மையின் விளைவு தோன்றக் கூறுவதுவிரோத அணி’.

  8. மாறுபடு புகழ்நிலையணி : கவிஞன் தான் பழிக்கக் கருதிய பொருளைக் கூறாது மற்றொரு பொருளைப் புகழ்ந்து கூறுவான். இதனைமாறுபடு புகழ்நிலை அணி”.

  9. புகழாப் புகழ்ச்சியணி : ஒன்றைப் பழித்துக் கூறுவது போன்ற தன்மையால் அப்பொருளுக்கு மேம்பாடு தோன்றும் படியாக உரைப்பதுபுகழாப்புகழ்ச்சி அணி’.

  10. நிதரிசனவணி : ஒன்றன் காரணமாகப் பொருளிடத்து ஒரு நிகழ்வு தோன்றும். அந்நிகழ்வு பிறிதொன்றற்கு நன்மையும் பயக்கும். தீமையும் பயக்கும். இவ்வாறு இரு நிலையில் காட்டுவதுநிதரிசன அணி’.

  11. புணர்நிலையணி : செயலாலும் பண்பாலும் ஒத்த இரு பொருள்கள் உள்ளன அப்பொருள்களுக்கு ஒரு வினையையோ, பண்பையோ பொருந்தும் வண்ணம் கூட்டிச் சொல்வதுபுணர்நிலை அணி’. 

  12. பரிவருத்தனையணி : ஒரு பொருளைக் கொடுத்து வேறொரு பொருளைப் பெற்றுக கொள்வதாகச் சொல்வதுபரிவருத்தனை அணி’.

  13. வாழ்த்தணி: இவருக்கு இன்னது பொருந்து என்று கவிஞன் தாம் நினைத்தை விரித்துச் சொல்லுவதுவாழ்த்தணி’.

  14. சங்கீரணவணி : தன்மை முதலாக வாழ்த்து ஈறாகக் கூறப்பட்ட பொருளணிகள் 33 ஆகும். அவற்றுள் இரண்டுக்கு மேற்பட பல அணிகள் தம்முள் கலந்துவர உரைப்பதுசங்கீரண அணிஆகும்.

  15. பாவிகவணி : ஒரு பாடலாலோ பல பாடல்களாலோ ஆகிய செய்யுள் வகைகள் அடங்காமல் தொடர்நிலையாகப் பாடப்பெறுவது காப்பிய வகை ஆகும். அவ்வகையுள் ஒன்றை முழுவதுமாக நோக்கிக் கொள்ளப்படுவதாய்க் கவிஞனால் கருதிச் செய்யப்படுவதேபாவிகம் அணிஆகும்.

யாப்பருங்கலக் காரிகை

  • யாப்புஎன்றால்கட்டுதல்’. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி அமைப்பது

  • இந்நூலின் ஆசிரியர் அமிர்தசாகரர்

  • இந்நூலுக்கு குணசாகரர் உரை எழுதியுள்ளார்.

நூலின் அமைப்பு

 

எழுத்து

குறில், நெடில், ஆய்தம், ஒற்று, அளபெடை, குறுக்கம் என ஆறு வகைகளில் எழுத்துக் குறித்துத் தெரிந்து கொள்ளுதல் போதுமானது.

அசை

ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை எனப்படும். ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை. (ஒற்றெழுத்து = மெய்யெழுத்து). அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

சீர்

அசைகளால் அமைவது சீர். ஒரு சொல்லோ, ஒரு சொல்லின் பகுதியோ, இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்களோ ஒரு சீராக அமையும். சீர் நான்கு வகைப்படும். அவை, ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் ஆகும்.

தளை

நின்ற சீரின் இறுதி அசையும், வரும் சீரின் முதல் அசையும் தம்முள் பொருந்துவதுதளைஎனப்படும். தளை ஏழு வகைப்படும்.

  • நேர் ஒன்று ஆசிரியத் தளை மாமுன் நேர்

  • நிரைஒன்று ஆசிரியத்தளை விளமுன் நிரை

  • இயற்சீர் வெண்டளை மாமுன் நிரை

  • விளமுன் நேர்

  • வெண்சீர் வெண்டளை காய்முன் நேர்

  • கலித்தளை காய்முன் நிரை

  • ஒன்றிய வஞ்சித்தளை கனி முன் நிரை

  • ஒன்றாத வஞ்சித்தளை கனி முன் நேர்

அடி

சீர்களால் அமைவது அடி. இது ஐவகைப்படும். அவை:

  • குறளடி – 2 சீர்களை உடையது.

  • சிந்தடி – 3 சீர்களை உடையது.

  • அளவடி () நேரடி – 4 சீர்களை உடையது.

  • நெடிலடி – 5 சீர்களை உடையது.

  • கழிநெடிலடி – 6 () அதற்குமேற்பட்ட சீர்களை உடையது.

  • சீர்களுக்கேற்ப அறுசீர்க்கழிநெடிலடி,

  • எழுசீர்க்கழிநெடிலடி என்றவாறு பெயர் பெறும்.

தொடை வகை

தொடை எட்டு வகைப்படும். அவை : மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, அந்தாதி, இரட்டை, செந்தொடை ஆகும்.

வெண்பா

  • ஈற்றடி முச்சீரும் ஏனைய அடி நாற்சீரும் பெற்று வரும்

  • மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய வெண்பாத் தளைகளையே பெற்று வரவேண்டும்

  • ஈற்றுச் சீர் ஓரசையாலோ, ஓரசையுடன் குற்றியலுகரமோ பெற்று முடிதல் வேண்டும்

  • இவ்வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக் கொண்டது.

ஆசிரியப்பா

  • உரைநடை போன்று அமைவதே ஆசிரியப்பா

  • ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடிகளால் அமைவது இது

  • எதுகை, மோனைகளால் சிறப்புப் பெறுவது. குறைந்தது மூன்றடிகளைப் பெற்று வரும்

  • அடி மிகுதிக்கு எல்லை இல்லை.

கலிப்பா

  • நிரை முதலாகிய வெண்பாவுரிச்சீர் ( புளிமாங்காய், கருவிளங்காய்) மிகுந்துவரும்.

  • கலிப்பாவுக்குரிய கலித்தளைகளுடன் பிறதளைகளும் கலந்துவரும்.

  • கலிப்பாவுக்குரிய அடி அளவடி. அம்போதரங்க உறுப்பில் குறளடி, சிந்தடிகளும், அராக உறுப்பில் நெடிலடி, கழிநெடிலடிகளும் வரும்.

  • கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசை.

  • கலிப்பா ஒன்றையொன்று தொடரும் உறுப்புகளால் ஆகியது. அவை தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறுமாகும்.

வஞ்சிப்பா

  • வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களால் ஆயது வஞ்சிப்பா. சிறுபான்மை காய்ச்சீர்களும் கலந்து வரலாம்.

  • ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும் வரும். சிறுபான்மை பிறதளைகளும் வரலாம்.

  • வஞ்சிப்பாவிற்குரிய அடி குறளடியும் சிந்தடியும் ஆகும். அதாவது ஒரு வஞ்சிப்பா முழுமையும் குறளடிகளாய் வரும் ; அல்லது சிந்தடிகளாய் வரும். வஞ்சிப்பாவின் அடிச்சிறுமை மூன்றடி ;பெருமைக்கு வரம்பு இல்லை.

  • வஞ்சியடிகளின் இறுதியில் ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு வஞ்சிப்பா முடிவடையும்.

ஒற்றுப்பிழை தவிர்த்தல்

  • ஒற்றுப்பிழை என்பது தமிழ் எழுதும் போது ஏற்படும் ஒரு பிழை. அது, வலி மிக வேண்டிய இடத்தில் மிகாமலும், மிகக் கூடாத இடத்தில் மிகுதலும் ஆகும். இதனைத் தவிர்க்க, வல்லெழுத்து மிகும், மிகா இடங்களை அறிந்துகொள்வது அவசியம்

  • தமிழில், சில இடங்களில் வல்லெழுத்துக்கள் (க், ச், ட், த், ப், ற்) மிகுந்து வரும். அதாவது, இரண்டு சொற்கள் இணையும் போது, இடையில் இந்த எழுத்துகள் சேரும். எடுத்துக்காட்டாக, “கல் + சிலை = கற்கள் சிலைஎன்பதில்க்மிகுந்துள்ளது

  • சில இடங்களில், இந்த வல்லெழுத்துக்கள் மிகக் கூடாது. உதாரணமாக, “அது + புத்தகம் = அது புத்தகம்இதில் ஒற்று மிகக் கூடாது

  • இந்த ஒற்று மிகுதலில் ஏற்படும் பிழைகளே ஒற்றுப்பிழை எனப்படும்

அது

  • உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொற்களின் முன் வரும்.

  • எடுத்துக்காட்டாக: அது புத்தகம், அது மரம், அது குழந்தை

அஃது

  • உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொற்களின் முன் வரும்.

  • எடுத்துக்காட்டாக: அஃது ஆமை, அஃது எல்லை, அஃது ஊர்

ஒரு

  • ஒருஎன்பது மெய்யெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் வரும்.

  • எடுத்துக்காட்டாக, “ஒரு வீடு“, “ஒரு மரம்“, “ஒரு புத்தகம்” 

ஓர்

  • ஓர்என்பது உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் வரும்.

  • எடுத்துக்காட்டாக, “ஓர் ஆறு“, “ஓர் ஐந்து“, “ஓர் ஊர்” 

வல்லினம் மிகும் இடங்களை அறிதல்:

  • வல்லினம் மிகும் இடங்கள் என்பது ஒரு சொல்லின் இறுதியில் வல்லின மெய்யெழுத்துக்கள் (க், ச், த், ப்) மிகுந்து வரும் இடங்களைக் குறிக்கும்.

சுட்டு, வினா எழுத்துக்களை அடுத்து:

  • , , , , போன்ற சுட்டு மற்றும் வினா எழுத்துக்களை அடுத்து வரும் போது வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “ + குடம் = அக்குடம்“, “இந்த + பக்கம் = இந்தப்பக்கம்“, “ + கேள்வி = எக்கேள்வி” 

உவமைத் தொகையில்:

  • ஒரு பொருளை வேறொரு பொருளுடன் ஒப்பிட்டு கூறும் போது வல்லினம் மிகும்.

  • எடுத்துக்காட்டாக, “தாமரை + முகம் = தாமரைமுகம்“, “மயில் + தோகை = மயில்தோகை

இரண்டாம் வேற்றுமை உருபு () மறைந்து வரும்போது:

  • இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும்போது வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “பாலை + உண்டான் = பாலைஉண்டான்“, “பழத்தைத் தின்றான் = பழத்தின்றான்

பெயரெச்சம், வினையெச்சம்:

  • பெயரெச்சம் மற்றும் வினையெச்சம் ஆகியவற்றின் பின் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “ஓடிய + குதிரை = ஓடியக்குதிரை“, “செய்து + பார்த்தான் = செய்துப்பார்த்தான்

வினைத்தொகை:

  • வினைத்தொகையில் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “சுட்டு + களம் = சுட்டுக்களம்“, “வீசு + தென்றல் = வீசுதென்றல்

எதிர்மறைப் பெயரெச்சம்:

  • எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “கண்ட + காட்சி = கண்டகாட்சி“, “செல்லாத + பாதை = செல்லாதப்பாதை

பண்புத்தொகை:

  • பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “செம்மை + தாமரை = செந்தாமரை“, “வெண்மை + புறா = வெண்புறா” 

உரிச்சொற்றொடர்களில்:

  • உரிச்சொற்றொடர்களில் வல்லினம் மிகும்.

