-
0 Comments
- கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி”- புறப்பொருள் வெண்பாமாலை (ஐயனாரிதனார்)
- சங்கத்தால் ஆய்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் சங்க இலக்கியம் ஆகும்.
- சங்க இலக்கியம் வேறுபெயர் – திணை இலக்கியம், பதினெண்மேற் கணக்கு, பாட்டுத்தொகை (பாட்டு- பத்துப்பாட்டு, தொகை- எட்டுத்தொகை)
எட்டுத்தொகை
-
- அகம் சார்ந்த நூல்கள்
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
- அகநானூறு
- புறம் சார்ந்த நூல்கள்
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
- அகமும் புறமும் சார்ந்த நூல்
- பரிபாடல்
- அகம் சார்ந்த நூல்கள்
அகம் சார்ந்த நூல்கள்
நற்றிணை
- நல்ல திணை
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 9-12
- பாடல் எண்ணிக்கை: 400
- பாடிய புலவர்கள்:175
- வேறுபெயர்: நற்றிணை நானூறு
- தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
- கடவுள் வாழ்த்துப் பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
- நற்றிணையில் இடம்பெற்றுள்ள இசைக்கருவிகள் – முழவு, முரசு, தண்ணுமை, கிணைப்பாறை, சிறுபறை, குழல்
- அறவோன்- மருத்துவன்
- கணியர் – சோதிடம் பார்ப்பவர்
- படிவ மகளிர்– தவம் செய்யும் பெண்கள்
குறுந்தொகை
- நல்ல குறுந்தொகை
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 4 – 8
- பாடல் எண்ணிக்கை: 400
- தொகுத்தவர்: பூரிக்கோ
- பெண்பாற் புலவர்கள்: அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஔவையார், காக்கைப்பாடினியார்
- குறவன்- நிலத்தை உழுது தினை விதைப்பவன்
- சேணான்- உயர்வான பரணின் மீது இருப்பவர்
- கோடியர்– கூத்தர்
- அணிகள்: தலையணிகள், காசுமாலைகள், பூங்குழை, மின்னிழை, சேயிழை, மாணிழை
- ஆரியக்கூத்தர்- மூங்கிலில் கட்டிய கயிற்றின் மேல் ஆடுபவர்.
- விழா நிறைந்த ஊர் – சாறு கொள் ஊர்
- நாழிகைக் கணக்கர் – இரவில் தூங்காது காலக்கணக்கைக் கூறுபவர்.
- கடப்பாட்டளன் – தன் பொருள் பலருக்கும் பயன்பட வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்டவன்.
ஐங்குறுநூறு
- ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 3-6
- பாடல் எண்ணிக்கை: 500
- பாடிய புலவர்கள்: 5
- தொகுத்தவர்: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
- தொகுப்பித்தவர்: யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
- கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
- நொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்தது.
- சொல்லாட்சியால் பெயர் வைத்தல் – வேட்கைப்பத்து, வேழப்பத்து, களவன்பத்து
- போரில் இறந்த வீரர்களுக்கு கல்நட்டு அக்கல்லில் வீரரின் உருவத்தையும் பெயரையும் எழுதி, எழுத்துரை ‘நடுகல்’ என்னும் பெயருடன் வழிப்பட்டனர்.
கலித்தொகை
- கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: அகம்
- பாடல் எண்ணிக்கை: 150
- பாலை- 35 பாடல்கள்
- குறிஞ்சி- 29 பாடல்கள்
- மருதம்- 35 பாடல்கள்
- முல்லை- 17 பாடல்கள்
- நெய்தல்- 37 பாடல்கள்
- பாடிய புலவர்கள்: 5
- ‘ஏறுதழுவுதல்’ குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
- போர்க்களத்தில் வெற்றிப் பெற்ற பின் ‘துணங்கை கூத்து’ ஆடுவது குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
- மகாபாரதம், இராமாயண காப்பிய செய்திகள் இடம்பெற்றுள்ளது.
- உரை- நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.
அகநானூறு
- அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: அகம்
- அடிவரையறை : 13-31
- பாடல் எண்ணிக்கை: 400
- பாடிய புலவர்கள்: 145
- தொகுத்தவர்: மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திர சன்மர்
- தொகுப்பித்தவர்: பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
- வேறுபெயர்: நெடுந்தொகை
- நூல் அமைப்பு:
- களிற்றியானை நிரை- 1-120
- மணிமிடைப்பவளம்-121- 300
- நித்திலக் கோவை – 301- 400
- பாடல் வைப்புமுறை
- பாலைத்திணை- 1,3,5,7,… ஒற்றைப்படை எண்ணாக வருபவை
- குறிஞ்சித்திணை – 2,8,12,18….
- முல்லைத்திணை – 4,14,24,…
- மருதத்திணை- 6,16,26,…..
- நெய்தல் திணை – 10,20,30,……
- குடவோலை முறை பற்றி குறிப்பிடுகிறது.
