இரண்டாம் பருவம் – அலகு-3 பாடக்குறிப்புகள்

அலகு- 3: இக்கால இலக்கியம் -I

1. பாரத சமுதாயம் வாழ்கவே – பாரதியார்

பாரதியார் குறிப்பு

  • இயற்பெயர்: சுப்பிரமணியன்.

  • பெற்றோர்: சின்னச்சாமி ஐயர் – இலக்குமி அம்மாள்.

  • காலம்: 11.12.1882 – 11.09.1921.

  • அறிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி.

  • முப்பெரும் படைப்புகள் : கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்.

  • பிற படைப்புகள்: பாப்பா பாட்டு, பகவத் கீதை, புதிய ஆத்திசூடி, சந்திரிகையின் கதை, ஞான ரதம், தேசிய கீதங்கள்.

  • புனைப்பெயர்கள்: காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி, ஷெல்லிதாசன்.

  • சிறப்பு பெயர்கள்: மகாகவி, மக்கள் கவிஞர், தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, முண்டாசுக் கவிஞன்.

  • பாரதியின் வாழ்த்து: பாரத சமுதாயம் என்ற தலைப்பில் பொதுவுடைமைக் கொள்கை குறித்து விளக்குகின்றார். பாரத நாட்டில் வாழும் மக்களை “வாழ்க வாழ்க“ என்று வாழ்த்துகின்றார், மேலும் சமுதாயம் வெற்றிப் பாதை நோக்கியே செல்லும் என்பதை அறிவிக்க “ஜய ஜய” என்று இசை பாடி மகிழ்கின்றார்.

  • பொதுவுடைமைக் கொள்கை: தான் வாழ்ந்த காலத்தில் பாரதத்தில் வாழ்ந்திருந்த 30 கோடி மக்களும் பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என விரும்பினார். அக்கொள்கையைப் பின்பற்றும் சமுதாயம் ஒப்பில்லாத சமுதாயமாகவும், உலகத்திற்குப் புதுமையான சமுதாயமாகவும் விளங்கும் என்று கூறுகின்றார்.

    • இக்கொள்கையைப் பின்பற்றினால், ஒரு மனிதனின் உணவை இன்னொரு மனிதன் தட்டிப் பறிக்கும் வழக்கம் இருக்காது.

    • ஒரு மனிதனைத் துன்பப்படுத்தித் தான் மட்டும் சுகமாக வாழும் பழக்கம் இருக்காது.

  • இயற்கை வளம் நிறைந்த நாடு: இனிமையான சோலைகளாலும், நெடிய வயல்களாலும் சூழப்பட்ட பாரத நாட்டில் கனியும், கிழங்கும், தானியங்களும் கணக்கின்றி கிடைக்கின்றன. எனவே, ஒரு மனிதனின் உணவை இன்னொரு மனிதன் பறித்து உண்ணும் வழக்கம் இருக்கத் தேவையில்லை.

  • புதிய கொள்கை: “தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை என்றால், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் இந்த உலகத்தினை அழித்திட வேண்டும் என்ற விதியைப் புதிதாக இயற்றுவோம். அதை எப்போதும் கடைபிடிப்போம்” என்று சினமுடன் உரைக்கின்றார்.

  • சமத்துவம்: “எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்” என்பது இறைத் தத்துவம். ஆகையால் சாதி, இனம், மதம் என்ற கட்டுக்களை அறுத்தெறிய வேண்டும் என்பது பாரதியின் கனவு.

  • வேற்றுமையில் ஒற்றுமை: மக்கள் அனைவரும் மன அமைதியுடன் வாழ்ந்து, இறைவனை அடைகின்ற வழியை இந்தியா உலகிற்கே கற்றுக் கொடுக்கும். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு.

  • சமதர்மக் கொள்கை: சாதி, மதம், இனம் என வெவ்வேறாக இருப்பினும், இங்கு வாழும் மக்கள் அனைவரும்:

    • ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களே! ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களே! எல்லோரும் ஒரு எடை கொண்டவர்களே!.

    • அனைவருக்கும் ஒரு விலையே!.

  • எல்லோரும் இந்நாட்டு மன்னர்: இந்திய நாட்டில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களை மன்னர்களாக எண்ணி வாழ வேண்டும் என்றும், சுதந்திர மனப்போக்குடன் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் சூளுரைக்கின்றார்.

2. சிறுத்தையே வெளியில் வா – பாரதிதாசன்

பாரதிதாசன் குறிப்பு

  • இயற்பெயர்: கனகசுப்புரத்தினம்.

  • பெற்றோர்: கனகசபை- லட்சுமியம்மாள்.

  • காலம்: 29.04.1891-21.04.1964.

  • படைப்புகள்: அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், பிசிராந்தையார், தமிழச்சியின் கத்தி.

  • விருதுகள்: 1946 இல் புரட்சிக்கவி என்ற பட்டம் பெற்றார். 1968 இல் பிசிராந்தையார் என்ற நூல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

  • சிறுத்தையே வெளியில் வா (வலியுறுத்தல்): தமிழரின் உரிமை காக்க, தமிழ் மொழியை மேம்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் வலியுறுத்துகின்றார்.

  • செயல் செய்ய புறப்படு: அடிமைத்தளத்தில் இருந்த கதவுகள் திறக்கப்பட்டு விட்டன. சிறுத்தை போன்ற இளைஞர்களே வெளியே வாருங்கள்! எலி என இகழ்ந்தவர்களுக்கு முன்பாக, புலி என காட்டிட செயல் வீரர்களாகப் புறப்படுங்கள்!

  • நள்ளிரவை பகல் என நம்பியது போதும். பறவை போல சிறகை விரித்து உயர பறக்க முயற்சி செய்யுங்கள்! சிங்கம் போன்ற இளைஞர்களே, தாய்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க உங்கள் சிந்தனைகளைச் செயல்படுத்துங்கள்!

  • விழித்தெழு தமிழா: தாய்நாட்டைக் கழுதை போன்ற சிந்தனை கொண்டவர்கள் ஆட்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. வெறும் கையை ஏந்தி வந்த கயவர்கள் பொய்களை உரைத்து, தமிழ் மொழிக்குத் தடை விதித்து நாட்டைக் கைப்பற்றி விட்டனர். நம் உரிமைகளைப் பறித்து, அவற்றை அவர்களுடையது என்று கூறுகின்றனர். காலங்காலமாக வீரத்துடன் வாழ்ந்த நாம் இதைக் கேட்டுக் கொண்டு இருக்கக் கூடாது; மொழிப் பற்றைப் புதுப்பித்துக் கொண்டு விழித்தெழுங்கள்!

  • தாய்மொழிக்கு புதுமை சேர்ப்போம்: மானத்திற்கு அஞ்சி வாழ்ந்த தமிழினம், புகழ்ச்சியை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கும். வலிமை மிகுந்த மரபில் வந்த இளைஞர்களே, உங்கள் கைகளின் செயல்திறனைக் காட்ட வாருங்கள்! உயர்ந்த குறிக்கோள்கள் நிறைந்த இளைஞர் கூட்டத்தைக் கூட்டுங்கள்! கடல் போல பகை வளர்ந்துள்ளது. ஆகவே, தாய்மொழிக்கு விடுதலை தரவும், தமிழ் மொழிக்குப் புதுமை சேர்க்கவும் மக்களை ஒன்று சேர்த்து தமிழர்களின் வாழ்வை உயர்த்திடுங்கள்!

3. கத்தியின்றி ரத்தமின்றி – நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் குறிப்பு

  • இயற்பெயர்: வெ. இராமலிங்கம் பிள்ளை.

  • பெற்றோர்: வெங்கடராமன் பிள்ளை – அம்மணியம்மாள்.

  • பிறந்த ஊர்: நாமக்கல் மாவட்டம் – மோகனூர்.

  • காலம்: 19.10.1888-24.08.1972.

  • சிறப்பு பெயர்: காந்தியக் கவிஞர்.

  • சிறப்பு பெற்ற பாடல் வரிகள்: “தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”.

  • படைப்புகள்: மலைக்கள்ளன், அவளும் அவனும், என் கதை (தன் வரலாறு), காந்தி அஞ்சலி, வள்ளுவரின் உள்ளம்.

  • நோக்கம்: நாமக்கல் கவிஞர் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். அகிம்சை நெறியில் தேசத்திற்காகப் போராட வருமாறு மக்களை அழைக்கின்றார்.

  • புதுமையான போர்: கத்தியும் இல்லாமல் இரத்தமும் இல்லாமல் ஒரு யுத்தம் நடைபெறுகின்றது. உண்மையான வழியில் போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்ற யாவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். ஒளிந்து கொண்டு பகைவர் மீது குண்டு எறிந்து கொல்லும் விருப்பம் இல்லாத இந்தப் போராட்டத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது.

  • எதிரியென்று யாருமில்லை: இந்தப் போராட்டத்தில் பகைவர்களை அழிக்கக் குதிரைப்படை, யானைப்படை இல்லை. உயிர்களைக் கொல்லும் விருப்பம் இல்லை. எதிரி என்று யாரையும் எண்ணுவதில்லை. யார் மீதும் கோபம் இல்லை, அவர்களை வென்றாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை.

  • தனக்குத் துன்பத்தையே கொடுத்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது சாபம் இடுவதில்லை. பாவத்தின் செய்கைகளை நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை.

  • தெய்வ மார்க்கம்: இப்படி ஒரு மாறுபட்ட போரை யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது. முன்பு செய்த புண்ணியத்தால் சாந்தம் நிறைந்த காந்தி என்ற மகானை இத்தேசத்தில் பெற்றிருக்கின்றோம். அவர் காட்டுகின்ற அகிம்சையின் செம்மையான வழியில், மனிதர் எவருக்கும் தீங்கு நேராத முறையில் நடைபெறுகின்ற இந்தப் போரில் கலந்து கொள்ளுமாறு தேச மக்களை அழைக்கின்றார்.

4. மீன்கள் – தமிழ்ஒளி

தமிழ்ஒளி குறிப்பு

  • இயற்பெயர்: விஜயரங்கம்.

  • காலம்: 21.09.1924 – 29.03.1965.

  • புனைப்பெயர்கள்: தமிழ் ஒளி, விஜயரங்கம், விஜயன், சி. வி. ர..

  • நூல்கள்: கவிஞனின் காதல், வீராயி, மே தின ரோசா, விதியே வீடியோ, திருக்குறளும் கடவுளும், தமிழர் சமுதாயம்.

  • வான்கடல் முத்துக்கள்: ஏழைகள் வாழும் ஓட்டை விழுந்த குடிசையானது விண்ணை நோக்கி நீண்டிருக்கும் கடலில் கிடைக்கும் முத்துக்களோ? அல்லது, இம்மாநிலத்தில் உழைப்பவர்களின் உடலில் உண்டான தழும்புகளோ? என்று கவிஞர் வினவுகிறார்.

  • பெண்களின் சோக உணர்ச்சி சிதறல்கள்: செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களின் கண்களெல்லாம் குடிசையில் உள்ள பொத்தலை நோக்கியே துடித்தபடி கிடக்கின்றனவா? சொந்தமாய் உரிமையை இழந்திருக்கக்கூடிய பெண்கள் என்பது சோக உணர்ச்சியின் சிதறல்கள் தானோ என்று வருத்தத்துடன் பாடுகிறார்.

  • கண்களோ விண்மீன்கள்: இரவுதான் வறுமையில் வாடுவோர்க்கான கந்தல் உடை என்றால் அவற்றைக் காணும் கண்களா விண்மீன்கள்? வான்குன்றிலிருந்து சிதறும் நீர் துளிகளா அருந்தக் கூ கூட இல்லாத மக்களின் கண்ணீர்? எனப் பசியில் வாடுவோரின் துயரைப் பேசியுள்ளார்.

  • காலம் எழுதும் எழுத்துக்கள்: பிச்சைக்காரரது உள்ளத்தின் ஏக்கங்கள் காலத்தால் எழுதப்பட்ட எழுத்துக்களோ என்று வருத்தத்துடன் பாடுகிறார்.

  • தொழிலாளர்களின் எண்ணங்கள்: வெய்யில் போன்று சுடக்கூடிய கொடிய அரசாங்கம் வாட்டினாலும், வேலிகட்டி அடைத்து வைத்திருந்தாலும், பொய்யாக வாழாத தொழிலாளரின் எண்ணங்களெல்லாம் அங்கே பொங்கி குமுறி இறைத்த ஒன்றுதானோ என்கிறார். நீலக்கடலில் இறைக்கப்படும் மின்னலைப் போல், அரசாங்கம் உதவிடும் என நம்பும் தொழிலாளரது எண்ணமும் இருக்கிறது என அவர்களின் வேதனையைக் கவிஞர் தமிழ்ஒளி பாடியுள்ளார்.

5. எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் குறிப்பு

  • இயற்பெயர்: ந. செகதீசன்.

  • பெற்றோர்: செ. இரா. நடராசன் – வள்ளியம்மாள்.

  • காலம்: 28.09.1933.

  • விருது: கலைமாமணி.

  • நூல் விருது:வணக்கம் வள்ளுவ” என்ற நூல் 2004 இல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

  • எழுதிய நூல்கள்: தமிழன்பன் கவிதைகள், சிலிர்ப்புகள், தோணிகள் வருகின்றன, ஊமை வெயில்.

  • மையக் கருத்து: உலகின் முக்கியமான சில நிகழ்வுகள் ஏழு என்ற எண்ணுடன் நிறைவு பெறுகின்றது. ஏன் எட்டாம் எண்ணிற்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வினாவை மையப்படுத்தி இக்கவிதையைப் படைத்துள்ளார். திருவள்ளுவர் தம் திருக்குறளில் ஏழு சீர்களையே பயன்படுத்தியிருப்பது கண்டு, எட்டாவது சீருக்கு அவர் ஏன் இடமளிக்க மறுத்துவிட்டார் என்பதையும் ஆராய்கின்றார்.

  • இசையின் சுரங்கள் ஏழு: எட்டாவது சுரம் அனுமதிக்கப்படாததால், இசை ஒரு வரைமுறைக்குள் அடங்காதவை என்பதை உணர்த்தி, இசையின் தேவதை கதவைத் திறக்க ஓடியிருக்கலாம்.

  • வானவில்லின் நிறம் ஏழு: எட்டாவது வண்ணத்திற்கு இடமில்லை என்பதால், வானம் நிறங்கள் நீங்கிய இரவில் தன் வண்ணங்களைக் காணவில்லை என்று அழுதிருக்கலாம்.

  • வாரத்தின் நாட்கள் ஏழு: எட்டாவது கிழமைக்கு வாரத்தின் கால எல்லைக்குள் இடமில்லை. ஒருவேளை இருந்திருந்தால் காலத்தின் அளவு கூடி மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்கும்.

  • வள்ளுவத்தின் சீர் ஏழு: எட்டாவது சீர் வள்ளுவரைத் தேடிப் போனபோது, வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை விரட்டுவது போல வள்ளுவர் விரட்டியிருக்கலாம்.

  • யாப்பின் கட்டமைப்புகள்: யாப்புக் கட்டமைப்புகள் எட்டாவது சீருக்கு இடம் தர முடியாது என்று மிரட்டியிருக்கலாம்.

  • அலகிடும் வாய்ப்பாடுகள்: காசு, பிறப்பு, நாள், மலர் ஆகியவை எட்டாவது சீர் வந்தால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று நச்சரித்திருக்கலாம்.

  • வள்ளுவரின் கேள்வி: ஏழு சீர்களில் சொன்னதையே நாம் பின்பற்றுவதில்லை. பிறகு ஏதற்கு எட்டாவது சீர்க் கவலை என்று வள்ளுவர் கேட்பது காதில் விழுகின்றது.

  • இலக்கணத்தின் ஆர்வம்: இலக்கணத்தின் மீது ஆர்வம் உடையவன், “எட்டாவது சீருக்கு இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும் செய்தி கிடைத்திருக்குமே” என்று ஏங்குகின்றான்.

  • எட்டாவது சீர் யார்?: உண்மையின் உள்ளத்தில் இருந்து பேசுபவர் எவரோ அவரே வள்ளுவர் எழுதாமல் விட்ட எட்டாவது சீர் என்று தோன்றுகின்றது.

6. கடிதம் – புதுமைப்பித்தன்

  • கதை மாந்தர்: சிங்கார வேலு (இலக்கியக் கர்த்தா), சுந்தரம் (சிங்கார வேலுவின் நண்பர்), நாகப்பன் (கடிதம் எழுதியவர்).

  • சிங்கார வேலுவின் சிறுகதைகள்: இவை “வாழ்க்கையின் இலட்சியங்களையும் சிக்கல்களையும் திறந்து காட்டும் ஜன்னல்களாக” கருதப்படுகின்றன.

  • எழுத்தின் நோக்கம்: அவர் பணத்திற்காக எழுதவில்லை, மாறாக தன்னை வெளிப்படுத்தவே எழுதுகிறார்.

  • புகழின் தேவை: ஓர் இலக்கியக் கர்த்தாவுக்கு “நேர்மையான புகழ்” தேவை என்று அவர் நம்புகிறார்; அந்தப் புகழ் “ஊக்கமளிக்கும் உணவு” போன்றது.

  • மனநிலை: உண்மையான பாராட்டு இல்லாததால் அவர் சிரமப்படுகிறார். சமூகத்திற்கு அழகு என்றால் என்னவென்று தெரியவில்லை அல்லது பாராட்டத் தைரியம் இல்லை என்று உணர்கிறார்.

  • படைப்புத் தடை: ஊக்கமின்மையால், சிங்கார வேலு படைப்புத் தடையை அனுபவிக்கிறார்; ஒரு கதையை ஏழு நாட்களாகத் தொடர முடியாமல் விரக்தியடைகிறார். நண்பர் சுந்தரம் பாராட்டியதைக் கூட நட்பின் காரணமாக வந்ததாகப் புறக்கணிக்கிறார்.

  • நாகப்பனின் கடிதம்: ஐந்தாறு நாட்கள் கழித்து, விசாகப்பட்டினத்திலிருந்து (10.9.33 அன்று) நாகப்பன் என்ற அறிமுகமில்லாத ஒருவரிடமிருந்து கடிதம் வருகிறது.

  • கடிதத்தின் பாராட்டு: அந்தக் கடிதம் சிங்கார வேலுவின் ‘சாலாவின் சங்கடங்கள்’ என்ற கதையை, “வாழ்க்கையின் உயிர்பெய் ஓவியம்” என்றும், தமிழ் மற்றும் உலக இலக்கியத்திலேயே இணையற்றது என்றும் புகழ்ந்து பேசுகிறது.

  • ஆரம்ப மகிழ்ச்சி: கடிதத்தைப் படித்ததும், சிங்கார வேலுவின் முகம் மலர்ச்சி அடைகிறது, உள்ளம் பூரிப்படைகிறது. இது தனது “பெரிய தாபத்தைத் தீர்த்து” சமூகத்தின் மீது நம்பிக்கையை மீட்டெடுத்ததாக அவர் உணர்கிறார்.

  • சந்தேகம் மற்றும் கோபம்: கடிதத்தில் உள்ள சில எழுத்துக்கள் தனக்குத் தெரிந்தவரின் கையெழுத்துப் போல் இருப்பதால், இதைச் சுந்தரம் செய்த குறும்புத்தனமான செயல் என்று சந்தேகிக்கிறார். இந்தக் “கோழைத்தனமான செயல்” குறித்து ஆரம்ப மகிழ்ச்சி கடும் கோபமாக மாறுகிறது.

  • சமூகத்தின் மீதான விமர்சனம்: அவர் சமூகத்தை “முட்டாள்கள்,” “கோழைகள்,” மற்றும் “தரித்திரக் கழுதைகள்” என்று திட்டுகிறார். அத்தகைய “முட்டாள் கூட்டத்திற்கு” கதை எழுதுவதை விட “கசையடி கொடுப்பேன்” என்று அறிவிக்கிறார்.

  • முடிவு: அறையெங்கும் காகிதம் எரியும் நாற்றம் பரவுகிறது. அவர் இருளில் அமர்ந்தபடி, “அசட்டுத்தனமான சமூகத்தை” எப்படி உயர்த்துவது என்றும், கோழைத்தனத்தை மாற்றியமைத்து “புழுக்களை மனிதர்கள் ஆக்குவது எப்படி” என்றும் சிந்திக்கிறார். “ஒளி” (நம்பிக்கை அல்லது மாற்றம்) வரும்போது, தான் இருக்க வேண்டிய அவசியமில்லை, தனது சிருஷ்டிகள் இருந்தால் போதும் என்றும் சிந்திக்கிறார்.

7. வாய்ச்சொற்கள் – ஜெயகாந்தன்

  • கதை மாந்தர்: ருக்குமணி (பிறவிக் குருடான பெண்), கண்ணப்பன் (பார்வையை இழந்த இளைஞன்).

  • ருக்குமணியின் நிலை: அவள் கிராமத்தின் எல்லையில் உள்ள பாழடைந்த சத்திரத்தில் தனிமையில் வாழ்கிறாள் (தாத்தா செங்கேணி இறந்த பிறகு).

  • தொழில்: கண்பார்வை இல்லையென்றாலும், கூடை முடைதல், தடுக்கு பின்னுதல் போன்ற கைவினைத் தொழில்களைச் செய்து பிழைக்கிறாள்.

  • உணர்வுத் திறன்: அவளது விரல்கள், காதுகள், நாக்கு என உடல் முழுவதும் “கண்கள்” இருப்பதாகக் கூறப்படுகிறது, இது அவளது கூர்மையான உணர்வுத் திறன்களைக் குறிக்கிறது.

  • கண்ணப்பன்: விழுப்புரத்திலிருந்து ரயிலில் டிக்கெட் இல்லாமல் வந்து இறக்கிவிடப்பட்டவன். அவனும் நான்கு வருடங்களுக்கு முன் அம்மை வார்த்து கண்பார்வையை இழந்தவன்.

  • முதல் சந்திப்பு: கண்ணப்பனின் “ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே” என்ற பாட்டைக் கேட்டு ருக்குமணி மிகவும் கவரப்படுகிறாள். அவள் அவனுக்கு வேர்க்கடலையும், புல்லாங்குழல் செய்ய உதவும் நல்ல மூங்கில் கம்பையும் கொடுக்கிறாள்.

  • பிரிவு மற்றும் மீள்வருகை: மறுநாள் கண்ணப்பன் சொல்லாமல் சென்றுவிடுகிறான். ஒரு வாரம் கழித்து, ருக்குமணி கொடுத்த மூங்கிலால் புல்லாங்குழல் செய்து, குழந்தைகள் ஊதும் ஊதல் போன்ற கருவிகளைச் செய்யும் புதிய தொழிலைத் தொடங்கிவிட்டு, புல்லாங்குழல் இசைத்தபடி திரும்ப வருகிறான்.

  • உணர்ச்சி வெளிப்பாடு: ருக்குமணி தனது உணர்வுகளை வெளிப்படுத்தி, அவனது பாட்டையும், பேச்சையும், அவனையும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறுகிறாள்.

  • திருமணத் தயக்கம்: இரண்டு பார்வையற்றவர்கள் எப்படி வாழ முடியும் என்றும், தானும் அவளுக்குச் சுமையாகிவிடுவேன் என்றும் நினைத்துத்தான் சொல்லாமல் சென்றதாகக் கண்ணப்பன் கூறுகிறான்.

  • பார்வையற்ற நிலை: ருக்குமணி தனது பார்வையற்ற நிலை ஒரு குறைபாடு அல்ல என்று கூறி, “கண்ணுன்னா என்னா?” என்று கேட்கிறாள்.

  • கண்ணப்பனின் பார்வை: கண்ணப்பன் உணர்ச்சிவசப்பட்டு, “நீதான் எனக்குக் கண்ணு இனிமேலே” என்று அவளைத் தன் கண்களாகக் கருதுகிறான்.

  • வாய்ச்சொற்களின் முக்கியத்துவம்: வள்ளுவரின் கூற்றான “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும்இல” என்பதற்கு மாறாக, இந்த உறவுக்கு வாய்ச்சொற்களே முக்கியம் என்பதைக் கதை உணர்த்துகிறது.

8. அந்நியர்கள் – சூடாமணி

  • கதை மாந்தர்: ஸவிதா (அக்கா), சௌம்யா (தங்கை).

  • சந்திப்பு: பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, தாயின் மரணத்துக்குப் பின் சந்திக்கின்றனர். ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட சௌம்யாவை, அவரது கணவர் பம்பாயிலிருந்து அக்காவிடம் அனுப்பிவைக்கிறார்.

  • ஆரம்ப ஒற்றுமை: ஆரம்பத்தில், பிரிந்திருந்த காலம் கரைந்துவிட்டதைப் போல உணர்கிறார்கள். காபியில் ஒரே அளவு இனிப்பு, அகலக் கரை போட்ட புடைவைகள், விடியற்காலை நடைப்பயிற்சி, வற்றல் சாப்பிடும் பழக்கம் போன்ற பல சின்னச் சின்ன ஒத்த ரசனைகள் அவர்களிடம் இருந்தன.

  • வேறுபாடுகள் வெளிப்படல்: நாளடைவில், இருவரின் கருத்துக்களிலும், உலக கண்ணோட்டத்திலும் வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கின.

வேறுபாடுகள்

ஸவிதா (அக்கா)

சௌம்யா (தங்கை)

குழந்தை வளர்ப்பு

காலம் மாறுகிறது என்றும், பிள்ளைகள் உலகத்தின் யதார்த்தங்களைத் தெரிந்துகொண்டு வாழ வேண்டும் என்றும் கூறுகிறாள்.

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே தங்கினால் கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொள்வார்கள் என அஞ்சுகிறாள்.

கலை/இலக்கியம்

நவீன படைப்புகளில் உள்ள நல்ல அம்சங்களை மட்டும் ரசிக்க வேண்டும் என்று வாதிடுகிறாள்.

நவீன திரைப்படங்களையும் இலக்கியத்தையும் “பச்சைத்தனம்” கொண்டவை என்று விமர்சிக்கிறாள்.

எழுத்து லட்சியம்

சௌம்யாவின் எழுத்தை “நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி” இருப்பதாகக் கூறுகிறாள்.

ஆபாசமும் பயங்கரமும் நிறைந்த உலகில், தனது எழுத்தில் நல்லதையும் தூய்மையையும் காட்டுவதே தனது லட்சியம்.

பொதுச் சேவை

தனிநபரின் உதவி “போட்டவரைக்கும் பிரயோசனம்” என்று பத்துப் ரூபாய் கொடுத்து உதவுகிறாள்.

வறுமை ஒரு அடியில்லாத பள்ளம் என்றும், தனிநபர்களின் உதவி பயனற்றது என்றும், நிறுவன அளவிலான தீர்வுகள் தேவை என்றும் கருதுகிறாள்.

நினைவுச் சின்னங்கள்

பெற்றோரின் கண்ணாடி ஜாடியைப் பொக்கிஷமாகக் காப்பாற்றுகிறாள்.

தனது பங்கைப் பார்த்த ஒரு பெண்ணின் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்துவிட்டாள். “அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?” என்று கேட்கிறாள்.

தெய்வ நம்பிக்கை

அவள் வீட்டில் பூஜை அறை இல்லை. “மனதிலேயே வேண்டிக்கோயேன். நம்பிக்கை இருந்தால் அது போறாதா?” என்று தன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறாள்.

தெய்வ நம்பிக்கையின்றி வாழ முடியாது என்று கூறுகிறாள்.

  • உறவின் நிலை: இந்த வேறுபாடுகளால் அவர்களுக்குள் ஒரு “கவன உணர்வு” மற்றும் “தயக்கம்” உருவாகிறது.

  • முடிவு: பிரிந்து வந்த பின்னரும், ஒருவரையொருவர் “ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டி இருக்கிறது” என்று ஸவிதா உணர்கிறாள். இந்த வேறுபாடுகள் அனைத்தையும் கடந்தும், அவர்களின் அன்பு ஒரு ஆழமான பிணைப்பாக, உள்ளுயிர்ப்பாக (அடியிழை) தொடர்ந்து நீடிக்கிறது.

9. தம்பிக்கு – மு.வரதராசனார் (முதல் கடிதம்)

  • நூல் வடிவம்: டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தம்பிக்கு என்ற நூலில், வளவன் என்னும் அண்ணன் தன் தம்பி எழிலுக்கு எழுதுவதுபோல பல கடிதங்களை எழுதியுள்ளார்.

  • நோக்கம்: அக்கடிதங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் இளைஞர்கள் எவ்வாறு காக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

  • நன்மை – வன்மை: நன்மை, வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு. நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் துன்புற்று வீழ்கின்றனர். வல்லமை மட்டும் பெற்றவர்கள் எதிர்பாராத வகையில் அழிந்து போகின்றனர்.

  • தமிழர்கள் நிலை: தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும், நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனி வல்லவர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • உடல் – உள்ளம்: உடலை மட்டும் போற்றினால், உள்ளம் பகைத்து அழிக்கும். உள்ளத்தை மட்டும் தூய்மையாகப் போற்றினால், உடல் நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து அமைதியைக் கெடுக்கும். எனவே, உடல், உள்ளம் இரண்டையும் வலிமையாகவும், தூய்மையாகவும் காப்பதே கடமையாகும்.

  • அறநெறி – பொருள்நெறி: வாழ்க்கையில் அறநெறியும் வேண்டும், பொருள் நெறியும் வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தேவை என்பது வள்ளுவர் கருத்து.

  • தமிழ்மொழி – வன்மை மொழி: நல்ல மொழியான தமிழை நாம் வன்மை பொருந்திய மொழியாக ஆக்கவில்லை. தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு அளிக்கவில்லை. நீதிமன்றங்களில் உரிமை தரவில்லை. ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கவில்லை. வல்லமை இல்லாத நன்மை என்றும் வாழாது.

  • பொதுமக்கள் – களிமண்: பொதுமக்கள் தங்களின் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் எண்ணித் தங்கள் தேவையை உணரத் தெரியாத களிமண்ணாக பரந்து விரிந்து இருக்கின்றனர். அதனால் யார் யாரோ அவர்களைப் பிசைந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவங்களைச் செய்து கொள்கின்றனர்.

  • கடமை – மேடைப் பேச்சு: ஒன்றும் செய்யாமல் தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்து விடும் என்று எண்ணிக் கொண்டு காலம் கழிப்பது குற்றம். மேடையில் வீறு கொண்டு பேசுவதை நிறுத்திவிட்டால், கடமைகளை எண்ணிப் பார்க்க வாய்ப்பு உண்டாகும். மேடையின் மகிழ்ச்சி கடமையை மறக்கச் செய்கின்றது.

  • முடிவுரை (முதல் கடிதம்): இன்றைய உலகம் வல்லமை மிகுந்த மாமியார்போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது. தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்காதவாறு காப்பாற்ற வேண்டியது இளைஞர்களாகிய நம் பொறுப்பு என்று அறிவுறுத்துகின்றார்.

1௦. தம்பிக்கு – மு.வரதராசனார் (இரண்டாம் கடிதம்)

  • நோக்கம்: மேடைப்பேச்சு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, நம்மை சோம்பேறிகளாக்குகின்றது. உணரச்சிக் கொந்தளிப்பால் வீரமான வசனங்களைப் பேசுவது வீணான காரியம் என்பதை இக்கடிதத்தின் வாயிலாகக் குறிப்பிடுகின்றார்.

  • வீண் கனவு அல்ல: திருக்குறள் ஓதியே திருமணம் நடைபெற வேண்டும், கோயில்களில் தமிழ்மறைகள் ஓத வேண்டும், அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும், ஆளுநர் தமிழில் கையொப்பம் இட வேண்டும் ஆகியவை வீண் கனவு அல்ல. தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன்தான் இவற்றை வீண் கனவு என்று குறிப்பிடுவான்.

  • தமிழரின் கடமை: தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவது கனவு அல்ல; அது தமிழரின் கடமை. கோயில்களில் தமிழ் மறை ஓதுவது கனவு அல்ல; சான்றோர்களுக்கு நன்றியுணர்வைத் தெரிவிக்கும் கடமை. அதிகாரிகளும், ஆளுநரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்பது கனவு அல்ல; அது வங்காளத்தில் தொண்டு செய்யச் சென்றபோது வங்காளி எழுத்தைக் கற்றுக் கொண்ட காந்தியடிகளின் நெறி.

  • தமிழரின் குறை: பிறருடைய சொல்லுக்கு மயங்குவது தமிழரின் மிகப் பெருங் குறையாக இருக்கின்றது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டு, தமிழரை ஏமாற்றுகின்றனர்.

  • தமிழர் நெஞ்சம் உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து பண்பட்டு வந்தது. அதனால் சொல்பவர் யார், உண்மையாக சொல்கிறாரா என்று ஆராய்ந்து பார்க்காமல் நம்பி உணர்ந்து வாழத் தொடங்கிவிடுவர். இதனால், “தமிழர்களே தமிழர்களை அழித்துக் கொள்வார்கள்” என்று பகைவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

  • மொழிப்பற்று: மொழியால் இனம் அமைவதும், நாகரிகம் அமைவதும், நாடு அமைவதும், நாட்டின் அமைப்புக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மைகள். இவற்றை எல்லாம் பொய் என்று உபதேசம் செய்கிறவர்கள் நம்மைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவர்கள்.

  • தற்காப்பு உணர்ச்சி: உலகம் ஒரு குடும்பமாய் அன்பாய் வாழக் கற்றுக் கொள்ளும் வரையில், தமிழனுக்குத் தற்காப்பு உணர்ச்சி கட்டாயம் வேண்டும். தமிழர்களைக் கடமைப்பற்று உடைய செயல் வீரர்களாக ஆக்க வேண்டும்.

  • முடிவுரை (இரண்டாம் கடிதம்): இன்று தமிழர்க்கு வேண்டியது அன்றாட கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே. மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் செயலில் காட்ட முனைவதே சிறப்பு என்று அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.

 

இரண்டாம் பருவம் – அலகு-2 பாடக்குறிப்புகள்

  1. கலிங்கத்துப் பரணி
    • காலத்தால் முற்பட்டது: பரணி நூல்களிலேயே காலத்தால் முற்பட்டது கலிங்கத்துப் பரணி ஆகும்.

    • பாட்டுடைத் தலைவன்: முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து பெற்ற வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதே இந்நூல்.

    • சிறப்புப் பெயர்: இந்நூல் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” என்று சிறப்பிக்கப்படுகிறது.

    • ஆசிரியர்: செயங்கொண்டார்.

      • காலம்: 11-12 ஆம் நூற்றாண்டு.

      • பணி: இவர் முதற்குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர் ஆவார்.

      • பாராட்டு: பலபட்டடை சொக்கநாதர் இவரை “பரணிக்கோர் செயங்கொண்டார்” என்று பாராட்டி உள்ளார்.