  • எடுத்துக்காட்டாக, “சால + சிறந்தது = சாலச்சிறந்தது“, “தவ + பெரிது = தவப்பேரிது” 

உம்மைத்தொகை:

  • உம்மைத்தொகையில் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “இரவும் + பகலும் = இரவுபகலும்“, “கையும் + காலும் = கைகால்கள்

இரட்டைக்கிளவி:

  • இரட்டைக்கிளவி சொற்களில் வல்லினம் மிகும்

  • எடுத்துக்காட்டாக, “சலசல + என்றது = சலசலத்தது“, “படபட + என்றது = படபடத்தது

வல்லினம் மிகா இடங்களை அறிதல்:

  • வல்லினம் மிகா இடங்கள் என்பவை, தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல்லின் இறுதியில் உள்ள வல்லின எழுத்துக்கள் (க், ச், ட், த், ப், ற்) அடுத்த சொல்லின் முதலில் வரும்போது மிகாமல், அதாவது தோன்றாமல் வருவது ஆகும்.

எழுவாய் சொற்களை அடுத்து:

  • உதாரணத்திற்கு, “தம்பி படித்தான்என்ற இடத்தில், ‘தம்பிஎன்ற எழுவாய்க்குப் பின் வல்லினம் மிகாது

அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து

  • அது சென்றது“, “இது பெரியது“, “எது கிடைத்ததுபோன்ற இடங்களில் வல்லினம் மிகாது

பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றின் பின்

  • எழுதிய பாடல்“, “எழுதாத பாடல்போன்ற இடங்களில் வல்லினம் மிகாது

இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை): 

  • கற்றல் நூல்” (கற்ற நூலை) என்ற இடத்தில், ‘உருபு மறைந்து வந்தாலும், வல்லினம் மிகாது

சுட்டு, வினா சொற்களை அடுத்து:

  • அது பறந்தது“, “எது தங்கம்“, “எவை சென்றனபோன்ற இடங்களில் வல்லினம் மிகாது

, , போன்ற வினா எழுத்துக்களின் பின்

  • உயிரெழுத்துகளின் பின்: “வாழ்க தமிழ்போன்ற இடங்களில், உயிரெழுத்தானவிற்கு பின் வல்லினம் மிகாது

சங்க இலக்கியம்

  • கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி”- புறப்பொருள் வெண்பாமாலை (ஐயனாரிதனார்)

  • சங்கத்தால் ஆய்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் சங்க இலக்கியம் ஆகும்.

  • சங்க இலக்கியம் வேறுபெயர் – திணை இலக்கியம், பதினெண்மேற் கணக்கு, பாட்டுத்தொகை (பாட்டுபத்துப்பாட்டு, தொகைஎட்டுத்தொகை)

எட்டுத்தொகை 

  • அகம் சார்ந்த நூல்கள்

    1. நற்றிணை

    2. குறுந்தொகை

    3. ஐங்குறுநூறு

    4. கலித்தொகை

    5. அகநானூறு

  • புறம் சார்ந்த நூல்கள்

    1. புறநானூறு

    2. பதிற்றுப்பத்து

  • அகமும் புறமும்  சார்ந்த நூல்

    1. பரிபாடல்

அகம் சார்ந்த நூல்கள்

நற்றிணை

  • நல்ல திணை 

  • பாடுபொருள்அகம்

  • அடிவரையறை9-12

  • பாடல் எண்ணிக்கை400

  • பாடிய புலவர்கள்:175

  • வேறுபெயர்நற்றிணை நானூறு

  • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி

  • கடவுள் வாழ்த்துப் பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்

  • நற்றிணையில் இடம்பெற்றுள்ள இசைக்கருவிகள் – முழவு, முரசு, தண்ணுமை, கிணைப்பாறை, சிறுபறை, குழல் 

  • அறவோன் மருத்துவன்

  • கணியர் – சோதிடம் பார்ப்பவர்

  • படிவ மகளிர்தவம் செய்யும் பெண்கள்

குறுந்தொகை

  • நல்ல குறுந்தொகை

  • பாடுபொருள்அகம்

  • அடிவரையறை4 – 8

  • பாடல் எண்ணிக்கை400

  • தொகுத்தவர்பூரிக்கோ

  • பெண்பாற் புலவர்கள்: அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஔவையார், காக்கைப்பாடினியார்

  • குறவன் நிலத்தை உழுது  தினை விதைப்பவன்

  • சேணான் உயர்வான பரணின் மீது இருப்பவர்

  • கோடியர்கூத்தர்

  • அணிகள்: தலையணிகள், காசுமாலைகள், பூங்குழை, மின்னிழை, சேயிழை, மாணிழை

  • ஆரியக்கூத்தர் மூங்கிலில் கட்டிய கயிற்றின் மேல் ஆடுபவர்.

  • விழா நிறைந்த ஊர் – சாறு கொள் ஊர்

  • நாழிகைக் கணக்கர் – இரவில் தூங்காது காலக்கணக்கைக்  கூறுபவர்.

  • கடப்பாட்டளன்தன் பொருள் பலருக்கும் பயன்பட வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்டவன்.

ஐங்குறுநூறு 

  • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்அகம்

  • அடிவரையறை : 3-6

  • பாடல் எண்ணிக்கை: 500

  • பாடிய புலவர்கள்5

  • தொகுத்தவர்புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

  • தொகுப்பித்தவர்யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

  • கடவுள் வாழ்த்து பாடியவர்பாரதம் பாடிய பெருந்தேவனார்

  • நொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்தது.

  • சொல்லாட்சியால் பெயர் வைத்தல்வேட்கைப்பத்து, வேழப்பத்து, களவன்பத்து

  • போரில் இறந்த வீரர்களுக்கு கல்நட்டு அக்கல்லில் வீரரின் உருவத்தையும் பெயரையும் எழுதிஎழுத்துரைநடுகல் என்னும் பெயருடன் வழிப்பட்டனர்

கலித்தொகை

  • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்அகம்

  • பாடல் எண்ணிக்கை: 150

    • பாலை– 35 பாடல்கள்

    • குறிஞ்சி– 29 பாடல்கள்

    • மருதம்– 35 பாடல்கள்

    • முல்லை– 17 பாடல்கள்

    • நெய்தல்– 37 பாடல்கள்

  • பாடிய புலவர்கள்5

  • ஏறுதழுவுதல்குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

  • போர்க்களத்தில் வெற்றிப் பெற்ற பின்துணங்கை கூத்துஆடுவது குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

  • மகாபாரதம், இராமாயண காப்பிய செய்திகள் இடம்பெற்றுள்ளது

  • உரை– நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

அகநானூறு

  • அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்அகம்

  • அடிவரையறை : 13-31

  • பாடல் எண்ணிக்கை400

  • பாடிய புலவர்கள்145

  • தொகுத்தவர்மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திர சன்மர்

  • தொகுப்பித்தவர்பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

  • வேறுபெயர்நெடுந்தொகை

  • நூல் அமைப்பு:

    • களிற்றியானை நிரை– 1-120

    • மணிமிடைப்பவளம்-121- 300

    • நித்திலக் கோவை – 301- 400

  • பாடல் வைப்புமுறை

    • பாலைத்திணை– 1,3,5,7,… ஒற்றைப்படை எண்ணாக வருபவை 

    • குறிஞ்சித்திணை – 2,8,12,18….

    • முல்லைத்திணை – 4,14,24,…

    • மருதத்திணை– 6,16,26,…..

    • நெய்தல் திணை – 10,20,30,……

  • குடவோலை முறை பற்றி குறிப்பிடுகிறது.

  • காவிரிக் கரையில் பங்குனி விழா நடைபெறுவது பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

புறம் சார்ந்த நூல்கள்

புறநானூறு

  • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்புறம் 

  • பாடல் எண்ணிக்கை – 400

  • வேறுபெயர்புறம்,புறப்பாட்டு

  • புறநானூறு தோன்றிய காலம் தமிழகத்தின் வீரயுகம் என்றும் தமிழகத்தின் பொற்காலம் என்றும் அழைக்கபடுகிறது.

  • பண்டைய காலத்தில் வாழ்ந்த பேரரசர்கள்,சிற்றரசர்கள், வீரர்கள் பற்றிய செய்திகளையும் வழிபாட்டு முறைகள், மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பற்றி செய்திகளையும் தருவதால் தமிழரின் வரலாற்றுப் பெட்டகம் என்று அழைக்கபடுகிறது.

  • கடையேழு வள்ளல்கள்

    • பாரிபறம்பு மலை

    • பேகன்பழனி மலை

    • ஓரிகொல்லிமலை

    • காரிமலையமான் நாடு

    • ஆய்பொதியமலை

    • அதியன்தகடூர்

    • நள்ளிதோட்டி மலை

பதிற்றுப்பத்து

  • பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்புறம் 

  • பாடல் எண்ணிக்கை– 100 (கிடைத்தவை 80 )

  • பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.

  • இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.

  • ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை,வண்ணம், தூக்கு, பெயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

  • திருமணத்தின் போது அருந்ததி என்னும் விண்மீனைப் பார்க்கும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறது.

  • நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.

அகமும் புறமும் சார்ந்த நூல்

பரிபாடல்

  • பரிந்து செல்லும் ஓசையுடைய பாடல்களை கொண்டுள்ளதால் பரிபாடல் எனும் பெயர் பெற்றது.

  • பாடுபொருள்– அகம் புறம் சார்ந்தது.

  • பாடல் எண்ணிக்கை-70(கிடைத்தவை 22)

    • திருமால்-6

    • முருகன்-8

    • வையை-8

  • அடிவரையறை – 25-40

  • பாடிய புலவர்கள்– 13

  • வல்லோன் ஓவியம் வரைபவர்

  • உரைபரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.

  • அகலிகை, மன்மதன் ஓவியங்கள் திருபரங்குன்றத்தில் இடம்பெற்றிருந்ததை பரிபாடல் மூலம் அறிய முடிகிறது.

பத்துப்பாட்டு

  • திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது.

  • ஆற்றுப்படை நூல்கள்

    • திருமுருகாற்றுப்படைநக்கீரர்

    • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்

    • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்

    • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்

    • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்

  • அகம் சார்ந்த நூல்கள்

    • முல்லைப்பாட்டு : நப்பூதனார்

    • குறிஞ்சிப்பாட்டுகபிலர்

    • பட்டினப்பாலைகடியலூர் உருத்திரங்கண்ணனார்

  • புறம் சார்ந்த நூல்கள்

    • திருமுருகாற்றுப்படைநக்கீரர்

    • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்

    • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்

    • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்

    • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்

    • மதுரைக்காஞ்சி: மாங்குடி மருதனார்

  • அகம் புறம் சார்ந்த நூல்

    • நெடுநல்வாடை

  • பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது.

திருமுருகாற்றுப்படை

  • பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.

  • இது 317 அடிகள் கொண்டது

  • முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.

  • இயற்றியவர் நக்கீரர்

  •  இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

பொருநராற்றுப்படை

  • சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.

  • இயற்றியவர்முடத்தாமக் கண்ணியார் 

  • இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.

  • போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பெரும்பாணாற்றுப் படை

  • இயற்றியவர்கடியலூர் உருத்திரங்கண்ணனார் 

  • பாட்டுடைத் தலைவன்காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.

  •  500 அடிகள் கொண்டது

  • பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.

சிறுபாணாற்றுப் படை

  • இயற்றியவர்இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

  • பாட்டுடைத் தலைவன்ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்

  • இது 269 அடிகள் கொண்டது.

  • சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.

மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)

  • இயற்றியவர்இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்

  • பாட்டுடைத் தலைவன்நன்னன் சேய் நன்னன்

  •  583 அடிகள் கொண்டது.

  • பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.

  • மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

மதுரைக் காஞ்சி

  • பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது.

  • இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றியது.

  • மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சிநிலையாமை).

குறிஞ்சிப் பாட்டு

  • இயற்றியவர்  – கபிலர்

  • இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.

  • குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.

  • பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.

  • இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது

முல்லைப் பாட்டு

  • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.

  • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.

  • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.

  • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.

பட்டினப்பாலை

  • பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது  பொருள்

  • 301 அடிகள் கொண்டது.

  • இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.

  • இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.

  • இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

  • பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.

  • அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.

நெடுநல்வாடை

  • இது 188 அடிகள் கொண்டது.

  • இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

  • காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.

பதினெண்கீழ்க்கணக்கு

  • வெண்பா யாப்பினைப் பயன்படுத்தி, குறைவான அடிகளால் ஐம்பது முதல் ஐந்நூறு பாடல்களைக் கொண்டு விளங்குவது கீழ்க்கணக்கு என்றும் கூறுகிறது பன்னிரு பாட்டியல்.

  •  இத்தொகுப்பில்  பதினெட்டு நூல்கள் அடங்கும். இப்பதினெட்டு நூல்களையும்

நீதி நூல்கள் (11 நூல்கள்)

1) திருக்குறள்
2)நாலடியார் 
3) இன்னா நாற்பது
4) இனியவை நாற்பது 
5)நான்மணிக்கடிகை
6)ஆசாரக்கோவை 
7) சிறுபஞ்சமூலம்
8) ஏலாதி
9)திரிகடுகம் 
10)முதுமொழிக்காஞ்சி
11) பழமொழி நானூறு

அக நூல்கள் (6 நூல்கள்)

1) ஐந்திணை ஐம்பது
2)ஐந்திணை எழுபது 
3) திணைமொழி ஐம்பது
4)  திணைமாலை நூற்று ஐம்பது
5) கைந்நிலை
6)கார் நாற்பது 

புற நூல் (ஒன்று)

1)களவழி நாற்பது

என மூன்று பிரிவுகளுள் அடக்கலாம்.

திருக்குறள்

பெயர்க்காரணம்:

  • குறள் வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளதால்  இப்பெயர் பெற்றது.

  • திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்

  • ஆசிரியர்திருவள்ளுவர்

  • பாவகைகுறள் வெண்பா

திருக்குறளின் வேறு பெயர்கள்:

  • திருவள்ளுவம்

  • தமிழ் மறை

  • பொதுமறை

  • முப்பால்

  • பொய்யாமொழி

  • தெய்வநூல்

நூல் பகுப்பு முறை:

  • பால் – 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)

  • அதிகாரம் – 133

  • பாடல்கள் – 1330

  • இயல்கள் – 9

நாலடியார்

பெயர்க்காரணம்:

  • நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது

  • ஆசிரியர்சமண முனிவர்கள்

  • தொகுத்தவர்பதுமனார்

  • பாடல்கள் – 400

  • பொருள்அறம்

  • பா வகைவெண்பா

வேறு பெயர்கள்:

  • நாலடி நானூறு

  • வேளாண் வேதம்

நூல் பகுப்பு:

  • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது

    • அறத்துப்பால் – 13 அதிகாரங்கள்

    • பொருட்பால் – 24 அதிகாரங்கள்

    • இன்பத்துப்பால் – 3 அதிகாரங்கள்

நூலின் சிறப்பு:

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.

நான்மணிக்கடிகை

பெயர்க்காரணம்:

  • நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற  அணிகலன் போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள்  இடம்பெறுவதால் நான்மணிக்கடிகை எனும் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்விளம்பி நாகனார்

  • ஊர்விளம்பி

  • பாடல்கள் -104

  • பாவகைவெண்பா

இன்னா நாற்பது

பெயர்க்காரணம்:

  • இன்னாதுன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால்  இன்னா நாற்பது எனப்படுகிறது.

  • ஆசிரியர்கபிலர்

  • பாடல்கள் – 1 + 40

  • பாவகைவெண்பா

இனியவை நாற்பது

பெயர்க்காரணம்:

  • இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்பூதஞ்சேந்தனார்

  • பாடல்கள் – 1 + 40

  • பாவகைவெண்பா

திரிகடுகம்

பெயர்க்காரணம்:

  • சுக்குமிளகுதிப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பானஅதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.

  • திரிமூன்று

  • கடுகம்காரமுள்ள பொருள்

  • ஆசிரியர்நல்லாதானர்

  • பாடல்கள் – 100 + 1

  • பாவகைவெண்பா

ஆசாரக்கோவை

பெயர்க்காரணம்:

  • மனித வாழ்விற்கு இன்றியமையாத ஒழுக்கநெறிகள் பலவற்றையும் ஒன்றிணைத்துக் கூறும் ஒரு தொகுப்பு நூல் என்பதால் அப்பெயர் பெற்றது.

  • ஆசிரியர்பெருவாயின் முள்ளியார்

  • பாடல்கள் – 100

  • பாவகைபல்வேறு வெண்பா வகைகள்

பழமொழி நானூறு

பெயர்க்காரணம்:

  • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி  இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.

  • ஆசிரியர்முன்றுறை அரையனார்

  • பாடல்கள் – 400

  • பாவகைவெண்பா

சிறுபஞ்சமூலம்

பெயர்க்காரணம்:

  • கண்டங்கத்திரிசிறு வழுதுணைசிறுமல்லிபெருமல்லிநெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.

  • ஆசிரியர்காரியாசான்

  • பாடல்கள்கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102

  • பாவகைவெண்பா

முதுமொழிக்காஞ்சி

பெயர்க்காரணம்

  • மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.

  • ஆசிரியர்மதுரைக் கூடலூர்க்கிழார்

  • பாடல்கள் – 100

  • பாவகைகுறள் தாழிசை

ஏலாதி

பெயர்க்காரணம்:

  • ஏலம்இலவங்கம்நாககேசரம்சுக்குமிளகுதிப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.

  • ஆசிரியர்கணிமேதாவியார்

  • பாடல்கள்பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80

  • பாவகைவெண்பா

ஐந்திணை ஐம்பது

பெயர்க்காரணம்:

  • ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்மாறன் பொறையனார்

  • பாடல்கள் – 50(5 X 10 = 50)

  • திணைஐந்து அகத்திணை

  • திணை வைப்பு முறைமுல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்

  • பாவகைவெண்பா

ஐந்திணை எழுபது

  • ஐந்து தினைகளுக்கும் பதினாங்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்மூவாதியார்

  • பாடல்கள் – 70(5*14=70)

  • திணைஐந்து அகத்தினணகளும்

  • திணை வைப்பு முறைகுறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்

  • பாவகை  – வெண்பா

திணைமொழி ஐம்பது

பெயர்க்காரணம்:

  • திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.

  • ஆசிரியர்கண்ணஞ் சேந்தனார்

  • பாடல்கள் – 50(5*10=50)

  • திணைஐந்து அகத்திணைகளும்

  • திணை வைப்பு முறைகுறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்

  • பாவகை  – வெண்பா

திணைமாலை நூற்றைம்பது

பெயர்க்காரணம்:

  • திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்கணிமேதாவியார்

  • பாடல்கள் – 150(5*30=150)

  • திணைஐந்து அகத்திணைகளும்

  • திணை வைப்பு முறைகுறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்

  • பாவகைவெண்பா

கைந்நிலை

பெயர்க்காரணம்:

  • கை = ஒழுக்கம்

  • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்புல்லாங்காடனார்

  • பாடல்கள் – 60(5*12=60)

  • திணைஐந்து அகத்திணைகளும்

  • பாவகைவெண்பா

கார் நாற்பது

  • கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையினாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது

  • இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.

  • ஆசிரியர்மதுரைக் கன்னங் கூத்தனார்

  • பாடல்கள் – 40(அகநூல்களில் அளவில் சிறியது)

  • திணைஅகத்திணைமுல்லைத்திணை

  • பாவகைவெண்பா

களவழி நாற்பது

பெயர்க்காரணம்:

  • களம் = போர்க்களம்.

  • போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.

  • ஆசிரியர்பொய்கையார்

  • பாடல் – 40

  • திணைபுறத்திணைவாகைத்திணை

  • பாவகைவெண்பா

ஐம்பெரும் காப்பியங்கள்

  • காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.

ஐம்பெரும் காப்பியங்கள

  1. சிலப்பதிகாரம்

  2. மணிமேகலை

  3. சீவகசிந்தாமணி

  4. வளையாபதி

  5. குண்டலகேசி

சிலப்பதிகாரம்

  • இயற்றியவர்– இளங்கோவடிகள்

  • சமயம்சமணம்

பெயர்க்காரணம்:

  • காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

  • குடிமக்கள் காப்பியம்

  • முத்தமிழ் காப்பியம்

  • உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்

நூல் அமைப்பு

  • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.

மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்

    • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
      உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
      ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்  

காப்பியக் கதை

  • கோவலன் கண்ணகி திருமணத்தில் தொடங்கி, மாதவியின் நடனத்தால் மையல் கொண்ட கோவலன், கண்ணகியை விடுத்து, மாதவி மாட்டு விடுதலறியாவிருப்பினன் ஆகி, மணிமேகலையை மகளாய்ப் பெற்று, பல ஆண்டுகளுக்குப் பின் இந்திர விழாவில் கானல் வரிபாடும் நிலையில் ஊழ்வினை காரணமாக மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் மாதவி என அவளைப் பழித்து நீங்கி, கண்ணகியைத் தஞ்சமடைந்து, கவுந்தியடிகள் துணையுடன் மதுரை சென்று, மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக்கி, மதுரை வீதியில் பொற்கொல்லனிடம் சிலம்பு விற்கச் சென்று கள்வன் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு, மன்னன் கொன்று வா என ஆணையிடக் கொலைக் களத்தில் கோவலன் கொலைப்பட, வண்ணச் சீறடி மண்மகள் அறியாது புகாரில் வாழ்ந்த கண்ணகி மதுரை வீதியில் சீற்றமே உருவாய் அரண்மனை வாயில் புகுந்து மன்னனிடம் தன் கணவன் கள்வனல்லன் என்பதைச் சிலம்பை உடைத்து, மாணிக்கத்தைக் காட்டி தெளிவுப்படுத்த அதனால் குற்றம் செய்தேன் என மன்னன் மடிய, கோப்பெருந்தேவி உயிர் துறக்க,சினம் அடங்காப் பத்தினி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கி, வஞ்சி மாநகர் புகுந்து அங்குள்ள மலைக்குறவர் காண, விமானத்தில் ஏறி விண்ணுலகு சென்றாள். இதுவே சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகி கோவலன் கதையாகும்.

மணிமேகலை

  • இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்

  • சமயம்பௌத்தம்

பெயர்க்காரணம்

  • காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்மணிமேகலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

  • இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)

  • இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.

நூல் அமைப்பு

  • முப்பது காதைகள் கொண்டது.