- காவிரிக் கரையில் பங்குனி விழா நடைபெறுவது பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.
புறம் சார்ந்த நூல்கள்
புறநானூறு
- புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: புறம்
- பாடல் எண்ணிக்கை – 400
- வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு
- புறநானூறு தோன்றிய காலம் தமிழகத்தின் வீரயுகம் என்றும் தமிழகத்தின் பொற்காலம் என்றும் அழைக்கபடுகிறது.
- பண்டைய காலத்தில் வாழ்ந்த பேரரசர்கள்,சிற்றரசர்கள், வீரர்கள் பற்றிய செய்திகளையும் வழிபாட்டு முறைகள், மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பற்றி செய்திகளையும் தருவதால் தமிழரின் வரலாற்றுப் பெட்டகம் என்று அழைக்கபடுகிறது.
- கடையேழு வள்ளல்கள்
- பாரி-பறம்பு மலை
- பேகன்-பழனி மலை
- ஓரி- கொல்லிமலை
- காரி- மலையமான் நாடு
- ஆய்-பொதியமலை
- அதியன்-தகடூர்
- நள்ளி- தோட்டி மலை
பதிற்றுப்பத்து
- பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்: புறம்
- பாடல் எண்ணிக்கை- 100 (கிடைத்தவை 80 )
- பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
- இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.
- ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை,வண்ணம், தூக்கு, பெயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
- திருமணத்தின் போது அருந்ததி என்னும் விண்மீனைப் பார்க்கும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறது.
- நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.

அகமும் புறமும் சார்ந்த நூல்
பரிபாடல்
- பரிந்து செல்லும் ஓசையுடைய பாடல்களை கொண்டுள்ளதால் பரிபாடல் எனும் பெயர் பெற்றது.
- பாடுபொருள்- அகம் புறம் சார்ந்தது.
- பாடல் எண்ணிக்கை-70(கிடைத்தவை 22)
- திருமால்-6
- முருகன்-8
- வையை-8
- அடிவரையறை – 25-40
- பாடிய புலவர்கள்- 13
- வல்லோன்- ஓவியம் வரைபவர்
- உரை- பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.
- அகலிகை, மன்மதன் ஓவியங்கள் திருபரங்குன்றத்தில் இடம்பெற்றிருந்ததை பரிபாடல் மூலம் அறிய முடிகிறது.
பத்துப்பாட்டு
- திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது.
- ஆற்றுப்படை நூல்கள்
- திருமுருகாற்றுப்படை: நக்கீரர்
- பொருநராற்றுப்படை: முடத்தாமக் கண்ணியார்
- சிறுபாணாற்றுப்படை: நல்லூர் நத்தத்தனார்
- பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- மலைபடுகடாம்: பெருங்கெளசிகனார்
- அகம் சார்ந்த நூல்கள்
- முல்லைப்பாட்டு : நப்பூதனார்
- குறிஞ்சிப்பாட்டு – கபிலர்
- பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- புறம் சார்ந்த நூல்கள்
- திருமுருகாற்றுப்படை: நக்கீரர்
- பொருநராற்றுப்படை: முடத்தாமக் கண்ணியார்
- சிறுபாணாற்றுப்படை: நல்லூர் நத்தத்தனார்
- பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- மலைபடுகடாம்: பெருங்கெளசிகனார்
- மதுரைக்காஞ்சி: மாங்குடி மருதனார்
- அகம் புறம் சார்ந்த நூல்
- நெடுநல்வாடை
- பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது.
திருமுருகாற்றுப்படை
- பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.
- இது 317 அடிகள் கொண்டது.
- முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
- இயற்றியவர் நக்கீரர்.
- இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.
பொருநராற்றுப்படை
- சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.
- இயற்றியவர் – முடத்தாமக் கண்ணியார்
- இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
- போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.
பெரும்பாணாற்றுப் படை
- இயற்றியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பாட்டுடைத் தலைவன் – காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.
- 500 அடிகள் கொண்டது.
- பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.
சிறுபாணாற்றுப் படை
- இயற்றியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
- பாட்டுடைத் தலைவன் -ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்
- இது 269 அடிகள் கொண்டது.
- சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.
மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)
- இயற்றியவர் – இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
- பாட்டுடைத் தலைவன் – நன்னன் சேய் நன்னன்
- 583 அடிகள் கொண்டது.
- பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.
- மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
மதுரைக் காஞ்சி
- பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது.
- இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றியது.
- மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சி – நிலையாமை).
குறிஞ்சிப் பாட்டு
- இயற்றியவர் – கபிலர்
- இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.
- குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.
- பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.
- இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
முல்லைப் பாட்டு
பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.
இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.
பட்டினப்பாலை
- பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது பொருள்.
- 301 அடிகள் கொண்டது.
- இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.
- இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.
- இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
- பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.
- அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.
நெடுநல்வாடை
இது 188 அடிகள் கொண்டது.
இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.