      • பிற நூல்கள்: கலிங்கத்துப்பரணி தவிர, இவர் இசை ஆயிரம், உலாமடல் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

போர்க்களக் காட்சிகள் (கலிங்கத்துப் பரணி)

  • வீரர்களின் முகமலர்ச்சி: விருந்தினர்களும், ஏழைகளும் தொடர்ந்து வந்து உணவு உண்பதைக் கண்ட வள்ளலைப் போல, பருந்துக் கூட்டமும், கழுகுக் கூட்டமும் தம் உடலைக் கொத்தித் தின்பதைக் கண்டு, இறந்து கிடக்கும் வீரர்களின் திருமுகங்கள் தாமரை மலர்போல மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தன.

  • நரிக்கூட்டத்தின் செயல்: பிறர்க்குக் கொடுத்து உதவாதவர் இறந்த பின்பு அவருடைய பொருள்களைக் கவர்ந்து செல்லும் பேதைகளைப் போல, நரிக்கூட்டம் வீரர்கள் உயிரோடு இருக்கும் வரையில் அருகிலேயே இருந்துவிட்டு, உயிர் போன பின்பும் கூட அவர்களை விட்டு அகலாமல் இருக்கின்றன.

  • மகளிரின் செயல்: யானைகள் உயிருடன் இருந்தவரை அதன் மதநீரை உண்ட வண்டுகள், மதயானைகள் இறந்ததும் அவற்றை வெறுத்து ஒதுக்கின. வண்டுகள், வானுலகத்தவர் மன்னன் பெற்ற வெற்றி கண்டு பொழியும் பூக்களில் உள்ள தேனை உண்ண மேலே பறந்து சென்று விட்டன. இச்செயல், பொருள் உள்ளவரை கூடி இருந்துவிட்டு, பொருள் தீர்ந்தவுடன் நீங்கி வேறு ஒருவனைத் தேடி அடையும் விலைமகளிரைப் போன்றது.

  • வீரரது மனைவிகளின் செயல்கள்: போர்க்களத்தில் உயிர் நீத்து விழுந்து கிடக்கும் மத யானைகளுடன் மன்னர்களின் கொடிகள் பிணைந்து கிடக்கும் காட்சி, உயிர் நீங்கிய தங்கள் கணவர்களுடன் நெருப்பில் உடன்கட்டை ஏறிய பெண்கள் போல் இருக்கிறது.

  • இடாகினி பேயின் வினவல்: கற்புடைய மகளிர் போரில் இறந்துவிட்ட தங்கள் கணவருடன் வீர சொர்க்கம் அடைய வேண்டி, போர்க்களம் முழுவதும் தங்கள் கணவர் உடலைத் தேடியும் காண முடியாத நிலையில், பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேயிடம், “எம் கணவர் உடல் கிடக்கும் இடம் எங்கே?” என்று கேட்பதைக் காணலாம்.

2. திருக்குற்றாலக் குறவஞ்சி

  • பெயர்க்காரணம்: குற்றாலம் என்ற இடத்தின் பெயரால் இந்நூல் திருக்குற்றாலக் குறவஞ்சி எனப் பெயர் பெற்றது.

  • வேறுபெயர்: குறவஞ்சி நாடகம்.

  • பாட்டுடைத் தலைவன்: குற்றால நாதர்.

  • பாட்டுடைத் தலைவி: வசந்தவல்லி.

  • பாடல்கள்: 128 பாடல்களைக் கொண்டது.

  • நூலாசிரியர்: திரிகூடராசப்பக் கவிராயர்.

    • பணி: இவர் சின்னணஞ்சாத் தேவரின் அவைக்களப் புலவர்.

    • அரங்கேற்றம்: திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.

    • பாராட்டு: மதுரை மன்னனான முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டைப் பெற்றவர்.

  • குற்றால மலையின் வளம் (குறத்தி கூற்று):

    • குற்றால மலையில் உள்ள ஆண் குரங்குகள் பழங்களைப் பறித்து மந்திகளுக்குக் கொடுத்து மகிழும்.

    • மந்தி சிந்திய பழங்களை வானுலகில் வாழும் தேவர் கூட்டம் விரும்பிக் கேட்கும்.

    • வேடர்கள் தங்கள் கண் பார்வையால் உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்.

    • சித்தர்கள் இம்மலைக்கு வந்து உடலுக்கு நன்மை அளிக்கும் யோகங்கள் என்னும் சித்து வேலைகளைச் செய்வார்கள்.

    • தேன்கலந்த மலை அருவியின் அலைகள் மேல் நோக்கி உயர்ந்து பாய்ந்து வானத்தில் இருந்து வழிந்தோடும்.

    • இதனால் செந்நிறச் சூரியனின் தேரில் பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச் சக்கரமும் வழுக்கி விழும்.

    • இம்மலை, வளைந்த இளம் பிறையைச் சூடிய சடை முடியுடைய திருக்குற்றாலநாதராகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிறப்பு மிக்கது என்று குறத்தி மலைவளம் கூறுகிறாள்.

3. முக்கூடற்பள்ளு

  • தொன்மை: இது பள்ளு நூல்களில் தொன்மையானது.

  • மூன்று ஆறுகள்: தாமிரபரணி ஆறு, சிற்றாறு, கயத்தாறு ஆகிய மூன்று ஆறுகளைக் குறிப்பிடுகிறது.

  • பாட்டுடைத் தலைவன்: சீவலபேரி என்ற ஊரில் கோவில் கொண்டுள்ள அழகர் மீது பாடப்பட்டதே முக்கூடற்பள்ளு.

  • வேறு பெயர்கள்: அவ்வூரில் அழகர், ‘செண்டு அலங்காரர்’ என்றும் குறிப்பிடப்படுகிறார்.

  • காலம்: கி.பி. 17 ஆம் நுற்றாண்டு.

  • குறிப்பிடப்படும் செல்வர்கள்: காவை வடமலைப் பிள்ளையன், ஆறை அழகப்ப முதலியார், திருமலைக் கொழுந்துப் பிள்ளையன்.

  • ஆற்றில் வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள் (பள்ளர்கள் கூற்று):

    • தென்மேற்குத் திசையில் மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.

    • தென் கிழக்குத் திசையில் ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.

    • நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது.

    • கிணற்றில் உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன.

    • நண்டுகள் வளைகளுள் மழைநீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன.

    • மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன.

    • இந்த அறிகுறிகளைக் கண்ட பள்ளர்கள் யாவரும் துள்ளி ஆடியிருக்கின்றார்கள்.

4. அபிராமி அந்தாதி

  • பாட்டுடைத் தலைவி: அபிராமி.

  • ஊர்: திருக்கடவூர்.

  • இயற்றியவர்: அபிராமி பட்டர்.

  • பாடல்கள்: 102 பாடல்கள்.

  • அபிராமி பட்டர்:

    • இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்.

    • காலம்: 18-19 ஆம் நுற்றாண்டு.

    • நூல்கள்: அபிராமி அந்தாதி, அபிராமி அம்மைப்பதிகம்.

  • அன்னை அபிராமி அருளும் பதினாறு செல்வங்கள்:

    • அன்னை அபிராமி இந்த உலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ பதினாறு செல்வங்களை அளிப்பதாகக் கூறப்படுகிறது.

    • அவை: கல்வி, நீண்ட ஆயுள், உண்மையான நண்பர்கள், நிறைந்த செல்வங்கள், முதுமையிலும் இளமையுடன் திகழக்கூடிய உடல் நலம், நோயற்ற உடல், சோர்வின்றி இயங்குகின்ற மனம், அன்பைப் பொழிகின்ற மனைவி, மதிப்பும் மரியாதையும் தருகின்ற குழந்தைகள், என்றும் குறையாத புகழ், வாக்கு மாறாதிருத்தல், பிறருக்கு உதவி செய்யத் தடையில்லாத செல்வ நிலை, அழியாத செல்வங்கள், நீதி தவறாத ஆட்சி, துன்பம் இல்லாத வாழ்க்கை, அபிராமியின் திருவடியின் மீது அன்பு இவற்றோடு அடியவர்களின் நட்பு ஆகியனவாகும்.

    • அவள் அலைகள் வீசும் கடலில் துயில் கொண்டிருக்கும் திருமாலின் தங்கை. திருக்கடவூரில் கோயில் கொண்டிருக்கும் தெய்வம். சிவபெருமானின் ஒரு பாகத்தை விட்டு நீங்காதிருக்கும் பேறு பெற்றவள்.

5. திருவரங்கக் கலம்பகம்

  • பாடியவர்: அழகியமணவாளதாசர்.

  • பாடல் எண்ணிக்கை: 100 பாடல்கள்.

  • அழகியமணவாளதாசர்:

    • வேறுபெயர்: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.

    • நூல்கள்: அஷ்டப்பிரபந்தம், திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்துமாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல்திருநாமம், திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி.

  • பெண் கேட்டு வந்த தூதனுக்கு அளிக்கப்பட்ட மறுமொழி:

    • வேடர்களாகிய எங்கள் மகளை மணம் பேச வந்த தூதனே, எங்கள் பெண்ணை மணம் பேச வந்த தூதனே! செல்லினால் அரிக்கப்பட்ட ஓலை செல்லுமோ? செல்லாது.

    • திருவரங்கநாதரும், நப்பின்னையின் கணவருமாகிய நம்பெருமானது திருவடிகளில் அன்பு வைத்த, வேடர்களாகிய எங்களது மகளை விரும்பி, முன்னாட்களிலே, பட்டந்தரித்த அரசர்கள் பட்ட பாடுகளை எங்கள் ஊரினுள் வந்து பார் என்று கூறப்பட்டது.

    • அரசர்களின் பொருட்கள் ஆனதன் விளக்கம்:

      • எங்கள் வீட்டு வாசலில் வைத்து மூடும் கதவுகளாக இருப்பது, அவர்கள் பிடித்துவந்த குடைகள்.

      • தினையரிசிகளை அளக்கும்படியாக வைத்த மரக்கால்கள், படி முதலிய அளவுகருவிகள் அவர்கள் தரித்து வந்த பெரிய பெரிய கிரீடங்கள்.

      • எங்கள் குடிசைக்குமேல் மூடுகின்ற கற்றை, அவர்களுக்கு வீசி வந்த சாமரங்கள்.

      • அவர்கள் தோல்வியடைந்து விட்டுச் சென்ற வில்லும் வாளும் வேலும் எங்கள் வீட்டின் நாற்புறத்திலும் வேலியாகப் போடப்பட்டுள்ளன.

    • ஆகவே, உன்னை ஏவிய அரசனுக்கும் இந்தக் கதியே நேரும் என்று போய்க் கூறுவாயாக எனத் தூதனிடம் மறுமொழி அளிக்கப்படுகிறது.

6. தமிழ்விடு தூது

  • தூது இலக்கியத்தின் வேறு பெயர்கள்: வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.

  • பாடல் எண்ணிக்கை: 268 கண்ணிகள்.

  • முதல் பதிப்பு: 1930 ஆம் ஆண்டு **உ.வே.சா.**வால் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.

  • கருப்பொருள்: மதுரைச் சொக்கநாதர் மீது காதல் கொண்ட ஒரு பெண், தன் காதல் நோயைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுக்கின்றாள்.

  • தமிழ்மொழியின் சிறப்புகள் (பாட்டுடைத் தலைவி கூற்று):

    • மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக வீற்றிருந்த சிவபெருமான், எல்லாத் திசைகளிலும் வெற்றியைத் தரும் தடாதகைப் பிராட்டியாகிய பார்வதி தேவி, விருப்பத்துடன் சிவஞானத் திரட்டைக் கையிலெடுத்த கணபதி ஆகியோர் மீது தூது விடுக்கப்படுகின்றது.

    • தமிழ்ச்சங்கத்தில் புலவர்களுக்கெதிராக அமர்ந்து பாடல் அறிவித்த முருகப்பெருமான்.

    • மூன்று வயதிலேயே பார்வதிதேவியின் அருளால் பாலருந்தி தமிழ்மொழியும் வடமொழியும் கற்றுத் தேர்ந்த திருஞானசம்பந்தர்.

    • மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய பிள்ளையைச் சிவபெருமானிடம் ஈன்று தரச் சொல்லிப் பாடல் இசைத்த சுந்தரர்.

    • பிரமனும் திருமாலும் தேடியும் அடைய முடியாத சிவனின் திருமுடியையும், திருவடியையும் தேடாமலேயே திருநல்லூரில் தேவாரம் பாடித் தன் தலை மீது முடியாகப் பெற்றுக் கொண்ட திருநாவுக்கரசர்.

    • சிவபெருமானே விரும்பி வந்து தம் ஓலையில் எழுதிக்கொள்ள திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர்.

    • முத்தமிழ் ஓதிய அகத்தியர்.

    • பழந்தமிழ் இலக்கணம் உரைத்தத் தொல்காப்பியர்.

7. தனிப்பாடல்கள்

வான் குருவியின் கூடு (ஒளவையார்)

  • ஔவையார்: அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் அறிந்தவர். மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை வழங்கியவர்.

  • தற்பெருமை பேசுதல் வேண்டாம்: தூக்கணாங்குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் எவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிய வேண்டும்.

ஆமணக்குக்கும் யானைக்கும் சிலேடை (காளமேகப் புலவர்)

  • காளமேகப் புலவர்:

    • இயற்பெயர்: வரதன்.

    • காலம்: 15 ஆம் நூற்றாண்டு.

    • சிறப்பு பெயர்கள்: வசை பாட காளமேகம், வசைகவி, ஆசுகவி.

    • படைப்புகள்: திருவானைக்கா உலா, சித்திரமடல், கடல் விலாசம், புலவர் புராணம், சமுத்திர விலாசம், தமிழ் நாவலர் சரிதை.

    • சிறப்பு: வர்க்க எழுத்துக்களை மட்டும் கொண்டு பல பாடல்கள் புனைந்தவர்.

  • சிலேடை விளக்கம்:

    • ஆமணக்கு: கொட்டைமுத்து இருக்கும். (ஊன்றுகோல் போன்ற) தன் கொம்பை அசைக்கும். உள்ளே துளை உள்ள மூரித்தண்டு ஏந்தி வளரும். கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தித் தலையைச் சாய்க்கும்.

    • யானை: முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும். உள்ளே துளை உள்ள தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக் குலையைச் சாய்க்கும்.

இம்பர் வான் எல்லை இராமனையே பாடி (வீரராகவர்)

  • வீரராகவர்:

    • பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர்.

    • பிறவியிலேயே கண்ணொளி இழந்தவர்.

    • பாராட்டு: இலங்கை சென்று பரராசசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்றார்.

    • படைப்புகள்: திருவாரூர் உலா, திருவேங்கடக் கலம்பகம், கீழ்வேளூர் உலா, வரதராசர் பஞ்சரத்தினம், 39 தனிப்பாடல்கள்.

  • புலவர் பெற்ற பரிசில் (யானையின் வேறு பெயர்கள்):

    • ஒரு அரசனைப் புகழ்ந்து பாடி யானையைப் பரிசாகப் பெற்ற புலவன் வீட்டிற்கு வந்தபோது, வறுமையில் இருந்த மனைவி, என்ன பெற்று வந்திருக்கின்றாய் என்று கேட்கிறாள்.

    • புலவர் சொன்ன யானையைக் குறிக்கும் சொற்களை மனைவி வேறு பொருட்களாக நினைத்துக் கொண்டாள்:

      • களபம் என்று சொல்ல, சந்தனம் என்று நினைத்து பூசிக்கொள்ளச் சொல்கிறாள்.

      • மாதங்கம் என்று சொல்ல, தங்கம் என்று நினைத்து நாம் வாழலாம் என்கிறாள்.

      • வேழம் என்றார், உடனே அவளும் கரும்பு என்று நினைத்து சாப்பிடச் சொல்கிறாள்.

      • கம்பமா என்று சொல்ல, கம்பு மா என்று நினைத்து களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.

      • இறுதியில் புலவரும் கைமா என்கிறார்.

    • அப்போதுதான் அது யானை என்று உணர்ந்து, “எம் இருவருக்குமே சாப்பாட்டுக்கு வழியில்லை, எப்படி யானைக்கு உணவு போடுவது?” என்று கலங்கினாள். யானையைக் குறிக்க இத்தனை சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நாரைவிடு தூது (சத்திமுத்தப் புலவர்)

  • நாரையிடம் புலவர் கூறிய செய்திகள்:

    • புலவர் நாரையிடம், “சிவந்த கால்களையுடைய நாரையே! பனங்கிழங்கைப் பிளந்தது போல பவளம் போன்று செந்நிறமுள்ள கூர்மையான வாயையும், சிவந்த காலையும் உடைய நாரையே!” என்று அழைக்கிறார்.

    • புலவர், நாரையிடம் தெற்கில் உள்ள கன்னியாகுமரிக் கடலில் முழுகி, அங்கிருந்து வடக்குத் திசை நோக்கிச் சென்று, தன் ஊராகிய சத்திமுத்தத்தில் உள்ள நீர்நிலையிலே இறங்கும்படி கூறுகிறார்.

    • அங்கு, மழையினால் நனைதற்குரிய சுவரோடு கூடிய கூரை வீட்டில், கனைகுரல் பல்லி நற்சகுனமாக ஒலிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற தன் மனைவியைப் பார்த்து, தன் நிலையைக் கூறுமாறு கேட்கிறார்.

    • அதாவது, மாறன் என்றும் வழுதி என்றும் பெயரையுடைய பாண்டிய அரசனது மதுரையில், போர்த்துக் கொள்ள ஆடை இல்லாமல் குளிர் காற்றினால் ஒடுங்கி, கைகள் இரண்டினாலும் உடம்பை மூடிக் கொண்டும், கால்களைக் குந்த வைத்துக் கொண்டு தழுவிக் கொண்டும், பெட்டிக்குள் அடங்கியிருக்கும் பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்ற வறுமையுடைய உனது கணவனைப் பார்த்தோம் என்று சொல்லுங்கள் என்று பாடுகின்றார்.

இரண்டாம் பருவம் – அலகு-1 பாடக்குறிப்புகள்

அலகு – 1 : தமிழ் இலக்கிய வரலாறு அறிமுகம்

சிற்றிலக்கியம்

  • தமிழில் 96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளன.

  • இவை வடமொழியில் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

  • சிற்றிலக்கியத்தின் பாடுபொருளாக சிற்றின்பமும் பேரின்பமும் அமைகிறது.

  • உலா, அந்தாதி, தூது உள்ளிட்ட பல சிற்றிலக்கிய நூல்கள் இடம்பெறுவதால், பதினோராம் திருமுறை “பிரபந்த மாலை” என்று அழைக்கப்படுகிறது.


சிற்றிலக்கிய வகைகள்

1. குறவஞ்சி

  • பெயர்க்காரணம்: குறவர் குளத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளைத் தரும். இதில் குறத்தி குறி கூறுதல் மற்றும் அவளது செயல்கள் இடம்பெறுவதால் இப்பெயர் பெற்றது.

  • காலம்: நாயக்கர் காலம்.

  • வேறு பெயர்கள்: குறம், குறவஞ்சி நாடகம், குறத்திப் பாட்டு.

  • இலக்கணம்: பாட்டுடைத் தலைவன் உலா வரும்போது அவனைக் கண்டு காதல் கொண்டு தவிக்கும் தலைவிக்குக் குறத்தி குறி சொல்வதாக அமைவது குறவஞ்சி இலக்கியமாகும்.

  • முதல் குறவஞ்சி நூல்: திருக்குற்றாலக் குறவஞ்சி – இதனை இயற்றியவர் திரிகூடராசப்பக் கவிராயர்.

  • குறம் என்பது குறத்தி சார்ந்த நிகழ்ச்சிகளையும், குறவநாடகம் என்பது குறவன் சார்ந்த வேட்டையாடுதல் நிகழ்வுகளையும் குறிக்கும். இவை இரண்டும் சேர்ந்து மற்ற நிகழ்வுகளும் கலந்து வருவது குறவஞ்சி எனப்படும்.

2. கலம்பகம்

  • பெயர்க்காரணம்: கலம்பகம் என்பதற்கு கலவை என்று பொருள். (கலம்-12, பகம்-6 = 18 உறுப்புகள் உடையது).

  • இலக்கணம்: பலவகையான ஓசை நயமுடைய பாக்களும் இனங்களும் உறுப்புகளும் பயின்றுவரப் பாடப்படுவது கலம்பகம் ஆகும்.

  • தொல்காப்பிய அகத்துறை சார்ந்த உறுப்புகள்: அம்மானை, ஊசல், காலம், வண்டு, கைக்கிளை, பாண், தழை, இரங்கல், குறம், தூது.

  • முக்கிய உறுப்புகள் விளக்கம்:

    • புயவகுப்பு: கலம்பகத் தலைவனுடையத் தோள்களின் சிறப்பைக் கூறுவது.

    • காலம்: தலைவனைப் பிரிந்த தலைவி கார்கால வரவு கண்டு துன்பப்படுவது.

    • குறம்: தலைவியிடம் வந்த குறத்தி, தலைவன் விரைவில் வருவான் எனக் குறி கூறுவது.

    • மறம்: வீரனின் மகளை மணம்புரிய தூதனுப்பிய மன்னனை இகழ்ந்து மணம் மறுப்பதாகச் செய்யுள் செய்வது.

  • முதல் கலம்பக நூல்: நந்திக்கலம்பகம். இதன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.

  • பாட்டுடைத் தலைவன்: மூன்றாம் நந்திவர்மன்.

3. உலா

  • பெயர்க்காரணம்: பாட்டுடைத் தலைவன் உலா வருவதாகப் பாடப்படும் இலக்கிய வகை.

  • வேறு பெயர்கள்: பவனி, பெண்பாற் கைக்கிளை, உலாப்புறம், உலாமாலை, புற உலா.

  • இலக்கணம்: உலாவிற்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியக் கூற்று: “ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப”.

  • தலைவன் வயது: 16-48 வயது வரை உள்ள ஆடவர்களுக்கு மட்டுமே உலா நூல் பாடப்படும் என பன்னிருபாட்டியல் கூறுகிறது.

  • பெண்களின் ஏழு பருவங்கள்: பேதை (5-7), பெதும்பை (8-11), மங்கை (12-13), மடந்தை (14-19), அரிவை (20-25), தெரிவை (26-32), பேரிளம்பெண் (33-40).

  • முதல் உலா நூல்: திருக்கைலாய ஞான உலா. இதனை எழுதியவர் சேரமான் பெருமான் நாயனார். இதற்கு ஆதி உலா என்ற வேறு பெயரும் உண்டு.

  • மூவருலா: ஒட்டக்கூத்தர் எழுதிய மூன்று உலா நூல்களின் தொகுப்பு: விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராச இராச சோழன் உலா.

4. பரணி

  • பெயர்க்காரணம்: பரணி என்பது நட்சத்திரத்தின் பெயர். இது காளியையும் எமனையும் தெய்வமாகக் கொண்ட நாள். காளியைத் தெய்வமாகக் கொண்டு பாடப்படுவதால் இப்பெயர் பெற்றது.

  • இலக்கணம்:ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” – இலக்கண விளக்கப் பாட்டியல்.

  • பெயர் அமையும் முறை: ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி பெற்ற வீரனைப் பற்றிப் பாடினாலும், இந்நூல் தோற்றவரின் பெயராலேயே அழைக்கப்பெறும்.

  • முதல் பரணி: கலிங்கத்துப்பரணி – இதனை எழுதியவர் செயங்கொண்டர். இவர் “பரணிக்கோர் செயங்கொண்டர்” என்று புகழப்படுகிறார்.

5. பள்ளு

  • பெயர்க்காரணம்: பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம்.

  • வேறு பெயர்கள்: உழத்திப்பாட்டு, பள்ளேசல், பள்ளு நாடகம்.

  • அமைப்பு: மூத்தப் பள்ளி, இளையப் பள்ளி என இரு பள்ளியர்கள் இருப்பர். ஒருவர் சிவன் அடியார், மற்றொருவர் திருமால் அடியார் ஆவர்.

  • முதல் பள்ளு நூல்: முக்கூடற்பள்ளு.

  • முக்கூடற்பள்ளு சிறப்புகள்: இது பள்ளு நூல்களில் தொன்மையானது. இது தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு ஆகிய மூன்று ஆறுகளைக் குறிக்கிறது.

6. பிள்ளைத்தமிழ்

  • பெயர்க்காரணம்: பாட்டுடைத்தலைவனையோ அல்லது தலைவியையோ பிள்ளைப் பருவமாக நினைத்து பாடுவது.

  • வகைகள்: ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ். ஒவ்வொன்றும் பத்து பருவங்களைக் கொண்டது.

  • ஆண்பாற் பிள்ளைத்தமிழின் இறுதிப் பருவங்கள்: சிற்றில் இழைத்தல், சிறுபறை முழக்கல், சிறுதேர்ப் பருவம்.

  • பெண்பாற் பிள்ளைத்தமிழின் இறுதிப் பருவங்கள்: நீராடற் பருவம், அம்மானைப் பருவம், ஊசல் பருவம்.

  • முத்தப் பருவம்: குழந்தையின் பதினோராம் மாதத்தில் பாடப்பெறுவதாகும்.

  • முதல் பிள்ளைத்தமிழ் நூல்: குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்.

  • மீனாட்சி அம்மைப் பிள்ளைத்தமிழ்: இதனைப் பாடியவர் குமரக்குருபரர்.

7. தூது

  • பயன்பாடு: ஒரு செய்தியைச் சொல்லி வருவதற்கும், பிரிந்த இதயங்களை ஒன்று சேர்ப்பதற்கும் மற்றொருவரை அனுப்புவது.

  • வகைகள்: அகத்தூது (காதல் நோயைத் தலைவனிடம் சொல்ல), புறத்தூது (மன்னர்கள் அனுப்பும் தூது).

  • அகத்தூதில் அஃறிதிணைப் பொருள்கள்: அன்னம், மயில், கிளி, மேகம், வண்டு ஆகியவை தூது செல்ல உரியன.

  • முதல் தூது நூல்: நெஞ்சுவிடு தூது – இதனை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார்.

  • தமிழ்விடு தூது: தலைவி தமிழைத் தூதாக மதுரை சொக்கநாதரிடம் அனுப்புவதாக அமைந்துள்ளது. இது 268 கண்ணிகள் கொண்டது.

8. அந்தாதி

  • இலக்கணம்: ஒரு செய்யுளின் ஈற்றில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி இவற்றில் ஒன்று அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையப் பாடுவது அந்தாதி ஆகும்.

  • மண்டலித்தல்: பாடும் நூலின் ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமைய வைத்தல் மண்டலித்தல் எனப்படும்.

  • முதல் அந்தாதி நூல்: அற்புதத் திருவந்தாதி – காரைக்கால் அம்மையார்.

  • திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதிகுட்டித் திருவாசகம்” என்று அழைக்கப்படுகிறது.

தனிப்பாடல் அறிமுகம்

  • தோன்றிய இடங்கள்: வேந்தர், சிற்றரசர், நிலப்பிரபுக்கள் சபை; கோவில்கள்; மதச்சார்புடைய மடங்கள்.

  • தனிப்பாடல்கள் தோன்றுவதற்கான காரணங்கள்: புலவர்களின் வறுமை, இன்ப துன்ப உணர்ச்சிகள், உள்ளத் தூண்டல்கள், புலமைச் செருக்கு, வள்ளல்களின் ஆர்வம், இறைபக்தி.

  • காளமேகப் புலவர்: கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

  • காளமேகப் புலவரின் படைப்புகள்: திருவானைக்கா உலா, சமுத்திர விலாசம், சித்திர மடல், களவகுப்பு.

  • பாடுநெறிகள்: தனிப்பாடற்றிரட்டில் சிலேடை, மடக்கு, விடுகதை, அங்கதம், நகைச்சுவை, சீட்டுக் கவி போன்ற தன்மைகள் காணப்படுகின்றன.


இக்கால இலக்கியம்

1. கவிதை

  • சுப்பிரமணிய பாரதியார் (1882-1921):

    • புனைபெயர்கள்: ஷெல்லிதாசன், காளிதாசன்.

    • முப்பெரும் பாடல்கள்: கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்.

    • “தமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்,” என்று முழங்கினார்.

    • வசன கவிதைகளும் பாடினார்.

  • பாரதிதாசன் (1891-1964):

    • இயற்பெயர்: சுப்புரத்தினம்.

    • நூல்கள்: புரட்சிக்கவி, பாண்டியன் பரிசு, குடும்பவிளக்கு, அழகின் சிரிப்பு.

    • கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்” என்று பாடியுள்ளார்.

  • நாமக்கல் கவிஞர் (வே. இராமலிங்கம் பிள்ளை):

    • காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.

    • 1949 இல் அரசவைக் கவிஞரானார்.

    • தன் வரலாறு நூல்: ‘என் கதை’.

    • உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்ற நடைபயணப் பாடல் பாடினார்.

  • சுரதா:

    • இயற்பெயர் இராஜகோபால்.

    • ‘உவமைக் கவிஞர்’ என அழைக்கப்பட்டார்.

    • படைப்புகள்: துறைமுகம், தேன்மழை.

  • கண்ணதாசன் (1927-1981):

    • படைப்புகள்: இயேசு காவியம், மாங்கனி, அர்த்தமுள்ள இந்துமதம் (10 பாகங்கள்), சேரமான் காதலி.

    • தன் வரலாறு நூல்கள்: வனவாசம், மனவாசம்.

புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ

  • அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் ‘Leaves of Grass’ என்று வசன கவிதைகளைப் படைத்துப் பிரபலப்படுத்தினார்.

  • பாரதியாரின் ‘காட்சிகள்’ அனைத்தும் வசன கவிதைகளே.

  • மணிக்கொடி, எழுத்து, வானம்பாடி போன்ற சிற்றிதழ்கள் புதுக்கவிதை வளர்ச்சிக்கு உதவின.

  • அப்துல் ரகுமானின் ‘ஆலாபனை’ 1988 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது பெற்றது.

  • ஹைக்கூ: மூன்று அடிகளில் அமைய வேண்டும். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளே தமிழ் ஹைக்கூக்களுக்குக் காரணம்.

2. சிறுகதை

  • சிறுகதைக்கான இலக்கணம்: அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் ‘எட்கார் ஆலன்போ’.

  • ராஜாஜி உவமை: புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம்.

  • முதல் அச்சில் வந்த கதை: வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதை’.

  • தமிழ்ச் சிறுகதை உலகின் தந்தை: வ.வே.சு. ஐயர். இவரது முதல் சிறுகதை ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’.

  • புதுமைப்பித்தன் (சொ.விருத்தாச்சலம்): ‘சிறுகதை மன்னன்’, ‘தமிழ்நாட்டின் மாப்பசான்’ எனப் போற்றப்பட்டார்.

  • மௌனி (மணி): இவரைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைத்தார்.

  • தமிழ்ச்சிறுகதையின் மலர்ச்சிக்குக் களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும்.

3. நாடகம்

  • நாடகம்: “உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி”.

  • நாடக வகைகள்: வேத்தியல் (அரசர்க்கென ஆடப்படுவது), பொதுவியல் (பொது மக்களுக்கென ஆடுவது).

  • திரைச்சீலை: சிலப்பதிகார காலத்தில் “கரந்து வரல் எழினி” என அழைக்கப்பட்டது.

  • நாடக இலக்கிய வளர்ச்சி: 1891-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் நாடகம் முழு வடிவம் பெற்று வளர்ந்தது. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் அவ்வாறு வெளிவந்த முதல் நாடகம்.

  • சங்கரதாஸ் சுவாமிகள்: நாடக உலகைச் சீர்திருத்தியவர். இவரை நாடக உலகின் இமயம் என்றும் நாடகத் தந்தை என்றும் அழைப்பர்.

  • பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயணசாஸ்த்திரி): நாடக இலக்கண நூலான “நாடகவியல்” (1897) எழுதினார்.

  • எம். கந்தசாமி முதலியார்: இவர் “நாடக மறுமலர்ச்சித் தந்தை” என அழைக்கப்படுகின்றார்.

  • பாலாமணி அம்மையார்: முதன்முதலாகப் பெண்களைக் கொண்டு நாடக கம்பெனியை நடத்தியவர்.

4. உரைநடை

  • தொல்காப்பியர் கூறும் நான்கு வகை உரைநடைகள்: பாட்டிடை வைத்த குறிப்பு, பா இன்று எழுந்த கிளவி, பொருளொடு புணர்ந்த நகைமொழி, பொருள் மரபில்லாக பொய்ம்மொழி.

  • சிலப்பதிகாரத்தில் உரைநடைப் பகுதிகள்: “உரைபெறு கட்டுரை”, “உரைப்பாட்டு மடை”.

  • உரையாசிரியர்கள்: 11-ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை உரைநடை வளர்ச்சிக்கு ஆக்கம் புரிந்தனர் (எ.கா: இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர்).

  • மணிப்பிரவாள நடை: தமிழும் வடமொழியும் கலந்தநடை.

  • மறைமலையடிகள்: தனித்தமிழ் இயக்கத்திற்குத் தூண் போல் அமைந்தவர். இவர் நடை “ஆற்றல் சார்ந்த அறிவுநடை” என்பர்.

  • திரு.வி.க.: சின்னஞ்சிறு வாக்கியங்களால் ஆன அழகிய தெள்ளிய இனிய நடை இவருடையது. செய்தித்தாள் துறையில் அழகு தமிழைப் பயன்படுத்தியவர்.

  • புதுமைப்பித்தன்: வட்டார மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு மதிப்பு தேடித் தந்தவர்.

  • அண்ணாதுரை: கடித இலக்கியம் இவரால் புதிய ஆக்கம் பெற்றது. இவருடைய கடித நடை விறுவிறுப்பும் ஆற்றலும் பெற்றுள்ளது.

5. திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

  • பெரியார் ஈ. வெ. ரா.: குடியரசு, விடுதலை இதழ்கள் மூலம் ஆற்றலும் வேகமும்மிக்க தமிழைப் பரப்பினார். தமிழ் எழுத்துச் சீர்மையில் சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார்.

  • அறிஞர் அண்ணா: மேடைப் பேச்சு நடையில் ஒரு காலக்கட்டத்தையே உருவாக்கினார். பெரியார் தமிழ் தோண்டியெடுத்த வைரம் என்றால், அண்ணாவின் தமிழ் பட்டை தீட்டிய வைரம் போன்றது.

  • கலைஞர் மு. கருணாநிதி: “முரசொலி” மூலம் தமிழைப் பரப்பிவந்தார். இவரது “தென்பாண்டிச் சிங்கம்” தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாமன்னன் இராசராசன் விருது பெற்றது (1990). குறளோவியம் நிகரற்ற சிறப்பினது.

  • புலவர் குழந்தை: இராவணனைக் கதைத்தலைவனாகக் கொண்டு இராவண காவியம் என்ற புரட்சிக் காப்பியம் படைத்தார்.