மூன்று கருத்துகள்

  • இளமை நிலையாமை

  • யாக்கை நிலையாமை

  • செல்வம் நிலையாமை 

காப்பியக் கதை 

  • கோவலன் கொலை செய்யப்பட, செய்தியறிந்த மாதவியும். அவள் மகள் மணிமேகலையும் பௌத்த சமயத்தில் சேர்ந்துதுறவியாகின்றனர். புத்தபிரானுக்கு மலர் வேண்டி மலர்வனம் புகுகின்றாள் மணிமேகலை. மணிமேகலை மீது காமம் கொண்ட இளவரசன் உதயகுமரன் அவளைப் பின் தொடர்கிறாள். தன்னைப் பொருள்விலையாட்டி எளக் கூறி இகழ்ந்தும் உதயகுமரன் பின்னால் தன் மனம் செல்வதையறிந்து வருந்துகிறாள் மணிமேகலை. இந்நிலையில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விட்டுவிடுகிறது. அங்குப் பழம்பிறப்பு அறிந்து, மூன்று மந்திரங்களும் பெறுகிறாள். ஆபுத்திரனின் அமுத சுரபியும் கோமுகிப் பொய்கையிலிருந்து கிடைக்கிறது. மந்திரத்தின் உதவியால் விண்ணில் பறந்து புகார் வந்து பசியால் வாடியோர்க்கு உண்டி கொடுத்து உயிர்கொடுக்கிறாள் உதயகுமரன்தரும் துன்பம் நீங்கமந்திரத்தின் உதவியால் காயசண்டிகை வடிவத்தை எடுத்துக்கொள்கிறாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமரன் தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொன்ற பழி மணிமேகலையை வந்தடைகிறது. அரசன் மகளைக் கொன்றதால் சோழ மன்னன் மணிமேகலையைர் சிறையில் அடைக்கிறான். மகனைப் பறி கொடுத்த அரசி. மணிமேகலையைப் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துகிறாள். தவவலிமையால் அவற்றிலிருந்து விடுபடுகிறாள். உண்மை உணர்ந்த அரசி அவளை விடுவித்துத் தன்னை மன்னிக்க வேண்டுகிறாள். பின்னர் மணிமேகலை காஞ்சி சென்று பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்பி அறவண அடிகளிடம் ஆசி பெறுகிறாள். இதுவே மணிமேகலையின் கதையாகும்.

சீவகசிந்தாமணி

  • இயற்றியவர்திருத்தக்கதேவர்

  • தமிழில் விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி ஆகும்.

  • மணநூல் என்று அழைக்கப்படுகிறது.

  • சமயம்சமணம்

நூல் அமைப்பு

  • 13 இலம்பகங்கள் 

  • 3145 பாடல்கள் கொண்டது.

காப்பியக் கதை 

  • காப்பியத்தலைவன் சீவகன். ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன், மனைவி விசயை. நாட்டை மறந்து அந்தப்புரத்தில் அடைக்கலமாகும் மன்னன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைக்கின்றான். அமைச்சன் தக்க நேரம் பார்த்துப் படையுடன் வந்து மன்னனைக் கொல்கிறான். அமைச்சன் சதியறிந்த மன்னன், மனைவி விசயையை மயிற்பொறியில் ஏற்றி வானில் பறக்கும்படிச்செய்கிறான். உயிர்தப்பிய விசயை சுடுகாட்டில் இறங்குகிறாள். அங்கு அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. சீவகன் என்று பெயர் மட்டும் சூட்டி மகனோடு வாழ முடியாது தாய் விசயை மறைந்து வாழ்கிறாள். கந்துக்கடன் எனும் வணிகன் சீவகனை எடுத்துச்சென்று, அச்சணந்தி அடிகளிடம் கல்வி பயில அனுப்புகிறான். கல்வி கேள்விகளில் சிறந்தவனாக வளர்கின்றான். இளமைப் பருவம் எய்திய சீவகன் தன் அழகாலும் ஆண்மையாலும் போட்டிகளில் வெற்றி பெற்றுகாந்தருவ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எண்மரை மணக்கிறான். கட்டியங்காரனைப் போரில் கொன்று தன் தந்தையின் நாட்டை மீட்டு அரசாள்கிறான். மனைவியரோடு மகிழ்ச்சியாய், நற்புதல்வர்களைப் பெற்று இருக்குங்காலை தோட்டத்தில் பார்த்த ஒரு காட்சியால் வாழ்க்கையில் விரக்தியுற்றுத் துறவு பூண்டு முக்தி அடைகிறான். இதுவே சீவக சிந்தாமணி தரும் சீவகனின் கதையாகும்.

வளையாபதி

  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை

  • சமண சமயம் சார்ந்த நூல்

காப்பியக் கதை 

  • நவகோடி நாராயணன் ஒரு வணிகன். இவன் வேறு சாதிப் பெண்ணை மணந்தான். இதனால் அவன் குலத்தோர் வெறுக்க, வெறுப்பைத் தாங்க இயலாது அவனும் அயல் நாடு சென்றுவிட, அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான். வைசிய புராணம் தரும் கதை இதுவேயாகும்.

குண்டலகேசி

  • குண்டலகேசி என்பதற்கு  சுருண்ட கூந்தலை உடையவள் என்பது பொருள் ஆகும்.

  • இயற்றியவர்நாதாகுத்தனார்

  • 25 பாடல்கள் கிடைத்துள்ளன.

  • சமயம்பௌத்தம்

காப்பியக் கதை 

  • வணிகன் மகள் பத்தரை. இவள் காளன் என்ற கள்வனை விரும்புகிறாள். மகளின் வற்புறுத்தலால் தந்தையும் கள்வனைச் சிறையிலிருந்து மீட்டு அவளுக்கு மணம் செய்து வைக்கிறார். இன்பமான வாழ்க்கையின் இடையில் ஊடலின்போது சினத்தில் பத்தரை தன் கணவனை நீ கள்வன் தானே? என்று கூறிவிட அதனால் சினங்கொண்ட காளன் (கணவன்) தெய்வத்தை வணங்க என்று பொய் கூறி மலையுச்சிக்கு அவளை அழைத்துச் சென்று கொல்லப் போவதாகக் கூறுகின்றான். கணவனுக்கு அறிவுரை கூறியும் அவன் திருந்தாத நிலையில் அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து கணவனை மலையுச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகின்றாள். தான் செய்த பாவம் நீங்கிடப் பௌத்த சமயத்தில் சேர்ந்து அறக் கருத்துக்களைப் பரப்பி இறுதியில் புத்தபிரானின் திருவடியை அடைகிறாள்.

ஐஞ்சிறுகாப்பியங்கள்

நாககுமார காவியம்

  • ஆசிரியர்பெயர் தெரியவில்லை

  • காலம்கி.பி.16ஆம் நூற்றாண்டு

  • பாடல்கள் – 170
    சருக்கம் – 5
    பாவகைவிருத்தப்பா

  • சமயம்சமணம்

  • பெயர்க்காரணம்:
    கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.

  • வேறு பெயர்: நாகபஞ்சமி கதை

உதயணகுமார காவியம்

  • ஆசிரியர்பெயர் தெரியவில்லை

  • காலம்கி.பி.15ஆம் நூற்றாண்டு

  • பாடல்கள் = 369
    காண்டம் = 6
    காண்டங்கள்:

     

    • உஞ்சைக் காண்டம்

    • இலாவண காண்டம்

    • மகத காண்டம்
      வத்தவ காண்டம்

    • நரவாகன காண்டம்

    • துறவுக் காண்டம்

  • வேறு பெயர்உதயணன் கதை

யசோதர காவியம்

  • ஆசிரியர்வெண்ணாவலூர் உடையார் வேள்

  • காலம் – 13ஆம் நூற்றாண்டு

  • பாடல்கள் – 320
    சருக்கங்கள் – 5

  • பாவகைவிருத்தம்

  • சமயம்சமணம்

நீலகேசி

  • ஆசிரியர்பெயர் தெரியவில்லை

  • காலம் – 6ஆம் நூற்றாண்டு

  • பாடல்கள் – 894
    சருக்கம் – 10

  • பாவகைவிருத்தம்

  • சமயம் = சமணம்

  • வேறு பெயர்:
    நீலகேசி தெருட்டு
    நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)

  • நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்

சூளாமணி

  • ஆசிரியர்தோலாமொழித் தேவர்

  • காலம்கி.பி.பத்தாம் நூற்றாண்டு

  • பாடல்கள் – 2330
    சருக்கம் – 12

  • பாவகைவிருத்தம்

  • சமயம்சமணம்

  • பெயர்க்காரணம்: மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.

சமயக் காப்பியங்கள்

  • மணிமேகலை பௌத்தத்தைப் போற்றும் நிலையில் எழுந்தது. சீவகசிந்தாமணி சமணம் பரப்ப எழுந்தது.

  • வளையாபதி சமண சமயத்தது.

  • குண்டலகேசி பௌத்தத்தைப் போற்றுவது.

  • ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தனவாகும்.

  • கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வைணவ சமயக் காப்பியங்களாகும்.

  • பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் முதலின சைவ சமயக் காப்பியங்களாகும்.

  • சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியம்.

  • இயேசு காவியம் கிறித்துவக் காப்பியம் ஆகும்.

  • சமயம் பரப்பும் நோக்கில்தான் காப்பியங்களின் வளர்ச்சி அமைந்தது என்றே உறுதிபடக் கூறலாம்.

கம்பராமாயணம்

  • இயற்றியவர்கம்பர்

  • பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது

காப்பிய அமைப்பு

  • இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.

  • இந்த ஆறு காண்டங்களின் சிறு பிரிவுகளாக 113 படலங்கள் உள்ளன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 10,500 ஆகும்.

  • கம்பராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழவேண்டும் என்ற உண்மையை ஏகபத்தினி விரதனாம்இராமன் மூலம் தெரிவிக்கின்றது.

வில்லிபாரதம்

  • இயற்றியவர்: வில்லிபுத்துரார்

  • காலம்: 16-ஆம் நூற்றாண்டு.

  • பருவங்கள்:
    வில்லிபாரதம் 10 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    • பருவங்களின் பெயர்கள்:

       

      • ஆதி பருவம்

      • சபா பருவம்

      • ஆரணிய பருவம்

      • விராட பருவம்

      • உத்தியோக பருவம்

      • வீடும பருவம்

      • துரோண பருவம்

      • கன்ன பருவம்

      • சல்லிய பருவம்

      • சௌப்திக பருவம்

         

  • 4351 விருத்தப் பாடல்களைக் கொண்டது.

பெரியபுராணம்

  • இயற்றியவர்: சேக்கிழார்

  • பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.

  • இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.

  • 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.

திருவிளையாடற் புராணம்

  • இயற்றியவர்: பரஞ்சோதி முனிவர்

  • காண்டங்கள்:
    3 காண்டங்கள் உள்ளன.

    • மதுரைக் காண்டம்

    • கூடல் காண்டம்

    • திருவாலவாய்க் காண்டம்

  • படலங்கள்:
    மொத்தம் 64 படலங்கள் உள்ளன.

  • மதுரைக் காண்டம்: 18 படலங்கள்.

  • கூடல் காண்டம்: 30 படலங்கள்.

  • திருவாலவாய்க் காண்டம்: 16 படலங்கள்.

  • பாடல்கள்:
    இந்த நூல் 3363 பாடல்களைக் கொண்டுள்ளது.

கந்தபுராணம்

  • இயற்றியவர்: கச்சியப்ப சிவாச்சாரியார்

  • முருகனின் வரலாற்றைக் கூறும் நூல்

  • ஆறுகாண்டங்கள்

    • உற்பத்தி காண்டம்

    • அசுர காண்டம்

    • மஹேந்திர காண்டம்

    • யுத்த காண்டம்

    • தேவ காண்டம்

    • தக்ஷ காண்டம்

  • 142 படலங்கள்

  • 2967 பாடல்கள்

சீறாப்புராணம்

  • ஆசிரியர் : உமறுப்புலவர்

  • சீறாஎன்ற அரபுச் சொல்லுக்கு வாழ்க்கை அல்லது வாழ்க்கை வரலாறு என்று பொருள். ‘புராணம்என்றால்வரலாறுஎன்று பொருள்எனவே, சீறாப்புராணம் என்பது ‘நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் ஆகும்

  • மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.