 

மூன்றாம் பருவம் அலகு – 5 பாடக்குறிப்பு

1. நிறுத்தக்குறிகளின் பயன்பாடும் தேவையும்

பொது அறிமுகம்

  • நிறுத்தக்குறிகள் என்பவை, மொழியைப் பிழையின்றி எழுதவும், பேசவும் பயன்படும், மொழித் தொடர்பை முறைப்படுத்தவும், படிக்கும்போது வாசகர்களுக்கு ஒய்வு கொடுக்கவும் தேவையான அமைப்புகளாகும்.

  • இவை பேசு மொழியில் இருக்கும் இடைவெளி, நிறுத்தம், இறக்கம், ஏற்றம் ஆகியவற்றைக் எழுத்து வடிவத்தில் குறிக்கப் பயன்படும் ‘ஓய்வுச்சிறுகுறிப்புகளாக‘ கருதப்படுகின்றன.

  • மொத்தமாக 19 நிறுத்தக்குறிகள் மூலங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன (காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்கற்புள்ளி, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, உணர்ச்சிக்குறி, ஒற்றை மேற்கோள்குறி, இரட்டை மேற்கோள்குறி, பிறை அடைப்பு, சதுர அடைப்பு, இணைப்புக்கோடு, அடிக்கோடு, சாய்வுக்கோடு, உடுக்குறி).

முக்கிய நிறுத்தக்குறிகளின் விதிகள்

நிறுத்தக்கறி

குறியீடு

பயன்பாட்டு இடங்கள்

சான்றுகள்

காற்புள்ளி

( , )

ஒரே வேற்றுமை கொண்ட அடுத்தடுத்த சொற்களுக்கு இடையில். முகவரி அல்லது தேதி போன்ற பிரிவுகளுக்கு இடையில். விளிக்கும் சொற்களைத் தொடர்ந்து.

அவர் ஒரு தொழிலாளி, ஆசிரியர்.

அரைப்புள்ளி

( ; )

காற்புள்ளியைவிடச் சிறிது நீளமான இடைவெளி தேவைப்படும் இடங்களிலும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய வாக்கியங்களுக்கு இடையிலும் பயன்படுகிறது. காரணம் மற்றும் விளைவுகளைக் குறிக்கும்போது.

ஆசிரியர்கள் அடக்கமாக இருப்பார்கள்; மாணவர்கள் ஆரவாரம் செய்வார்கள்.

முக்கற்புள்ளி

( : )

ஒரு சொற்றொடரைத் தொடர்ந்துவரும் பல உதாரணங்கள், விளக்கம், அல்லது தெளிவுபடுத்தலைத் தெரிவிக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.

தேசியத்தை அறிமுகப்படுத்தும் ‘எவ்வாறெனில்’, ‘என்னவென்றால்’ போன்ற சொற்களுக்கு முன்னர்.

முற்றுப்புள்ளி

( . )

ஒரு வாக்கியத்தின் முடிவு அல்லது சுருக்கக் குறியீட்டுக்குப் பின்னால் பயன்படுகிறது.

சுருக்கக் குறிப்புகள் (இ.ஆ.பெ., கி.பி.).

கேள்விக்குறி

( ? )

கேள்விகளைக் குறிக்கும் வாக்கியத்தின் முடிவில் வரும்.

நீ ஏன் அழுகிறாய்?.

உணர்ச்சிக்குறி

( ! )

வியப்பு, மகிழ்ச்சி, இரக்கம், அச்சம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாக்கியங்களின் முடிவில் பயன்படுத்தப்படுகிறது.

அச்சோ! எவ்வளவு பெரிய மலை!.

இரட்டை மேற்கோள்குறி

(“ ”)

ஒருவரின் கூற்றைச் சுட்டிக்காட்டவும், அல்லது ஒரு பொருளை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கவும் பயன்படுகிறது.

“நான் சொல்வது உண்மை” என்று துணிபுடன் சொன்னான்..

ஒற்றை மேற்கோள்குறி

( ‘ ’ )

ஒரு கூற்றிற்குள் வரும் மேற்கோள்களையும் (இரட்டை மேற்கோளுக்குள் இரட்டை மேற்கோளைத் தவிர்ப்பது), அல்லது சொற்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் பயன்படுகிறது.

2. மொழிபெயர்ப்பு: வரையறை மற்றும் வகைகள்

மொழிபெயர்ப்பின் கோட்பாடு

  • மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உணர்த்தப்படும் கருத்து, இலக்கியம், அறிவியல் போன்றவற்றை பிற மொழியில் வெளிப்படுத்துவதாகும்.

  • மொழிபெயர்ப்பாளர் மூலமொழியை நன்கு உணர்ந்து, அதனைப் பெறும் மொழியின் தன்மைக்கேற்பச் செயலாற்ற வேண்டும்.

  • மொழிபெயர்ப்பின் முக்கிய நோக்கம், உலகச் செய்திகளை அறிதல், தேசிய ஒருமைப்பாடு, அயல்நாட்டவர் தொடர்பைப் பெறுதல், இலக்கியங்களின் அறிவை பெறுதல் மற்றும் உலகச் செழுமையை தமிழ் மொழிக்குக் கொண்டுவருதல் ஆகும்.

மொழிபெயர்ப்பின் வகைகள்

மொழிபெயர்ப்பு ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  1. சொல் பெயர்த்தல்: மூலமொழியில் உள்ள சொல்லுக்கு இணையான சொல் மற்ற மொழியில் பெயர்க்கப்படுதல்.

  2. விளக்க மொழிபெயர்ப்பு: மூல மொழியின் செய்தியை மட்டும் தெளிவாக எடுத்துரைக்கும் முறை.

  3. முறைமையற்ற மொழிபெயர்ப்பு (Literal Translation): மூல மொழியின் கருத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மொழிநடையை மாற்றியமைப்பது.

  4. சுருக்கம்: மூலமொழியில் உள்ள செய்தியை மொழிபெயர்ப்பாளர் சுருக்கிக் கூறுதல்.

  5. தழுவல்: கதை, கவிதை போன்றவற்றின் கால மாற்றம் மற்றும் பண்பாட்டுக்கேற்பத் தகுந்த மாற்றங்கள் செய்து மொழிபெயர்ப்பது.

  6. மொழிமாற்றம்: பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது, பெறுமொழியின் வளர்ச்சிக்குக் காரணமான மொழிபெயர்ப்புகளைக் குறிப்பது.

3. கலைச்சொற்கள் மற்றும் அதன் அவசியம்

கலைச்சொல் வரையறை மற்றும் தேவை

  • கலைச்சொற்கள் என்பவை, ஒவ்வொரு துறைக்கும் (அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்றவை) பயன்படுத்தப்படும் பிரத்யேகமான சொற்கள் ஆகும். பிற மொழிகளில் உள்ள சொற்களுக்கு இணையாகத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவதே கலைச்சொல் ஆக்கம் ஆகும்.

  • 18ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, அறிவியலில் ஏற்பட்ட பெருமலர்ச்சியால், பல புதிய சொற்களைத் தமிழில் ஆக்க வேண்டிய தேவை எழுந்தது.

  • கலைச்சொல்லாக்கத்தின் மூலம் புதிய தொழில்நுட்ப அறிவை தமிழ்மொழியில் பெறுதல், கல்வி மற்றும் ஆராய்ச்சியைத் தமிழில் மேற்கொள்வது, தமிழின் தொன்மையைத் தக்கவைத்தல் போன்றவை சாத்தியமாகின்றன.

கலைச்சொல்லாக்கத்தின் வழிமுறைகள்

கலைச்சொற்கள் உருவாக்கப்படும்போது பின்பற்ற வேண்டிய முக்கியக் கொள்கைகள்:

  1. தெளிவு மற்றும் துல்லியம்: கலைச்சொற்கள் குழப்பம் இல்லாமல், அது குறிக்கும் பொருளைத் தெளிவாக விளக்க வேண்டும்.

  2. எளிமை: அவை வழக்கச் சொற்களையும், வட்டார மொழியையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

  3. தழுவு பெயர்ப்பு: ஒரு மொழியில் உள்ள சொற்களின் பொருளைக் கண்டறிந்து, அதற்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பெயர்ப்பது.

  4. ஒலிபெயர்ப்பு: தேவைப்படும் இடங்களில் மூலமொழியின் ஒலியமைப்புக்கேற்பப் பெயர்ப்பது.

கலைச்சொற்கள் உதாரணங்கள்

  • கணிதவியல், கணினித் துறைகள் உட்படப் பல துறைகளுக்கான கலைச்சொற்கள் மூலங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன (எ.கா: Bounded Function – எல்லைக்குட்பட்ட சார்பு, Complex Number – சிக்கல் எண், Data File – தரவுக் கோப்பு, E-Booking – மின்பதிவு, E-Community – மின்சமூகம், Vigilance – விழிப்புக் காவல்).

மூன்றாம் பருவம் அலகு – 4

பொருளாதார அடித்தளமும் வேளாண்மை வளர்ச்சியும்

  • விடுதலைக்குப் பிந்தைய ஏற்றத்தாழ்வுகளைக் களைய, நாட்டில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. முதல் திட்டம் 1951இல் தொடங்கப்பட்டது. இத்திட்டங்களின் முக்கிய நோக்கம் உழவுத் தொழில் மற்றும் கனரகத் தொழில்களின் வளர்ச்சி ஆகும்.

  • ஐந்தாண்டுத் திட்டங்களின் பயனாக, தமிழகத்தில் வேளாண்மையிலும், கனரகத் தொழில்களிலும் வளர்ச்சி காணப்பட்டது.

  • வேளாண்மைத் துறைக்கு நிதி ஒதுக்கீடு இரண்டாம் திட்ட காலத்தில் ரூ. 51.02 கோடியாகவும், நான்காவது திட்ட காலத்தில் ரூ. 93.48 கோடியாகவும் அதிகரித்தது.

  • வேளாண்மையை மேம்படுத்த இரசாயன உர உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டன; கோவை, தஞ்சை மாவட்டங்களில் டிராக்டர்கள் மூலம் நிலங்களைப் பண்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

  • முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள்: சுதந்திரத்திற்குப் பிறகு பவானிசாகர் அணை (1956), அமராவதி அணை (1957), மணிமுத்தாறு அணை (1958), வைகை அணை (1959), ஆழியாறு அணை (1962), சேர்வலாறு அணை (1985) போன்ற பெரிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.

  • கரும்பு, நெல், பருத்தி போன்ற பயிர்களில் ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டதால், 1971ஆம் ஆண்டுக்குள் தமிழகம் உணவுத்துறையில் தன்னிறைவு அடைந்தது. மேலும், தமிழகம் இந்தியாவிலேயே பசுமைப் புரட்சி கண்ட இரண்டாவது மாநிலமாக விளங்கியது.

  • நிலச் சீர்திருத்தங்கள்: திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்டு ஏக்கரில் இருந்து 15 ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைக்கப்பட்டது. நிலமின்றி வாழ்ந்த மக்களுக்கு நிலங்கள் பங்கீடு செய்யப்பட்டன.

தொழில் வளர்ச்சி மற்றும் மின்சாரம்

  • தொழில்துறை நெசவு ஆலைகளைத் தாண்டி சிமெண்ட், உரம், போக்குவரத்து வண்டிகள், டயர் உற்பத்தி போன்ற துறைகளில் விரிவடைந்தது.

  • மத்திய அரசு நிறுவனங்கள் (சுதந்திரத்திற்குப் பின்): தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

    • நெய்வேலிப் பழுப்பு நிலக்கரித் திட்டம்: ரூ. 182 கோடி மூலதனத்தில் தொடங்கப்பட்டு மின்சாரம், செயற்கை உரம், அடுப்புக்கரி போன்றவற்றை உற்பத்தி செய்தது.

    • சென்னை: இணைப்பு இரயில்பெட்டித் தொழிற்சாலை, எண்ணூர் அனல்மின்சார நிலையம், மணலி மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.

    • இதர கனரகத் தொழிற்சாலைகள்: திருவெறும்பூரில் உயர் அழுத்தக் கொதிகலன் தொழிற்சாலை, ஆவடியில் டாங்கித் தொழிற்சாலை, கல்பாக்கத்தில் மின்அணு நிலையம்.

  • தொழிற்பேட்டைகள்: இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. அம்பத்தூர், கிண்டி, ராணிப்பேட்டை போன்ற இடங்களில் உருவான தொழிற்பேட்டைகள் குறிப்பிடத்தக்கவை; இவற்றில் அம்பத்தூரும் கிண்டியும் மிகப்பெரியவை.

  • முக்கிய உற்பத்தித் தொழில்கள்: கோவை, மதுரை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் பஞ்சாலைத் தொழில் சிறந்து விளங்கியது. டால்மியாபுரம், தாழையூத்து போன்ற இடங்களில் சிமெண்ட் உற்பத்தித் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அசோக் லேலாண்ட், ஸ்டாண்டர்டு மோட்டர்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் போக்குவரத்து ஊர்திகளை உற்பத்தி செய்தன.

  • தோல் தொழில்: 1964இல் சென்னையை அடுத்த மாதவரத்தில் முதல் தோல் தொழில்பேட்டை உருவானது.

  • சிறு மற்றும் குடிசைத் தொழில்கள்: மின்னணுப் பொருட்கள், நுண்கருவிகள், எந்திரப் பாகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் சிறு தொழில்களுக்கு அரசு கடனுதவி வழங்கியது. பட்டுப் பூச்சி வளர்த்தல், தேனீ வளர்ப்பு, மண்பாண்டத் தொழில் போன்றவை குடிசைத் தொழில்களாக வளர்ந்தன.

  • மின் உற்பத்தி: 1947இல் பேசின் பிரிட்ஜ் அனல்மின் நிலையம், 1948இல் மேட்டூர் நீர்மின் நிலையம் உருவாயின. 1957இல் ‘தமிழ்நாடு மின்சார வாரியம்’ தொடங்கப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் எழுச்சி

  • இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு: மொழி ஒரு சமூகத்தின் ‘பண்பாட்டுத் தொடர்புக்கருவி’ எனக் கருதப்பட்டதால், ஒரு குறிப்பிட்ட மொழியைத் திணிப்பது முரண்பாடுகளை ஏற்படுத்தும் என எதிர்த்தனர்.

  • 1948 போராட்டம்: சென்னை மாகாண முதலமைச்சர் ஓ.பி. இராமசாமி ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயன்றபோது, பெரியார், அண்ணா, மறைமலையடிகள் போன்றோர் 17.7.1948இல் கண்டனக் கூட்டம் நடத்தினர்.

  • மறைமலையடிகள் இந்தி திணிப்பை ‘ஆரிய திராவிட போராட்டத்தின் மறுவடிவம்’ என்று குறிப்பிட்டார். திராவிடர் கழகம் அமைதிப் போராட்டங்களை (ஊர்வலம், கருப்புக் கொடி காட்டுதல், மறியல்) நடத்தியது.

  • 1950 ஆணை: கல்வி அமைச்சர் மாதவராவ் 2.5.1950இல் 1 முதல் 6ஆம் வகுப்பு வரை மூன்றாம் மொழியாக இந்தியைக் கட்டாயமாக்கினார். இதனை எதிர்த்து தி.க.வும், திமுகவும் 10.5.1950இல் ‘இந்தி எதிர்ப்பு நாளாகக்’ கொண்டாடின.

  • இராஜாஜி ஆட்சிக்காலம் (1952-1954): இராஜாஜி முதல்வரானதும் ‘மொழிப்போர்’ புதிய வடிவம் பெற்றது. புகைவண்டி நிலையம், அஞ்சல் நிலையம் போன்ற மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் காணப்படும் இந்தி எழுத்துக்களைத் தார்பூசி அழிக்கும் போராட்டம் நடந்தது.

  • கெர் குழு எதிர்ப்பு (1957): பி.ஜி. கெர் தலைமையிலான குழுவின் அறிக்கை மறைமுகமாக இந்தியைத் திணிப்பதாகக் கருதி, பெரியார் 26.11.1957இல் மாநிலம் முழுவதும் ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ துவக்கினார், சுமார் 4,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்கள் முதல் முறையாக கும்பகோணத்தில் போராட்டம் நடத்தினர்.

மொழிப் போராட்டத்தின் உச்சமும் இருமொழிக் கொள்கையும்

  • தேசப்பட எரிப்புப் போராட்டம் (1960): 1960 ஏப்ரலில் குடியரசுத் தலைவர் இந்தியை ‘ஆட்சி மொழியாக’ அறிவித்ததால், பிரதமர் நேருவின் உறுதிமொழி மீறப்பட்டதாகக் கருதிய பெரியார், இந்திய தேசப் படத்திற்குத் தீ வைக்க அழைப்பு விடுத்தார்.

  • ஆட்சிமொழிச் சட்டம், 1963: இச்சட்டப்படி, 26.1.1965 முதல் இந்தி ஆட்சி மொழியாகும், ஆங்கிலம் துணை மொழியாகப் பயன்படுத்தப்படும். திமுக இதனை இந்தி பேசாத மக்களுக்கு இழைத்த அநீதி என்று கண்டித்தது.

  • 1965 போராட்டம்: பக்தவச்சலம் முதலமைச்சர் ஆனதும் போராட்டம் வேகம் பெற்றது. 26.1.1965ஐ திமுக ‘துக்க தினமாகக்’ கொண்டாட முடிவு செய்தது.

  • மாணவர்களின் தியாகம்: அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒன்றுகூடிப் போராடினர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராஜேந்திரன் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார், இதனால் போராட்டம் பொதுமக்கள் கைக்குச் சென்றது.

  • உணர்ச்சிப்பூர்வ தியாகங்கள்: திருச்சி சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம் போன்ற திமுக தொண்டர்கள் ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று முழங்கி தீக்குளித்து இறந்தனர்.

  • திமுக ஆட்சி மற்றும் இருமொழிக் கொள்கை (1967): 1967 பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று அண்ணாத்துரை முதலமைச்சர் ஆனார். அவர் 23.1.1968இல் சட்டமன்றத்தில் “ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளே தமிழகத்தின் ஆட்சி மொழியாக இருக்கும். இந்திமொழி தேவை இல்லை” என்று அறிவித்தார். திமுகவின் இருமொழிக் கொள்கைத் திட்டத்தினால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவடைந்தது.

கல்வி, சமூக நலன் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

  • கல்வி வளர்ச்சி: விடுதலைக்குப் பின் பள்ளிகள், கல்லூரிகள் பலமடங்கு பெருகியுள்ளன. கல்வியின் குறிக்கோள்கள் தேசிய ஒருமைப்பாடு, சமூக நீதி, அனைவருக்கும் தரமான கல்வி போன்றவற்றை உள்ளடக்கியது.

  • முக்கியக் குழுக்கள்: டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் (1948), A. லெட்சுமணசுவாமி முதலியார் குழு (1952), C.S. கோத்தாரி கமிஷன் (1964) போன்றவை அமைக்கப்பட்டன.

  • கல்வி நலத்திட்டங்கள்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

  • காமராஜர் ஆட்சியில் தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும், சத்துணவுத் திட்டம் (முட்டையுடன்) மற்றும் இலவசப் பேருந்து வசதி வழங்கப்படுகிறது. ‘கரும்பலகைத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டது. ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.

  • சமூக நலத் திட்டங்கள்: பல்வேறு அரசு நிதி உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    • பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் (1970).

    • கண்ணொளி வழங்கும் திட்டம் (1971): இது தேசிய அளவில் பின்பற்றப்பட்டது.

    • இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டம் (1973).

    • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் (1989).

    • தொட்டில் குழந்தை திட்டம், பசுமைவீடு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

  • போக்குவரத்து வளர்ச்சி: 1972இல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவானது. புகைவண்டிப் போக்குவரத்தில் அகலப் பாதைகளாக மாற்றப்பட்டு, தமிழகம் வேகமான வளர்ச்சியைப் பெற்றது.

  • தகவல் தொழில்நுட்பம் (IT): குடிமக்களுக்கு அரசின் தகவல்களை இணையம் வாயிலாக விரைவாக வழங்குதல், கிராமம்/நகர இடைவெளியை நிரப்புதல், மென்பொருள் ஏற்றுமதியை உயர்த்துதல் ஆகியவை தொழில்நுட்பத் துறையின் நோக்கங்கள்.

  • தகவல் தொடர்பு: 1957இல் செயற்கைக் கோள் மூலம் தகவல் தொடர்பு. இந்தியப் பொறியியல் பட்டதாரிகள் ஆங்கில அறிவு பெற்றிருந்ததால், கணினித் துறையில் வெளிநாடுகளில் வரவேற்புக் கிடைத்தது (மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 40% இந்தியர்கள்).

  • தமிழ் இணையக் கல்விக்கழகம்: 18.5.2000இல் நிறுவப்பட்டு, தமிழ் ஆதாரங்களை இணையம் வழியாக அளிக்கிறது. இது இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வி, மின் நூலகம் உருவாக்குதல், கணினித் தமிழ் ஆய்வினை ஊக்குவித்தல் போன்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

மூன்றாம் பருவம் அலகு-3 பாடக்குறிப்பு

ஐரோப்பியர் வருகையும் வாணிபமும் ( முதல்)

  • வாணிபத் தொடக்கம்: இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பட்டு, நறுமணப் பொருட்கள், சாயப்பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. கி.பி. 1453இல் ஆட்டோமானிய துருக்கியர்கள் காண்ஸ்டாண்டி நோபிள் நகரைக் கைப்பற்றி வாணிபத்திற்குத் தடை விதித்ததால், ஐரோப்பியர்கள் இந்தியாவிற்குப் புதிய கடல்வழியைக் காணும் முயற்சியில் இறங்கினர்.

  • போர்ச்சுகீசியர்கள்: இவர்கள் முதலில் புதிய கடல் வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வாஸ்கோடாமா 1498இல் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார். பிரான்சிஸ் கோ-டீ -அல்மெய்டா முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டு ‘நீலநீர்க் கொள்கை’ மூலம் கடற்படையை வலிமைப்படுத்தினார். அல்போன்ஸே – டி -அல்புகர்க் கோவாவைக் கைப்பற்றி போர்ச்சுகீசிய ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

  • டச்சுக்காரர்கள்: 1602இல் ‘நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி’ தொடங்கப்பட்டது. பழவேற்காடு டச்சுக்காரர்களின் ஆரம்பத் தலைநகரமாக இருந்தது, பின்னர் 1690இல் நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது. 1759இல் நடந்த பெடரா போரில் ஆங்கிலேயர்களால் இவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

  • பிரெஞ்சுக்காரர்கள்: மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சர் கால்பர்ட் என்பவரால் ‘பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்’ 1664இல் உருவாக்கப்பட்டது. பாண்டிச்சேரி இவர்களின் மிக முக்கியமான குடியேற்றமாக இருந்தது.

தமிழ்மொழிக்கு ஐரோப்பியரின் பங்களிப்புகள்

  • அச்சுப்பண்பாடு: ஐரோப்பிய கிறித்தவர்கள் தமிழ்நாட்டிற்கு சமயப் பிரச்சாரம் செய்யும் நோக்குடன் வந்தனர். ‘கார்த்தில்யா’ (லிஸ்பன், 1554) முதல் தமிழ் நூல் ஆகும். ‘தம்பிரான் வணக்கம்’ (1577) மற்றும் ‘கிரிசித்தியாலி வணக்கம்’ (1579) ஆகியவை அடுத்த அச்சேறிய நூல்கள்.

  • இராபர்ட்-டி-நோபிலி: இவர் கி.பி. 1606இல் வந்து, ‘தத்துவ போதகர்’ என்று தன்னைப் பெயர் மாற்றிக்கொண்டார். தமிழில் முதல் உரைநடை நூலை எழுதினார்.

  • ஹென்றிக் பாதிரியார்: இவர் முதன் முதலில் தமிழ் எழுத்துக்களால் ‘விவிலியத்தை’ அச்சேற்றியதால் ‘தமிழ் அச்சின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.

  • சீகன்பால்கு: இவர் தமிழ்நாட்டிற்கு வந்த முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர். இவர் இந்தியாவில் முதன் முதலாகத் தமிழ்மொழியில் புதிய ஏற்பாட்டினைக் காகிதத்தில் அச்சடித்தார். தரங்கம்பாடியில் அச்சகம், காகித ஆலை போன்றவற்றை உருவாக்கித் தமிழ்நாட்டில் ‘அச்சுப்பண்பாடு’ வளரக் காரணமாக இருந்தார். இவர் ‘இந்தியாவின் அச்சகத் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.

  • வீரமாமுனிவர்: இவர் (கான்சடன்டைன் ஜோசப் பெஸ்கி) 1710இல் தமிழகம் வந்தார். இவர் தமிழ் எழுத்துக்களில் நெடில் ஓசையைக் குறிக்கச் சீர்திருத்தங்கள் செய்தார் (ஆ, ஏ, கே, பே போன்ற வழக்கங்கள்). **’சதுரகராதி’**யை உருவாக்கினார். இவர் ‘தமிழ் உரைநடையின் தந்தை’ மற்றும் ‘தமிழ் அகராதியின் தந்தை’ என அழைக்கப்பட்டார்.

  • டாக்டர் கால்டுவெல்: 50 ஆண்டு காலம் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டு ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ உள்ளிட்ட நூல்களை இயற்றி, திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலை நிறுத்தினார்.

  • ஜி.யு. போப்: இவர் 1886இல் முதன் முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திருவாசக மொழிபெயர்ப்பு இவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.

ஆங்கிலேய ஆதிக்கமும் கர்நாடகப் போர்களும்

  • ஆங்கிலேயரின் வருகை: 1600இல் ‘ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி’க்கு இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கினார். 1639இல் சந்திரகிரியின் அரசர் சென்னையை ஆங்கிலேயருக்குக் கொடுத்து ‘புனித ஜார்ஜ் கோட்டை’ கட்ட அனுமதித்தார்.

  • கர்நாடகப் போர்கள் (1746-1763): ஆங்கிலேயர் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்ட பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மூன்று போர்களை நடத்தினர்.

    • முதல் போர்: ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் எதிரொலி. 1748இல் ஐ.லா.சபேல் உடன்படிக்கையின்படி முடிந்தது.

    • இரண்டாம் போர்: ஹைதராபாத் மற்றும் ஆற்காடு வாரிசுரிமைப் போர்களில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் சுதேச அரசர்களுக்கு ஆதரவு அளித்தனர்.

    • மூன்றாம் போர்: ஐரோப்பாவில் தொடங்கிய ‘ஏழாண்டுப் போரின்’ விளைவு. கி.பி. 1760இல் ஆங்கில தளபதி சர் அயர்கூட் பிரெஞ்சுப்படையை வந்தவாசி போர்க்களத்தில் தோற்கடித்தார். 1763இல் பாரிஸ் சமாதான உடன்படிக்கையின்படி போர் முடிந்தது. ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்று இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

  • ராபர்ட் கிளைவ்: இவர் வங்காளத்தின் கவர்னராக (1765) பொறுப்பேற்று, ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்யக் கூடாது என விதித்தார். வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார். இந்த இரட்டை ஆட்சி 1772இல் ரத்து செய்யப்பட்டது.

வங்காளம் மற்றும் மைசூரில் ஆங்கிலேய ஆதிக்கம் 

  • பிளாசிப் போர் (1757): சிராஜ்உத்-தௌலா ஆங்கிலேயரின் கோட்டைகளைக் கட்டுவதை எதிர்த்தார். ‘கல்கத்தா இருட்டறை துயரச் சம்பவத்திற்கு’ப் பிறகு, ராபர்ட் கிளைவ் 23.5.1757இல் சிராஜ்உத்-தௌலாவை பிளாசியில் தோற்கடித்தார். மீர்ஜாபர் ஆங்கிலேயரின் ‘பொம்மையாகச்’ செயல்பட்டார்.

  • பக்சார் போர் (1764): மீர்காசிம் இந்திய வியாபாரிகளுக்கு உதவ சுங்கவரியை ரத்து செய்ததால் கோபம் அடைந்த ஆங்கிலேயர்கள், மீர்காசிம், ஷூஜா உத்-தௌலா, இரண்டாம் ஷாஆலம் ஆகியோரின் கூட்டுப்படையை பக்ஸார் என்ற இடத்தில் தோற்கடித்தனர். பிளாசியில் பெற்ற வெற்றி பக்ஸாரில் நிலைநிறுத்தப்பட்டது.

  • முதல் ஆங்கில – மைசூர் போர் (1767-1769): ஹைதர்அலியின் வலிமையைக் கண்டு கவலைப்பட்ட ஆங்கிலேயர்கள், மராத்தியரோடும் நிஜாமோடும் உடன்படிக்கை செய்தனர். இறுதியில், ஹைதர்அலி சென்னையை முற்றுகையிட்டதால், ஆங்கிலேயர்கள் கி.பி. 1769இல் மதராஸ் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட எழுச்சி

  • பாளையக்காரர்கள்: கி.பி. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் ‘பாளையப்பட்டு ஆட்சிமுறை’ இருந்தது. பாளையக்காரர்கள் நிதித்துறை, நீதித்துறை, இராணுவம் ஆகிய அதிகாரங்களைக் கொண்டிருந்தனர்.

  • பூலித்தேவன்: இவர் நவாப்பிற்குச் செலுத்த வேண்டிய கப்பம் கட்ட மறுத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். ஆங்கிலேயப் படைகளை எதிர்த்து வெற்றி கொண்ட மகத்தான ராணுவ வெற்றியைப் பெற்றார். தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தைத் துவக்கிய பெருமைக்கு உரியவர் இவரே.

  • வீரபாண்டிய கட்டபொம்மன்: கலெக்டர் ஜாக்சனின் அடாவடிச் செயல்கள் இவரைப் புரட்சி செய்யத் தூண்டின. இவர் “வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. நாங்கள் ஏன் உங்களுக்கு வரிகட்டவேண்டும்” என்று முழக்கமிட்டார். 5.9.1799இல் பானர்மேன் படையால் தோற்கடிக்கப்பட்டு, 16.10.1799இல் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

  • வேலுநாச்சியார்: இவர் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். கணவரை இழந்த பிறகு, ஹைதர்அலியை சந்தித்து உதவி பெற்று, மருது சகோதரர்களின் உதவியுடன் 1780ஆம் ஆண்டு சிவகங்கை சீமையை மீட்டு முதல் ராணியாக முடிசூட்டப்பட்டார்.

  • மருதுபாண்டியர் (1780-1801): முத்து வடுகநாத தேவரின் அரசவையில் அமைச்சர்களாகப் பணியாற்றிய இவர்கள், சிவகங்கை கூட்டிணைப்பை உருவாக்கினர். இவர்கள் **திருச்சிராப்பள்ளி அறிக்கை (1801)**யை வெளியிட்டனர். இவ்வறிக்கை அன்னியர் வரவால் நாடு வளம் கெட்டுப்போவதைச் சுட்டிக்காட்டி மக்களைத் தட்டி எழுப்பியது. ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் ஆதரவாளர்கள் பிளவுபட்டனர். இறுதியில், 16.11.1801இல் மருதுபாண்டியர் மற்றும் கோபாலன் உள்பட 73 பேர் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.

  • வேலூர் கலகம் (1806): ஆங்கிலேயர்கள் ராணுவத்தில் புகுத்திய கட்டுப்பாடுகள் (சமய குறிகள், தாடி மீசையை நீக்குதல்) கோபத்தை ஏற்படுத்தின. ஜூலை 10ஆம் நாள் கோட்டையைக் கைப்பற்றி, திப்புவின் மகன் பதேக் ஹைதர் அரசராக அறிவிக்கப்பட்டாலும், இக்கிளர்ச்சி அடக்கப்பட்டது.

நவீன விடுதலைப் போராட்டத்தில் தமிழகம்

  • சென்னை மகாஜன சபை: 1884இல் எஸ்.இராமசாமி முதலியார், பி.அனந்தாசாகுலு, இரங்கய்யா நாயுடு ஆகியோரால் ஏற்படுத்தப்பட்டது. 1920இல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டது.

  • வ.உ.சிதம்பரம்பிள்ளை: ‘செக்கிழுத்த செம்மல்’ மற்றும் ‘கப்பலோட்டி தமிழன்’ என அழைக்கப்பட்டார். சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்து, தூத்துக்குடி – கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார். இவர்மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டுச் சிறையில் செக்கிழுத்தார்.

  • சுப்பிரமணிய பாரதியார்: ‘சுதேசமித்ரன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியர். 1907இல் ‘இந்தியா’ என்ற தமிழ் வாரப் பத்திரிக்கையின் ஆசிரியரானார். இவரது பாடல்கள் மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டின. ஆங்கில அரசின் பிடியில் இருந்து தப்பிக்க புதுவைக்குச் சென்றார்.

  • வாஞ்சிநாதன்: 17.6.1911இல் மணியாச்சி புகைவண்டி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷ் என்பவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

  • திருப்பூர் குமரன்: தேசியக்கொடித் தடைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு உயிர் துறந்ததால், ‘கொடிகாத்த குமரன்’ என்று போற்றப்படுகிறார்.

  • இராஜகோபாலாச்சாரி (ராஜாஜி): 1930இல் வேதாரண்யம் சத்தியாகிரகத்தைத் தலைமை ஏற்று நடத்தினார். சுதந்திர இந்தியாவின் ‘முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக’ பொறுப்பேற்றார். இவரது அரசியல் தந்திர செயல்களால் ‘சாணக்கியர்’ எனப் போற்றப்படுகிறார்.

  • காமராஜர்: ‘பெருந்தலைவர்’ மற்றும் ‘கர்மவீரர்’ என அழைக்கப்பட்டார். வேதாரண்ய உப்புச்சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார், மதிய உணவுத்திட்டம் மற்றும் இலவச கல்வி போன்றவற்றை அமல்படுத்தினார். தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகித்ததால் ‘அரசை உருவாக்குவர்’ எனப் போற்றப்பட்டார்.

மூன்றாம் பருவம் அலகு- 2 பாடக்குறிப்புகள்

மூவேந்தர் வரலாறு: சோழர்கள் (கி.பி. 9–13ஆம் நூற்றாண்டு)

I. ஆட்சியர் வரலாறு – ஒரு சுருக்கம்

  • ஆட்சிப் பகுதி: வடவேங்கடம் முதல் தென்குமரி வரை சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர்கள் ஆண்டனர்.

  • பல்லவர்கள்: காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தினர்.

  • பிற்காலம்: மூவேந்தர்கள் மற்றும் பல்லவர்களுக்குப் பிறகு முகமதியர் ஆட்சி மற்றும் மராட்டியர் ஆட்சி தமிழ்நாட்டில் நடைப்பெற்று வந்தது.

  • சிறப்பு: இவர்களை ‘முடியுடை மூவேந்தர்’ எனச் சிறப்பித்துக் கூறுதல் மரபு.

II. சோழர்கள் வரலாறு (கி.பி. 9 – 13ஆம் நூற்றாண்டு)

  • பகுதி: திருச்சி, தஞ்சை பகுதிகளை ஆட்சி செய்தனர்.