தேம்பாவணி

  • ஆசிரியர்: வீரமாமுனிவர்

  • மூன்று காண்டங்கள்

  • 36 படலங்கள்

  • 3615 விருத்தப் பாடல்கள்

  • கதையின் பாடுபொருள்:

    • தேம்பாவணி நூல் புனித யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் பெருமையைப் பாடுகிறது.

    • இது தமிழ் மரபுக்கு ஏற்ற ஒரு காப்பியமாக இருந்தாலும், கிறிஸ்தவக் கருத்துக்களை முன்வைக்கிறது

இயேசு காவியம்

  • இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

  • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.

  • இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.

பக்தி இலக்கியம்

  • பக்தி இலக்கியம் பெரிதும் வளர்ந்த காலம் பல்லவர் காலம் ஆகும்.

  • தேவாரம்

    • தே+வாரம்=தேவாரம்

    • கடவுளுக்கு சூட்டப்படுகின்ற பாமாலை என்று பொருள்.

  • சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான்

  • சிவபெருமானின் ஐன்தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

பன்னிரு திருமுறைகள் பகுப்பு

  • சைவ சமயப் பெரியவர்கள் பாடிய பாடல்கள் திருமுறைகள் எனப்படும்.

  • 1 , 2, 3 திருமுறைகள்திருஞானசம்பந்தர் (சம்பந்தர் தேவாரம்)

  • 4, 5 , 6 திருமுறைகள்திருநாவுக்கரசர் (தேவாரம்)

  • 7ம் திருமுறைசுந்தரர் (சுந்தரர் தேவாரம்)

  • 8ம் திருமுறைமாணிக்கவாசகர்திருவாசகம் மற்றும் திருக்கோவையார்

  • ஒன்பதாம் திருமுறை – 9 பேர்

  • பத்தாம் திருமுறைதிருமூலர்

  • பதினொன்றாம் திருமுறைதிரு ஆலவாய் உடையார் முதலாக பன்னிருவர்

  • பன்னிரண்டாம் திருமுறைசேக்கிழார் (பெரியபுராணம்)

  • திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
    இவர் 11 திருமுறைகளை மட்டுமே தொகுத்தார்
    பெரியபுராணம் பின்னால் எழுதப்பட்டது.

  • திருமுறைகளைதொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன்
    முதலாம் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் எனப்படுகிறான்

  • முதல் ஏழு திருமுறைகள் மூவர் தேவாரம் எனப்படும்.
    இதற்கு மூவர் தமிழ் என்று வேறு பெயரும் உண்டு.

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்மூவர் முதலிகள்எனப்படுவர்.

  • சைவ சமயக் குரவர்கள் நால்வர்

  1. திருஞானசம்பந்தர்

  2. திருநாவுக்கரசர்

  3. சுந்தரர்

  4. மாணிக்கவாசகர்

  • பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.

திருஞானசம்பந்தர்

  • இயற்பெயர் : ஆளுடைய பிள்ளை

  • பெற்றோர்சிவபாத இருதயர்பகவதி அம்மையார்

  • பிறந்த ஊர்சீர்காழி 

  • இவர் பாடியவை1,2,3 திருமுறைகள்

சிறப்பு:

  • 23 இசைகளில் பாடியுள்ளார்.

  • யாழ்முறி இவருக்கு மட்டுமே உரியது.

  • திராவிட சிசுஆதிசங்கரரால்  போற்றப்பட்டார்.

  • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்சுந்தரர்

செய்த அற்புதங்கள்

  • மழவன் மகளுக்கு ஏற்பட்ட கடுமையான முயலகன் என்னும் நோயைப் போக்கினார்.

  • கூன் பாண்டியன் வெப்பு நோயைப் நீக்கினார்.

  • திருமறைக்காட்டுக் கோவிலின் கதவை தம் பாட்டால் மூடும்படி செய்தார்.

  • திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் செய்தார்.

திருநாவுக்கரசர்

  • இயற்பெயர்: மருள் நீக்கியார்

  • பெற்றோர் : புகழனார், மாதினியார்

  • அக்கா : திலகவதியார்

  • பிறந்த ஊர்: திருவாமூர்

  • இவர் பாடியவை4,5,6 திருமுறைகள்

  • சிறப்பு பெயர்கள்:

    • திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்

  • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர்தமக்கை திலகவதியார்

  • முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் .

  • கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறியவர்

  • திங்களூரில் பாம்பு தீண்டி இறந்தவரை உயிர்ப்பித்தார்.

  • திருமறைக்காட்டுக் கோவில் கதவை திறக்க செய்தார்.

சுந்தரர்

  • இயற்பெயர்: நம்பி ஆரூரார் / ஆரூரார்

  • பெற்றோரோர்: சடையனார்மாதினியார்

  • இவர் பாடியவை7 திருமுறை

சிறப்பு பெயர்கள் :

  • வன் தொண்டர்

  • தம்பிரான் தோழர்

  • திருத்தொண்டத்தொகை பாடியவர் சுந்தரர்

மாணிக்கவாசகர்

  • இயற்பெயர் தெரியவில்லை

  • பெற்றோர் : சம்புபாதசாரியார்சிவஞானவதி

  • இவர் பாடியவை8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

  • அருள் வாசகர்

  • மணிவாசகர்

  • அழுது அடியடைந்த அன்பர்

  • தென்னவன் பிரமராயர்

  • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

நூல்கள்

  • திருக்கோவையாரும் திருவாசகமும் இவர் பாடியவை

ஒன்பதாம் திருமுறை ( திருவிசைப்பா

  • 9 பேர் பாடியது

பத்தாம் திருமுறை ( திருமந்திரம்

  • திருமூலர்

  • திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை

  • திருமந்திரத்தின் வேறு பெயர்கள்தமிழ் மூவாயிரம்

  • முதல் சித்த நூல் யோக நெறியை கூறும் தமிழர் நூல்
    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்நூலின் சிறப்பு

பதினொன்றாம் திருமுறை (பிரபந்த மாலை)

  • 12 பேர் பாடியுள்ளனர்

  • 40 நூல்கள் உள்ளன

  • திருவாலவாயுடையார் (1)

  • காரைக்காலம்மையார் (நான்கு நூல்கள்)

  • கல்லாடர் (1)

  • நக்கீரர் (10)

  • கபிலர் (3)

  • பரணர் (1)

  • அதிரா அடிகள் 1

  • இளம்பெருமான் அடிகள் (1)

  • ஐயடிகள் (1)

  • சேரமான் பெருமான் நாயனார் (3)

  • பட்டினத்தார் (5)

  • நம்பியாண்டார் நம்பி (ஒன்பது நூல்கள் )

  • தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் நம்பியாண்டார் நம்பி
    64 நாயன்மார்களை பற்றி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்

காரைக்கால் அம்மையார்

  • இயற்பெயர் புனிதவதியார் 

  • காரைக்கால்வணிக மரபினர்

  • சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி

12ம் திருமுறை (பெரியபுராணம்)

  • சேக்கிழார்

  • இயற்பெயர்: அருண்மொழித்தேவர்

சிறப்பு பெயர்கள் :

  • உத்தம சோழப் பல்லவன்

  • தொண்டர் சீர் பரவுவார்

நூல் அமைப்பு:

  • இரண்டு காண்டம் 13 சருக்கம் 4286 பாடல்கள்

  • உலகெலாம் என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்ட நூல்

 63 நாயன்மார்களில் மூவர் பெண்கள்

  • காரைக்கால்

  • அம்மையார்

  • இசைஞானியார்

  • மங்கையர்க்கரசி

நாலாயிர திவ்ய பிரபந்தம்

  • ஆழ்வார்களின் பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றனதிராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.

  • ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில்அன்பில்அருளில்தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம்

  • முதலாழ்வார்கள்:
    பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

ஆழ்வார்கள்பாசுரங்களின் எண்ணிக்கை

1.பொய்கை ஆழ்வார்– 100

2.பூதத்தாழ்வார்– 100

3.பேயாழ்வார்– 100

4.திருமழிசை ஆழ்வார்– 216

5.மதுரகவி ஆழ்வார்– 11

6.நம்மாழ்வார்– 1296

7.குலசேகர ஆழ்வார்-105

8.பெரியாழ்வார்– 473

9.ஆண்டாள்– 173

10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்– 55

11.திருப்பாணாழ்வார்– 10

12.திருமங்கை ஆழ்வார்– 1137

பொய்கையாழ்வார்

  • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்பொய்கையில் அவதரித்தவர்,

  • காலம் : 7ம்நூற்றாண்டு

  • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி

  • பாடல்கள் : 100

பூதத்தாழ்வார்

  • பிறந்த ஊர் : மகாபலிபுரம்

  • காலம் :  7ம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி

  • பாடல்கள் : 100

பேயாழ்வார்

  • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்

  • காலம்: ஏழாம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி

  • பாடல்கள் : 100

திருமழிசையாழ்வார்

  • பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)

  • காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்

  • பாடல்கள் : 216

பெரியாழ்வார்

  • பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிப்புத்தூர்

  • காலம்: 9ம் நூற்றாண்டு 

  • எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி

  • பாடிய பாடல் : 473

ஆண்டாள்

  • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்

  • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்

  • காலம் : 9ம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி

  • பாடிய பாடல் : 173

தொண்டரடி பொடியாழ்வார்

  • இயற்பெயர் : விப்ர நாராயணன்

  • பிறந்த ஊர் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)

  • காலம் : எட்டாம் நூற்றாண்டு 

  • எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

  • பாடிய பாடல் : 55

திருமங்கையாழ்வார்

  • பிறந்த இடம் : திருக்குறையலூர்

  • காலம் : எட்டாம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,   திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கைபெரிய திருமடல்,சிறிய திருமடல்.

  • பாடிய பாடல் : 1253 

திருப்பாணாழ்வார்

  • பிறந்த ஊர் : உறையூர் (திருச்சி)

  • காலம் : எட்டாம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : அமலனாதிபிரான்

  • பாடிய பாடல் : 10

குலசேகர ஆழ்வார்

  • பிறந்த இடம் : திருவஞ்சைக்களம்

  • காலம் : எட்டாம் நூற்றாண்டு

  • எழுதிய நூல் : பெருமாள் திருமொழி

  • பாடிய பாடல்  : 105

நம்மாழ்வார்

  • பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி

  • பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி

  • எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி

  • பாடல்கள் : 1296

மதுரகவி ஆழ்வார்

  • பிறந்த ஊர் : திருக்கோளூர்

  • காலம் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி

  • எழுதிய நூல் : கண்ணி நுண் சிறுத்தாம்பு

  • பாடல்கள் : 96

பகுத்தறிவு இலக்கியம்

  • பகுத்தறிவு என்பதற்கு ஒன்றினைப் பகுத்து அறிதல் என்று பொருள்.

  • சமூகத்தில் நிகழும் நிகழ்வினை மனிதன் ஆராய்ந்து தெளிவுபெற வேண்டும் என்பதே பகுத்தறிவு இலக்கியங்களின் நோக்கம் ஆகும்.

  • கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த கிறித்தவ பாதிரிமார்கள் கல்வி கற்றல், கணவன் இறந்த பின்பு கைம்பெண்களை மறுதிருமணம் செய்ய ஊக்குவித்தல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல் எனப் பல்வேறு கருத்துக்களைக் கூறி மக்களை நல்வழிப்படுத்தினர்.

சுயமரியாதைக் இயக்கம்

  • பெரியார் 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்கினார்.