  • ஆட்சிக்காலம்: கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 13ஆம் நூற்றாண்டோடு முடிவடைந்தது (சுமார் 400 ஆண்டுகள்).

  • தலைநகரங்கள்: உறையூர், காவிரிபூம்பட்டினம்.

  • அடையாளங்கள்: கொடி: புலிக்கொடி; சூடும் பூ: ஆத்தி.

  • சிறப்புப் பெயர்கள்: வளவர், திறையர், செம்பியர், சென்னியர்.

III. முக்கியச் சோழ மன்னர்கள்

  • விசயாலய சோழன் (846 – 881):

    • பிற்காலச் சோழர் மரபைத் தோற்றுவித்தவர்.

    • கி.பி. 846இல் தஞ்சையைக் கைப்பற்றி நிசும்பசூதினி (துர்க்கை) கோயிலை எழுப்பினார்.

    • திருப்புறம்பியப் போர் (880): இவருக்கும் இரண்டாம் வரகுண பாண்டியனுக்கும் இடையே நடந்தது. இதன் விளைவாகச் சோழர்கள் எழுச்சி பெற்றனர்.

  • முதலாம் ஆதித்த சோழன்:

    • தேவார திருமுறைகளைத் தொகுக்கச் செய்தார்.

    • காவிரி ஆற்றின் இருகரைகளிலும் பல சிவன் கற்கோயில்களை அமைத்தார்.

    • தொண்டைநாடு, தலைக்காடு, கொங்குநாடு ஆகியவற்றைக் கைப்பற்றினான்.

  • முதல் பராந்தகச் சோழன்:

    • பாண்டிய மன்னனை வென்று ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ எனப் பெயர் பெற்றார்.

    • இவர் காலத்தில் ‘குடஓலை’ கிராம ஆட்சிமுறை நிலவியது.

    • தக்கோலப்போர் (949): இவன் மகன் இராசாதித்தன் இறந்தான், சோழப் பேரரசு வலிமை இழந்தது.

  • முதலாம் இராசராசன் (985 – 1014):

    • ‘மெய்க்கீர்த்தி’ என்ற கல்வெட்டு வழக்கத்தை உருவாக்கினார்.

    • தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியவர் (‘ராஜராஜேஸ்வரம்’).

    • தேவாரப் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்தவர்.

    • சீனாவிற்குத் தூதுக்குழு அனுப்பினார்.

  • முதலாம் இராசேந்திரன் (1012 – 1044):

    • இலங்கை முழுவதையும் கைப்பற்றினார்.

    • கங்கை நோக்கிப் படையெடுத்து ‘கங்கை கொண்டான்’ என அழைக்கப்பட்டார்.

    • ‘கடாரம் கொண்டான்’ என்ற பெருமைக்குரியவர்.

    • கங்கை கொண்டச் சோழபுரத்தைத் தலைநகராக்கினார்; ‘கங்கை கொண்ட சோழேச்சுரம்’ கோயிலைக் கட்டினார்.

  • முதலாம் குலோத்துங்கச் சோழன் (1070 – 1120):

    • ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று புகழப்பட்டார்.

IV. சோழர்களின் நிர்வாக முறை

  • மண்டலங்கள்: பேரரசு 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

  • கிராம சபைகள்: அந்தணர்கள் சபைகள் ‘சபா’, அந்தணர் அல்லாதோர் சபைகள் ‘ஊர்’.

  • ஆணைகள்: மன்னன் பிறப்பிக்கும் வாய்மொழி ஆணை ‘திருவாய்க் கேள்வி’.

  • நிர்வாக அதிகாரிகள்: திருவாய்கேள்வி, திருமந்திரஓலை, விடையில் அதிகாரி, பாழக்காவல் அதிகாரி.

  • வாரியங்கள்: சம்வத்சர வாரியம், ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம் (வரி வசூல்), பொன் வாரியம் (நாணயம்) போன்றவை இருந்தன.

  • குடவோலை முறை: கிராமசபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உத்திரமேரூர்க் கல்வெட்டு இம்முறையை விவரிக்கிறது.

    • தகுதிகள்: நிலம், சொந்த வீடு, 35-70 வயது, கல்வி அறிவு, நல்லொழுக்கம்.

  • வருவாய்: முக்கியமாக நிலவரி (‘காணிக்கடன்’). பிற வரிகள்: ‘குடிமை’, ‘மீன் பாட்டம்’, ‘முத்தாவணம்’ (விற்பனை வரி).

  • நிலங்கள்: போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு ‘உதிரப்பட்டி’ (வரியில்லாத நிலம்) வழங்கினர்.

V. பாண்டியர்கள் வரலாறு

  • பகுதி: மதுரைப் பகுதிகளை ஆட்சி செய்தனர்.

  • முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251):

    • ‘தென் இந்தியாவின் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவன்’.

    • சோழர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தான்.

    • விருதுகள்: ‘எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர்’, ‘சேரனை வென்ற பாண்டிய தேவன்’.

  • முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268):

    • கொல்லத்தைக் கைப்பற்றி ‘கொல்லம் கொண்ட பாண்டியன்’ எனப்பட்டார்.

    • ஈழத்தின் மீது படையெடுத்து புத்தரின் பல்லைக் கைப்பற்றினார்.

    • வருகை: மார்க்கோ போலோ (வெனிஸ்), வாசாப் (பெர்சியா) இவனது காலத்தில் வருகை புரிந்தனர்.

VI. பாண்டியர்கள் ஆட்சி முறை

  • நிர்வாகம்: நாடு பல ‘வளநாடுகளாகப்’ பிரிக்கப்பட்டிருந்தது.

  • ஊர்ச்சபை: குடவோலை மூலம் உறுப்பினர்கள் தேர்வு. சபையோரைப் ‘பெருமக்கள்’ என அழைத்தனர்.

  • வரி: நிலவரி, ‘தறியிறை’, ‘செக்கிறை’, ‘உல்கு’ (சுங்கவரி). வரிவிலக்கு பெற்றவை ‘இறையிலி’ எனப்பட்டன.

  • வீரர்களுக்கு: போரில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ‘உதிரப்பட்டி’ (வரியில்லா நிலம்).

  • வணிகம்: சிறந்த வணிகர்களுக்கு ‘எட்டி’ பட்டம்.

  • கலை வளர்ச்சி: நடனக்கலையில் சிறப்புற்று விளங்கிய மகளிருக்கு ‘தலைக்கோலி’ பட்டம் வழங்கப்பட்டது.

VII. சேரர்கள் ஆட்சி

  • பகுதி: கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர்.

  • தலைநகரம்: கரூர், வஞ்சி, தொண்டி.

  • கொடி: விற்கொடி.

  • உதியன் நெடுஞ்சேரலாதன்: பாரதப் போரில் பாண்டவர், கௌரவர் இருவருக்கும் பெருஞ்சோறு அளித்தார்.

  • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்: இமய மலையில் வில்லைப் பொறித்தவர்.

  • கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்: கடம்பர்களை வென்றவர். கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்திலிருந்து கல் கொணர்ந்து விழா எடுத்தார். இலங்கைவேந்தன் கயவாகுவை விழாவுக்கு அழைத்தார்.

  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்: கொள்ளையர்களிடமிருந்து ஆட்டுமந்தைகளை மீட்டதால் இப்பெயர் பெற்றார்.

  • கொடைத் திறம்: வறியோர் பசிப்பிணி போக்கினர், அளவில்லாது கொடை வழங்கினர். வறட்சிக் காலத்திலும் பாணர், கூத்தர் போன்றோருக்கு உதவினர்.

VIII. பல்லவர்கள் வரலாறு

  • தலைநகரம்: காஞ்சிபுரம்.

  • ஆட்சிக் காலம்: கி.பி. 3 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை.

  • கல்வி, கலை: காஞ்சிபுரம் கல்வி, கலை, சமய தத்துவங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குச் சிறந்து விளங்கியது.

  • பட்டயங்கள்: பிற்காலப் பல்லவர்கள் கிரந்தம் பயன்படுத்தினர்.

  • சிம்ம விஷ்ணு: களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை நிறுவினார்.

  • முதலாம் மகேந்திரவர்மன் (615 – 630):

    • ‘விசித்திரசித்தன்’ எனப் புகழப்பட்டார்.

    • சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினார் (திருநாவுக்கரசரால்).

    • குடைவரைக் கோயில்களை உருவாக்கினார்.

  • முதலாம் நரசிம்மவர்மன் (630 – 668):

    • ‘மாமல்லன்’ என்ற சிறப்புப் பெயர்.

    • இரண்டாம் புலிகேசியை வென்று ‘வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன்’ பட்டம் பெற்றார்.

    • சீனப் பயணி யுவான்-சுவாங் கி.பி. 640இல் காஞ்சிபுரத்திற்கு வந்தார்.

  • இரண்டாம் நரசிம்மவர்மன் (இராஜசிம்மன்):

    • காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலும், மகாபலிபுரத்தில் கடற்கரைக் கோயிலும் இவன் எழுப்பியது.

  • இரண்டாம் நந்திவர்மன் (730 – 795):

    • பல்லவ அரசர்களிலேயே மிக அதிக காலம் (65 ஆண்டுகள்) ஆட்சி செய்தார்.

    • காஞ்சிபுரத்தில் விஷ்ணுவுக்கு பரமேஸ்வர விண்ணகரம் (வைகுந்தப்பெருமாள்கோயில்) கட்டினார்.

  • மூன்றாம் நந்திவர்மன்: தெள்ளாறில் பாண்டியனை வென்று ‘தெள்ளாறெறிந்த நந்திப் போத்தரையன்’ என்ற பட்டம் பெற்றான்.

IX. பல்லவர்களின் கலைத்தொண்டு

  • பொற்காலம்: பல்லவர் காலம் ‘அரிய கலைப்படைப்புக்களின் பொற்காலம்’.

  • கட்டடக்கலை: குடைவரைக் கோயில்கள் (மகேந்திரவர்மன்), ஒற்றைக்கல் கோயில்கள் (நரசிம்மவர்மன்), கட்டுமானக் கோயில்கள் (இராசசிம்மன்) என மூன்று பிரிவுகள்.

  • சிற்பக் கலை: திருச்சிராப்பள்ளி மலைக்கோயில், மகாபலிபுரம் சிற்பங்கள்.

  • ஓவியக் கலை: சித்தன்னவாசல், குடுமியாமலை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

X. நாயக்கர்கள் ஆட்சி (கி.பி. 1529 – 1736)

  • மதுரை நாயக்கர்கள்:

    • விசுவநாத நாயக்கர் (1529-1564): ‘பாளையப்பட்டு ஆட்சி முறையை முதன் முதலில் தமிழகத்தில் கொண்டு வந்தவர்’.

    • திருமலை நாயக்கர் (1623-1659): புகழ்பெற்றவர். கி.பி. 1634இல் தலைநகரைத் திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றினார்.

    • மூக்கறுப்புப் போர்: மைசூர் மன்னனின் படைகளுடன் நடத்திய போரில் மைசூர் வீரர்களின் மூக்குகளை அறுத்தனர்.

    • கலைப்பணிகள்: மதுரையில் நாயக்கர் மஹால், தெப்பக்குளம்.

    • இராணி மங்கம்மாள் (1689-1706): ஔரங்கசீப்புக்குத் திறைப் பணம் செலுத்தி ஆட்சியைத் தக்கவைத்தார். பல அறச் செயல்களைச் செய்தார்.

    • மீனாட்சி அரசி: மதுரை நாயக்கர்களின் கடைசி ஆட்சியாளர். சந்தாசாகிபுவால் சிறையில் அடைக்கப்பட்டு உயிர் துறந்தார்.

  • தஞ்சை நாயக்கர்கள்:

    • செவ்வப்ப நாயக்கர்: தஞ்சை நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்தவர்.

    • இரகுநாத நாயக்கர்: டென்மார்க் நாட்டவருக்குத் தரங்கம்பாடியில் வாணிபம் செய்ய அனுமதி வழங்கினார்.

    • விசயராகவ நாயக்கர்: மதுரை சொக்கநாத நாயக்கருக்கு மகள் தர மறுத்து, போரில் தன் மகளுடன் உயிர் நீத்தார். இவருடன் தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிந்தது.

XI. முகலாயர்கள் ஆட்சி

  • பாபர் (1526-1530): முதல் பானிப்பட் போர் (1526) மூலம் முகலாயப் பேரரசுக்கான அடித்தளத்தை இட்டார். சுயசரிதை: ‘துசுக்ச் பாபரி’ (துருக்கிய மொழி).

  • ஷெர்ஷா சூர் (1540-1545): உண்மையான பெயர் ஃபரித். நில வருவாய் சீர்திருத்தம் செய்தார். நான்கு முக்கிய பெருவழிச் சாலைகளை அமைத்தார்.

  • அக்பர் (1556-1605): இந்தியாவின் தலைசிறந்த பேரரசர். ‘ஜிசியா’ வரியை ரத்து செய்தார். ‘தீன் இலாஹி’ என்ற புதிய சமயத்தை அறிவித்தார். மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தினார்.

  • ஜஹாங்கீர் (1605-1627): **’நீதிச்சங்கிலி மணி’**யை அறிமுகப்படுத்தினார். சர் தாமஸ் ரோ வணிக அனுமதி பெற்றார்.

  • ஷாஜஹான் (1628-1658): ஆட்சிக்காலம் ‘மொகலாயர்களின் பொற்காலம்’. ‘கட்டடக்கலை இளவரசர்’. தாஜ்மஹால்லை (மனைவி மும்தாஜ் நினைவாக) கட்டினார்.

  • ஔரங்கசீப் (1658-1707): கடைசி, வலிமை வாய்ந்த மன்னர். ‘ஜெசியா’ வரியை மீண்டும் விதித்தார். ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ்பகதூர் கொல்லப்பட்டார்.

XII. மராட்டியர்கள் ஆட்சி (கி.பி. 1676 – 1855)

  • நிறுவனர்: ஏகோஜி (வெங்காஜி) கி.பி. 1676இல் தஞ்சையில் ஆட்சியைத் தொடங்கி வைத்தார். பல பாசன வசதிகளை ஏற்படுத்தினார்.

  • முதலாம் சரபோஜி (1712-1728): தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழா இவர் காலத்தில் நடைபெற்றது.

  • துக்கோஜி (1728-1736): இசைமேதை, ‘சங்கீதசாகரம்’ என்ற இசைநூலை இயற்றினார், இந்துஸ்தானி இசையை அறிமுகப்படுத்தினார்.

  • இரண்டாம் சரபோஜி (1798-1832): பல மொழிகளில் புலமை பெற்றவர். தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலில் உலகின் மிக நீளமான கல்வெட்டைச் செதுக்கச் செய்தார். சரசுவதிமகால் நூலகத்தை மேம்படுத்தினார்.

  • இரண்டாம் சிவாஜி (1832-1855): வாரிசின்றி இறந்ததால் (1855), ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி தஞ்சை அரசை ஏற்றுக்கொண்டு, மராட்டியர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

XIII. மராட்டியரின் நிர்வாக அமைப்பு

  • பிரிவு: தஞ்சை மராட்டிய நாடு 5 ‘சுபா’க்களாகப் பிரிக்கப்பட்டது. சுபாவின் தலைவர் ‘சுபேதார்’.

  • நாணயம்: நாணயம் உருவாக்கும் இடம் ‘கம்பட்டம்’ எனப்பட்டது.

  • அலுவலர்கள்: சர்க்கேல் (தலைமை அமைச்சர்), அமல்தார் (வருவாய்த் துறை), சிரஸ்தேதார் (ஆவணக் காப்பாளர்), தாசில்தார் (வரி வசூல்), கொத்தவால் (கோட்டைக் காவல்).

மூன்றாம் பருவம் அலகு 1 பாடக்குறிப்புகள்

அலகு – 1: தொல் பழங்கால வரலாறும் சங்ககால வரலாறும் 

தொல் பழங்காலம், லெமூரியா மற்றும் கற்காலங்கள்

I. தொல் பழங்கால வரலாறு

  • வரையறை: எழுத்துச் சான்றுகள் இல்லாதக் காலத்தில், மனிதன் வாழ்ந்து சென்ற எச்சங்களைக் கொண்டு வரலாற்றை அறிதல்.

  • கற்காலம்: வாழ்விற்குக் கற்களைப் பயன்படுத்திய காலம்; வேட்டையாட கருவிகளை மாற்றச் சிந்தித்த காலம்.

II. லெமூரியா கோட்பாடு

  • ஆதிமனிதன்: உலகில் முதன்முதலில் ஆதிமனிதன் தோன்றியதாகக் கருதப்படுவது தென்னிந்தியா.

  • லெமூரியா: தென்னிந்தியாவுக்குத் தெற்கில் இருந்த ‘லெமூரியா’ கண்டத்தில்தான் முதல் மக்களினம் தோன்றினர். இவர்களே தமிழ்நாட்டின் ‘ஆதி குடிகள்’.

  • சான்றுகள்: இப்போதுள்ள தென்னிந்தியா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகளில் வாழ்வோரிடம் இன ஒற்றுமை, உடற்கூறு ஒற்றுமை, மொழி ஒற்றுமை காணப்படுகிறது. ‘பூமராங்’ (வேட்டைக் கத்தி) பயன்பாடும் ஒற்றுமை காட்டுகிறது.

III. கற்கால வகைகள்

    1. பழங்கற்காலம் 2. புதிய கற்காலம் 3. உேலாகக் காலம்.

IV. பழங்கற்காலம் 

  • வாழ்வியல்: விலங்குகளை வேட்டையாடியும், கிழங்குகளைச் சேகரித்தும் வாழ்ந்தனர்; ‘உணவை சேகரிப்போர்’ என அழைக்கப்பட்டனர். நாடோடி வாழ்க்கை வாழ்ந்தனர்.

  • கருவிகள்: கற்களால் ஆன பலவகை கோடாரிகள், ஈட்டிகள், கத்திகள்.

  • முக்கிய இடங்கள்: அத்திரம்பாக்கம் (சென்னை அருகில்), பிம்பேட்கா (ம.பி.), கர்நூல்.

  • பண்பாடு: நெருப்பை உண்டாக்கக் கற்றுக்கொண்டனர். சைகையால் கருத்துப் பரிமாற்றம் செய்தனர். கிராமதேவதைகளை ஆயுதம்/கல் உருவம் வைத்து வழிபட்டனர்.

V. புதிய கற்காலம் 

  • முன்னேற்றம்: மனித நாகரீகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்; பயிர்த்தொழிலில் ஈடுபட்டு நீர்நிலைகள் அருகே நிலைத்து வாழத் தொடங்கினர்.

  • வேளாண்மை: நெல், சோளம், பருப்பு வகைகள், பழ வகைகள் பயிரிட்டனர்.

  • வாழ்விடம்: மண் சுவர்கள், ஓலை/தட்டை கூரைகள் கொண்டு குடில்கள் அமைத்தனர்.

  • இடங்கள்: மாஸ்கி, பிரம்மகிரி (கர்நாடகம்), பையம்பள்ளி (தமிழ்நாடு).

  • இறந்தவரைப் புதைக்கும் முறை: பெரிய தாழியில் உடலை உட்கார்ந்த நிலையில் வைத்தனர். தாழி மீது கற்பலகையை வைத்து, அதைச் சுற்றிலும் செங்குத்தான கற்களை நட்டு வைத்தனர்.

VI. உலோகக் காலம், பெருங்கல் காலம்

  • மாற்றம்: கற்கருவிகளைவிட இரும்புக் கருவிகள் சிறந்தவை என உணர்ந்தனர்.

  • செம்புக் கற்காலம்: செம்பு மற்றும் வெண்கலம் பயன்படுத்தப்பட்டன. ஹரப்பா பண்பாடு இதன் பகுதி. பையம்பள்ளியில் வெண்கலம், செம்புப் பொருட்கள் கிடைத்துள்ளன.

  • பெருங்கல் காலம்/இரும்புக் காலம்: தென்னிந்தியாவில் சமகாலம் எனக் கருதப்படுகிறது.

  • மெகாலித்: ‘பெரிய கல்’ என்று பொருள்; கல்லறையின்மேல் சுற்றி அடுக்கப்பட்ட கற்களைக் குறிக்கிறது.

  • கல்லறைப் பொருட்கள்: கருப்பு சிகப்பு வண்ணத்தாளான பானையோடுகள், இரும்பாலான மண்வெட்டி, அரிவாள், சிறு ஆயுதங்கள்.

  • முக்கிய இடங்கள்: ஹல்லூர், மாஸ்கி, நாகார்ஜுனீ கொண்டா, ஆதிச்சநல்லூர்.

VII. முக்கிய அகழ்வாராய்ச்சிகள்

  • அகழாய்வு நோக்கம்: பண்பாட்டின் மேன்மைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல்.

  • அரிக்கமேடு: புதுச்சேரி அருகில். முக்கிய கட்டடம்: ‘பண்டக சாலை’. கண்டுபிடிப்புகள்: தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ரோமானியப் பழங்காசுகள். சாயப் பட்டறைகள் இருந்தன.

  • ஆதிச்சநல்லூர்: தாமிரபரணி ஆற்றங்கரை (தூத்துக்குடி). தாழிகள் பயன்படுத்தப்பட்டன. கிடைத்தவை: மனித எலும்புக்கூடுகள், கருப்பு – சிவப்பு பானையோடுகள், தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி, வாள் போன்ற இரும்புப் பொருள்கள்.

VIII. சிந்துவெளி நாகரிகம்

  • கண்டுபிடிப்பு: 1922-ஆம் ஆண்டு சர். ஜான் மார்சல்.

  • பெயர்: மொகஞ்சதாரோ என்பதற்கு ‘இறந்தவர்களின் நகரம்’ என்று பொருள்.

  • உலோகப் பயன்பாடு: வெண்கலம், செம்பு பயன்படுத்தினர்; இரும்பை அறியாதவர்களாக இருந்தனர்.

  • நகர அமைப்பு: மதில்கள், 100 அடி நீள நீராடும் மண்டபம், சுட்ட செங்கற்கள், சீரான தெருக்கள். மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு.

  • சமயம்: சக்தி வழிபாடு, சிவலிங்க வழிபாடு (சைவசமயம் மிகப் பழைமையானது).

IX. கீழடி அகழாய்வு

  • இடம்: வைகை ஆற்றங்கரை, சிவகங்கை மாவட்டம்.

  • காலக்கணிப்பு: கி.மு. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதி செய்கிறது. மக்கள் எழுத்தறிவும் நகர நாகரிகமும் பெற்றிருந்தனர்.

  • சிறப்பு: இது ஒரு ‘தொழில் நகரமாக’ இருந்தது.

  • கட்டுமானம்/தொழில்: செங்கல் கட்டுமானம், சுடுமண்ணாலான உறை கிணறுகள், வீடுகள்தோறும் குளியலறைகள். நூல் நூற்கும் தக்களி கிடைத்தது.

  • எழுத்தறிவு: 60க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. (குவிரன் ஆதன், ஆதனி போன்ற பெயர்கள்).

  • வணிகம்: கங்கைச் சமவெளியில் வெள்ளி முத்திரைக் காசுகள், ரோமானிய உயர்ரக மண்பாண்டங்கள் (அழகன்குளம் மற்றும் கீழடியில்) கிடைத்துள்ளன.

சங்ககாலத் திணை வாழ்வியல்

X. திணை வாழ்வியல்

  • திணை: குலம், நிலம், ஒழுக்கம் ஆகியவற்றைக் குறிக்கும்.

  • வகை: அகத்திணை (காதல்) மற்றும் புறத்திணை (வீரம், கொடை).

  • முப்பொருள்: முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.

XI. முதற்பொருள் (நிலமும் பொழுதும்)

  • நிலம்: குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்), நெய்தல் (கடல்), பாலை (வறட்சி).

  • பொழுது: சிறுபொழுது (ஒரு நாளின் 6 காலப் பிரிவுகள்), பெரும்பொழுது (ஓர் ஆண்டின் 6 காலப் பிரிவுகள்).

XII. உரிப்பொருள் (ஒழுக்கம்)

  • குறிஞ்சி – புணர்தல் (ஒன்று சேர்தல்).

  • முல்லை – இருத்தல் (பிரிவைப் பொறுத்தல்).

  • மருதம் – ஊடல் (பிணக்குக் கொள்ளுதல்).

  • நெய்தல் – இரங்கல் (வருந்துதல்).

  • பாலை – பிரிவு (பிரிந்து செல்லுதல்).

XIII. ஐவகை நில மக்கள் வாழ்வு

  • குறிஞ்சி: வேட்டையாடி வாழ்ந்தனர். முருகனை வழிபட்டனர்.

  • முல்லை: ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்தனர். வரகு, சாமை பயிரிட்டனர். திருமாலை வழிபட்டனர்.

  • மருதம்: நாகரிக வளர்ச்சி பெற்ற பகுதி. பருத்தி பயிரிட்டு ஆடை நெய்தனர். இந்திரனை வழிபட்டனர்.

  • நெய்தல்: மீன் பிடித்தல், முத்துக் குளித்தல். கடல் இவர்களது ‘உழுநிலம்’. வருணனை வழிபட்டனர்.

  • பாலை: மக்கள் ‘எயினர்’. தொழில் ‘வழிப்பறி செய்தல்’. கொற்றவையை வழிபட்டனர்.

XIV. புறத்திணை (போர்த் திணைகள்)

  • போரின் அடிப்படை: போரிடும் முறைக்கு ஏற்ப பூக்களை அணிந்து செல்லுதல்.

  • முக்கிய திணைகள்:

    • வெட்சி (பசுக்கூட்டங்களைக் கவர்தல்).

    • கரந்தை (மீட்டுவரச் செய்யும் போர்).

    • வஞ்சி (நாட்டைப் பிடிப்பதற்காகப் படையெடுத்தல்).

    • காஞ்சி (நாட்டைக் காக்கப் போரிடுதல்).

    • நொச்சி (கோட்டையைக் காக்கப் போரிடுதல்).

    • உழிஞை (கோட்டையைச் சுற்றி முற்றுகையிடுதல்).

    • தும்மை (எதிரெதிரே நின்று போரிடுதல்).

    • வாகை (வெற்றி பெற்ற அரசனைப் புகழ்தல்).

சங்ககால வாழ்வியல் (களவு, கற்பு, உணவு, வாணிகம்)

XV. களவு வாழ்வு 

  • களவு வரையறை: ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம்; பிறர் அறியாதபடி மறைவாக நிகழும்.

  • வகை: காமப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற் கூட்டம்.

  • வரைவு கடாஅதல்: திருமணம் செய்து கொள்ளுமாறு தோழி வற்புறுத்துவாள்.

  • மடேலறுதல்: களவில் வெற்றி பெற, பனைமடலால் செய்யப்பட்ட குதிரை மீது ஏறி காதலை வெளிப்படுத்துவது.

  • எண்வகை மணங்கள்: நால்வேத நெறியினர் வகுத்த பிரமம்… கந்தர்வம் (காதலர்கள் தாமே கூடி இன்புறுவது – களவு வாழ்வு) உள்ளிட்ட எட்டு வகைகள் இருந்தன.

XVI. கற்பு வாழ்வு (திருமண வாழ்வு)

  • கற்பு வரையறை: திருமணம் நிகழ்ந்த பிறகு, தைலமக்கள் மேற்கொள்ளும் இனிய இல்லற வாழ்க்கை.

  • ஊடல்: தலைவன் பரத்தையர் முதலான பிற பெண்களுடன் உறவு கொள்வதால் தலைவி கொள்ளும் கோபம்.

  • கற்பில் பிரிவு: கல்வி காரணமாக (ஓதல்), காவல் காரணமாக, பொருள் தேட (பொருள்வயிற் பிரிவு) உட்பட 6 பிரிவுகள்.

XVII. சங்ககால உணவு

  • சமையல் நூல்: உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல் ‘மடைநூல்’.

  • உணவு வகைகள்: தினையரிசியும் பாலும் கலந்த பால்சோறு, இறைச்சியும் அரிசியும் கலந்த ஊன் துைவ அடிசில். ஊன் உணவும் கள்ளும் எல்லோராலும் உண்ணப்பட்டன.

  • கறி/ஊறுகாய்: அசைவ உணவே பெருவழக்கு. ஊறுகாய் ‘காடி’ என அழைக்கப்பட்டது.

  • கள்/மது: கடும் புளிப்புடன் கூடிய கள் விரும்பப்பட்டது. புறநானூறு இதனை ‘தேட்கடுப்பன்ன நாட்படு தேறல்’ எனக் குறிப்பிடுகிறது. யவன மதுவும் (ரோம ஒயின்) பருகினர்.

  • உண்ணும் முறை: வாழையிலை அல்லது தேக்கிலையில் சுடச்சுட உண்டனர்.

XVIII. அணிகலன்கள்

  • பயன்பாடு: பொன்னாலும், நவமணிகளாலும் ஆன அணிகலன்கள் மதிப்புப் பெற்றைவ.

  • பெண்கள்: கழுத்தில் தாலி, கொத்தமல்லி மாலை, அட்டிகை; கையில் சங்கு மற்றும் எலும்பால் ஆன வளையல்கள்; காலில் மாம்பிஞ்சு கொலுசு, காலில் மெட்டி.

  • ஆண்கள்: வீரக்கழல், வீரக் கண்டை, அரைநாண், பதக்கம், கடுக்கண், குண்டலம்.

XIX. வாணிகம்

  • சிறப்பு: உழவும் வாணிகமும் இருபெரும் உற்பத்தித் தொழில்கள். வாணிகர் ‘அரசர் பின்னோர்’ எனப் பெருைமயுடன் அழைக்கப்பட்டனர்.

  • கடல் வாணிகம்: கடற்காற்றின் உதவியால் ‘நாவாய்’ (கப்பல்) ஓட்டினர்.

  • தரை வாணிகம்: அயல்நாடுகளுக்கு வணிகர்கள் ஒன்றாகச் சென்றார்கள் ‘வணிகச் சாத்து’ எனப்பட்டனர்.

  • பண்ட மாற்று முைற: அரிசி, உப்பு, பால் போன்றவற்றுக்கு பண்டமாற்று. உப்புக்கு நெல் மாற்றப்பட்டது.

  • ஏற்றுமதி: மிளகு, முத்து, இரத்தினம், தந்தம். ஏற்றுமதியில் நான்கில் மூன்று பங்கு மிளகு.

  • இறக்குமதி: யவனக் கப்பல்கள் “பொன்னோடு வந்து மிளகொடு பெயரும்” (திரும்பிச் செல்லும்). அரபுநாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி.

கல்வி, கலை, தமிழ்ச் சங்கங்கள் மற்றும் ஆட்சி முறை

XX. கல்வியும் அறிவியலும்

  • கல்வியின் உயர்வு: ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’ (குறள் 400).

  • ஆசிரியர்கள்/பள்ளிகள்: ஆசிரியர் ‘கணக்காயர்’ எனப்பட்டனர். கல்வி பயிலும் இடம் ‘பள்ளி’ (பெரும்பாலும் திண்ணைகளில்).

  • நூல்கள்: மாணவர்கள் ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதினர். இலக்கண நூல்கள்: தொல்காப்பியம், காக்கைப்பாடினியம். கணித நூல்: ‘ஏரம்பம்’.

  • வானவியல்: வானவியல் புலவர்களுக்கு ‘கணிகள்’ என்று பெயர்.

  • பெண் கல்வி: ஒளவையார், காக்கைப்பாடினியார் போன்ற பெண்பாற் புலவர்கள் மூலம் சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்றனர் என்பதை அறிய முடிகிறது.

XXI. கலைகள்

  • அ. ஓவியக் கலை: ஓவியர்கள் ‘கண்ணுள் வினைஞர்’. ஓவியம் வரையும் கோல் ‘துகிலிகை’. ஓவியங்கள் வைக்கப்பட்ட இடம் ‘சித்திரமாடம்’.

  • ஆ. இசைக்கலை: ‘கந்தருவ வேதம்’ என்று அழைக்கப்பட்டது. ஏழு சுரங்கள் (தாரம், உழை…), சீறியாழ், பேரியாழ் போன்ற யாழ் வகைகள்.

  • இ. கூத்துக் கலை: வள்ளிக்கூத்து (பெண்கள்), குரவைக் கூத்து (மலைவாழ் மக்கள்), துணங்கைக் கூத்து. சிலப்பதிகாரத்தில் 11 வகைக் கூத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • ஈ. நாடகக் கலை: நாடகம் = ‘நாடு + அகம்’. மூவகைத் திரைச்சீலைகள் பயன்படுத்தப்பட்டன.

    • பம்மல் சம்பந்தனார் ‘தமிழ் நாடக தந்தை’.

XXII. தமிழ் வளர்த்த சங்கங்கள்

  • பாண்டியர்கள் சங்கங்களை நிறுவித் தமிழ்ப் பணியாற்றினர். சங்கங்கள் மூன்று இருந்த விவரத்தை இறையனார் களவியல் உரையே முதன்முதல் சான்று தருகிறது.

  • முதற்சங்கம்: தென்மதுரை (4440 ஆண்டுகள்). (அகத்தியர், முருகவேள்).

  • இடைச்சங்கம்: கபாடபுரம் (3700 ஆண்டுகள்). (அகத்தியர், தொல்காப்பியர்).

  • கடைச்சங்கம்: தற்போதைய மதுரை (1850 ஆண்டுகள்). (நக்கீரனார்). சங்க இலக்கியங்கள் இங்கு எழுதப்பட்டன.

XXIII. சங்க கால ஆட்சி முறை

  • ஆட்சி: மூவேந்தர்களும் (சேரர், சோழர், பாண்டியர்) கடையேழு வள்ளல்களும் ஆட்சி புரிந்தனர்.

  • சேரர்: தலைநகரம் வஞ்சி, துறைமுகங்கள் முசிறி, தொண்டி. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான்.

  • சோழர்: சிறப்பு வாய்ந்தவன் கரிகாற்சோழன். வெண்ணிப்போர்.

    • காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை  அமைத்தான்.

  • பாண்டியர்: தலைநகரம் மதுரை. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.

  • நிர்வாகக் குழுக்கள்: ஐம்பெருங்குழு, எண்பேராயம்.

  • ஊர் நிர்வாகம்: குடேவாலை முறையில் ஊரவையினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  • வருவாய்: நிலவரி (விளைச்சலில் ஆறில் ஒரு பாகம்).

  • நாணயங்கள்: சேரர் (வில்), சோழர் (புலி), பாண்டியர் (மீன்) சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

XXIV. அயல்நாட்டுத் தொடர்புகள்

  • நாடுகள்: மேலை நாடுகள் (கிரேக்கம், உரோமம், எகிப்து, அரேபியா) மற்றும் கீழை நாடுகள் (சீனம், சாவகம்).

  • முசிறி/கொற்கை: முசிறியில் மிளகும், கொற்கையில் முத்தும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

  • யவனத் தொடர்பு: உரோமர்கள் பொன்னோடு வந்து மிளகொடு திரும்பிச் சென்றனர். உரோமர்களுக்குத் தமிழகத்தில் இருந்த தனி இருப்பிடங்கள் ‘யவனச் சேரி’ எனப்பட்டன.

  • அரேபியத் தொடர்பு: அரபுநாட்டிலிருந்து ஆண்டுேதாறும் 10,000 குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.

  • சீனத் தொடர்பு: ஈயம், செம்பு, பவளம், சீனப்பட்டாடை இறக்குமதி ஆயின.

முதல் பருவம் அலகு 5 வினா விடை

குறுவினாக்கள் 

  • தேவாரம் குறிப்பு வரைக.
    • பன்னிரு திருமுறைகள்: பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளே தேவாரம் என அழைக்கப்படுகின்றன.
    • பாடியவர்கள்: தேவார மூவர் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரால் இவை பாடப்பட்டன. 
      • திருஞானசம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளைப் பாடினார்.
      • திருநாவுக்கரசர் அடுத்த மூன்று திருமுறைகளைப் பாடினார்.
      • சுந்தரர் ஏழாவது திருமுறையைப் பாடினார்.  
         
  • தேவார மூவர் யார்?
    • திருஞானசம்பந்தர்
    • திருநாவுக்கரசர் (அப்பர்)
    • சுந்தரர்
  • திருநாவுக்கரசர் குறித்து எழுதுக.
    • இயற்பெயர்: மருள் நீக்கியார்
    • பெற்றோர் : புகழனார், மாதினியார்
    • அக்கா : திலகவதியார்
    • பிறந்த ஊர்: திருவாமூர்
    • இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
    • சிறப்பு பெயர்கள்:
      • திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்
    • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர் -தமக்கை திலகவதியார்
  • “நாமார்க்கும் குடியல்லோம்…..” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
    • நாமார்க்கும் குடியல்லோம்…..” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் திருநாவுக்கரசர் ஆவார்.
  • மாணிக்கவாசகர் குறித்து எழுதுக.
    • இயற்பெயர்: தெரியவில்லை
    • பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
    • இவர் பாடியவை: 8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

    • அருள் வாசகர்
    • மணிவாசகர்
    • அழுது அடியடைந்த அன்பர்
    • தென்னவன் பிரமராயர்
    • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால்)
  • கோகழி ஆண்ட குறுமனிதன் யார்?
    • கோகழி ஆண்ட குறுமனிதன் சிவபெருமான் ஆவார்.
  • வேகம் கெடுத்தாண்ட வேந்தன் யார்?
    • வேகம் கெடுத்தாண்ட வேந்தன் சிவபெருமான் ஆவார்.
  • முதல் ஆழ்வார்கள் மூவரின் பெயரினை எழுதுக.
    • பொய்கையாழ்வார்
    • பூதத்தாழ்வார்
    • பேயாழ்வார்
  • பொய்கையாழ்வார் குறித்து எழுதுக.
    • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
    • காலம் : 7ம்நூற்றாண்டு
    • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
    • பாடல்கள் : 100
  • “வையந் தகளியா….”எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
    • “வையந் தகளியா….”எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் பொய்கையாழ்வார் ஆவார்.
  • பூதத்தாழ்வார் குறித்து எழுதுக.
    • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
    • காலம் :  7ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100
  • “அன்பே தகளியா….” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
    • “அன்பே தகளியா….” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் பூதத்தாழ்வார் ஆவார்.
  • பேயாழ்வார் குறிப்பு வரைக.
    • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
    • காலம்: ஏழாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100
  • “திருக்கண்டேன் பொன்மேனி….” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
    • “திருக்கண்டேன் பொன்மேனி….” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் பேயாழ்வார் ஆவார்.
  • அன்பால் ஞான விளக்கினை ஏற்றியவர் யார்?
    • அன்பால் ஞான விளக்கினை ஏற்றியவர் பூதத்தாழ்வார் ஆவார்.
  • உலகினை விளக்காக கொண்டு விளக்கேற்றியவர் யார்? யாருக்காக ஏற்றினார்?
    • உலகினை விளக்காக கொண்டு விளக்கேற்றியவர் பொய்கையாழ்வார் ஆவார்.
    • நாராயணனுக்காக ஏற்றினார்.
  • ஆண்டாள் குறித்து எழுதுக.
    • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
    • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
    • காலம் : 9ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
    • பாடிய பாடல் : 173
  • “மார்கழி திங்கள்…” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
    • “மார்கழி திங்கள்…” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் ஆண்டாள்.
  • மார்கழி மாத நோன்பு குறித்து எழுதுக.
    • இறைவனை, குறிப்பாக கண்ணனை மணக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் ஆண்டாள் நாச்சியார் இந்த நோன்பை இருந்தார். 
    • அதிகாலை எழுந்து நீராடி, வீட்டில் கோலமிட்டு, திருப்பாவை பாசுரங்களைப் பாடி, பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபடுவர். 
  • திருமந்திரம் குறித்து எழுதுக.
    • இது 3000 பாடல்களைக் கொண்ட ஒரு மெய்யியல் நூல்.
    • ‘அன்பே சிவம்’ என்ற தத்துவத்தை வலியுறுத்துகிறது.
    • ‘சிவமே அன்பு’ என்று கூறுகிறது.
    • இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகப் போற்றப்படுகிறது.
  • அன்பும் சிவமும் இரண்டென்பார் யார்?
    • அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்.
  • பட்டினத்தார் குறிப்பு வரைக.
    • இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.
  • பட்டினத்தாரின் இயற்பெயரினை எழுதுக.
    • இயற்பெயர்: திருவெண்காடர்.
  • கடுவெளி சித்தர் குறித்து எழுதுக.
    • கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.
  • நீர்மேல் குமிழி போன்றது எது?
    • நீர்மேல் குமிழி போன்றது நம் உடல்.
  • நால்வகைப் பகைகள் யாவை?
    • காமம்
    • குரோதம்
    • மதம்
    • மாற்சரியம்
  • அட்டசித்திகளைப்/ எண்வகை சித்திகளைப் பட்டியலிடுக.
    • அணிமா
    • மகிமா
    • இலகிமா
    • கரிமா
    • பிராத்தி
    • பிராகாமியம்
    • ஈசத்துவம்
    • வசித்துவம்
  •  எவையெல்லாம் பாவச்செயல்கள் என கடுவெளி சித்தர் குறிப்பிடுகிறார?
    • உன்னைத் திட்டியவர் யாராக இருந்தாலும், அவரை நீயும் திருப்பி திட்டாதே.
    • இவ்வுலக மக்கள் அனைவரும் பொய் சொன்னாலும் நீ மட்டும் பொய் கூறாதே.
    • பிறர் திட்டும்படி வெறுக்கும்படியான, கீழ்த்தரமான செயல்களைச் செய்யாதே.
    • கல்லை, பறவைகள்மீது எறியாதே. இவையெல்லாம் பாவச் செயல்கள் ஒருவர் இவற்றைச் செய்யக் கூடாது.
    • இவையெல்லாம் பாவச்செயல்கள் என்கிறார் கடுவெளி சித்தர்.
  • அட்டாங்கயோகம்  – பட்டியலிடுக.
    • இயமம்
    • நியமம்
    • ஆசனம்
    • பிராணாயாமம்
    • பிரத்தியாகாரம்
    • தாரணை
    • தியானம்
    • சமாதி
  • வீடுபேறு அளிப்பவர் யார்?
    • வீடுபேறு அளிப்பவர் சிவபெருமான் ஆவார்.
  • இராவண காவியம் குறித்து எழுதுக.
    • இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை.
    • இக்காப்பியம் தமிழக காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் – என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது.
    • இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
  • புலவர் குழந்தை குறிப்பு வரைக.
    • 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.
    • இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார்.
    • ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார்.
  • இராவண காவியத்தில் மைந்துள்ள காண்டங்களைப் பட்டியலிடுக.
    • தமிழக காண்டம்
    • இலங்கைக் காண்டம்
    • விந்தக் காண்டம்
    • பழிபுரி காண்டம்
    • போர்க் காண்டம் 
  • தமிழை மக்கள் வளர்த்த விதத்தினை எழுதுக.
    • தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.
  • இருகண் பார்வை எது?
    • இருகண் பார்வை தமிழ்மொழி ஆகும்.
  • தாய்மொழிப்படலம் வழி படிப்பின் சிறப்பினை எழுதுக.
    • தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை.
    • கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை.
    • செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை.
    • வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை.
    • நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை.
    • யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.

நெடுவினாக்கள்

  • திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களின் பொருளினை விளக்குக. (அல்லது) ‘நாமார்க்கும் குடியல்லோம்…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.

திருநாவுக்கரசர்

    • இயற்பெயர்: மருள் நீக்கியார்
    • பெற்றோர் : புகழனார், மாதினியார்
    • அக்கா : திலகவதியார்
    • பிறந்த ஊர்: திருவாமூர்
    • இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
    • சிறப்பு பெயர்கள்:
      • திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்
    • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர் -தமக்கை திலகவதியார்

பாடல் விளக்கம்

    • மலர் போன்ற சிவபெருமானின் திருவடிகளை அடைக்கலமாக அடைந்தமையால், நாம் யாருக்கும் அடிமையாவதில்லை. மரணத்தைத் தருகின்ற இயமனுக்கு அஞ்சுவதில்லை. நரகத்தில் புகுந்து துன்பமடைவதில்லை. பொய்யும் புரட்டும் இனி நம்மை அணுகுவதில்லை. என்றும் ஆனந்தமாக இருப்போம். நோய் என்பதையே அறியாது இருப்போம்.
    • வேறு யாரையும் பணிந்து நிற்க மாட்டோம். எந்நாளும் நமக்கு இன்பமே ஏற்படும். துன்பம் என்பதை நாம் அறிய மாட்டோம். யாருக்கும் அடிமையாகாதவனும், வெண்குழையைக் காதில் அணிந்த அரசனாகிய ஆதி சங்கரனுக்கு மட்டுமே நாம் அடிமையாக இருப்போம் என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.
  • மாணிக்கவாசகர் பாடலின் பொருளினை விளக்குக.(அல்லது) ‘நமசிவாய வாழ்க…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) திருவாசகப் பாடலின் பொருளினை எழுதுக.

மாணிக்கவாசகர்

    • இயற்பெயர் தெரியவில்லை
    • பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
    • இவர் பாடியவை: 8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

    • அருள் வாசகர்
    • மணிவாசகர்
    • அழுது அடியடைந்த அன்பர்
    • தென்னவன் பிரமராயர்
    • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

பாடல் விளக்கம்

    • திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.
    • மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெல்க; பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் வெல்க; தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் வெல்க; கை குவித்து வணங்குவோர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெல்க; கைகளைத் தலைமேல் உயர்த்தி வணங்குவோரை வாழ்வில் உயரச் செய்கின்ற சிறப்புடையவனது திருவடி வெல்க என்று இறைவனின் திருவடிகளை வாழ்த்துகின்றார் மாணிக்கவாசகர்.
  • முதல் ஆழ்வார்கள் மூவரின் பாடல்களின் பொருளினை எழுதுக.

முதலாழ்வார் மூவர்

    • வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் எனப் போற்றப்படுகின்றனர்.

பொய்கையாழ்வார்

    • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
    • காலம் : 7ம்நூற்றாண்டு
    • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.

பூதத்தாழ்வார்

    • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
    • காலம் :  7ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.

பேயாழ்வார்

    • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
    • காலம்: ஏழாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்” என்று மனமுருகிப் பாடுகின்றார்.
  • பொய்கை ஆழ்வார் பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) ‘வையந் தகளியா…’ எனத்தொடங்கும்  பாடலின் பொருளினை எழுதுக.

பொய்கையாழ்வார்

    • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
    • காலம் : 7ம்நூற்றாண்டு
    • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.
  • பூதத்தாழ்வார் பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) ‘அன்பே தகளியா…’ எனத்தொடங்கும்  பாடலின் பொருளினை எழுதுக.

பூதத்தாழ்வார்

    • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
    • காலம் :  7ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.
  • பேயாழ்வார்  பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) ‘திருக்கண்டேன் பொன்மேனி…’ எனத்தொடங்கும்  பாடலின் பொருளினை எழுதுக.

பேயாழ்வார்

    • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
    • காலம்: ஏழாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்” என்று மனமுருகிப் பாடுகின்றார்.
  • திருப்பாவை முதல் பாடலின் பொருளினை எழுதுக. (அல்லது) பாவை நோன்பு மேற்கொள்ளும் விதத்தினை திருப்பாவை வழி விளக்குக. (அல்லது) ‘மார்கழி திங்கள்…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.

ஆண்டாள்

    • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
    • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
    • காலம் : 9ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
    • பாடிய பாடல் : 173

திருப்பாவை – முதல் பாடல்

பாடல் விளக்கம்

    • அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
  • திருமூலர் பாடலின் பொருளினை எழுதுக.

திருமந்திரம் – திருமூலர்

    • திருமூலர் 63 நாயன்மார்களுள்  ஒருவரும், பதினெண் சித்தர்களுள்  ஒருவரும் ஆவார். எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். இவர் இயற்றிய திருமந்திரத்தைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.  இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில் (இயல்கள்) மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.  ‘மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது’ என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். 
    • வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும்.

அன்புடைமை – பாடல் விளக்கம்

    • அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.
    • பொன்னைக் காட்டிலும் ஒளி வீசுகின்ற புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான். வானில் மின்னுகின்ற பிறைச் சந்திரனைத் தன் சடை முடியில் சூடியிருப்பவன். சுடுகாட்டில் எஞ்சியிருக்கும் சூடான சாம்பலைப் பொடி போல திருமேனி எங்கும் பூசிக் கொள்பவன். அநதச் சாம்பலின் பொடி மீது திருநடனம் ஆடுகின்றவன். அப்படிப்பட்ட இறைவனிடம் நான் கொண்டுள்ள அன்பும், இறைவன் என் மீது கொண்டுள்ள அன்பும் இரண்டறக் கலந்துள்ளது.
    • உள்ளம் உருக இறைவனைப் போற்றி வழிபடுங்கள். உடலை விட்டு உயிர் பிரியும் முன்பே அனைத்து உயிர்களின் மீதும் அன்பை செலுத்தி, அதன் மூலம் இறைவனைத் தேடுங்கள். அப்படிச் செய்தால், உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் தனது அளவில்லாத பெருங்கருணையைக் கொடுத்து இறைவன் நம்மோடு  இருப்பார்.
    • தானே சுயமாகத் தோன்றியவன். தம்மை அன்போடு வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும் காலம் வரை அவர்களோடு வழித்துணையாக வருபவன். கொன்றை மலர்களைத் தன் இடப்பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவன். அப்படிப்பட்ட சிவபெருமான் பேரன்பின் உருவமாக என்னுடன் கலந்து நிற்கின்றான்.
    • கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை நான் கண்டு கொண்டேன். அறியாமையாகிய யானையைக் கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாகத் தன் மேல் போர்த்திக் கொண்டனின் அழகிய கழல்களை நான் கண்டு கொண்டேன். தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருடிகளை நான் கண்டு கொண்டேன். இறைவன் மீது நான் கொண்ட பேரன்பால் அழகிய கழல்களை அணிந்து அன்பு உருவமாக நிற்கின்ற சிவனின் திருமேனியை நான் கண்டு கொண்டேன்.
  • பட்டினத்தார் – திருவிடைமருதூர் – பாடல்களின் பொருளினை விளக்குக.

பட்டினத்தார்

    • இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.

திருவிடைமருதூர் – பாடல் விளக்கம்

    • உள்ளத்தில் ஒழுக்கம் இல்லாமல் முற்றும் துறந்து விட்டேன் என்று பொய் பேசிக் கொண்டு காட்டில் வாழ்வதால் பயன் இல்லை. காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதாலும் பயன் இல்லை. கந்தல் துணிகளை உடுத்திக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தி பிறரிடம் இரந்து உண்டு வாழ்வதாலும் பயன் இல்லை. அவை யாவும் மற்றவர்களுக்காக போடப்படும் வேஷம்தான். ஆனால் இல்லறத்தில் இருந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தாலும், உள்ளத்தில் ஒழுக்கமாக இருப்பவனே இறைவனின் திருவடியை அடைவான். பேரின்பத்தைப் பெறுவான்.
    • வாழ்வதற்குரிய செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் பெற்ற தாயும் நமக்குப் பகையாவார். நம் வாழ்வின் பாதியாக விளங்கும் மனைவியும் பகையாவார். நம் மூலமாக இந்த உலகிற்கு வந்த பி்ள்ளைகளும் பகையாவார். உற்றார் உறவினர் அனைவரும் பகையாவர். இவர்கள் அனைவரும் நம்மை விட்டு நீங்கினாலும் சிவபெருமானின் பொன்னடிகளைப் போற்றிக் கொண்டே இருந்தால், அவரின் திருவடி நமக்கு எப்போதும் துணையாக இருக்கும். என் நெஞ்சே! அவருடைய திருவடிகளில் அன்பு செலுத்து. அதுவே உனக்கு இந்த உலகத்தின் ஆசைகளில் இருந்து விடுதலை தரும்.
  • கடுவெளிசித்தர் – “பாவஞ்செய் யாதிரு மனமே…” பாடல்களின் பொருளினை எழுதுக.

கடுவெளிச்சித்தர்

    • கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.

பாடல் விளக்கம்

    • என் மனமே! நீ ஒருவருக்குமே எந்த ஒரு சிறு பாவமும் செய்யாதிருப்பாயாக. ஏனெனில் நீ பாவம் செய்தால் இயமன் கோபம் அடைவான். அவன் அவ்வாறு கோபப்பட்டு உடனே உன் உயிரைப் பறித்துக் கொண்டு சென்று விடுவான். அதனா சிறிதும் பாவம் செய்யாது இருப்பாயாக.
    • மனமே! மற்றவர் நமக்குத் தீமை செய்தால் அதற்காக நாம் அவர் வாழ்வே அழியும்படியாகச் சாபம் கொடுக்கலாமா? நிச்சயமாகக் கூடாது. விதி (வாழ்) என்ற ஒன்றை நம்மால் தடுத்து நிறுத்த முடியுமா?முடியாது. நம்மிடம் ஒருவர் கோபம் கொள்வதால் பதிலுக்கு நாமும் அவரிடம் கோபம் கொள்ளலாமா? கூடாது. பிறர் பொருள்மேல் ஆசை உண்டாக்கும் எண்ணத்தை பிறரிடம் நாம் வளர்க்கலாமா? கூடாது.

நேசிப்புத்தன்மை

    • மனமே! சொல்லுதற்கு அரிய அதாவது, சொல்லும்போதே பாவம் உண்டாக்கக் கூடிய தீய செயல்களான சூது, பொய், மோசம் இவற்றைச் செய்யாமல் விட்டு ஒழிக்கவேண்டும். சூது. பொய், மோசம் இம்மூன்று பாவச் செயல்களையும் ஒருவர் செய்தால் அவருடைய உறவினர் அவரை விட்டு நீங்கி விடுவர். இறுதியில் அவருக்கு அழிவுதான் உண்டாகும்.

 

    • இறைவனிடம் நல்ல புத்தியும், நல்ல நம்பிக்கையும் கொள்ள வேண்டும். மனிதர்களிடம் அன்பு செலுத்தவேண்டும். மொத்தத்தில் நல்ல புத்தி. நல்ல நம்பிக்கை, நல்ல அன்பு இவற்றைக் கைக்கொண்டு இறைவனையும். மனிதர்களையும் நேசிக்க வேண்டும்.
    • மனமே! இந்த உடலானது நீர்மேல் தோன்றி மறையும் குமிழிபோன்று நிலையற்றது. சில நாள்களில் இவ்வுடலைவிட்டு உயிர் பிரிந்து விடும். இந்த மாயத்தை நீ அறிந்து கொள்வாயாக. இவ்வுலக ஆசைகளில் நீ பற்றுக் கொள்ளாது இருப்பாயாக, அங்ஙனம் நீ பற்றுக் கொள்ளாதிருப்பதற்கு யோகம் செய்வதே நல்லதோர் தந்திரம் ஆகும்.

இறைநிலை அடைதல்

    • தாயின் வயிற்றில் பத்து மாதம் தங்கி ஒருவன் இவ்வுலகில் பிறந்தான். பிறந்த பின்பு இறைவனைத் தியானிக்காமல், தேவையற்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டு. பிறந்தது யோகம் செய்து இறைநிலையை அடைவதற்காகத்தான் என்னும் காரணத்தை அறிந்து கொள்ளாமலேயே அவன் வீணே இறந்துவிட்டான். மனமே! நீ அத்தகைய எளிய மனிதன்போல் இருக்காமே. யோகப்பயிற்சி செய்து இறைநிலையை அடைவாயாக.

(நந்தவனம் தாயின் கருப்பை. குயவன் இறைவன்.நாலாறு

மாதங்கள் = 4+6= 10 மாதங்கள். தாய் வயிற்றில் கருவாக இருக்கும் கால அளவு)

எமப்பயம்

    • மனமே!நீ யாரையும் பழித்துப் பேசாதே !நீ தேடி வைக்கின்ற சொத்தில் சிறுபகுதி கூட நிலையாக உன்னிடம் நிற்காது. தீயவற்றைப் பார்ப்பதும், தீயவற்றைக் கேட்பதும், தீயவற்றைச் சொல்வதும் ஆகிய ஏடணை மூன்றும் பொல்லாதவை. எனவே, அவற்றைச் செய்யாதே. சிவபெருமான் மேல்பக்தி வைத்தால் இயமபயம் உன்னை நெருங்காது.

இறைவனை வணங்குதல்

    • மனமே !நீ எப்பொழுதும் நல்ல வழியையே நாடவேண்டும் . எப்பொழுதும், எந்த நாளும் இறைவனை ஆர்வமுடன் தேடவேண்டும். மனம், மொழி, மெய்யால் தூயவர்களாய் விளங்கும் நல்லவர்களுடன் விரும்பிச் சேரவேண்டும். யாவற்றையும் மனிதர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகிய இறைவனை நீ என்றென்றும் வணங்குவாயாக.

அறங்கள்

    • மனமே! நல்லவர்களை ஒதுக்காதே. தலைமையான அறங்கள் பனிரெண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று கூட செய்யாமல் விட்டுவிடாதே. பொல்லாங்கு எதுவும் சொல்லதே. ஒருவரைப் பற்றி, மற்றவரிடம் அவதூறாகப் பேசும் செயலைச் (கோள் மூட்டுதல்) செய்யாதே.

(அறம் நால் எட்டு 4 x 8 -32 அறங்கள்)

யோகம் செய்தல்

    • மனமே! வேதம் கூறும் நல்வழியில் நிற்பாயாக. நல்லவர்கள் எவ்வழிகளை விரும்பி வாழ்வில் செய்கிறார்களோ, நீயும் அவர்கள் செல்லும் வழியிலேயே செல்வாயாக, அனைவருக்கும் நல்லனவற்றையே சொல்வாயாக கோபம் என்பது அனைத்துப் பாவங்களுக்கும் காரணமானது. அதனை, யோகம் செய்து நீக்குவாயாக.

ஆர்வத்துடன் இருத்தல்

    • மனமே! நீ பிச்சையென்று எந்த ஒரு பொருளையும் எவரிடமும் பெறாதே. அழகான பெண்மேல் ஆசை கொண்டு அழியாதே. ஆசை உன்னை ஆட்டும்படி அதற்கு அடிமையாகி விடாதே. ஆனால் சிவபெருமானை எவ்வாறேனும் காணவேண்டும் என்னும் ஆசையில் இருந்து மீண்டுவிடாதே. தொடர்ந்து அவனைக் காணவேண்டும் என்னும் ஆர்வத்துடன் இருப்பாயாக,

மெய்ஞ்ஞானம்

    • மனமே! இறைவனைக் காணவேண்டும் என்பதுதான் மெய்ஞ்ஞானப் பாதை ஆகும். நீ அந்தப் பாதையில் செல்வாயாக, வேட்ட வெளியாகத் திகழும் இறைவனைக் கண்டறிவாயாக. இறைநம்பிக்கை அற்றோர் கூறும் அஞ்ஞானம் உன்னிடத்தில் இருந்தால் அதனை உடனே தோண்டி எறிவாயாக உன்னை நாடியவர்களுக்கு நாடியவர்களுக்கு எல்லாம் இறைவனுடனான உன் பேரின்ப அனுபவத்தை அவர்கள் மனம் ஏற்கும்படிக் கூறுவாயாக

(மெய்ஞ்ஞானம் இறைவனை நாடும் அறிவு. அஞ்ஞானம் இறைவன் இருப்பதை மறுக்கும் அறிவு)

நல்ல புத்தி

    • மனமே! உண்மைக் குருவின் சொல்லை என்றுமே மீறி நடக்காதே. நல்ல நன்மைகளைப் பிறர்க்குச் செய்வதைக் குறைத்துக் கொள்ளாதே. அந்த நற்செயலைப் பெருக்கிக் கொள்வாயாக. தெரியாத ஒன்றைத் தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ளாதே. இறைவன் கொடுத்த நல்ல புத்தியைப் பொய்யான வழியில் செலுத்தி வாழ்வை வீணாக்கிக் கொள்ளாதே.

வீடுபேறு

    • மனமே! நம்முடன் இறுதி வரை வருவது ஒன்றுமில்லை. புழு போன்ற துர்நாற்றம் வீசும் உடலை எடுத்து இவ்வுலகில் நடமாடுவது தொல்லை தேடுவதற்கு அரிய வீடுபேற்றினை அடைவதே எமது எல்லை. ஆந்த அரிய வழியைத் தேடித் தெளிவோர் இவ்வுலகில் எவருமில்லை.

முக்தி

    • மனமே ! இந்த உடல். ஐம்புலன்களால் சூழ்ந்த காடாகும். ஐம்புலன்களால் உமாதேவியாரின் கணவராகிய சிவபெருமானை நீ நாடு. அவரை எங்ஙனமேனும் வருந்தி தேடு. அந்த மூலப்பொருளை அடைந்துவிட்டால் அதுவே முத்தியடையும் வீடாகும்.

நான்கு பகை

    • மனமே!உன் உள்ளேயே காமம். குரோதம். மதம். மாற்சரியம் என்னும் நால்வகைத் தீய குணங்களை ஒருவரும் அசைக்க முடியாதபடி கோட்டையாக அமைத்துள்ளாய். ஆனால் இவ்வுடலானது நல்ல நாடு போன்றதாகும். இந்த நான்கு பகைகளையும் ஓட ஓட விரட்டினால் உடல் என்னும் நாடு நம் வசப்படும். அதற்கு மனமே! நீ முதலில் என் வசப்பட வேண்டும்.
    • கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்னும் ஐந்து புலன்களும் கள்ளப் புலன்கள் ஆகும். ஏனெனில், மனிதனை அறிவுநிலை அடையவிடாமல் இவைதான் தடுக்கின்றன. இவற்றை மனதால் மட்டுமே வசப்படுத்த முடியும். மனதை, தியானம் மற்றும் யோகப் பயிற்சியினால் மட்டுமே வசப்படுத்த முடியும். இவ்வழியில் அதனை வசப்படுத்தி, இந்த ஐம்புலன்கள் என்னும் காட்டை கனலில் இட்டால் பேரின்பமாகிய வீடுபேறு கிடைக்கும்.

காசியும் கங்கையும்

    • மனமே! எண்ணற்ற பாவங்களை வாழ்நாளில் செய்துவிட்டு அதனைப் போக்கிக் கொள்ள காசிக்குச் சென்றால் அந்தப் பாவங்கள் தொலையுமோ? தொலையாது. கங்கையிலே நீராடினாலாவது முத்தி விடைக்குமா என்றால் கிடைக்காது. மற்றவரிடம் நம் பாவங்களை எடுத்துச் சொல்லிப் புலம்புவதால் பாவங்கள் தீருமா என்றால் தீரா. நான் உயர்ந்தவன். நீ தாழ்ந்தவன் என்றும் வேறுபாடு. மேற்கண்ட செயல்களை எல்லாம் நாம் செய்வதால் போகுமோ? போகாது. அவரவர் செய்த வினைகளின் பலன்களை அவரவரே அனுபவிக்க வேண்டும். வினைகளினின்றும் விடுபடுதல் அரிது.

பொய்வேடம்

    • மனமே! இவ்வுலகில் பலரும் பொய் வேடமிட்டுத் திரிகின்றனர். அதுமட்டும் அல்லாமல், ஒருவரின் புறத்தோற்றத்தைக் கண்டு மட்டுமே இவ்வுலகம் அவரைப் பாராட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் பொய்க்கோலம் ஒருவன் இறந்து போகும் காலத்தில்தான் அழிகிறது.
    • ஒருவன் மரண மடையும் காலத்தில்தான் செய்த பாவங்களை எண்ணி வேதனைப் படும் நிலை வாய்க்கிறது. இதனால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. இவையெல்லாம் சுத்த மாயை, இதுபோன்று பொய்வேடமிட்டுத் திரிவதனால் உலகில் யார்க்கு என்ன நன்மை?ஒருவருக்கும் இல்லை. எனவே மனமே! நீ பாவம் செய்யாதிரு.

முடிவில்லாதவன்

    • மனமே! இறைவன் சிறிதும் குற்றமற்றவன். பத்தரை மாற்றுத் தங்கம் போன்றவன். அவனையே கதி என்று நினைப்பவர்க்கு எந்த நாளும் தாழ்வில்லை. இறைவன் முடிவில்லாதவன். எங்கும் ஆனந்தமாய் நிரம்பியவன்

அட்டசித்தி

    • மனமே!இவ்வுலகிலேயே உயர்ந்தது பக்திதான். அதைத் தவிர வேறு எதுவுமே உயர்ந்ததல்ல. இறைவன் மேல் பக்தன் கொள்ளும் ஆழ்ந்த அன்பே இறுதியில் வீடுபேற்றை அளிக்கும் சிவபெருமான் மேல் தொடர்ந்து பக்தி செலுத்தி வந்தால், அட்ட சித்திகளும் விரைவிலேயே கைகூடும். (அட்ட சித்தி- எண்வகை சித்திகள். அணிமா, மகிமா, இலகிமா கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்)

தியானம்

    • மனமே!அன்பு என்னும் நல்ல மலரினைத் தூவி,பரமானந்தமயமாய் விளங்கும் இறைவனின் திருவடிகளை வணங்குவாயாக. உடல், ஆவி இவ்விரண்டையும் முத்தியடையச் செய்ய இவ்வுலகிலேயே தியானத்தின் மூலம் பழகுவாயாக. அவ்வாறு செய்வதற்கு மனமே! நீ உன்னைப் பழக்கிக் கொள்வாயாக.

வீடுபேறு

    • மனமே! இம்மண்ணுலகில் பிறந்த பிறப்பை ஒழிக்கும் வழியை அறிந்து கொண்டு, வீடுபேறு அடையும் வழியைக் கண்டு கொண்டு, எவ்விதக் மனவெறுப்பும் இல்லாமல், எல்லாம் வல்ல கோபமும் இல்லாமல், மன சிவபெருமானுக்குத் தொண்டு செய்தால் வீடுபேறு அடையலாம்.

கொண்டாட்டம்

    • மனமே! இந்த உடலில் ஆன்மா புகுந்து, உடலை அதன் விருப்பப்படி ஆட்டிப் படைக்கிறது. இந்த உடலில் இருந்து ஆன்மா(உயிர்) நீங்கிவிட்டால்?. இவ்வுடல் வாட்டமடைந்து விடுகிறது. வீடுபேறு அடையவதிலேயே நீ பெருவிருப்பம் கொண்டு இருந்தால் உனக்கு எப்பொழுதும் கொண்டாட்டம்தான்.

ஆனந்தவெள்ளம்

    • மனமே!வாசி என்னும் மூச்சுப் பயிற்சியின் மூலம் எண்வகை சித்திகளையும் அறிந்து கொண்டு, உன்னுள் மறைந்திருக்கும் அனைத்து இரகசியங்களையும் தெரிந்து கொண்டு. வெட்டவெளியாய்த் திகழும் இறைவனைச் சார்ந்து, ஆனந்த வெள்ளத்தில் மூழ்க வேண்டும். மனமே! இதனை நீ உணர்ந்து கொள்வாயாக.

இறைவனை எண்ணுதல்

    • மனமே! இவ்வுலகம் முள்போன்று துன்பம் நிறைந்தது. எனவே இவ்வுலக வாழ்விலே பேராசை வைக்காமல் அதை உதறித் தள்ளுவாயாக. தியான நிலையில் அமர்ந்து, அதன் மூலம் கிடைக்கும் பேரின்ப வெள்ளத்தை அனுபவிப்பாயாக. அதனையே தொடர்ந்து உண்பாயாக அதாவது, எப்பொழுதும் யோகநிலையிலேயே அமர்ந்து இறைவனை எண்ணிக் கொண்டு இருப்பாயாக.

தீயவர்களுடன் சேராமை

    • மனமே! வேதம் கூறும் செய்திகளைக் கேட்காதே. அவை இறைவனை அடைய உதவமாட்டா. வேதநூல் பயின்று, அதன்படி தாங்களும் வாழ்வில் கடைப்பிடிக்காதவர்களாகிய குருமார்களின் அறிவுரையையும் கேட்காதே. கண்ணில் மைதீட்டி, வாழ்வைப் பாழாக்கும் சில தீய பெண்களைச் சேராதே. தவறான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் தீயவர்களுடன் விருப்பப்பட்டுச் சேராதே.

பாவச்செயல்கள்

    • மனமே! உன்னைத் திட்டியவர் யாராக இருந்தாலும், அவரை நீயும் திருப்பி திட்டாதே. இவ்வுலக மக்கள் அனைவரும் பொய் சொன்னாலும் நீ மட்டும் பொய் கூறாதே. பிறர் திட்டும்படி வெறுக்கும்படியான, கீழ்த்தரமான செயல்களைச் செய்யாதே. கல்லை, பறவைகள்மீது எறியாதே. இவையெல்லாம் பாவச் செயல்கள் ஒருவர் இவற்றைச் செய்யக் கூடாது.

சன்மார்க்கம்

    • மனமே! சிவபெருமானைத் தவிர வேறு தெய்வம் எதனையும் வேண்டாதே. மற்றவர்களுக்குள் தீமையை உண்டாக்கும் சண்டையைத் தூண்டிவிடாதே. தவநிலையில் இருந்து விலகாதே. சன்மார்க்கம் கற்பிக்கும் நூலைத் தவிர. மற்ற நூல்களை விரும்பாதே .

ஆணவம்

    • மனமே ! பாம்பினைக் கையில் பிடித்து, அவற்றுக்கு எவ்விதத தீமையும் செய்யாதே. கற்புநெறி தவறாத பெண்களைப் பழிக்காதே. வேம்புபோலக் கசக்கும் செயல்களையும், பேச்சுக்களையும் உலகில் பரப்பாதே நான்தான் பெரியன் என்று ஆணவம் கொண்டு வீறாப்புடன் இருக்காதே

தீயசெயல்

    • மனமே! நீ பூசை முதலிய சடங்குகளை விரும்பாதே. மற்றவர்கள் உன்னைப் போலியாகப் புகழவேண்டும் என எண்ணாதே, பிறர் பழிக்கும் வாழ்வை நினையாதே. பிறர் தாழும்படியான தீயசெயல் எதுவும் செய்யாதே.