  • சமமான கல்வி, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நீதி, பொருளாதார பொதுவுடைமை, மூடபழக்கத்தை ஒழித்தல் போன்றவை சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களாக அமைந்தன.

சித்தர் இலக்கியம்

  • மனிதர்களிடம் காணப்படாத வியக்கத்தக்க ஆற்றல் கொண்டவர்களைச் சித்தர்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் மெய்ஞ்ஞானம் நிரம்பியவர்கள்.   கொண்டவை.

  • சித்தர்கள் பலர் இருப்பினும் வழக்கில் பதினெண்சித்தர்கள் என்று கூறப்படும் மரபு காணப்படுகின்றது.

1.அகத்தியர் 2.இடைக்காடர் 3.உரோமமுனி  4.கருவூரார்   5.காகபுண்டர் 6.கொங்கணர் 7.கோரக்கர் 8.சட்டைமுனி 9.மச்சமுனி 10.போகர் 11.திருமூலர் 12.நந்தி 13. புண்ணாக்கீசர்   14. தேரையர் 15. யூகிமுனி 16.  காலாங்கி நாதர் 17.புலத்தியர் 18. தன்வந்திரி

திருமூலர்

  • இவர் சித்தர் தத்துவத்தின் மூலமுதல்வர்.

  • இவர் பாடிய திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

  • 3000 பாடல்கள் இயற்றினார்.

  • இத்திருமந்திரம் நிலையாமை உண்மைகளை வலியுறுத்துகின்றதுஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்பன போன்ற புகழ் பெற்ற தொடர்கள் இந்நூலில் இடம்பெற்றவையே.

இராவண காவியம்

  • இயற்றியவர்: புலவர் குழந்தை

  • இக்காப்பியம் ஐந்து காண்டங்களால் ஆனது. அவை1) தமிழகக் காண்டம், 2) இலங்கைக் காண்டம், 3) விந்தக் காண்டம், 4) பழிபுரி காண்டம், 5) இலங்கைக் காண்டம்.

  • இக்காப்பியக் காண்டம் ஒவ்வொன்றும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நூலில் அமைந்துள்ள மொத்தப் படலங்கள் ஐம்பத்தேழாகும். பாயிரம் உட்பட ஐந்து காண்டத்திலும் உள்ள மொத்தப் பாக்கள் 3100.

  • புலவர் குழந்தை தாம் படைத்த இக்காவியத்தைத் தமிழர்க்குக் காணிக்கையாக்கியுள்ளார். தமிழர்கள் தம் பண்பாட்டுச் சிறப்பை அறிந்து வாழ்வதற்காக இராவணனின் பெருமை படைப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்

  • புலவர் குழந்தை ஓலவலசுப் பண்ணைக்காரர்குடியில் 1-7-1906இல் பிறந்தார்.

  • முத்துச்சாமிக் கவுண்டர், சின்னம்மையார் என்பவர்களின் ஒரே மகனாவார்.

  • இவர் திண்ணைப் பள்ளியில் கற்ற காலம் மொத்தமாக எட்டு மாதங்களேயாம்.

  • இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர்.

  • இசைப் பாடல்களே இவர் முதன் முதலாகப் பாடிய பாடல்கள்.

  • ஆசிரியர் உதவியின்றித் தாமே முயன்று தமிழ் கற்றுச் சீரிய புலமை எய்தினார்

  • 1934இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் புலவர் பட்டம் பெற்றார்.

  • ஆசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பிற படைப்புகள்

  • இராவண காவியத்தைத் தவிர, புலவர் குழந்தை மரபுவழி யாப்பில் அமைந்த அரசியலரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல் ஆகியவற்றைப் படைத்துள்ளார்

  • திருக்குறள், தொல்காப்பியப் பொருளதிகாரம், நீதிக்களஞ்சியம் ஆகியவை அவரால் விளக்கவுரை எழுதப்பட்ட நூல்களாகும்.

பக்தி இலக்கியம் – குறிப்புகள்

  • பக்தி இலக்கியம் பெரிதும் வளர்ந்த காலம் பல்லவர் காலம் ஆகும்.
  • தேவாரம்
    • தே+வாரம்=தேவாரம்
    • கடவுளுக்கு சூட்டப்படுகின்ற பாமாலை என்று பொருள்.
  • சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான்
  • சிவபெருமானின் ஐன்தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

பன்னிரு திருமுறைகள் பகுப்பு

  • சைவ சமயப் பெரியவர்கள் பாடிய பாடல்கள் திருமுறைகள் எனப்படும்.
  • 1 , 2, 3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர் (சம்பந்தர் தேவாரம்)
  • 4, 5 , 6 திருமுறைகள் – திருநாவுக்கரசர் (தேவாரம்)
  • 7ம் திருமுறை – சுந்தரர் (சுந்தரர் தேவாரம்)
  • 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்-திருவாசகம் மற்றும் திருக்கோவையார்
  • ஒன்பதாம் திருமுறை – 9 பேர்
  • பத்தாம் திருமுறை – திருமூலர்
  • பதினொன்றாம் திருமுறை – திரு ஆலவாய் உடையார் முதலாக பன்னிருவர்
  • பன்னிரண்டாம் திருமுறை – சேக்கிழார் (பெரியபுராணம்)
  • திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
    இவர் 11 திருமுறைகளை மட்டுமே தொகுத்தார்
    பெரியபுராணம் பின்னால் எழுதப்பட்டது.
  • திருமுறைகளைதொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன்
    முதலாம் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் எனப்படுகிறான்
  • முதல் ஏழு திருமுறைகள் மூவர் தேவாரம் எனப்படும்.
    இதற்கு மூவர் தமிழ் என்று வேறு பெயரும் உண்டு.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் – மூவர் முதலிகள்எனப்படுவர்.
  • சைவ சமயக் குரவர்கள் நால்வர்

1. திருஞானசம்பந்தர்

2. திருநாவுக்கரசர்

3. சுந்தரர்

4. மாணிக்கவாசகர்

  • பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.

திருஞானசம்பந்தர்

  • இயற்பெயர் : ஆளுடைய பிள்ளை
  • பெற்றோர் – சிவபாத இருதயர் – பகவதி அம்மையார்
  • பிறந்த ஊர் – சீர்காழி 
  • இவர் பாடியவை: 1,2,3 திருமுறைகள்

சிறப்பு:

  • 23 இசைகளில் பாடியுள்ளார்.
  • யாழ்முறி இவருக்கு மட்டுமே உரியது.
  • திராவிட சிசு – ஆதிசங்கரரால்  போற்றப்பட்டார்.
  • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் – சுந்தரர்

செய்த அற்புதங்கள்

  • மழவன் மகளுக்கு ஏற்பட்ட கடுமையான முயலகன் என்னும் நோயைப் போக்கினார்.
  • கூன் பாண்டியன் வெப்பு நோயைப் நீக்கினார்.
  • திருமறைக்காட்டுக் கோவிலின் கதவை தம் பாட்டால் மூடும்படி செய்தார்.
  • திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் செய்தார்.

திருநாவுக்கரசர்

  • இயற்பெயர்: மருள் நீக்கியார்
  • பெற்றோர் : புகழனார், மாதினியார்
  • அக்கா : திலகவதியார்
  • பிறந்த ஊர்: திருவாமூர்
  • இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
  • சிறப்பு பெயர்கள்:
    திருநாவுக்கரசர்,
    வாகீசர்,
    அப்பர்,
    ஆளுடைய அரசு,
    தாண்டக வேந்தர்,
    தருமசேனர்
  • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர் -தமக்கை திலகவதியார்
  • முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் .
  • கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறியவர்
  • திங்களூரில் பாம்பு தீண்டி இறந்தவரை உயிர்ப்பித்தார்.
  • திருமறைக்காட்டுக் கோவில் கதவை திறக்க செய்தார்.

சுந்தரர்

  • இயற்பெயர்: நம்பி ஆரூரார் / ஆரூரார்
  • பெற்றோரோர்: சடையனார் – மாதினியார்
  • இவர் பாடியவை: 7 திருமுறை

சிறப்பு பெயர்கள் :

  • வன் தொண்டர்
  • தம்பிரான் தோழர்
  • திருத்தொண்டத்தொகை பாடியவர் சுந்தரர்

மாணிக்கவாசகர்

  • இயற்பெயர் தெரியவில்லை
  • பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
  • இவர் பாடியவை: 8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

  • அருள் வாசகர்
  • மணிவாசகர்
  • அழுது அடியடைந்த அன்பர்
  • தென்னவன் பிரமராயர்
  • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

நூல்கள்

  • திருக்கோவையாரும் திருவாசகமும் இவர் பாடியவை

ஒன்பதாம் திருமுறை ( திருவிசைப்பா

  • 9 பேர் பாடியது

பத்தாம் திருமுறை ( திருமந்திரம்) 

  • திருமூலர்
  • திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை
  • திருமந்திரத்தின் வேறு பெயர்கள்: தமிழ் மூவாயிரம்
  • முதல் சித்த நூல் யோக நெறியை கூறும் தமிழர் நூல்
    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்நூலின் சிறப்பு

பதினொன்றாம் திருமுறை (பிரபந்த மாலை)

  • 12 பேர் பாடியுள்ளனர்
  • 40 நூல்கள் உள்ளன
  • திருவாலவாயுடையார் (1)
  • காரைக்காலம்மையார் (நான்கு நூல்கள்)
  • கல்லாடர் (1)
  • நக்கீரர் (10)
  • கபிலர் (3)
  • பரணர் (1)
  • அதிரா அடிகள் 1
  • இளம்பெருமான் அடிகள் (1)
  • ஐயடிகள் (1)
  • சேரமான் பெருமான் நாயனார் (3)
  • பட்டினத்தார் (5)
  • நம்பியாண்டார் நம்பி (ஒன்பது நூல்கள் )
  • தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் நம்பியாண்டார் நம்பி
    64 நாயன்மார்களை பற்றி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்

காரைக்கால் அம்மையார்

  • இயற்பெயர் புனிதவதியார் 
  • காரைக்கால் – வணிக மரபினர்
  • சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி

12ம் திருமுறை (பெரியபுராணம்)

  • சேக்கிழார்
  • இயற்பெயர்: அருண்மொழித்தேவர்

சிறப்பு பெயர்கள் :

  • உத்தம சோழப் பல்லவன்
  • தொண்டர் சீர் பரவுவார்

நூல் அமைப்பு:

  • இரண்டு காண்டம் 13 சருக்கம் 4286 பாடல்கள்
  • உலகெலாம் என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்ட நூல்

 63 நாயன்மார்களில் மூவர் பெண்கள்

  • காரைக்கால்
  • அம்மையார்
  • இசைஞானியார்
  • மங்கையர்க்கரசி

நாலாயிர திவ்ய பிரபந்தம்

  • ஆழ்வார்களின் பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன. திராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
  • ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் – அன்பில் – அருளில் – தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம். 
  • முதலாழ்வார்கள்:
    பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

ஆழ்வார்கள் – பாசுரங்களின் எண்ணிக்கை

1.பொய்கை ஆழ்வார்- 100
2.பூதத்தாழ்வார்- 100
3.பேயாழ்வார்- 100
4.திருமழிசை ஆழ்வார்- 216
5.மதுரகவி ஆழ்வார்- 11
6.நம்மாழ்வார்- 1296
7.குலசேகர ஆழ்வார்-105
8.பெரியாழ்வார்- 473
9.ஆண்டாள்- 173
10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்- 55
11.திருப்பாணாழ்வார்- 10
12.திருமங்கை ஆழ்வார்- 1137
பொய்கையாழ்வார்
  • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
  • காலம் : 7ம்நூற்றாண்டு
  • நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் 
  • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பூதத்தாழ்வார்

  • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
  • காலம் :  7ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பேயாழ்வார்

  • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
  • காலம்: ஏழாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

திருமழிசையாழ்வார்

  • பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
  • காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
  • பாடல்கள் : 216

பெரியாழ்வார்

  • பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • காலம்: 9ம் நூற்றாண்டு 
  • எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
  • பாடிய பாடல் : 473

ஆண்டாள்

  • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
  • காலம் : 9ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
  • பாடிய பாடல் : 173

தொண்டரடி பொடியாழ்வார்

  • இயற்பெயர் : விப்ர நாராயணன்
  • பிறந்த ஊர் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு 
  • எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
  • பாடிய பாடல் : 55

திருமங்கையாழ்வார்

  • பிறந்த இடம் : திருக்குறையலூர்
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,   திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை,  பெரிய திருமடல்,சிறிய திருமடல்.
  • பாடிய பாடல் : 1253 
திருப்பாணாழ்வார்
  • பிறந்த ஊர் : உறையூர் (திருச்சி)
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : அமலனாதிபிரான்
  • பாடிய பாடல் : 10

குலசேகர ஆழ்வார்

  • பிறந்த இடம் : திருவஞ்சைக்களம்
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
  • பாடிய பாடல்  : 105

நம்மாழ்வார்

  • பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி
  • பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
  • எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
  • பாடல்கள் : 1296

மதுரகவி ஆழ்வார்

  • பிறந்த ஊர் : திருக்கோளூர்
  • காலம் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
  • எழுதிய நூல் : கண்ணி நுண் சிறுத்தாம்பு
  • பாடல்கள் : 96

ஐஞ்சிறுகாப்பியங்கள் – குறிப்புகள்

நாககுமார காவியம்

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – கி.பி.16ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 170
    சருக்கம் – 5
    பாவகை – விருத்தப்பா
  • சமயம் – சமணம்
  • பெயர்க்காரணம்:
    கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.
  • வேறு பெயர்:
    நாகபஞ்சமி கதை

உதயணகுமார காவியம்

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – கி.பி.15ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 369
    காண்டம் = 6
    காண்டங்கள்:
    • உஞ்சைக் காண்டம்
    • இலாவண காண்டம்
    • மகத காண்டம்
      வத்தவ காண்டம்
    • நரவாகன காண்டம்
    • துறவுக் காண்டம்
  • வேறு பெயர்: உதயணன் கதை

யசோதர காவியம்

  • ஆசிரியர் – வெண்ணாவலூர் உடையார் வேள்
  • காலம் – 13ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 320
    சருக்கங்கள் – 5
  • பாவகை – விருத்தம்
  • சமயம் – சமணம்

நீலகேசி

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – 6ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 894
    சருக்கம் – 10
  • பாவகை – விருத்தம்
  • சமயம் = சமணம்
  • வேறு பெயர்:
    நீலகேசி தெருட்டு
    நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)
  • நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்

சூளாமணி

  • ஆசிரியர் – தோலாமொழித் தேவர்
  • காலம் – கி.பி.பத்தாம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 2330
    சருக்கம் – 12
  • பாவகை – விருத்தம்
  • சமயம் – சமணம்
  • பெயர்க்காரணம்: மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.

 

நூல்

சமயம் பாவகை ஆசிரியர் அமைப்பு

நாக குமார காவியம்

சமணம் விருத்தம்  

5 சருக்கம், 170 பாடல்

உதயன குமார காவியம் சமணம் விருத்தம்  

6 காண்டம், 369 பாடல்

யசோதர காவியம்

சமணம் விருத்தம் வெண்ணாவலூர் உடையார் வேள் 5 சருக்கம், 320 பாடல்
நீலகேசி சமணம் விருத்தம்  

10 சருக்கம், 894 பாடல்

சூளாமணி

சமணம் விருத்தம் தோலாமொழித்தேவர்

12 சருக்கம்,  2330 விருதப்பாக்கள்

ஐம்பெரும் காப்பியங்கள் – குறிப்புகள்

  • காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.

ஐம்பெரும் காப்பியங்கள்

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சீவகசிந்தாமணி
  4. வளையாபதி
  5. குண்டலகேசி

சிலப்பதிகாரம்

  • இயற்றியவர்- இளங்கோவடிகள்
  • சமயம் – சமணம்

பெயர்க்காரணம்:

    • காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

  • குடிமக்கள் காப்பியம்
  • முத்தமிழ் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்

நூல் அமைப்பு

  • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.

மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்

    • “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
      உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
      ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்”  

காப்பியக் கதை

  • கோவலன் கண்ணகி திருமணத்தில் தொடங்கி, மாதவியின் நடனத்தால் மையல் கொண்ட கோவலன், கண்ணகியை விடுத்து, மாதவி மாட்டு விடுதலறியாவிருப்பினன் ஆகி, மணிமேகலையை மகளாய்ப் பெற்று, பல ஆண்டுகளுக்குப் பின் இந்திர விழாவில் கானல் வரிபாடும் நிலையில் ஊழ்வினை காரணமாக மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் மாதவி என அவளைப் பழித்து நீங்கி, கண்ணகியைத் தஞ்சமடைந்து, கவுந்தியடிகள் துணையுடன் மதுரை சென்று, மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக்கி, மதுரை வீதியில் பொற்கொல்லனிடம் சிலம்பு விற்கச் சென்று கள்வன் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு, மன்னன் கொன்று வா என ஆணையிடக் கொலைக் களத்தில் கோவலன் கொலைப்பட, வண்ணச் சீறடி மண்மகள் அறியாது புகாரில் வாழ்ந்த கண்ணகி மதுரை வீதியில் சீற்றமே உருவாய் அரண்மனை வாயில் புகுந்து மன்னனிடம் தன் கணவன் கள்வனல்லன் என்பதைச் சிலம்பை உடைத்து, மாணிக்கத்தைக் காட்டி தெளிவுப்படுத்த அதனால் குற்றம் செய்தேன் என மன்னன் மடிய, கோப்பெருந்தேவி உயிர் துறக்க,சினம் அடங்காப் பத்தினி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கி, வஞ்சி மாநகர் புகுந்து அங்குள்ள மலைக்குறவர் காண, விமானத்தில் ஏறி விண்ணுலகு சென்றாள். இதுவே சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகி கோவலன் கதையாகும்.

மணிமேகலை

  • இயற்றியவர்- சீத்தலை சாத்தனார்
  • சமயம் – பௌத்தம்

பெயர்க்காரணம்

  • காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்,  மணிமேகலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

  • இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)
  • இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.

நூல் அமைப்பு

  • முப்பது காதைகள் கொண்டது.

மூன்று கருத்துகள்

  • இளமை நிலையாமை
  • யாக்கை நிலையாமை
  • செல்வம் நிலையாமை 

காப்பியக் கதை 

  • கோவலன் கொலை செய்யப்பட, செய்தியறிந்த மாதவியும். அவள் மகள் மணிமேகலையும் பௌத்த சமயத்தில் சேர்ந்துதுறவியாகின்றனர். புத்தபிரானுக்கு மலர் வேண்டி மலர்வனம் புகுகின்றாள் மணிமேகலை. மணிமேகலை மீது காமம் கொண்ட இளவரசன் உதயகுமரன் அவளைப் பின் தொடர்கிறாள். தன்னைப் பொருள்விலையாட்டி எளக் கூறி இகழ்ந்தும் உதயகுமரன் பின்னால் தன் மனம் செல்வதையறிந்து வருந்துகிறாள் மணிமேகலை. இந்நிலையில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விட்டுவிடுகிறது. அங்குப் பழம்பிறப்பு அறிந்து, மூன்று மந்திரங்களும் பெறுகிறாள். ஆபுத்திரனின் அமுத சுரபியும் கோமுகிப் பொய்கையிலிருந்து கிடைக்கிறது. மந்திரத்தின் உதவியால் விண்ணில் பறந்து புகார் வந்து பசியால் வாடியோர்க்கு உண்டி கொடுத்து உயிர்கொடுக்கிறாள் உதயகுமரன்தரும் துன்பம் நீங்கமந்திரத்தின் உதவியால் காயசண்டிகை வடிவத்தை எடுத்துக்கொள்கிறாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமரன் தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொன்ற பழி மணிமேகலையை வந்தடைகிறது. அரசன் மகளைக் கொன்றதால் சோழ மன்னன் மணிமேகலையைர் சிறையில் அடைக்கிறான். மகனைப் பறி கொடுத்த அரசி. மணிமேகலையைப் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துகிறாள். தவவலிமையால் அவற்றிலிருந்து விடுபடுகிறாள். உண்மை உணர்ந்த அரசி அவளை விடுவித்துத் தன்னை மன்னிக்க வேண்டுகிறாள். பின்னர் மணிமேகலை காஞ்சி சென்று பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்பி அறவண அடிகளிடம் ஆசி பெறுகிறாள். இதுவே மணிமேகலையின் கதையாகும்.

சீவகசிந்தாமணி

  • இயற்றியவர்– திருத்தக்கதேவர்
  • தமிழில் விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி ஆகும்.
  • மணநூல் என்று அழைக்கப்படுகிறது.
  • சமயம்- சமணம்

நூல் அமைப்பு

  • 13 இலம்பகங்கள் 
  • 3145 பாடல்கள் கொண்டது.

காப்பியக் கதை 

  • காப்பியத்தலைவன் சீவகன். ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன், மனைவி விசயை. நாட்டை மறந்து அந்தப்புரத்தில் அடைக்கலமாகும் மன்னன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைக்கின்றான். அமைச்சன் தக்க நேரம் பார்த்துப் படையுடன் வந்து மன்னனைக் கொல்கிறான். அமைச்சன் சதியறிந்த மன்னன், மனைவி விசயையை மயிற்பொறியில் ஏற்றி வானில் பறக்கும்படிச்செய்கிறான். உயிர்தப்பிய விசயை சுடுகாட்டில் இறங்குகிறாள். அங்கு அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. சீவகன் என்று பெயர் மட்டும் சூட்டி மகனோடு வாழ முடியாது தாய் விசயை மறைந்து வாழ்கிறாள். கந்துக்கடன் எனும் வணிகன் சீவகனை எடுத்துச்சென்று, அச்சணந்தி அடிகளிடம் கல்வி பயில அனுப்புகிறான். கல்வி கேள்விகளில் சிறந்தவனாக வளர்கின்றான். இளமைப் பருவம் எய்திய சீவகன் தன் அழகாலும் ஆண்மையாலும் போட்டிகளில் வெற்றி பெற்று, காந்தருவ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எண்மரை மணக்கிறான். கட்டியங்காரனைப் போரில் கொன்று தன் தந்தையின் நாட்டை மீட்டு அரசாள்கிறான். மனைவியரோடு மகிழ்ச்சியாய், நற்புதல்வர்களைப் பெற்று இருக்குங்காலை தோட்டத்தில் பார்த்த ஒரு காட்சியால் வாழ்க்கையில் விரக்தியுற்றுத் துறவு பூண்டு முக்தி அடைகிறான். இதுவே சீவக சிந்தாமணி தரும் சீவகனின் கதையாகும்.

வளையாபதி

  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • சமண சமயம் சார்ந்த நூல்

காப்பியக் கதை 

  • நவகோடி நாராயணன் ஒரு வணிகன். இவன் வேறு சாதிப் பெண்ணை மணந்தான். இதனால் அவன் குலத்தோர் வெறுக்க, வெறுப்பைத் தாங்க இயலாது அவனும் அயல் நாடு சென்றுவிட, அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான். வைசிய புராணம் தரும் கதை இதுவேயாகும்.