மோசமான வழி

    • மனமே! கஞ்சா என்னும் போதைப் பொருளையும், பீடி போன்றவற்றைப் யுகைக்காதே. இனிய மயக்கம் தரும் என மகிழ்ந்து கள்ளைக் குடிக்காதே. ய்யந்து இறக்காதே. புத்தியை மழுங்க வைக்கும் இறை உண்மையை மறுக்கும் நூல்களைப் படிக்காதே. அவ்வழியில் செல்லாதே.

வாய்மை

    • மனமே! நீ பக்தியென்னும் உருவாகவே மாறி, சொந்த பந்தங்களில் இருந்து விலகி, வாய்மையையே எப்பொழுதும் பேசி, சமயங்களில் இருந்து நீங்கி, இறைவனை யோக சாதனைகள் மூலம் உன்வசமாக்கிக் கொள்வாயாக.

அட்டாங்க யோகம்

    • மனமே! எண்ணற்றவையாய் இருக்கும் இன்பம் எல்லாம் ஒரு நாளில் நம்மைவிட்டுச் சென்றுவிடும் சிற்றின்பங்கள்தான் என எண்ணி, ‘சீஇவை இழிந்தவை என அவற்றை விலக்கி, உண்மையான இறைவடிவை நாட வேண்டும். இவ்வுலகில் ஈடு இணையற்றதாக விளங்கும் எட்டுவித யோகமுறைகளை நன்கு பயின்று. அதுதான் உண்மை இன்பம் என்பதை மனமே! நீ அறிந்து கொள்வாயாக.

(அட்டாங்கயோகம் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி)

போதித்தல்

    • மனமே! நல்ல நீதிகள் எந்தெந்த நூல்களில் உள்ளனவோ அவை அனைத்தையும் எடுத்து, மக்களுக்குப் போதிக்கவேண்டும். பல்வேறு சாதிகளும், அவை மக்களைப் படுத்தும் பாடுகளும் ஒவ்வாது என்பதை அறிந்து உள்ளுக்குள்ளே குடியிருக்கும் இறைவனை மனமே !நீ வணங்குவாயாக.

பகையை வளர்க்காதே

    • மனமே!இறைவனை உண்மையான முறையில் நாடாமல் தவம் மறைந்து தீயவை செய்வதன் பொருட்டு போலிச் சாமியார் வேடம் புனையாதே. பாவங்கள் பலவற்றையும் செய்துவிட்டு, கங்கையிலே போய் நீராடுவதால் அப்பாவங்கள் போகும் என எண்ணாதே. மற்றவர்களுடைய பொருளை அபகரிக்க எண்ணாதே. நட்பாக இருக்கும்போது முகம் மலரப் பேசி. பிரிந்தபோது கோள்மூட்டிப் பகையை வளர்க்காதே.

வீடுபேறு அளிப்பவன்

    • மனமே! எங்கும் அருட்பெருஞ்சோதியாய் விளங்குபவன் இறைவன். அவன் அன்பர்களின் இதயத்தில் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டு இருப்பவன். அவன் அடியவர்க்கு அடியவன். தன்னை விரும்பி வணங்கும் அடியவர்களுக்கு வீடுபேறு அளிப்பவன்.
  • இராவண காவியம் – தாய்மொழிப் படலம் வழி தமிழ் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க. (அல்லது) தாய்மொழிப்படலம் – கருத்துக்களைத் தொகுத்துரைக்க. (அல்லது) பண்டைய தமிழர் தமிழ்மொழியைப் போற்றி வளர்த்த விதத்தினை தய்மொழிப்படலம் வழி விளக்குக.

இராவண காவியம்

      • இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் – என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார்.

தாய்மொழிப்படலம் – பாடல் விளக்கம்

    • தமிழை மக்கள் கற்றவிதம்
      • இராவணனின் இலங்கை சிறப்புகள் பல பொருந்திய நாடு. கல்வி கேள்விகளால் அறிவு பெற்ற மக்கள் நிரம்பிய நாடு. அந்நாட்டில் கல்வி பயிலும் ஏடுகள் இல்லாமல் ஒருவரையும் பார்க்க இயலாது. இயல், இசை கற்காதவர் அந்த நாட்டில் இல்லை. தமிழிசையைப் பாடி மகிழாதவர் இல்லை. கல்விக் கூடங்களுக்குச் சென்று கல்வியறிவு பெறாதவர்கள் இல்லை. தமிழிசையைப் போற்றி ஆடல் தொழிலை மேற்கொள்ளாதவரும் இல்லை. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பயனை அடையாதவர்கள் இல்லை. நற்றமிழின் வளர்ச்சியை விரும்பாதவர்களும் இல்லை என்று அந்நாட்டின் சிறப்பு கூறப்படுகின்றது.
    • தமிழ் ஒன்றே எனது உரிமை
      • அந்நாட்டு மக்கள் தமிழைத் தங்கள் உயிராக மதித்தனர். தமிழ் தங்களின் இரு கண்களில் இருந்து வருகின்ற பார்வை என்றும், மானத்தைக் காக்கின்ற போர்வை என்றும், உயிரைக் காக்கும் கருவி என்றும், உள்ளத்தின் சிந்தனை என்றும், செல்வங்கள் பொதிந்திருக்கின்ற பெட்டி என்றும், உயர்வின் உறைவிடம் என்றும் மதித்து தமிழைப் போற்றி வாழ்ந்தனர்.
    • நாடெல்லாம் புலவர் கூட்டம் நகரம் எல்லாம் பள்ளி ஈட்டம்
      • அந்நாட்டில் புலவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். நகர் முழுவதும் பள்ளிக்கூடங்கள் காணப்பட்டன. வீடுகள் யாவும் தமிழ்த்தாய் உறைகின்ற கோயில்களாகக் காட்சியளித்தன. கொண்டாடும் விழாக்கள் அனைத்திலும் தமிழின் மேன்மைகள் ஓங்கின. வயல்வெளிகளிலும் தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. தமிழ்க் கூத்துகள் மக்களை மகிழ்வித்தன. திரும்பிய திசையெல்லாம் தமிழ்ச்சொற்கள் ஒலித்தன. வண்டமிழ்ச் சிறப்பினை அறிந்த மக்கள் நிரம்பிய நாடாகக் காட்சியளித்தது.

நாடெல்லாம் புலவர் கூட்டம்

நகரெல்லாம் பள்ளி ஈட்டம்

வீடெல்லாம் தமிழ்த்தாய்க் கோட்டம்

விழாவெல்லாம் தமிழ் கொண்டாட்டம்

    • படிப்பின் சிறப்பு
      • தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை. கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை. செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை. வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை. நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை. யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.
    • தமிழை மக்கள் வளர்த்தல்
      • தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.
  •  
  •  

முதல் பருவம் அலகு-4 வினா விடை

குறுவினாக்கள்

  • காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • காப்பியம் இரண்டு வகைப்படும். அவை, 1.பெருங்காப்பியம், 2. சிறுகாப்பியம்
  • ஐம்பெரும்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
    • சிலப்பதிகாரம்
    • மணிமேகலை
    • சீவகசிந்தாமணி
    • வளையாபதி
    • குண்டலகேசி
  • இரட்டைக் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
    • சிலப்பதிகாரம்
    • மணிமேகலை
  • சிலப்பதிகாரம் குறிப்பு வரைக.
    • இயற்றியவர் : இளங்கோவடிகள்
    • சமயம் – சமணம்
    • பெயர்க்காரணம்: காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.
    • வேறு பெயர்கள்: குடிமக்கள் காப்பியம்,
      முத்தமிழ் காப்பியம்,
      உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்
    • நூல் அமைப்பு : 
      புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.
  • சிலப்பதிகாரம் உணர்த்தும் முப்பெரும் உண்மைகள் யாவை?
    • அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
    • ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
    • உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
  • சிலப்பதிகாரம் நூல் அமைப்பு குறித்து எழுதுக.
    • நூல் அமைப்பு : 
      புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.
  • சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது? அவை யாவை?
    • சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டது.
    • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களைக் கொண்டது.
  • சிலப்பதிகாரத்தைப் பாரதியார் எங்ஙனம் புகழ்ந்துள்ளார்?
    • ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்’ எனப் பாராட்டுகிறார்.
  • கோப்பெருந்தேவி கண்ட தீக்கனவு குறித்து எழுதுக. 
    • வெண்கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழுதல்
    • அரண்மனை வாயிலில் இடைவிடாது மணியின் ஓசை ஒலித்தல்
    • எட்டுத் திசைகளும் அப்போது அதிர்வுறுதல்
    • சூரியனை இருள் விழுங்குதல்
    • இரவு நேரத்தில் வானவில் தோன்றுதல்
  • வாயிற்காவலன் கண்ணகி பற்றி கூறியவற்றை எழுதுக.
    • கொற்றவை அல்லள்!
    • பிடாரியும் அல்லள்!
    • பத்திரகாளியும் அல்லள்.
    • துர்க்கையும் அல்லள்.
    • கையில் பொற்சிலம்பு ஒன்றினை ஏந்தியவளாய், கணவனை இழந்தவளாய்  நம் வாயிற்புறத்தில் வந்து நிற்கின்றாள்.
  • தான்தன் புதல்வனை ஆழியின் மடித்தோன் யார்? 
    • மனுநீதி சோழன்
  • “தேரா மன்னா செப்புவது உடையேன்…” யாருடைய கூற்று?
    • “தேரா மன்னா செப்புவது உடையேன்…” கண்ணகியின் கூற்று.
  • “யானோ அரசன் யானே கள்வன்….” யாருடைய கூற்று?
    • “யானோ அரசன் யானே கள்வன்….” பாண்டிய மன்னனின் கூற்று ஆகும்.
  •  மணிமேகலை காப்பியம் குறிப்பு வரைக.
      • இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்
      • சமயம் – பௌத்தம்
      • பெயர்க்காரணம்: காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்,  மணிமேகலை எனப் பெயர் பெற்றது.
      • வேறு பெயர்: மணிமேகலை துறவு 
      • நூல் அமைப்பு: முப்பது காதைகள் கொண்டது.
  • மணிமேகலை காப்பியத்தின் நோக்கம் குறித்து எழுதுக.
      • பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல் மணிமேகலையாகும்.
      • மக்களிடையே பௌத்த சமய உணர்வு மேலோங்கவும், சமயக் கொள்கைகளைப் பரப்பிடவும், அதனை நடைமுறையில் பின்பற்றவும் எழுந்த சமயப் பிரச்சார விளக்க நூல் மணிமேகலை எனலாம்.
  •  
  • தீவதிலகை குறித்து எழுதுக.
    •  மணிபல்லவத் தீவில் அமைந்துள்ள புத்தரின் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்பவர்.
  • பசியினால் விசுவாமித்திரர் செய்த செயல் யாது?
    • பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தார்.
    • கொடிதானப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றார்.
  • அமுதசுரபி குறித்து எழுதுக.
    • மணிபல்லவத் தீவில் ஆபுத்திரன் தனது உயிர் துறக்கும்போது, அவன் பயன்படுத்திய அமுதசுரபி பாத்திரத்தை மணிமேகலை பெற்றாள். தீவ திலகை என்னும் தெய்வம் இதற்கு உதவியது.
    • இந்த பாத்திரத்தில் இருந்து எவ்வளவு உணவு எடுத்தாலும், அது குறையாமல் எப்போதும் நிறைந்திருக்கும் என்பது இதன் சிறப்பு. 
  • புத்தபீடிகையின் சிறப்பு குறித்து எழுதுக.
    • அறநெறிகளின் தலைவன் புத்தபகவான்.
    • புத்த பீடிகையைப்  பார்த்து வணங்கியவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள்.
  • பெரியபுராணம் குறிப்பு வரைக.
    • இயற்றியவர்: சேக்கிழார்
    • பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.
    • இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.
    • 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.
  • சேக்கிழார் குறித்து எழுதுக.
    • இயற்பெயர்: அருண்மொழித் தேவர்
    • சிறப்பு : தொண்டர்சீர் பரவுவார் 
    • காலம்: கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
  • மனக்கோயில் கட்டியவர் யார்?
    • மனக்கோயில் கட்டியவர் பூசலார் ஆவார்.
  • கற்கோவில் கட்டியவர் யார்?
    • கற்கோவில் கட்டியவர் பல்லவ மன்னன் ஆவார்.
  • பூசலார் குறித்து எழுதுக.
    • தொண்டை நாட்டில் திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பூசலார்.
    • அவர் சிவபக்தியில் சிறந்தவராய், வேதத்தில் வல்லவராய் விளங்கினார்.
    • நாயனார் திருக்கோயில் ஒன்றினைக் கட்டிக் குடமுழுக்கு நீராட்ட விரும்பினார்.
    • சிவபெருமானுக்காக மனதில் கோவில் கட்டினார்.
  • கம்பராமாயணம் குறித்து எழுதுக.
    • இயற்றியவர்: கம்பர்
    • பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது.
    • காப்பிய அமைப்பு: இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.
  •  
  • கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்கள் எத்தனை? அவை யாவை?
    • கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது.
    • அவை,
      • பால காண்டம்
      • அயோத்தியா காண்டம்
      • ஆரணிய காண்டம்
      • கிட்கிந்தா காண்டம்
      • சுந்தர காண்டம்
      • யுத்த காண்டம்
  • குகனின் தோற்றம் குறித்து எழுதுக.
    • குகன் துடி என்னும் பறையை உடையவன்.
    • வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன்.
    • தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன்.
    • இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன்.
    • அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.
  • குகன் இராமன் மீது கொண்ட அன்பினை விளக்குக.
    • இராமனிடம் அளவு கடந்த அன்பை உடைய குகன் இராமனுக்காக  தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்து கொடுத்தான்.
    • இராமனைப் பிரியமனமின்றி உடன் கட்டிற்கு வருவதாக உரைத்தான். 
  • குகன் இராமனுக்காக கொண்டு வந்தவை எவை? (அல்லது) இராமனுக்காக குகன் கொணர்ந்த பொருள்கள் யாவை?
    • தேன்
    • மீன் 
  • இராமன் கங்கையைக் கடக்க உதவியாக இருந்தவர் யார்?
    • இராமன் கங்கையைக் கடக்க உதவியாக இருந்தவர் குகன் ஆவார்.
  • “நால்வரோடு ஐவரானோம் …”- யாருடைய கூற்று?.
    • “நால்வரோடு ஐவரானோம் …”-  இராமனின் கூற்று.
  • சீறாப்புராணம் குறிப்பு வரைக.
    • ஆசிரியர் : உமறுப்புலவர்
    • ‘சீறத்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘வாழ்க்கை’ அல்லது ‘வாழ்க்கை வரலாறு’ என்று பொருள். புராணம்’ என்றால் ‘வரலாறு’ என்று பொருள். எனவே, சீறாப்புராணம் என்பது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்’ ஆகும். 
    • மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.
  • சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்?
    • சீறாப்புராணத்தின் ஆசிரியர் உமறுப்புலவர் ஆவார்.
  • ‘சீறத்’ என்ற அரபுச்சொல்லின் பொருள் யாது?
    • ‘சீறத்’ என்ற அரபுச்சொல்லின் பொருள் வரலாறு என்பது பொருள் ஆகும்.
  • சீறாப்புராணத்தின் முப்பெரும் காண்டங்களை எழுதுக.
    • விலாதத்துக் காண்டம்
    • நுபுவ்வத்துக் காண்டம்
    • ஹிஜ்ரத்துக் காண்டம் 
  • மானுக்குப் பிணையாக நின்றவர் யார்?
    • மானுக்குப் பிணையாக நின்றவர் நபிகள் நாயகம் ஆவார்.
  • இயேசுகாவியம் குறிப்பு வரைக.
    • இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.
    • இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.
  • இயேசுகாவியத்தின் ஆசிரியர் யார்?
    • இயேசுகாவியத்தின் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் ஆவார்.

நெடுவினாக்கள்

  • சிலப்பதிகாரம் வழக்குரை காதை கதையை விவரி. (அல்லது) பாண்டியன் அவையில் கண்ணகி வழக்குரைத்த விதம் குறித்து விளக்குக.(அல்லது) கண்ணகி பாண்டிய மன்னனுடன் வழக்காடியதை விவரி.

சிலப்பதிகாரம்

    • இயற்றியவர்- இளங்கோவடிகள்
    • சமயம் சமணம்

பெயர்க்காரணம்:

    • காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

    • குடிமக்கள் காப்பியம்
    • முத்தமிழ் காப்பியம்
    • உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்

நூல் அமைப்பு

    • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.

வழக்குரைகாதை

  • பாண்டிமாதேவியின் தீக்கனவு
    • கோப்பெருந்தேவி தான் கண்ட தீக்கனவைத் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தாள். தோழி! நம் வேந்தனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழும்படியாகவும், அரண்மனை வாயிலில் இடைவிடாது மணியின் ஓசை ஒலிப்பதாகவும் கனவு கண்டேன். எட்டுத் திசைகளும் அப்போது அதிர்வுற்றன. சூரியனை இருள் விழுங்கவும் கண்டேன். இரவு நேரத்தில் வானவில் தோன்றவும் கண்டேன். ஆதலால் நமக்கு வரக்கூடிய துன்பம் ஒன்று உள்ளது. எனவே மன்னனிடம் சென்று கனவைக் கூறுவோம்என்று கூறி மன்னனை நாடிச் சென்றாள்.
  • கோப்பெருந்தேவியின் வருகை
      • கோப்பெருந்தேவி மன்னனை நாடிச் செல்லும்போது மகளிர் பலர் தேவியைச் சூழ்ந்து வந்தனர். அவர்களில் சிலர் கண்ணாடி ஏந்தி வர, சிலர் அணிகலன்களை ஏந்தி வர, சிலர் அழகிய கலன்களை ஏந்தி வர, சிலர் புதிய நூலாடையையும், பட்டாடையையும் ஏந்தி வர, சிலர் வெற்றிலைகளை ஏந்தி வர, சிலர் வண்ணமும் சுண்ணமும் கத்தூரி கலந்த சந்தனக் குழம்பும் ஏந்தி வர, சிலர் தொடையல் மாலை, கவரி, தூபம் ஆகியனவற்றையும் ஏந்தி வந்தனர். கூன் உடைய மகளிரும், குருடும், ஊமையருமான குற்றவேல் செய்யும் மகளிரும் அரசியைச் சூழ்ந்து வந்தனர். நரையுடைய முதுமகளிர் பலர், “கடல் சூழ்ந்த இவ்வுலகத்தினைக் காக்கும் பாண்டியனுடைய தேவியே நீடு வாழ்வாயாகஎன வாழ்த்தினர். தோழியரும் காவல் மகளிரும், தேவி அடியெடுத்து வைக்குந்தோறும் புகழ்ந்து போற்றி வந்தனர். தன் பரிவாரங்களுடன் சென்ற தேவி தன் கணவனிடம் தான் கண்ட கனவின் தன்மையை எடுத்துச் சொல்ல, அதனைக் கேட்டுக் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் அமர்ந்திருந்தான்.
  • கண்ணகி வாயிற்காப்போனிடம் கூறியது
      • அப்போது சினத்துடன் அங்கு வந்த கண்ணகி, “வாயிற்காவலனே, அறிவு இழந்து நீதி நெறி தவறிய மன்னனின் வாயிற்காவலனே! பரல்களை உடைய சிலம்பு ஒன்றினைக் கையிலே ஏந்தியவளாய், தன் கணவனை இழந்த ஒருத்தி நம் கடைவாயிலில் நிற்கின்றாள் என்று உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாயாகஎன்று கூறினாள்.
  • வாயிற்காவலன் கூற்று
      • வாயிற்காப்போன் மன்னனிடம் சென்று, “கொற்கை நகரத்து வேந்தனே வாழ்க! தென்திசையில் உள்ள பொதிய மலைக்குத் தலைவனே வாழ்க! செழியனே வாழ்க! தென்னவனே வாழ்க! பழிச்சொல் இல்லாத பாண்டிய மன்னனே வாழ்க! குருதிக் கொட்டும் தலையைப் பீடமாகக் கொண்டவளும், வேற்படையைக் கையில் ஏந்தியவளுமாகிய கொற்றவை அல்லள்! ஏழு கன்னியரில் இளையவளான பிடாரியும் அல்லள்! சிவபெருமானை நடனமாட வைத்த பத்திரகாளியும் அல்லள். தாருகாசுரனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் அல்லள். பகைமை கொண்டவள் போலவும், உள்ளத்தில் மிகுந்த சினம் கொண்டவள் போலவும் உள்ள அவள் கையில் பொற்சிலம்பு ஒன்றினை ஏந்தியவளாய், கணவனை இழந்தவளாய்  நம் வாயிற்புறத்தில் வந்து நிற்கின்றாள்என்று கூறினான். அத்தகையவளை இங்கே அழைத்து வருக என ஆணையிட்டான் மன்னன்.
  • கண்ணகி வழக்குரைத்த நிலை
      • வாயிலோன் வழிகாட்ட கண்ணகி உள்ளே சென்றாள். அவளைக் கண்ட பாண்டியன், “கண்ணீர் சிந்தும் கண்களுடன் என் முன் வந்திருப்பவளே! நீ யார்? என வினவினான்.
      • கண்ணகி பெருஞ்சீற்றம் கொண்டு, “ஆராய்ந்து அறியாத மன்னனே! நா்ன என்னைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக. தேவர்களும் வியப்படையுமாறு புறாவின் துன்பத்தைத் தீர்த்த சிபி என்ற மன்னனும், தன் கன்றை இழந்த பசுவின் துன்பத்தைக் கண்டு ஆற்றாமல், அக்கன்று இறப்பதற்குக் காரணமான தன் மகனைத் தன்னுடைய தேர்ச்சக்கரத்தைக் கொண்டு தண்டித்த மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகார் நகரமே என் ஊராகும். அவ்வூரில் புகழ் பெற்று விளங்கும் பெருங்குடி என்னும் வணிகர் மரபில் வாழும் மாசாத்துவான் என்பவனின் மகனாகப் பிறந்து, வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டு, ஊழ்வினை துரத்த, உன் மதுரை மாநகருக்கு வந்து, என்னுடைய கால் சிலம்பினை விற்பதற்கு விரும்பி, உன்னால் கள்வன் என்று குற்றம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி நான். என் பெயர் கண்ணகிஎன்று கூறினாள்.
  • கண்ணகி வழக்கில் வென்றமை
      • கண்ணகியின் சொல்  கேட்ட பாண்டிய மன்னன், “பெண் தெய்வமே கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோன்மை அன்று. முறை தவறாத அரச நீதியே ஆகும்என்றான். அதற்குக் கண்ணகி, “நல்ல முறையில் நீதி அறிந்து செயலாற்றாத மன்னனே! என் காலில் உள்ள சிலம்பு மாணிக்கக் கற்களைப் பரல்களாகக் கொண்டதுஎன்றாள். பாண்டிய மன்னன், “என் மனைவியின் கால் சிலம்பில் பரல்களாக இருப்பவை முத்துக்கள்என்று கூறினான். பின்பு கோவலனிடமிருந்து பெறப்பட்ட சிலம்பைக் கொண்டு வாருங்கள்என்று கட்டளையிட்டு வரவழைத்து கண்ணகியின் முன் வைத்தான். உடனே கண்ணகி அவர்கள் வைத்த சிலம்பினை எடுத்து உடைத்தாள். அச்சிலம்பிலிருந்து மாணிக்கப் பரல் ஒன்று மன்னனின் முகத்திலும் வாயிலும் தெறித்து விழுந்தன.
  • பாண்டியன் தன் தவறுணர்ந்து இறத்தல்
    • அவ்வாறு தெறித்த மாணிக்கப் பரல் கண்டு திடுக்கிட்ட வேந்தன் வெண்கொற்றக்குடை தாழவும், செங்கோல் வளையவும், பொற்கொல்லன் பொய்யுரை கேட்டு நீதி தவறிய நான் அரசன் இல்லை. கோவலன் சிலம்பை என்னுடையதாகக் கொண்டதால் நானே கள்வன்”, எனக்கூறி உள்ளம் குமுறினான். துடித்தான். மக்களைக் காக்கும் பாண்டிய நாட்டு ஆட்சிக்கு என் காரணமாகத் தவறு நேர்ந்து விட்டதே என்று பதறினான். கெடுக என் ஆயுள்எனத் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு மயங்கிக் கீழே விழுந்து இறந்து போனான். கணவனின் மரணம் கண்டு கோப்பெருந்தேவி உள்ளம் நிலை குலைந்து உடல் நடுங்கினாள். தாய் தந்தையரை இழந்தவர்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டி ஆறுதல் கூற முடியும். ஆனால், கணவனை இழந்தோர்க்கு அங்ஙனம் காட்டலாகாதுஎனக் கருதித் தன் கணனின் கால்களைத் தொட்டு வணங்கி விழுந்து இறந்து போனாள்.
  • மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை விளக்குக. (அல்லது) மணிமேகலையிடம் அமுதசுரபி வந்தடைந்த விதத்தினை எழுதுக. (அல்லது) அமுத சுரபி பெற்ற மணிமேகலையின் செயல்கள் குறித்து எழுதுக.

மணிமேகலை

    • இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்
    • சமயம்பௌத்தம்

பெயர்க்காரணம்

    • காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்மணிமேகலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

    • இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)
    • இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.

நூல் அமைப்பு

    • முப்பது காதைகள் கொண்டது.

பாத்திரம் பெற்ற காதை

    • மணிபல்லவத்தீவின் காவல் தெய்வமாகிய தீவத்திலகை, மணிமேகலையை அறிந்து கொண்டு, அவளிடம் இங்குள்ள கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரனால் விடப்பட்ட அமுதசுரபி என்ற பாத்திரம் உன் கைகளை வந்து அடையும். அந்தப் பாத்திரத்தில் வற்றாமல் உணவு சுரந்து கொண்டே இருக்கும். அதைக் கொண்டு நீ பசித்தவர்களுக்கு உணவு தந்து காப்பாய்” என்று கூறியது. அத்தெய்வம் கூறியவாறு மணிமேகலையிடம் அமுதசுரபி வந்தடைந்தது. மணிமேலை தீவத்திலகையிடம் விடை பெற்றுக் கொண்டு வான் வழி பறந்து வந்து புகார் நகரை அடைகின்றாள். பின்பு அறவண அடிகளைக் காணச் செல்கின்றாள். இந்தச் செய்திகளை இக்காதை விவரிக்கின்றது.

நீயார் என வினவல்

    • மணிமேகலா தெய்வம் மந்திரம் சொல்லித் தந்து சென்ற பின்னர் மணிமேகலை மணிபல்லவத் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். வெள்ளை மணல் குன்றுகளையும், அழகிய பூங்காக்களையும், குளிர்ச்சியான மலர்கள் பூத்திருக்கும் தெப்பங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே பத்து மைல் தூரம் சென்றாள். அப்போது தெய்வத் திருக்கோலத்துடன் தீவதிலகை என்பவள் எதிரே தோன்றினாள். “படகு கவிழ்ந்து தப்பி வந்தவளைப் போல இங்கு வந்துள்ள தூயவளே நீ யார்?” என்று மணிமேகலையைப் பார்த்துக் கேட்டாள்.

மணிமேலை பதில் கூறல்

    • மணிமேகைலை தீவதிலகையிடம், “யார் நீ என்று என்னைக் கேட்டாய்? எந்தப் பிறப்பைப் பற்றிய கேள்வி இது? தங்கக் கொடி போன்றவளே! நான் சொல்லப் போவதைப் பொறுமையாகக் கேட்பாயாக! முற்பிறப்பில் நில உலகை ஆட்சி செய்த அரசனான இராகுலன் மனைவி நான். என் பெயர் இலக்குமி. இந்தப் பிறவியில் நாட்டியக் கலைச்செல்வி மாதவியின் மகள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னைக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது. புகழ் பெற்ற இந்தப் பீடிகையால் என் பழைய பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள்.

நான் தீவதிலகை

    • மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். நல்ல முறையில் சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. (சமந்தகம் என்பது இலங்கையில் உள்ள சிவனொளி பாதமலை) அதனை வலம் செய்து இங்கு வந்தேன். குற்றிமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள்.

தீவதிலகை பாராட்டுதல்

    • அறநெறிகளின் தலைவன் புத்தபகவான். அவர் கூறிய புகழ் நிறைந்த நல்லறத்தில் தவறாக நோன்பு உடையவரே, இந்தத் திருவடித்தாமரைப் பீடிகையைப் பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆவர். அப்படிப் பார்த்து வணங்கிய பின்னர் அவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள். அத்தகைய சிறப்புக்கு உரியவர்கள் இவ்வுலகில் அரியவர். அத்தகையவரே தருமநெறிகளைக் கேட்பதற்கும் உரியர். அத்தன்மை மிக்க அணியிழையே! இன்னும் கேட்பாயாக!

அமுத சுரபி

    • “மிக்க புகழுடைய இந்தப் பீடிகையின் முன்பு தெரிவது கோமுகி என்ற பொய்கையாகும். நீர் நிறைந்துள்ள இந்தப் பொய்கையில் பெரிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் அழகாகப் பூத்துக் கலந்து பொலிவுடன் திகழ்கின்றன.வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தன்று (பௌர்ணமி நாள்) புத்தர்பிரான் தோன்றிய அந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்ற பேரும் புகழும் மிக்க பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும்.

அந்த நாள் இந்த நாளே

    • அந்த நல்ல நாளான வைகாசிப் பௌர்ணமி இன்றுதான். அந்த அரிய அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நேரமும் இதுதான். நேரிழையே! அதோ அது உன்னிடம் வருவது போலத் தெரிகிறது. இந்தப் பாத்திரத்தில் இடும் உணவானது ஆருயிர் மருந்தாகும். அது எடுக்க எடுக்கக் குறையாது பெருகும். வாங்குபவர் கைகள் வலிக்குமே அன்றி பாத்திரத்தில் குறையாது. மணக்கின்ற மாலை அணிந்த பெண்ணே! அறவண அடிகளிடம் இப்பாத்திரத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வாய்” என்று தீவதிலகை கூறினாள்.

அமுதசுரபி கிடைத்தது

    • தீவதிலகை கூறியது கேட்ட மணிமேகலை, அதனை அடைய விரும்பி அந்த புகழ் மிக்க பீடத்தை தீவதிலகையுடன் வலம் வந்து வணங்கினாள். பீடிகையின் எதிரே நின்றாள். அப்பது எல்லோரும் வணங்கத்தக்க மரபினை உடைய அமுதசுரபி பாத்திரம் அந்தப் பொய்கையில் இருந்து எழுந்து வந்து, மணிமேலை கைகளில் சென்று சேர்ந்தது. அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை பெரிதும் மகிழ்ந்தாள்.

புத்த பகவானை வணங்கினாள்

    • மகிழ்ந்த மணிமேகலை,“மாறனை வெற்றி கொள்ளும் வீரனே! தீய வழிகளான வாழ்வின் பகைகளை நீக்கியவனே! மற்றவர்களுக்குத் தரும வழி வாய்ப்பதற்கு முயலும் பெரியோனே! சுவர்க்க வாழ்வினை அடைய விரும்பாத பழையோனே! மக்களது எண்ணங்கள் பின்னடைய எட்டாத மேல்நிலை அடைந்து இருப்பவனே! உயிர்களுக்கு அறிவுக் கண்களை அளித்த மெய் உணர்வு உடையோனே! தீமை தரும் சொற்களைக் கேட்க மறுக்கும் காதுகளை உடையவனே! உண்மை மட்டுமே பேசும் நாவினை உடையவனே! நரகர் துன்பத்தைப் போக்க உடனே அங்கு சென்றவனே! உனது மலர்ப் பாதங்களை வணங்குவேன் அல்லாமல் வாழ்த்துவது என் நாவில் அடங்காத செயலாகும்” என்று கூறி புத்த பகவானைப் போற்றி வணங்கினாள் மணிமேகலை.

பசி தீர்க்கும் பணி

    • புத்த பகவானை மணிமேகலை வணங்கிப் போற்றியதைக் கண்ட தீவதிலகையும் போதிமரத்தின் அடியில் அமைந்துள்ள தேவனின் திருவடிகளை வணங்கினாள். பின் மணிமேகலையைப் பார்த்து, “பசியாகிய நோய் இருக்கிறதே அது மேல்குடியில் பிறந்த தகுதியை அழித்து விடும். தூய எண்ணங்களைச் சிதைத்து விடும். கல்வி என்ற பெரும் புணையையும் நீக்கிவிடும். நாணமாகிய அணியையும் போக்கிவிடும். பெருமையான அழகினைச் சீர்குலைக்கும். மனைவியோடு அடுத்தவர் வாசலில் பிச்சை எடுக்க நிறுத்திவிடும். இப்படியான பசி என்ற நோயினை நீக்க வேண்டும். அது ஒரு பாவி. அதனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி நீக்கியவர்களின் புகழை அளவிட முடியாது.

பசியால் நாயினைத் தின்றவர்

    • புல்லும் மரங்களும் வெம்மையாலே கருகிப் புகைந்து பொங்கின. அனல் கொதித்தது. பசியினாலே உயிரினங்கள் அழியுமாறு மழை வளம் குன்றிப் போனது. அரச பதவியை விட்டு மறைகளை ஓதி துறவு மேற்கொண்ட அந்தண விசுவாமித்திர முனிவன், பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தான். கொடிதான இந்தப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றான் என்றால் பசியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தின்பதற்கு முன் தேவபலி செய்ததாலே இந்திரன் தோன்றி மழைவளம் பெருகச் செய்தான். விளை பொருள்கள் மலிந்தன. மண் உயிர்களும் பெருகின.

உயிர் அளிப்பவர் யார்?

    • கைம்மாறு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பவர், அறத்தை விலைக்கு விற்பவர்கள் ஆவர். இல்லாத ஏழை மக்களின் பசியை நீக்குவோர்தாம் மேன்மையான அறநெறி வாழ்க்கை வாழ்பவர்கள். இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் உணவு தருபவர்களே உயிர் தந்தவர்கள் ஆவர். நீயும் அப்படிப்பட்ட உயிர் தரும் தரும வழியை உறுதியாக மேற்கொண்டாய். கலக்கமற்ற நல்லறத்தினை அறிந்து கொண்டாய்” என்று தீவதிலகை மணிமேகலையிடம் கூறினாள்.