குண்டலகேசி

  • குண்டலகேசி என்பதற்கு  சுருண்ட கூந்தலை உடையவள் என்பது பொருள் ஆகும்.
  • இயற்றியவர்– நாதாகுத்தனார்
  • 25 பாடல்கள் கிடைத்துள்ளன.
  • சமயம்- பௌத்தம்

காப்பியக் கதை 

  • வணிகன் மகள் பத்தரை. இவள் காளன் என்ற கள்வனை விரும்புகிறாள். மகளின் வற்புறுத்தலால் தந்தையும் கள்வனைச் சிறையிலிருந்து மீட்டு அவளுக்கு மணம் செய்து வைக்கிறார். இன்பமான வாழ்க்கையின் இடையில் ஊடலின்போது சினத்தில் பத்தரை தன் கணவனை நீ கள்வன் தானே? என்று கூறிவிட அதனால் சினங்கொண்ட காளன் (கணவன்) தெய்வத்தை வணங்க என்று பொய் கூறி மலையுச்சிக்கு அவளை அழைத்துச் சென்று கொல்லப் போவதாகக் கூறுகின்றான். கணவனுக்கு அறிவுரை கூறியும் அவன் திருந்தாத நிலையில் அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து கணவனை மலையுச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகின்றாள். தான் செய்த பாவம் நீங்கிடப் பௌத்த சமயத்தில் சேர்ந்து அறக் கருத்துக்களைப் பரப்பி இறுதியில் புத்தபிரானின் திருவடியை அடைகிறாள்.

பதினெண்கீழ்க்கணக்கு – குறிப்புகள்

  • வெண்பா யாப்பினைப் பயன்படுத்தி, குறைவான அடிகளால் ஐம்பது முதல் ஐந்நூறு பாடல்களைக் கொண்டு விளங்குவது கீழ்க்கணக்கு என்றும் கூறுகிறது பன்னிரு பாட்டியல்.
  •  இத்தொகுப்பில்  பதினெட்டு நூல்கள் அடங்கும். இப்பதினெட்டு நூல்களையும்
    • நீதி நூல்கள் (11 நூல்கள்)

1) திருக்குறள்
2)நாலடியார் 
3) இன்னா நாற்பது
4) இனியவை நாற்பது 
5)நான்மணிக்கடிகை
6)ஆசாரக்கோவை 
7) சிறுபஞ்சமூலம்
8) ஏலாதி
9)திரிகடுகம் 
10)முதுமொழிக்காஞ்சி
11) பழமொழி நானூறு

    • அக நூல்கள் (6 நூல்கள்)

1) ஐந்திணை ஐம்பது
2)ஐந்திணை எழுபது 
3) திணைமொழி ஐம்பது
4)  திணைமாலை நூற்று ஐம்பது
5) கைந்நிலை
6)கார் நாற்பது 

    • புற நூல் (ஒன்று)

1)களவழி நாற்பது

என மூன்று பிரிவுகளுள் அடக்கலாம்.

திருக்குறள்

பெயர்க்காரணம்:

  • குறள் வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளதால்  இப்பெயர் பெற்றது.
  • திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”
  • ஆசிரியர் – திருவள்ளுவர்
  • பாவகை – குறள் வெண்பா

திருக்குறளின் வேறு பெயர்கள்:

  • திருவள்ளுவம்
  • தமிழ் மறை
  • பொதுமறை
  • முப்பால்
  • பொய்யாமொழி
  • தெய்வநூல்

நூல் பகுப்பு முறை:

  • பால் – 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
  • அதிகாரம் – 133
  • பாடல்கள் – 1330
  • இயல்கள் – 9

நாலடியார்

பெயர்க்காரணம்:

  • நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
  • ஆசிரியர் – சமண முனிவர்கள்
  • தொகுத்தவர் – பதுமனார்
  • பாடல்கள் – 400
  • பொருள் – அறம்
  • பா வகை – வெண்பா

வேறு பெயர்கள்:

  • நாலடி நானூறு
  • வேளாண் வேதம்

நூல் பகுப்பு:

  • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
    • அறத்துப்பால் – 13 அதிகாரங்கள்
    • பொருட்பால் – 24 அதிகாரங்கள்
    • இன்பத்துப்பால் – 3 அதிகாரங்கள்

நூலின் சிறப்பு:

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.

நான்மணிக்கடிகை

பெயர்க்காரணம்:

  • நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற  அணிகலன் போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள்  இடம்பெறுவதால் நான்மணிக்கடிகை எனும் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – விளம்பி நாகனார்
  • ஊர் – விளம்பி
  • பாடல்கள் -104
  • பாவகை – வெண்பா

இன்னா நாற்பது

பெயர்க்காரணம்:

  • இன்னா – துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால்  இன்னா நாற்பது எனப்படுகிறது.
  • ஆசிரியர் – கபிலர்
  • பாடல்கள் – 1 + 40
  • பாவகை – வெண்பா

இனியவை நாற்பது

பெயர்க்காரணம்:

  • இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – பூதஞ்சேந்தனார்
  • பாடல்கள் – 1 + 40
  • பாவகை – வெண்பா

திரிகடுகம்

பெயர்க்காரணம்:

  • சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
  • திரி – மூன்று
  • கடுகம் – காரமுள்ள பொருள்
  • ஆசிரியர் – நல்லாதானர்
  • பாடல்கள் – 100 + 1
  • பாவகை – வெண்பா

ஆசாரக்கோவை

பெயர்க்காரணம்:

  • மனித வாழ்விற்கு இன்றியமையாத ஒழுக்கநெறிகள் பலவற்றையும் ஒன்றிணைத்துக் கூறும் ஒரு தொகுப்பு நூல் என்பதால் அப்பெயர் பெற்றது.
  • ஆசிரியர் -பெருவாயின் முள்ளியார்
  • பாடல்கள் – 100
  • பாவகை – பல்வேறு வெண்பா வகைகள்

பழமொழி நானூறு

பெயர்க்காரணம்:

  • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி  இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
  • ஆசிரியர் -முன்றுறை அரையனார்
  • பாடல்கள் – 400
  • பாவகை – வெண்பா

சிறுபஞ்சமூலம்

பெயர்க்காரணம்:

  • கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.
  • ஆசிரியர் – காரியாசான்
  • பாடல்கள் – கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
  • பாவகை – வெண்பா

முதுமொழிக்காஞ்சி

பெயர்க்காரணம்

  • மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
  • ஆசிரியர் – மதுரைக் கூடலூர்க்கிழார்
  • பாடல்கள் – 100
  • பாவகை – குறள் தாழிசை

ஏலாதி

பெயர்க்காரணம்:

  • ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
  • ஆசிரியர் – கணிமேதாவியார்
  • பாடல்கள் – பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
  • பாவகை – வெண்பா

ஐந்திணை ஐம்பது

பெயர்க்காரணம்:

  • ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – மாறன் பொறையனார்
  • பாடல்கள் – 50(5 X 10 = 50)
  • திணை – ஐந்து அகத்திணை
  • திணை வைப்பு முறை – முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
  • பாவகை – வெண்பா

ஐந்திணை எழுபது

  • ஐந்து தினைகளுக்கும் பதினாங்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் -மூவாதியார்
  • பாடல்கள் – 70(5*14=70)
  • திணை – ஐந்து அகத்தினணகளும்
  • திணை வைப்பு முறை – குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
  • பாவகை  – வெண்பா

திணைமொழி ஐம்பது

பெயர்க்காரணம்:

  • திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.
  • ஆசிரியர் – கண்ணஞ் சேந்தனார்
  • பாடல்கள் – 50(5*10=50)
  • திணை – ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை – குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
  • பாவகை  – வெண்பா

திணைமாலை நூற்றைம்பது

பெயர்க்காரணம்:

  • திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – கணிமேதாவியார்
  • பாடல்கள் – 150(5*30=150)
  • திணை – ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை – குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
  • பாவகை – வெண்பா

கைந்நிலை

பெயர்க்காரணம்:

  • கை = ஒழுக்கம்
  • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – புல்லாங்காடனார்
  • பாடல்கள் – 60(5*12=60)
  • திணை – ஐந்து அகத்திணைகளும்
  • பாவகை – வெண்பா

கார் நாற்பது

  • கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையினாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது. 
  • இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.
  • ஆசிரியர் – மதுரைக் கன்னங் கூத்தனார்
  • பாடல்கள் – 40(அகநூல்களில் அளவில் சிறியது)
  • திணை – அகத்திணை – முல்லைத்திணை
  • பாவகை – வெண்பா

களவழி நாற்பது

பெயர்க்காரணம்:

  • களம் = போர்க்களம்.
  • போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர் – பொய்கையார்
  • பாடல் – 40
  • திணை – புறத்திணை – வாகைத்திணை
  • பாவகை – வெண்பா

 

எண்

நூல்

பொருள்

பாடல்

ஆசிரியர்

1

நாலடியார்

அறம்

400

சமண முனிவர்கள்

2

நான்மணிக்கடிகை

அறம்

106

விளம்பிநாகனார்

3

இன்னா நாற்பது

அறம்

40

கபிலர்

4

இனியவை நாற்பது

அறம்

40

பூதஞ்சேந்தனார்

5

திருக்குறள்

அறம்

1330

திருவள்ளுவர்

6

திரிகடுகம்

அறம்

100

நல்லாதனார்

7

ஆசாரக்கோவை

அறம்

100

பெருவாயில் முள்ளியார்

8

பழமொழி நானூறு

அறம்

400

முன்றுறை அரையனார்

9

சிறுபஞ்சமூலம்

அறம்

102

காரியாசான்

10

முதுமொழிக் காஞ்சி

அறம்

100

கூடலூர் கிழார்

11

ஏலாதி

அறம்

80

கணிமேதாவியார்

12

கார் நாற்பது

அகம்

40

கண்ணன் கூத்தனார்

13

ஐந்திணை ஐம்பது

அகம்

50

மாறன் பொறையனார்

14

ஐந்திணை எழுபது

அகம்

70

மூவாதியார்

15

திணைமொழி ஐம்பது

அகம்

50

கண்ணன் சேந்தனார்

16

திணைமாலை நூற்றைம்பது

அகம்

150

கணிமேதாவியார்

17

கைந்நிலை

அகம்

60

புல்லாங்காடனார்

18

களவழி நாற்பது

புறம்

40

பொய்கையார்

என்னவன்

ஆதியும் அந்தமுமாய் என் ஆவியில் கலந்தவன்

அன்பை அள்ளித் தந்து  என்னுள்ளம் கவர்ந்த கள்வன்

அவனின்றி நானில்லை என்றே அனுதினமும் சொல்லி திரிந்தேன் 

அவனின்றி அணுவும் அசையாது என்பதை உணர்ந்தேன்

என்னவனே கோவிந்தா!

உனக்காய் காத்திருக்கும் மீரா….

என் அன்பு மகனே கிருஷ்ணா!

என்னவனின் இடத்தில் வாங்கி நீ அனுப்பி வைத்த பிறந்தநாள் பரிசை எதிர்ப்பார்த்தே காத்திருக்கிறேன்….

அந்த பரிசுக்குத்தான் நமக்குள் எத்தனை சண்டைகள்…..

இறுதியில் வளர்ந்த குழந்தை எனக்காக வளரும் குழந்தையான நீயே விட்டுக் கொடுத்தாய்……

கவலை கொள்ளாதே மகனே உனக்கான பரிசு என்னிடத்தில் காத்திருக்கிறது உன் வரவிற்காய்!

 

wpChatIcon
error: Content is protected !!