அறம் செய்த பயன்

    • இதைக் கேட்ட மணிமேகலை,“முன்பிறப்பிலே என் கணவனான இராகுலன் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட உயிர் விட்டான். அப்போது நானும் அவனோடு சேர்ந்து தீக்குளிக்க உடல் வெந்தது. உணர்வுகள் நீங்கின. அப்போது வெயில் மிகுந்த உச்சிவேளையில் வந்து தோன்றிய சாது சக்கரமுனிவனுக்கு முன்னர் உணவு தந்ததுபோல கனவு மயக்கம் அடைந்தேன். என் உயிரும் பிரிந்தது. அந்தக் கனவின் காட்சியே நினைவின் பயனாய் அறப்பயனாகி ஆருயிர்களைக் காக்கும் மருந்தாக அமுதசுரபி எனக்குக் கிடைத்தது”.

தாய்போல் காப்பேன்

    • “சம்புத்தீவு என்கிற இப்பெரிய நாவலந்தீவிலே தரும நெறிகளை விதைத்து அந்த விளைவினைச் செல்வமாக அனுபவிப்போர் சிலராவர். கந்தலான துணி உடையை உடுத்திக் கொண்டு பசி துன்புறுத்துவதால் வருத்தப்பட்டு, அதிக வெயில் என்று வெறுக்காமலும், மழை அதிகம் என்று சோம்பித் திரியாமலும், செல்வந்தர் வீட்டு வாசல்களில் சென்று நின்று துன்பம் அதிகமாவதால் முன்பிறப்பில் செய்த தீவினை போலும் என எண்ணி அயர்வோர் பலராவர். பெற்ற குழந்தையின் பசியால் வாடிய முகம் கண்டு இரங்கி சுவையான பாலைச் சுரப்பவள் தாய். அந்தத் தாயின் கொங்கைகள் போல சுரந்து உணவளிப்பது இந்த தெய்விகப் பாத்திரம். இந்தப் பாத்திரத்தின் உள்ளே இட்ட அரிய உயிர் மருந்தாகிய உணவு பசியால் வாடிய ஏழைகளின் முகத்தைக் கண்டதும் சுரத்தலைக் காணும் விருப்பமுடையவள் நான்” எனக் கூறினாள் மணிமேகலை.

வானத்தில் பறந்தாள்

    • “அதன் திறத்தினை உன்னிடம் கூற நான் மறந்து விட்டேன். நீ எடுத்துக் கூறினாய். அறமே சாட்சியாக அருள் சுரந்து அது அனைவருக்கும் உணவு தரும். சிறந்தவர்களுக்குத்தான் அது உணவு தரும். அதன் பயனை நீ நன்றாக அறிந்துள்ளாய். தரும வழியில் மற்றவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறாய்! ஆகவே மணிபல்லவம் விட்டு உனது ஊருக்குச் செல்வாயாக!” என்றாள் தீவதிலகை. மணிமேகலை அவளது திருவடிகளில் விழுந்து வணங்கி விடை பெற்றாள். அமுதசுரபியைத் தன் மலர் போன்ற கையில் ஏந்தி மேலே எழுந்து வானத்தில் பறந்து புகார் நகர் நோக்கிச் சென்றாள்.

பழைய பிறப்பைக் கூறினாள்

    • “சொன்ன சொல் மாறாத மணிமேகலா தெய்வம் கூறிய ஏழாம் நாளும் வந்தது. என் மகள் மணிமேகலை வரவில்லையே, தெய்வம் கூடப் பொய் சொல்லுமா?” என நினைத்து வருந்தினாள் மாதவி. அப்போது அவர்கள் முன் வானிலிருந்து இறங்கித் தோன்றினாள் மணிமேகலை. மாதவி சுதமதி ஆகியோர் கவலை நீங்கினர். மணிமேகலை அவர்களிடம் ஓர் அரிய செய்தியைக் கூறினாள். “இரவிவன்மனின் பெருமை மிக்க புதல்வியே! குதிரைப் படைகளை உடைய துச்சயன் மனைவியே! அமுதபதியின் வயிற்றில் பிறந்து அப்போது எனக்குத் தமக்கையராக இருந்த தாரையும் வீரையும் ஆகிய நீங்கள் இப்பிறப்பில் எனக்குத் தாயார்களாக ஆனீர்கள்! உமது திருவடிகளை வணங்குகிறேன்” என்று கூறிய மணிமேலை, மாதவி சுதமதி இருவரையும் வணங்கினாள். (சுதமதி மாதவியின் தோழி. மணிமேகலைக்குச் செவிலித்தாய். ஆகவே இருவரையும் தாய் என்று கூறினாள் மணிமேகலை).

அறவண அடிகள் திருவடி தொழுவோம்

    • “உங்கள் இருவருக்கும் இந்த மானிடப் பிறப்பிலேயே தீயவினைகளைத் துடைத்து நற்பேறு எய்தும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான தவநெறி முறைகளை அறவண அடிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர். உங்கள் பிறவிப் பயன் இதுவே ஆகும். இதோ இந்தப் புகழ் மிக்க பாத்திரம் அமுதசுரபியாகும். இதனை நீங்களும் வணங்குங்கள்” என்று மணிமேகலை கூற, அவர்களும் வணங்கினர். மேலும் “உண்மையே பேசும் தாய்மார்களை நோக்கிக் குறை காண இயலாத மாபெரும் தவத்தோரான அறவண அடிகளின் பாதங்களை வணங்கிடச் செல்வோம். நீங்களும் வாருங்கள்” என்று அவர்களோடு அறவண அடிகளைக் காணப் புறப்பட்டனர்.
  • பெரியபுராணத்தில் அமைந்துள்ள பூசலார் நாயனார் புராணம் குறித்து விவரி. (அல்லது) பூசலார் நாயனார் கற்கோவில் கட்டிய விதத்தினை விளக்குக. (அல்லது) பூசலார் நாயனார் சிவன்மீது கொண்ட பக்தியை விளக்குக. (அல்லது) பூசலார் கோவில் கட்டிய திறத்தைப் பெரியபுராணம் வழிநின்று விளக்குக.

பெரியபுராணம்

    • இயற்றியவர்: சேக்கிழார்
    • பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.
    • இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.
    • 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.

பூசலார் நாயனார் புராணம்

கதைச் சுருக்கம்

தொண்டை நாட்டில் திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பூசலார். அவர் சிவபக்தியில் சிறந்தவராய், வேதத்தில் வல்லவராய் விளங்கினார். நாயனார் திருக்கோயில் ஒன்றினைக் கட்டிக் குடமுழுக்கு நீராட்ட விரும்பினார். அதற்குரிய பொருள் கிடைக்காமையால் மனத்திற்குள்ளேயே எல்லாப் பொருள்களையும் கொண்டு சேர்த்துப் பிரதிட்டை செய்யும் நாளையும் குறித்தார். அச்சமயத்தில் காஞ்சி மாநகரில் பல்லவ வேந்தன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தான். சிவபிரான் மன்னன் கனவில் தோன்றித் “திருநின்றவூரில் பூசல் என்பவன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்ய உள்ளான். நாம் அங்குச் செல்வதால் உனது ஆயலப் பிரதிட்டையைப் பின்னொரு நாளில் வைத்துக்கொள்” என்றருளினார். உடனே மன்னர் விழித்தெழுந்து திருநின்றவூரை அடைந்தான். ஆங்குப் புதிதாகக் கட்டப்பட்ட கோயில் எதுவும் இல்லை என அறிந்தான். பின்பு பூசலாரை அடைந்து தொழுது “அடிகள் கட்டிய திருக்கோயில் எங்குள்ளது? என வினவி அத்திருக்கோயிலின் பிரதிட்டை நாள் இன்று என இறைவரால் அறிந்தேன்” என்றான். பூசலார் மருட்சியடைந்து தாம் மனத்துக்கண் கட்டிய கோயிலின் முறையினை விளக்கினார். மன்னன் நாயனாரைத் தொழுது விடைபெற்றான். நாயனார் தம் மனக்கோயிலுள் சிவபிரானைப் பிரதிட்டை செய்தார். சில காலம் மனக்கோயில் வழிபாடு செய்து இறைவர் திருவடி நிழலைச் சேர்ந்தார்.

பூசலார் தம் மனதில் கோயில் அமைத்தல்

    • பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்த சிவபிரானுக்குக் கோயில் எடுக்க வேண்டும் என்று எண்ணி, எந்தப் பொருள்களும் இல்லாத வறுமையில், மனத்தின்கண் எழுந்த உணர்வுகளைக் கொண்டு நல்ல ஆலயத்தை உருவாக்கிய திருநின்றவூரின்கண் விளங்கும் பூசலார் தம் நினைவால் அமைத்த கோயிலை உரைக்கத் தொடங்கினேன்.
    • உலகில் ஒழுக்கநெறி உயர்ந்து மேவும் பெருமையுடைய தொண்டை நாட்டில் நான்கு வேதங்களும் நன்கு ஓதப்பெறும் தொன்மையான திருநின்றவூர். அங்கு இறைவனின் அடியார்கள் தம் கொள்கையில் சிறந்து நிற்பர்.
    • வேத நெறி தழைத்து மேவும் வகையில் பூசலார் திருநின்றவூரின்கண் தோன்றினார். அவருடைய உணர்வுகள் யாவும் சிவபிரான் திருப்பாதங்களையே சார்ந்தன. அன்பு மாறாத நெறி பெருகி வளரும் தன்மையில் வாய்மையுடன், வேதத்தின் நியதியில் பொலிவுடன் விளங்கினார்.
    • சிவனடியார்களுக்கு ஏற்ற பணிகளைச் செய்தலே தமக்குரிய திருத்தொண்டு என்று எண்ணியவராக, சிவபிரான் எழுந்தருளுவதற்கு ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னிடம் பொருட்செல்வம் இல்லை என்று உணர்ந்தும், கோயில் அமைக்கும் எண்ணத்தில் உறுதியுடன் நின்றார்.
    • கோயில் அமைக்க அவருடைய உள்ளம் விரும்பியது. ஆனால், கோயில் அமைப்பதற்குரிய பெருஞ்செல்வத்தை வருந்தித் தேடியும் கிடைக்காததால் என்ன செய்வேன் என்று மனம் வருந்துகின்றார். மனதுள்ளேயே அக்கோயிலைக் கட்ட வேண்டும் என்று எண்ணி அதற்குரிய செல்வத்தைச் சிறுகச் சிறுகத் தம் சிந்தனையிலேயே திரட்டிக் கொண்டார்.
    • தொழிற் கருவிகளோடு கட்டுதற்குரிய சாதனங்களுடன் தச்சர்களையும் தேடிக் கொண்டு ஆயலம் எடுப்பதற்குரிய நல்ல நாளும் விரும்பி, ஆகம விதிப்படி அடிநிலை எடுத்து, தம் அன்பின் நிறைவினால் இரவும் பகலும் உறங்காது மனதுக்குள்ளேயே கோயிலைச் செதுக்கினார்.
    • கோபுரத்தின் அடி முதல் முடி வரை அமைந்துள்ள அடுக்குகள் யாவற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் அமையுமாறு மனத்தினால் அமைத்து, விமானத்தின் முடிவில் சிகரமும் சிற்ப நூலில் சித்திரங்களும் உருவாக்கினார். இத்தகைய பணி யாவும் நீண்ட நாட்கள் செய்யப்படும் பணியாக தமது நினைவில் நிலைநிறுத்திக் கொண்டார்.
    • விமானத்தின் உச்சியில் கூர்மையான சிகரம் அமைத்து, சுண்ணச் சாந்து பூசி சிற்ப அலங்காரங்களைச் செய்த பின்பு, திருமஞ்சனத்திற்குரிய கிணறும், கோயிலைச் சுற்றி மதில்களைக் கட்டிக் குளமும் அமைத்தார். சிவபிரான் திருமேனியின் திருவுருவமாகிய சிவலிங்க மூர்த்தியைப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தார்.

பல்லவ மன்னன் கனவில் சிவபிரான் தோன்றுதல்

    • பல்லவ வேந்தன் காஞ்சி மாநகரில் பெருஞ்செல்வத்தில் கற்கோயிலை முழுமையாகக் கட்டி முடித்தான். பின்பு சிவபிரானைப் பிரதிட்டை செய்ய குடமுழுக்கு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். அதற்கு முன் நாள், கொன்றை மலர் சூடிய சிவபிரான் மன்னன் கனவில் தோன்றினார்.
    • “திருநின்றவூரில் பூசல் என்னும் அன்பன் பலநாள் மனத்துக்கண் அமைத்த புகழ் மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுகின்றோம். ஆதலால் நீ செய்யும் குடமுழுக்குச் செயலை நாளைய தினம் தவிர்த்துப் பின்பு ஒருநாளில் அமைத்துச் செய்வாய்” என்று கூறி மறைந்தார்.

பல்லவ மன்னன் பூசலாரைக் கண்டு வணங்குதல்

    • திருத்தொண்டராகிய பூசலார் நாயனாரின் பெருமையை சிவபிரான் சொல்லக் கேட்ட பல்லவ மன்னன், அத்திருப்பணி செய்தவரைக் கண்டு வணங்குதல் வேண்டும் என்று விருப்பம் கொண்டு திருநின்றவூரை சென்றடைந்தான்.
    • திருநின்றவூரை அடைந்த வேந்தன், அன்பராகிய பூசலார் அமைத்த கோயில் எப்பக்கம் உள்ளது என்று அங்கு வந்தவர்களைக் கேட்க, அவர்களும், “தாங்கள் கூறும் பூசலார், கோயில் எதுவும் அமைத்தது இல்லை” என்றனர். அந்நிலையில் இறைவனின் அடியவர்கள் அனைவரும் தன்னைச் சந்திக்க வருமாறு உரைத்தான் மன்னன்.
    • அன்பர்கள் அனைவரும் வந்து அரசனைக் காண, மன்னன் அவர்களிடம் “பூசலார் என்பவர் யார்?” என்று வினவ, அவர்களும், “குற்றம் இல்லாத அந்த அன்பர் இந்த ஊரைச் சேர்ந்தவர்” என்று கூற, பூசலாரை நாடிச் சென்றான் மன்னன்.
    • திருத்தொண்டராகிய நாயனாரைக் கண்ட மன்னன் தொழுது போற்றி, “எட்டுத் திசைகளில் உள்ளவரும் தொழுமாறு நீங்கள் கட்டிய கோயில் எங்குள்ளது? இன்று அக்கோயிலில் தேவர் தலைவனான சிவபிரானைப் பிரதிட்டை செய்யப் போவதை அறிந்து இறைவன் அருள் பெற்று உம்மைக் கண்டு அடிபணிய வந்தேன்” என்று கூறினான்.

பூசலார் தாம் கட்டியது மனக்கோயில் என்று உரைத்தல்

    • மன்னன் உரை கேட்ட நாயனார் மருட்சி அடைந்தவராக, “என்னை ஒரு பொருளாகக் கொண்டு எம்பிரான் அருள் செய்தார். பணமும் பொருளும் கிடைக்கப்பொறாமையால் உள்ளத்தால் முயன்று நினைந்து நினைந்து அமைத்த கோயில் இதுவேயாகும்” என்று தாம் மனத்துள் எழுப்பிய ஆலயத்தை மன்னனுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்.
    • நாயனாரின் உரை கேட்ட மன்னன், அங்கு நிகழ்ந்த அதியசயத்தை எண்ணிக் “குற்றமற்ற திருத்தொண்டர்தம் பெருமைதான் என்னே!” என்று போற்றி, தான் சூடிய மாலை தரையில் பதியுமாறு நிலத்தில் வீழ்ந்து பூசலாரை வணங்கினான். பின்பு முரசு ஒலிக்கும் படையோடு தன் காஞ்சி மாநரை அடைந்தான்.

பூசலார் தம் மனக்கோயிலில் சிவபிரானைப் பிரதிட்டை செய்தல்

    • பூசலார் தாம் சிந்தையால் அமைத்த கோயிலில் சிவபிரானை நற்பெரும் பொழுதில் பிரதிட்டை செய்தார். பல நாட்கள் நலம் விளங்கும் பூசைகள் யாவும் செய்தார். திருநடனம் புரியும் இறைவனின் அழகிய திருப்பாதத்தில் சேர்ந்தார்.
  • கம்பராமாயணம் குகப்படலம் குறித்து விவரி. (அல்லது) குகன் இராமன் மீது கொண்ட பக்தியைக்/அன்பினைக் குகப்படலம்வழி விளக்குக.

கம்பராமாயணம்

    • இயற்றியவர்: கம்பர்
    • பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது. 

காப்பிய அமைப்பு

    • இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.

குகப்படலம்

    • வனம் புகுந்த இராமன் குகனைத் தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியை விவரிப்பதே குகப்படலம் ஆகும்.

குகனின் அறிமுகம்

    • இராமன் முனிவர்கள் தந்த விருந்தை அருந்தியிருந்தபொழுது, குகன் என்னும் பெயரை உடையவன் அங்கு வந்தான். அந்தக் குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களைச் செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.
    • அந்தக் குகன் துடி என்னும் பறையை உடையவன். வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன். தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன். இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன். அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.
    • ஊதுகொம்பு, துந்துபி என்னும் பறை, சங்கு, முழங்கும் பேரிகை, பம்பை என்னும் பறை ஆகிய இசைக்கருவிகள் நிறைந்துள்ள படையை உடையவன். இலை வடிவமான அம்புகளை உடையவன். ஓடங்களுக்குத் தலைவன். யானைக் கூட்டத்தைப் போன்று பெரிய சுற்றத்தார்களை உடையவன்.
    • காழகம் (அரைக்கால் சட்டை) என்னும் ஆடை அணிந்தவன். கங்கை ஆற்றின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன். இடுப்பிலிருந்து தொங்கவிட்ட செந்நிறத் தோலை உடையவன். இடுப்பைச் சுற்றிக் கட்டிய, ஓன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்.
    • பற்களைத் தொடுத்தது போன்ற பல அணிகலன்களைப் பூண்டவன். வீரக்கழலை அணிந்தவன். தலை மயிரில் நெற்கதிர்களைச் செருகிக் கொண்டவன். சினம் வெளிப்பட மேலேறி வளைந்த புருவத்தை உடையவன்.
    • பனை மரம் போன்று நீண்டு வளர்ந்துள்ள கைகளை உடையவன். பாறை போன்ற மார்பினை உடையவன். எண்ணெய் பூசப்பட்ட இருளைப் போன்ற கருநிற உடம்பை உடையவன்.
    • தன் இடுப்பில் குருதிக் கறை படிந்த வாளை உடையவன். நஞ்சை உடைய நாகமும் கண்டு நடுங்குகின்ற கொடிய பார்வையை உடையவன். பைத்தியக்காரர் போல் தொடர்பில்லாத பேச்சை உடையவன். இந்திரனின் வச்சிராயுதம் போன்று உறுதியான இடையை உடையவன்.
    • விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் உண்ட புலால் நாற்றம் பொருந்திய வாயை உடையவன். சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத முகத்தினை உடையவன். கோபம் இல்லாதபோதும் கனல் கக்குமாறு பார்ப்பவன். யமனும் அஞ்சும்படி அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன்.
    • சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் பேரலைகள் பெற்ற கங்கை ஆற்றின் அருகில் அமைந்த நகரத்தில் வாழ்பவன். அப்படிப்பட்ட குகன் முனிவர் இருப்பிடத்தில் தங்கியுள்ள இராமனைக் காண்பதற்காகத் தேனையும் மீனையும் காணிக்கையாக எடுத்துக் கொண்டு வந்தான்.

இராமனின் தவச்சாலையை குகன் சேர்தல்

    • பொய்மை நீங்கிய மனத்தையும், இராமனிடம் அன்பு கொள்ளும் குணத்தையும் உடைய குகன் தன்னுடைய சுற்றத்தார் தூரத்தே நிற்க, அம்பையும், வில்லையும், வாளையும் நீக்கிவிட்டு, இராமன் தங்கியிருந்த தவச்சாலையின் வாயிலை அடைந்தான்.

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்

    • வாயிலை அடைந்த குகன் தன் வருகையை உணர்த்தக் கூவிக் குரல் கொடுத்தான். முதலில் தம்பி இலக்குமணன் அவனை அணுகி, “நீ யார்?” என்று வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி, “ஐயனே! நாய் போன்ற அடியவனாகிய நான் ஓடங்களைச் செலுத்தும் வேடன் ஆவேன். தங்கள் திருவடிகளைத் தொழ வந்தேன்” என்று கூறினான்.

குகனின் வரவை இலக்குவன் இராமனுக்கு அறிவித்தல்

    • இலக்குமணன் “நீ இங்கேயே இரு” என்று குகனிடம் கூறிவிட்டு, தவச் சாலைக்குள் சென்று தன் தமையன் இராமனைத் தொழுது, “அரசே! தூய உள்ளம் பெற்றுள்ளவனும், தாயைக் காட்டிலும் மிக நல்லவனும், அலை மோதும் கங்கையில் செல்லும் ஓடங்களுக்குத் தலைவனுமான குகன் என்னும் ஒருவன் உன்னைக் காண்பதற்காக, பெருந்திரளாகத் தன் சுற்றத்தாருடன் வந்துள்ளான்” என்று தெரிவித்தான்.

இராமனைக் கண்டு வணங்கிய குகன்

    • இராமனும் மனமுவந்து, “நீ அந்தக் குகனை என்னிடம் அழைத்து வா” என்று கூறினான். இலக்குமணனும் குகனை நோக்கி, “உள்ளே வா” என்றான். அதைக் கேட்ட குகன் விரைவாக உள்ளே சென்று, இராமனைத் தன் கண்ணினால் கண்டு களிப்படைந்தான். தன் கருமை நிற முடிகள் தரையில் படுமாறு அவனை வணங்கி எழுந்து, உடல் வளைத்து, வாயினைத் தன் கைகளால் பொத்திப் பணிவோடு  நின்றான்.

குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்

    • “இங்கே அமர்க” என்று குகனிடம் இராமன் கூறினான். ஆனால் குகன் அமரவில்லை. இராமனிடம் அளவு கடந்த அன்பை உடைய அந்தக் குகன், இராமனை நோக்கி, “தங்கள் உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய எண்ணம் யாதோ?” என்று கேட்டான். இராமன் முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.

குகனது அன்பை இராமன் பாராட்டுதல்

    • “மனம் மகிழும்படி உள்ளத்திலே உண்டான அன்பின் தூண்டுதலால் பக்தி ஏற்பட அருமையாகக் கொண்டு வரப்பட்ட இத்தேனும் மீனும் அமிழதத்தைக் காட்டிலும் சிறந்தவை அல்லவா? நீ கொண்டு வந்தவை எவையாயினும் சரி, அவை அன்போடு பொருந்தியவை என்றால் தூய்மையானவையே! அவை எம்மைப் போன்றவர்கள் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான் இராமன்.

விடியலில் நாவாய் கொண்டு வர குகனிடம் இராமன் கூறல்

    • ஆண் சிங்கம் போன்ற இராமன் “நாம் இன்று இத்தவச்சாலையில் தங்கி நாளை கங்கையைக் கடப்போம். எனவே நீ உன் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்தில் உவகையோடு தங்கிவிட்டு, விடியற்காலை நாங்கள் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே வருக” என்று கூறினான்.

குகனது வேண்டுகோள்

    • இராமன் இவ்வாறு கூறியதும், குகன் “இவ்வுலகம் முழுவதையும் உனக்குரிய செல்வமாகக் கொண்டவனே! உன்னை இந்தத் தவவேடத்தில் பார்த்த என் கண்களைப் பறித்து எறியாத கள்ளன் நான். இந்தத் துன்பத்தோடு உன்னைப் பிரிந்து எனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே! இங்கிருந்து என்னாலான அடிமைத் தொழிலை உனக்குச் செய்கிறேன்” என்று கூறினான்.

குகனின் வேண்டுகோளை இராமன் ஏற்றல்

    • மாலை சூட்டப்பட்ட வில்லை உடைய இராமன், குகன் கூறிய கருத்தைக் கேட்டான். உடனே சீதையின் முகத்தை நோக்கி, இலக்குமணனின் திருமுகத்தை நோக்கி, அவர்கள் மனமும் குகனின் அன்பை ஏற்றுக் கொள்வதை அறிந்து, “இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்” என்று கூறி கருணையினால் மலர்ந்த கண்கள் உடையவனாகி, “இனிமையான நண்பனே! நீ விரும்பியவாறு இன்று என்னோடு தங்கியிரு” என்று குகனிடம் கூறினான்.
    • இராமன் இன்று எம்மொடு தங்குக என்று சொல்லக் கேட்ட குகன், இராமன்  திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி மிக, கடலை ஒத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப் பெருக்கை அழைத்து, அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப் பாதுகாக்கக் கட்டளையிட்டு, தானும் கட்டமைந்த வில்லைப் பிடித்து, வாளையும் அரைக்கச்சிலே கட்டி, கூரிய அம்மைப்பிடித்து, இடியோடு கூடிய மழை மேகம் போல உரத்த சத்தம்இட்டு, அத்தவச்சாலையில் அம்மூவரையும் காவல்செய்து  நின்றான்.

இராமன் நகர் நீங்கிய காரணம் அறிந்து குகன் வருத்துதல்

    • “மனு குலத்தில் வந்த மன்னனே! நீ அழகிய அயோத்தி நகரை விட்டு இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாக” என்று குகன் கேட்டான். இலக்குமணன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல அதைக் கேட்டு இரங்கியவனான குகன் மிக்க துன்பமுற்று, “பூமி தேவி தவம் செய்தவளாக இருந்தும், அத்தவத்தின் பயனை முழுவதும் பெறவில்லை போலும். இதென்ன வியப்பு” என்று கூறி இரண்டு கண்களும் அருவி போலக் கண்ணீர் சொரிய அங்கே இருந்தான்.

கதிரவன் மறைதல்

    • இருள் போன்ற பகையைத் தொலைத்து, திசைகளை வென்று, அனைவர்க்கும் மேலாக விளங்கி, தனது ஒப்பற்ற ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி, உயர்ந்த புகழை நிலைக்கச் செய்து, உலகத்தில் உள்ள அனைவர் உள்ளத்திலும் இடம் பெற்று கருணை காட்டி, பின் இறந்து போன வலிமை பெற்ற மாவீரனான தசரதனைப் போல செந்நிறக் கதிர்களைப் பெற்ற சூரியன் மறைந்தான்.

இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காவல் இருத்தல்

    • மாலை வேலையில் செய்ய வேண்டிய கடமைகளைச் செப்பமான முறையில் செய்து, அங்கு தங்கிய இராமனும், பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற சீதையும் பரந்த பூமியில் பரப்பப்பட்ட படுக்கையில் படுத்தனர். இலக்குமணன் வில்லை ஏந்திக் கொண்டு விடியற்காலை தோன்றும் வரையிலும், கண்ணையும் இமைக்காமல் விழிப்போடு காத்து நின்றான்.

இராம இலக்குவரை நோக்கி குகன் இரவு முழுதும் கண்ணீர் வழிய நிற்றல்

    • யானைக் கூட்டத்தைப் போலத் தன்னைச் சுற்றியிருக்கும் சுற்றத்தாரை உடையவனும், அம்பு தொடுக்கப்பட்ட வில்லை உடையவனும், வெம்மை ஏறிக் கொதித்து நிலைகுலையும் மனத்தை உடையவனும், இமைக்காமல் விழித்திருக்கும் கண்களை உடையவனும், ஓடங்களுக்குத் தலைவனுமான குகன், கண் இமைக்காது நின்ற இலக்குமணனைப் பாரத்தும், இராமன் நாணற் புல்லிலே படுத்திருக்கும் நிலையைப் பார்த்தும், கண்ணீர் அருவியைச் சொரியும் மலை போன்று நின்றான்.

கதிரவன் தோன்றலும் தாமரை மலர்தலும்

    • உலகத்து உயிர்களைப் போலப் பிறத்தல் என்பதைப் பெறாதவனான சூரியன் அளவற்ற பிறப்புகளை உடைய உயிர்கள் யாவும் இறக்கும் முறை இதுதான் என்று உலகத்தாருக்குக் காட்டுகின்றவனைப் போல முந்திய நாள் மாலையில் மறைந்தான். அடுத்த நாள் காலையில் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கும் முறை இதுதான் என்று காட்டுகின்றவனைப் போல உதித்தான். ஆதலால் சொர்க்கம் முதலான சிறந்த உலகங்கள் எவையாயினும், அவற்றை மறந்து விடும் வழியை (வீடுபேறு) நினைப்பீராக.
    • சேற்றில் தோன்றும் செந்தாமரை மலர்கள் சூரியனது தோற்றத்தைக் கண்டனவாய், செக்கச் செவேல் என்று மலர்ந்தன. அச்சூரியனைக் காட்டிலும் வேறான ஒரு கருஞ்சூரியனைப் போன்ற இராமனைக் கண்டு, சீதையின் ஒளி பொருந்திய முகம் என்னும் தாமரையும் மலர்ந்தது.

குகனை நாவாய் கொணருமாறு இராமன் பணித்தல்

    • பகைவருக்கு அச்சம் தரும் தோளில் வில்லை உடைய இராமன், விடியற்காலையில் செய்ய வேண்டிய கடமைகளை விருப்பத்தோடு செய்து முடித்து, முனிவர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வர அங்கிருந்து புறப்பட்டான். குகனை நோக்கி, “ஐயனே! எம்மைக் கொண்டு செல்வதற்குரிய ஒடத்தை விரைவாகக் கொண்டு வருக” என்று கூறினான்.

இராமனை தன் இருப்பிடத்தில் தங்க குகன் வேண்டுதல்

    • இராமன் இட்ட கட்டளையைக் கேட்ட குகன், கண்ணீரைப் பொழியும் கண்களையுடைவனாக, உயிர் வாடுகின்றவனாய், இராமனின் திருவடிகளைப் பிரிய விரும்பாதவனாய், சீதையோடு இராமனின் திருவடி வணங்கித் தனது எண்ணத்தைச் சொல்லலானான்.
    • “ஒழுங்காகத் தொடுக்கப்பட்ட மாலை அணிந்தவனே! நாங்கள் பொய் வாழ்க்கை பெறாதவர்கள். நாங்கள் வாழும் இடம் காடே ஆகும். நாங்கள் குறையற்றவர்கள். வலிமை பெற்றவர்கள். செய்ய வேண்டிய முறைப்படி நீங்கள் சொல்லும் வேலைகளைச் செய்வோம். எங்களை உங்கள் உறவினராகக் கருதி, எங்கள் ஊரில் நெடுங்காலம் இனிதாகத் தங்கி இருப்பாயாக”
    • “எம்மிடம் தேன் உள்ளது. தினையும் உள்ளது. அவை தேவர்களும் விரும்பி உண்பதற்கு உரியவையாகும். மாமிசமும் இங்கு உள்ளது. உமக்குத் துணையாக நாய் போல் அடிமைப்பட்டவராகிய எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்குக் காடு இருக்கிறது. நீராடுவதற்குக் கங்கை இருக்கிறது. நான் உயிரோடு உள்ளவரை நீ இங்கேயே இனிதாக இருப்பாயாக. இப்போதே எம்மோடு வருக”
    • உடுத்திக் கொள்ள மெல்லிய ஆடை போன்ற தோல்கள் உள்ளன. உண்பதற்குச் சுவையான உணவு வகைகள் உள்ளன. தொங்கவிடப்பட்ட பரண்கள் உள்ளன. தங்குவதற்குச் சிறுகுடிசைகள் உள்ளன. விரைந்து செல்ல கால்கள் உள்ளன. வில்லைப் பிடித்துப் போரிடக் கைகள் உள்ளன. நீ விரும்பும் பொருள் ஒலிக்கும் வானத்தின் மீதுள்ள பொருளாக இருந்தாலும் விரைவாகக் கொண்டு வந்து கொடுப்போம்.
    • “எனக்குப் பணிசெய்வோராகிய வில்லை ஏந்திய வேடர்கள் ஐந்நூறாயிரம் பேர் உள்ளனர். அவர்கள் தேவர்களைக் காட்டிலும் வலிமை பெற்றவர்கள். எங்கள் குடியிருப்பில் நீ ஒரே ஓரு நாள் தங்கினாய் என்றாலும் நாங்கள் கடைத்தேறுவாம். அதைக் காட்டிலும் வேறான ஒரு சிறப்பு எங்களுக்கு இல்லை” என்றான் குகன்.

மீண்டும் வருகையில் குகனிடம் வருவதாக இராமன் இயம்பல்

    • குகனது வேண்டுகோளைக் கேட்ட இராமனும் அவனிடம் கொண்ட மனக் கருணை அதிகமாக வெண்ணிறப் பற்கள் தோன்றச் சிரித்தான். “வீரனே! நாங்கள் அந்தப் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள முனிவரை வழிபாடு செய்து நாங்கள் வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்” என்று கூறினான்.

குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்

    • இராமனின் கருத்தை அறிந்த குகன் விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர் போலும் கண்களை உடைய இராமன், அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிக் கொண்டு பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியைப் பெற்ற சீதையோடும் இலக்குமணனோடும் அப்படகில் இனிதாக ஏறினான்.
    • ஆற்றிலே படகை விரைவகச் செலுத்து என்றான் இராமன். அந்த இராமனுக்கு உண்மையான உயிர் போன்றவனான குகனும், மடங்கும் அலைகளை உடைய கங்கை ஆற்றிலே செலுத்திய பெரிய படகு விசையாகவும், இள அன்னம் நடப்பதைப்போல அழகாகவும் சென்றது. கூரையில் நின்றவர்களான முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரத்தால் நெருப்பிலே பட்ட மெழுகைப் போல மனம் உருகினார்கள்.
    • பாலைப் போன்ற இனிய மொழி பேசும் சீதையும், சூரியனைப் போன்ற இராமனும், சேல் மீன்கள் வாழும் கங்கையின் புனித நீரை அள்ளி எடுத்து, ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருக்க, நீண்ட கோலினால் நீரைத் துழாவிச் செலுத்தப்பட்ட அந்தப் பெரிய படகு, பல கால்களை உடைய பெரிய தண்டு போல விரைவாகச் சென்றது.
    • சந்தனத்தை அணிந்துள்ள மணற்குன்றுகளாகிய பெரிய கொங்கைகளை உடைய சிறந்த கங்காதேவி, ஒளி வீசும் மாணிக்க மணிகள் மின்னுவதால், நறுமணம் வீசும் தாமரை மலரைப் போலச் செந்நிறவொளி பரவப் பெற்ற தெள்ளிய அலைகள் என்னும் நீண்ட கைகளால், தான் ஒருத்தியே அப்படகை ஏந்தி அக்கரையில் சேர்ந்தனள்.

இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்

    • கங்கையின் மறு கரையை அடைந்த இராமன் தன்னிடம் அன்பு கொண்ட குகனை நோக்கி, “சித்திரக் கூடத்துக்குச் செல்லும் வழியைச் சொல்லுக” என்று கேட்டான். குகன் இராமனின் திருவடிகளை வணங்கி, “உத்தமனே! நான் உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது” என்றான்.
    • “நான் உங்களுடன் வரும் பேறு பெறுவாயேயானால், நேர் வழியையும், அதில் குறுக்கிடும் பல கிளை வழிகளையும், அறியும் வல்லமை உடைய நான் தக்கபடி வழிகாட்டுவேன். பழுது நேராமல் நல்லனவாகிய காய்களையும், கனிகளையும் தேனையும் தேடிக் கொண்டு வந்து கொடுப்பேன். ஆங்காங்கே தங்குவதற்குத் தகுந்த குடில் அமைத்துக் கொடுப்பேன். ஒரு நொடிப் பொழுதும் உம்மைப் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.
    • “தீய விலங்குகளின் வகைகளை, நீங்கள் தங்கும் இடத்தைச் சூழ்ந்த எல்லாத் திசைகளிலும் நெருங்க விடாமல் சென்று அவற்றை அழித்து, தூயவனாகிய மான் மயில் போன்றவை வாழும் காட்டிடத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக் காட்டும் வல்லமை பெற்றுள்ளேன். நீங்கள் விரும்பிய பொருளைத் தேடிக் காண்டு வந்து கொடுப்பேன். நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவேன். இரவிலும் வழி அறிந்து நடப்பேன்” என்று குகன் கூறினான்.
    • மற்போரிலும் சிறப்புப் பெற்ற தோள்களை உடையவனே! செல்லும் இடம் மலைப் பகுதியானாலும் அங்கே கவலைக் கிழங்கு முதலியவற்றைத் தோண்டி எடுத்துத் தருவேன். வெகு தொலைவில் உள்ள வழியிலும் சென்று அங்குள்ள நீரைக் கொண்டு வந்து கொடுப்பேன். பலவகையான வில்லைப் பெற்றுள்ளேன். எதற்கும் அஞ்ச மாட்டேன். உங்களுடைய மலர் போன்ற திருவடியை ஒரு போதும் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.
    • “ஒப்பற்ற மார்பை உடையவனே! தாங்கள் சம்மதித்தால் எனது படையை உடன் அழைத்துக் கொண்டு ஒரு பொழுதும் உங்களைப் பிரியாது உங்களுடன் இருப்பேன். என்னால் வெல்ல முடியாத பகைவர்கள் வந்தாலும் உங்களுக்குத் தீங்கு நேரும் முன் நான் இறந்து போவேன். எந்தப் பழியும் பெறாதவனாகிய நான் உம்மோடு வருவேன்” என்று குகன் கூறினான்.

குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்

    • குகன் கூறிவற்றைக் கேட்ட இராமன் “நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குமணன் உனக்குத் தம்பி. அழகிய நெற்றியைப் பெற்ற இச்சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது” என்றான்.
    • “துன்பம் உண்டு என்றால் சுகமும் உண்டு. இப்போது இணைந்திருப்பதற்கும், வனவாசத்திற்குப் பின் இணைந்திருக்கப் போவதற்கும் இடைப்பட்டதான பிரிவு என்னும் துன்பம் உள்ளதே என்று எண்ணாதே. உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன்னே உடன் பிறந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம். இப்போது எல்லையற்ற அன்புடைய உடன்பிறந்தார்களாகிய நாம் ஐவர் ஆகிவிட்மோம்” என்றான் இராமன்.
    • ஒளி வீசும் கூரிய வேலை உடையவனே! நான் காட்டில் வாழும் காலமெல்லாம் உன் தம்பியாகிய இலக்குமணன் என்னுடன் இருக்கப் போகிறான். எனவே துன்புறுத்தும் வகைகள் எவை? ஒன்றும் இல்லை. உன் இருப்பிடத்திற்குச் சென்று நான் இருந்து மக்களைக் காப்பது போலக் காப்பதற்கு உரியவன் நீ! வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்ப வடக்கு நோக்கி வரும் அந்த நாளில் உன்னிடம் உறுதியாக வருவேன். நான் சொன்ன சொல்லைத் தவற மாட்டேன்”
    • உன் தம்பியாகிய பரதன் அயோத்தியில் உள்ள சுற்றத்தாரைக் காப்பதற்கு ஏற்ற தகுதியோடு இருக்கிறான். நீ என்னுடன் வந்து விட்டால் இங்குள்ள சுற்றத்தாரைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள். நீயே சொல். உன் சுற்றத்தார் என் சுற்றத்தார் அல்லவா? அதனால் அவர்கள் தம்மைக் காப்பாற்றுவார் இல்லாமல் மிகுந்த துன்பத்தை அடைதல் தகுமா? இங்குள்ள என் சுற்றத்தாரை என் கட்டளையை ஏற்று இனிதாகக் காப்பாயாக” என்றான் இராமன்

குகன் விடைபெறுதலும், மூவரும் காட்டிற்குள் செல்லுதலும்

    • இராமன் இட்ட கட்டளையை மீறாதவனும் அவனைப் பிரிவதால் உண்டான துன்பத்திலிருந்து நீங்காதவனும் நோய் கொண்டவன் என்று பிறர் நினைக்குமாறு பிரிவுத் துன்பத்தை உடையவனுமான குகன் இராமனிடம் விடை பெற்றுக் கொண்டான். பின்பு இராமனும் இலக்குமணனும் அழகிய ஆபரணங்களை அணிந்த மயிலைப் போன்ற சீதையோடு அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டில் நெடுந்தூரம் செல்வதற்குரிய வழியிலே நடந்து சென்றார்கள்.
  • குகனின் தோற்றம் குறித்து எழுதுக.
    • குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களைச் செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.
    • அந்தக் குகன் துடி என்னும் பறையை உடையவன். வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன். தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன். இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன். அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.
    • ஊதுகொம்பு, துந்துபி என்னும் பறை, சங்கு, முழங்கும் பேரிகை, பம்பை என்னும் பறை ஆகிய இசைக்கருவிகள் நிறைந்துள்ள படையை உடையவன். இலை வடிவமான அம்புகளை உடையவன். ஓடங்களுக்குத் தலைவன். யானைக் கூட்டத்தைப் போன்று பெரிய சுற்றத்தார்களை உடையவன்.
    • காழகம் (அரைக்கால் சட்டை) என்னும் ஆடை அணிந்தவன். கங்கை ஆற்றின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன். இடுப்பிலிருந்து தொங்கவிட்ட செந்நிறத் தோலை உடையவன். இடுப்பைச் சுற்றிக் கட்டிய, ஓன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்.
    • பற்களைத் தொடுத்தது போன்ற பல அணிகலன்களைப் பூண்டவன். வீரக்கழலை அணிந்தவன். தலை மயிரில் நெற்கதிர்களைச் செருகிக் கொண்டவன். சினம் வெளிப்பட மேலேறி வளைந்த புருவத்தை உடையவன்.
    • பனை மரம் போன்று நீண்டு வளர்ந்துள்ள கைகளை உடையவன். பாறை போன்ற மார்பினை உடையவன். எண்ணெய் பூசப்பட்ட இருளைப் போன்ற கருநிற உடம்பை உடையவன்.
    • தன் இடுப்பில் குருதிக் கறை படிந்த வாளை உடையவன். நஞ்சை உடைய நாகமும் கண்டு நடுங்குகின்ற கொடிய பார்வையை உடையவன். பைத்தியக்காரர் போல் தொடர்பில்லாத பேச்சை உடையவன். இந்திரனின் வச்சிராயுதம் போன்று உறுதியான இடையை உடையவன்.
    • விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் உண்ட புலால் நாற்றம் பொருந்திய வாயை உடையவன். சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத முகத்தினை உடையவன். கோபம் இல்லாதபோதும் கனல் கக்குமாறு பார்ப்பவன். யமனும் அஞ்சும்படி அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன்.
    • சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் பேரலைகள் பெற்ற கங்கை ஆற்றின் அருகில் அமைந்த நகரத்தில் வாழ்பவன்.
  • சீறாப்புராணம் மானுக்குப் பிணை நின்ற படலம் குறித்து விளக்குக.(அல்லது) நபிகள் நாயகம் மானுக்கு உதவிய விதத்தினை விவரி.(அல்லது) மானுக்குப் பிணை நின்ற படலம் குறித்து கட்டுரைக்க.

சீறாப்புராணம்

    • ஆசிரியர் : உமறுப்புலவர்
    • ‘சீறா’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘வாழ்க்கை’ அல்லது ‘வாழ்க்கை வரலாறு’ என்று பொருள். புராணம்’ என்றால் ‘வரலாறு’ என்று பொருள். எனவே, சீறாப்புராணம் என்பது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்’ ஆகும். 
    • மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.

மானுக்குப் பிணை நின்ற படலம்

முகமது நபி மலை வழியே சென்ற காட்சி

    • மேகம் வானில் குடையாக இருந்து நிழல் தருகின்றது. மலர்கள் தேனைச் சிந்துகின்றன. மலையைப் பார்க்கிலும் திண்ணிய தோள்களை உடைய வள்ளல் முகமது நபி அவர்கள் குற்றமற்ற வேதத்தினை பொழிந்து இஸ்லாம் எனும் மார்க்கத்தை வளர்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், மக்கமா நகரத்தின் எல்லையை விட்டு அகன்று தன் சீடர்களுடன் சோலைகள் சூழ்ந்த ஒரு மலை வழியாகச் சென்று கொண்டிருக்கிறார். அவ்வனத்தில் வேடன் ஒருவன் மான் ஒன்றை வலையில் பிடித்து வைத்திருப்பதைக் கண்டு மானை நோக்கிச் சென்றார்.

வேடனின் தோற்றம்

    • வேடன் காட்டடில் திரிகின்ற விலங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தை அறுத்து, கொம்புகளில் வளைத்து, நெருப்பில் சுட்டு உண்டு, தனது உடலை வளர்ப்பதைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவன். காலில் செருப்பையும், தனது இடையில் கந்தைத் துணியையும், தோளில் விலங்குகளைப் பிடிக்கின்ற வலையையும், கையில் பெரிய கோதண்டம் எனும் ஆயுதத்தையும், முதுகில் அச்சத்தைத் தருகின்ற கூரிய அம்பினையும், தோளில் வாளாயுதத்தையும் கொண்டு காட்சி அளித்தான். உடல் முழுவதும் வியர்வையோடு மாமிசம் உண்ணப்பட்ட வாயோடு, கொலை வெறி கொண்ட கண்களோடு தோற்றமளித்தான்.

மானைக் கண்ட நபிகளின் நிலை

    • வேடன் ஒரு மானைக் கோபத்துடன் தன் வலையில் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதைத் தன் கண்களால் கண்டார் நபி பெருமான். செழிப்புற்ற சோலை கொண்ட மலை வழியே சென்ற நபிகள், தேன் சிந்தும் மலர்களைப் பார்க்கவில்லை. மலையில் வீழ்கின்ற அருவிகளைப் பார்க்கவில்லை. நல்ல நிழலைப் பார்க்கவில்லை. ஈச்ச மரங்களின் காய்களையும், அவை மழை போல பொழிவதையும் பார்க்கவில்லை. வேடனால் கட்டுண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த அந்த மானையே பார்த்துக் கொண்டு அதன் அருகே சென்றார்.

நபிகளைக் கண்ட மானின் நிலை

    • கருணை மிகுந்த கண்களும், அழகு பொருந்திய முகமும், கஸ்தூரி மணம் கமழும் உடலும் கொண்டு தம்மை நோக்கி வருவது பரிசுத்தத் தூதராகிய முகமது நபிகள் என்று நிம்மதி அடைந்து, “இறைவனது தூதர் வந்து விட்டார், எனவே இவ்வேடனால் நம் உடலுக்கும் உயிருக்கும் இனி துன்பமில்லை. நம் கன்றையும் மானினத்தோடு சேர்ந்து காணலாம்” என்று தனக்குள் மகிழ்ந்தது.

மானின் துயர் நிலை

    • தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போலத் தனது மடியில் பால் சிந்தியிருக்கவும், கண்களில் நீர் பொழிய உடலில் இருந்து பெருமூச்சு வெளிவர, திரும்புவதற்குக் கூட வழியில்லாமல் காலில் கட்டுண்டு கிடந்த மானின் அருகில் நபிகள் சென்றார்.
    • கொடி போன்ற உடம்பிலும், இலையைப் போன்ற குளம்பிலும் இட்ட சுருக்கினால் வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையையும், அதன் பெருமூச்சையும் கண்ட நபிகள் மானின் அருகே அன்பு சுரக்க நின்றார்.
    • அக்காட்டில் உள்ள மரங்களில் உள்ள மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மரங்கள் கண்ணீர் சிந்துவது போல இருந்தது.
    • மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல, பறவைகள் தத்தம் இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.
    • பறவைகள் கூட்டுக்குள் புகுந்தபோது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசையானது, “முகமது நபி வருவார். மானை மீட்பார். வருந்த வேண்டாம்” என்று கூறுவது போல இருந்தது.
    • மான் தன் துயர் நிலையை நபிகளிடம் கூறியது
    • காட்டில் வேடனால் கட்டுண்டு கிடந்த மான், தன்னருகில் வந்து நின்ற முகமது நபியை நோக்கி, “இறைவனது உண்மையான தூதரே, என் உயிர் போன்ற சுற்றமும், என் கலைமானும், என் கன்றும் ஒன்றாகத் திரண்டு இந்த மலையின் பக்கத்தில் பயமின்றிப் புல் தரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு ஓர் இளங்கன்று வேண்டுமென்று விரும்பியும், நான் கருவுறாததால் வருத்தமடைந்தோம். பின் உங்கள் பெயரைப் போற்றி வணங்கியதால் எனக்குக் கரு உருவாகி வளர்ந்தது. எனக்கும் எனது கலைமானுக்கும் ஓர் இளங்கன்று பிறந்தது. நாங்கள் இன்பக்கடலில் மிதந்தோம். இம்மலையின் பக்கம் துன்பமின்றி வாழ்ந்தோம். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. நாங்கள் மலைச்சாரலில் ஒரு நாள் தழையுண்டு பசி தீர்த்து அச்சமின்றி உலவி வந்தோம். நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்த மலை முகட்டில் இருந்து ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்ட நாங்கள் அச்சமடைந்து ஒவ்வொரு திசைக்கும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம். ஒடிய வேகத்தில் நான் என் கலைமானையும், கன்றையும் காணாது வேறு ஒரு காட்டில் புகுந்தேன்.
    • சென்ற திசை தெரியாது நான் புகுந்த காட்டுக்குள் மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்குச் சுருக்கிட்டான். புலியிடமிருந்து தப்பிச் சிங்கத்தின் வாயில் சிக்கியது போன்ற நிலையில், நான் மனமுடைந்து ஒடுங்கி நின்றேன். நான் சிக்கியதைக் கண்ட வேடன், “என் பசிக்கு உணவு கிடைத்தது” என்று கூறி என்னுடைய நான்கு கால்களையும் உடம்பினையும் ஒரு கயிற்றால் கட்டினான். என்னை இவ்வனத்திற்குள் கொண்டு வந்து இறக்கினான். நெஞ்சில் கவலை கொண்டு நான் தளர்வுடன் இருக்கும்போது நீங்கள் வருவதைக் கண்களால் கண்டு தளர்ச்சி நீங்கினேன்” என்று தான் வேடனிடம் சிக்குண்ட சூழலை நபிகள் பெருமானிடம் விளக்கிக் கூறியது.

நபிகளிடம் மான் விடுத்த வேண்டுகோள்

    • வேடனிடம் சிக்குண்ட மான் நபிகள் நாயகத்திடம், “விலங்கு சாதியாயினும் நான் கூறும் சொற்களைக் கேட்பீராக! நான் இவ்வேடனால் இறப்பதற்கு அஞ்சவில்லை. பிறந்த உயிர்கள் ஓருநாள் இறப்பது நிச்சயம். நான் என் கலைமானுடன் பிரிவில்லாமல் சில நாள் வாழ்ந்தேன். அன்புடன் ஒரு கன்றினையும் ஈன்றேன். இனி நான் எது குறித்து வாழ வேண்டும். மூங்கில் இலைப் பனி நீர் போல இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது. காட்டில் எங்காவது இறவாமல் உம்முடைய முகம் நோக்கி இறப்பதே மேலானது. வரிப்புலியின் முழக்கம் கேட்டு மானினம் சிதறித் தனித்தனியாக ஓடிப் பிரிந்தது. என்னைக் காணாது ஆண்மான் காட்டில் தேடி அலைந்ததோ? அல்லது வரிப்புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என் பிரிவினால் புல்லினை உண்ணாமல் நீரினை அருந்தாமல் கண்ணீர் வழிய நெருப்பில் இட்ட இளந்தளிர் போல உடல் பதைத்து நிற்கும். என் கன்று நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் பிறந்தது. எனது மடியில் சுரந்த பாலும் வழிகின்றது. என் கன்று தன் தந்தையிடம் சேர்ந்ததோ? புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என்னைத் தேடி அலைகின்றதோ? உன்றும் அறியேன். எனக்கு இதுவன்றி வேறு கவலையில்லை.
    • கலிமா என்னும் மூலமந்திரத்தின் வழியாக, அனைவரையும் சுவர்க்கத்தில் புகச் செய்யும் புண்ணியனே! இவ்வேடனின் பசியைத் தீர்க்க விருப்பமாக உள்ளேன். அதற்கு முன் என் கால்களைப் பிணைத்துள்ள பிணைப்பை நீக்கி, என்னைத் தாங்கள் பிணையாக நின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள் விடுவித்தால் நான் என் கலைமானைச் சேர்ந்து அதன் கவலையைப் போக்கி என் நிலையை என் இனத்திற்குச் சொல்லி விட்டு என் கன்றுக்குப் பாலூட்டிவிட்டுச் சில மணி நேரத்தில் திரும்பி விடுவேன்” என்று வேண்டி நின்றது.

நபிகள் பிணையாக இருக்க இசைந்தமை

    • மானின் வேண்டுகோளைக் கேட்ட நபிகள், வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து வரும்வரை நான் இதற்குப் பிணையாக நிற்கிறேன். எனவே இதனை விடுதலை செய்து விடு” என்று கூறினார்.

வேடனின் மறுமொழி

    • நபிகளின் உரையைக் கேட்ட வேடன் சிரித்து, “முட்கள் நிறைந்த காட்டில் முகத்து வியர்வை உள்ளங்கால் வரை நனைய ஓடி எந்த வேட்டையும் கிடைக்கப் பெறாத நிலையில் அம்மானைப் பிடித்துத் தூக்கி வந்தேன். இம்மான் தசையால் என் பசி நீங்கியது என மகிழ்வோடு இருந்தேன். முகமது அவர்களே! நீங்கள் எனக்கு வருத்தம் தரும் சொற்களைக் கூறினீர்கள். இச்சொற்கள் உமக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருத்தமற்றவை. காட்டில் பிடித்த மானை விட்டுவிட்டால் அது மீண்டும் மனிதனிடம் வருவது முன் எங்கும் நடந்தது உண்டோ? அறிவுடையவர்கள் இவ்வாறு பேசுவது உண்டோ? எனவே ஊனம் மிக்க இச்சொல்லைக் கைவிடுக” என்றான்.

நபியின் மறுமொழி

    • வேடனின் சொற்களைக் கேட்ட நபிகள், “குறிப்பிட்டவாறு உன் பசி தீர்க்க இந்த மான் வராவிட்டால் ஒன்றிற்கு இரண்டாக நான் மான்களைத் தருகிறேன்” என்று வேடனிடம் கூறினார். அது கேட்ட வேடன் நபிகளின் மீது நம்பிக்கை வைத்து நபிகளைப் பிணையாக ஏற்றுக் கொண்டு மானை விடுவித்தான்.

கலைமானின் வேண்டுகோளும், பிணைமானின் நேர்மையும்

    • வேடனிடம் இருந்த மீண்ட மான் வேறு ஒரு காட்டில் தன் மான் கூட்டத்தையும், தனது குட்டியையும் ஆண்மானோடு கண்டு மகிழ்ச்சியுற்றது. பின்பு தன் ஆண் மானின் மனத்துன்பத்தை நீக்கி, குட்டியைப் பாலை உண்ணும்படிச் செய்து விட்டு, தன் சுற்றத்தாரிடமும் தன் கலைமானிடமும் தான் வேடனிடம் மாட்டிக் கொண்ட சூழலையும், நபிகள் பெருமான் தனக்காகப் பிணையாக இருக்க இசைந்து தன்னை விடுவித்தமையையும் கூறியது. அதனால் நான் மீண்டும் வேடனிடம் செல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்தது. அதைக் கேட்ட கலைமான், “பகைவர் கையில் இருந்து தப்பி வந்த மான் மீண்டும் கொலைப்பட விரும்பி மனிதர்கள் கையில் அகப்படுதல் உண்டோ?” என்று பெண்மானிடம் கூறியது. 
    • இவ்வேண்டுகோளைக் கேட்ட பெண்மான், கலைமானை நோக்கி, “என்னைப் பிணைத்துக் கட்டி வைத்த வேடனின் மனத்தை மாற்றி, தன்னைப் பிணையாகக் கொண்டு என்னை விடுவித்தவர் இறைவன் நபி பெருமான். என் உயிரை வேடனின் பசிக்குத் தந்து நபியினது பிணையை மீட்க நான் மனம் ஒப்பவில்லை என்றால், நான் சுவர்க்கத்தை இழந்து தீய நரகில் புகுவது மட்டுமின்றி வேறு கதியும் பெருமையும் இழக்க வேண்டியிருக்கும். நபிகள் நாயகம் சொன்ன சொல்லை மாற்றிவிட்டு மறந்திருந்தால் நான் வரிப்புலியின் வாய்ப்பட்டு இறப்பதே தக்கதாகும். எனவே வாழும் விருப்பததைக் கைவிட வேண்டும். முன்பு ஒருநாள் நதியின் வெள்ளத்தில் மான் பிணையொன்று நடக்க, அதன்பின் நபியும் மற்றவரும் நடந்து சென்றனர். அப்போது அறிவில்லாத ஒருவன் நபிகள் சொல்லைக் கேட்காது மாறி நடந்ததால் நதிக்குள் வீழ்ந்து மடிந்தான். இந்த அதிசயத்தை அறியாதவர் யார்? இவற்றையெல்லாம் அறிந்தும், என்னை இங்கே நிறுத்துதல் நன்மையன்று” என்று கூறிக் கன்றுக்குப் பாலூட்டிவிட்டு வேடனிடம் செல்ல எழுந்தது.

மானுடன் கன்றும் செல்ல இசைதல்

    • தன் கூட்டத்தை விட்டு அகன்று செல்ல மான் முற்பட்டபோது கன்றானது முன் வந்து, “உன்னை நீங்கி நான் உயிர் வாழ மாட்டேன். அது சத்தியம்” என்று கூறி பிணையுடன் தானும் செல்ல முடிவு எடுத்தது. அதைக் கண்ட பெண்மானும் இறக்க மனமுவந்து செல்வதால் முடிவில்லாத இன்பம் நமக்கு வந்து சேரும் என்று எண்ணி தன் கன்றோடு காட்டை நோக்கிச் சென்றது.

வேடன் நல்லறிவு பெறல்

    • பெண்மானும் அதன் கன்றும் சேர்ந்து வருவதைக் கண்ட நபிகள் நாயகம் வேடனை அழைத்து, “ஒரு பிணைக்கு இரண்டாக உன்னிடம் வருகின்றன பார்” என்று கூறினார். பெண்மானும் அதன் கன்றும் நபிகள் பாதத்தில் பணிந்து “பாவியாகிய எனக்காக வேடனுக்குத் தங்களையே பிணையாக்கினீர். இப்போது மீட்டருள வேண்டும்” என்றுரைத்தது. இதனைக் கேட்ட முகமது நபி அவற்றின் பண்பினைச் சுட்டிக் காட்டி, “இந்தப் பிணையை விட்டு விட்டு உனது பசியினைச் தீர்த்துக் கொண்டு பெருநகரினை அடைக” என்றார். வேடனும், “நான் வீடு பேறு பெற்றேன். வாழ்ந்தேன்” என்று அவர் பாதத்தில் வீழ்ந்தான். பின்பு, “வேதநாயகரே என்பால் கலிமாவினை ஓதும். நான் வெறும் கானக வேடன். விலங்கை ஒத்தவன். நான் தெளிவடையுமாறு இஸ்லாம் நெறிக்கு உரியவனாக என்னை மாற்றி அருள வேண்டும்” என்று இரு கையாலும் ஏந்தி நின்றி மகிழ்வோடு கூறினான்.
    • முகமது நபிகள் மகிழ்வோடு கலிமா சொல்ல, வேடன் அதனை மனங்கொண்டு ஏற்று இறை நம்பிக்கை வைத்து, அதன்படி நடந்து பெருஞ்செல்வனாகித் தீன் வழியல் நிலையாக நின்றான். மேலும், மானை நோக்கி, “உன்னால் மனித வாழ்வில் பெறக்கூடிய உயர்ந்த கதியினைப் பெற்றேன். பிறவி நோயைப் போக்கினேன். நீயும் பயத்தை விட்டுக் கன்றுடன் உன் கலைமானிடம் சென்று நல்லொழுக்கப்படி வாழ்வாயாக” என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.
  • வேடனின் தோற்றம் குறித்து விவரி.

வேடனின் தோற்றம்

    • வேடன் காட்டடில் திரிகின்ற விலங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தை அறுத்து, கொம்புகளில் வளைத்து, நெருப்பில் சுட்டு உண்டு, தனது உடலை வளர்ப்பதைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவன். காலில் செருப்பையும், தனது இடையில் கந்தைத் துணியையும், தோளில் விலங்குகளைப் பிடிக்கின்ற வலையையும், கையில் பெரிய கோதண்டம் எனும் ஆயுதத்தையும், முதுகில் அச்சத்தைத் தருகின்ற கூரிய அம்பினையும், தோளில் வாளாயுதத்தையும் கொண்டு காட்சி அளித்தான். உடல் முழுவதும் வியர்வையோடு மாமிசம் உண்ணப்பட்ட வாயோடு, கொலை வெறி கொண்ட கண்களோடு தோற்றமளித்தான்.
  • மானின் துயர்நிலை குறித்து எடுத்துரைக்க.

மானின் துயர் நிலை

    • தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போலத் தனது மடியில் பால் சிந்தியிருக்கவும், கண்களில் நீர் பொழிய உடலில் இருந்து பெருமூச்சு வெளிவர, திரும்புவதற்குக் கூட வழியில்லாமல் காலில் கட்டுண்டு கிடந்த மானின் அருகில் நபிகள் சென்றார்.
    • கொடி போன்ற உடம்பிலும், இலையைப் போன்ற குளம்பிலும் இட்ட சுருக்கினால் வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையையும், அதன் பெருமூச்சையும் கண்ட நபிகள் மானின் அருகே அன்பு சுரக்க நின்றார்.
    • அக்காட்டில் உள்ள மரங்களில் உள்ள மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மரங்கள் கண்ணீர் சிந்துவது போல இருந்தது.
    • மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல, பறவைகள் தத்தம் இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.
    • பறவைகள் கூட்டுக்குள் புகுந்தபோது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசையானது, “முகமது நபி வருவார். மானை மீட்பார். வருந்த வேண்டாம்” என்று கூறுவது போல இருந்தது.
    • மான் தன் துயர் நிலையை நபிகளிடம் கூறியது
    • காட்டில் வேடனால் கட்டுண்டு கிடந்த மான், தன்னருகில் வந்து நின்ற முகமது நபியை நோக்கி, “இறைவனது உண்மையான தூதரே, என் உயிர் போன்ற சுற்றமும், என் கலைமானும், என் கன்றும் ஒன்றாகத் திரண்டு இந்த மலையின் பக்கத்தில் பயமின்றிப் புல் தரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு ஓர் இளங்கன்று வேண்டுமென்று விரும்பியும், நான் கருவுறாததால் வருத்தமடைந்தோம். பின் உங்கள் பெயரைப் போற்றி வணங்கியதால் எனக்குக் கரு உருவாகி வளர்ந்தது. எனக்கும் எனது கலைமானுக்கும் ஓர் இளங்கன்று பிறந்தது. நாங்கள் இன்பக்கடலில் மிதந்தோம். இம்மலையின் பக்கம் துன்பமின்றி வாழ்ந்தோம். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. நாங்கள் மலைச்சாரலில் ஒரு நாள் தழையுண்டு பசி தீர்த்து அச்சமின்றி உலவி வந்தோம். நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்த மலை முகட்டில் இருந்து ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்ட நாங்கள் அச்சமடைந்து ஒவ்வொரு திசைக்கும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம். ஒடிய வேகத்தில் நான் என் கலைமானையும், கன்றையும் காணாது வேறு ஒரு காட்டில் புகுந்தேன்.
    • சென்ற திசை தெரியாது நான் புகுந்த காட்டுக்குள் மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்குச் சுருக்கிட்டான். புலியிடமிருந்து தப்பிச் சிங்கத்தின் வாயில் சிக்கியது போன்ற நிலையில், நான் மனமுடைந்து ஒடுங்கி நின்றேன். நான் சிக்கியதைக் கண்ட வேடன், “என் பசிக்கு உணவு கிடைத்தது” என்று கூறி என்னுடைய நான்கு கால்களையும் உடம்பினையும் ஒரு கயிற்றால் கட்டினான். என்னை இவ்வனத்திற்குள் கொண்டு வந்து இறக்கினான். நெஞ்சில் கவலை கொண்டு நான் தளர்வுடன் இருக்கும்போது நீங்கள் வருவதைக் கண்களால் கண்டு தளர்ச்சி நீங்கினேன்” என்று தான் வேடனிடம் சிக்குண்ட சூழலை நபிகள் பெருமானிடம் விளக்கிக் கூறியது.
  • இயேசுகாவியம் ஊதாரிப்பிள்ளை குறித்து கட்டுரைக்க. (அல்லது) இயேசுகாவியத்தால் நீ அறிந்த செய்திகளைத் தொகுத்துரைக்க.(அல்லது) ஊதாரிப்பிள்ளை கதையை விளக்குக.

இயேசு காவியம் 

    • இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.
    • இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.

ஊதாரிப்பிள்ளை

தந்தையும் இரு மகன்களும்

    • தந்தை ஒருவர் தன் இரு மகன்களுடன், ஊர் முழுவதும் செல்வாக்குடனும், செல்வத்துடனும் வாழ்ந்து வந்தார். மூத்த மகன் குணத்தில் சிறந்தவனாக, தந்தையின் சொல்லை மதித்து நடந்தான். இளைய மகன் தந்தை சொல்லைக் கேட்காமல் ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிந்தான். ஒருநாள் இளைய மகன் தன் தந்தையிடம் தன் சொத்தைப் பிரித்துத் தருமாறு வற்புறுத்தினான். வேறு வழியின்றி தந்தை சொத்துக்களைப் பிரித்து அவனுக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுத்தார். தன் பிள்ளையின் போக்கைக் கண்டு மனம் வருந்தினார். இருப்பினும் இந்தச் செல்வங்களைக் கொண்டு தன் பிள்ளை நன்றாக வாழ்வான் என்று நம்பினார்.

இளைய மகனின் செயல்

    • ஆனால் இளைய மகன் தன் சொத்துக்களைக் குறைந்த விலையில் விற்று விட்டு, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று மது, மாது என தன் மனம் போன போக்கில் வாழ்ந்தான். பொருள் அனைத்தும் இழந்தான். அந்த நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தில் சிக்கிக்கொண்டு மீள வழி தெரியாமல் மாட்டிக் கொண்டான். தன் நாட்டைச் சேர்ந்த மனிதர்களைச் சந்தித்து ஒரு வேலை தேடி அலைந்தான். ஒருவன் பன்றிகளை மேய்க்கும் வேலை கொடுத்தான். அந்தப் பன்றிகளுக்குக் கொடுக்கும் உணவுதான் அவனுக்கும் கிடைத்தது. அவ்வேளையில் தன் தந்தையின் நினைவால் வாடினான். தன் தவறை உணர்ந்தான். தன் தந்தையைத் தேடிச் சென்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, “என் தந்தையே உனக்கு எதிராக நின்றேன். எத்தனையோ ஊழியர்கள் இங்கே சுகமாக வாழ, அவர்களுள் ஒரு ஊழியனாக நான் இங்கேயே இருக்கின்றேன். உன் கூலிகளில் ஒருவனாக என்னை ஏற்பாய். ஏனெனில் உன் பிள்ளை என்று சொல்ல எனக்குத் தகுதியில்லை” என்று கூற வேண்டும் என்று எண்ணியவனாகத் தன் தந்தையிடம் சென்றான்.

மனம் திருந்திய இளைய மகன்

    • தன் மகன் எப்போதாவது திருந்தி தம்மிடமே வந்து விடுவான் என்று காத்திருந்த தந்தை, தன் மகனைக் கண்டதும், தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். “நீ எப்போது வருவாய் என்றுதான் நான் காத்திருந்தேன். இப்படி இளைத்திருக்கிறாயே” என்று கூறித் தன் மகனைத் தேற்றினார். மேலும் “நீ தப்பான பிள்ளையல்ல. காலம் செய்த சதி இது. ஆகவே வருந்தாதே” என்று கூறினார். பின்பு, “யாரங்கே பணியாட்களே! பட்டாடை நகைகள், அலங்கார வகைகள் யாவற்றையும் கொண்டு வந்து இவனுக்கு அணிவியுங்கள்” என்று ஆணையிட்டார். தன் மகனுக்கு கன்றின் கறிகளுடன் விருந்து படையுங்கள் என்று கூறினார். அன்று மாலை மூத்த மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடே நடனங்களும் பாடல்களுமாக விழாக்கோலம் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தான். தன் பணியாட்களிடம் கேட்க, அவர்கள், “தங்கள் தம்பி திரும்ப வந்துள்ளார். அவனின் வரவை உங்கள் தந்தை கொண்டாடுகின்றார்” என்று கூறினர். அதைக் கேட்ட மகன் மிகுந்த கோபம் கொண்டு வீட்டின் வெளியிலேயே நின்றான். தன்னைத் தேடி வந்த தந்தையிடம், “சாத்திரங்களை மறந்தவனுக்குத் தடபுடலாக வரவேற்பு கொடுக்கின்றீர். உங்களுடன் இருந்தவரை இதுபோன்று எனக்காக எந்த விருந்தும், விழாவும் நீங்கள் கொண்டாடியதில்லை” என்று கண்கலங்கிக் கூறினான். அதற்குத் தந்தை, “மகனே! நீ எப்போதும் என்னுடன் இருப்பவன். என் செல்வம் யாவும் எப்போதும் உனக்கே உரிமையாகும். உன் தம்பி இறந்து இப்போது உயிர் பெற்று வந்திருக்கின்றான். அவன் மறுபிறவி எடுத்ததற்காகவே இந்த ஏற்பாடுகள்” என்று கூறி சமாதானம் செய்கின்றார்.
wpChatIcon
error: Content is protected !!