சங்க இலக்கியம் – குறிப்புகள்

  • கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி”- புறப்பொருள் வெண்பாமாலை (ஐயனாரிதனார்)
  • சங்கத்தால் ஆய்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் சங்க இலக்கியம் ஆகும்.
  • சங்க இலக்கியம் வேறுபெயர் – திணை இலக்கியம், பதினெண்மேற் கணக்கு, பாட்டுத்தொகை (பாட்டு- பத்துப்பாட்டு, தொகை- எட்டுத்தொகை)

எட்டுத்தொகை 

    • அகம் சார்ந்த நூல்கள்
      1. நற்றிணை
      2. குறுந்தொகை
      3. ஐங்குறுநூறு
      4. கலித்தொகை
      5. அகநானூறு
    • புறம் சார்ந்த நூல்கள்
      1. புறநானூறு
      2. பதிற்றுப்பத்து
    • அகமும் புறமும்  சார்ந்த நூல்
      1. பரிபாடல்

அகம் சார்ந்த நூல்கள்

நற்றிணை

  • நல்ல திணை 
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 9-12
  • பாடல் எண்ணிக்கை: 400
  • பாடிய புலவர்கள்:175
  • வேறுபெயர்: நற்றிணை நானூறு
  • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • நற்றிணையில் இடம்பெற்றுள்ள இசைக்கருவிகள் – முழவு, முரசு, தண்ணுமை, கிணைப்பாறை, சிறுபறை, குழல் 
  • அறவோன்- மருத்துவன்
  • கணியர் – சோதிடம் பார்ப்பவர்
  • படிவ மகளிர்– தவம் செய்யும் பெண்கள்

குறுந்தொகை

  • நல்ல குறுந்தொகை
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 4 – 8
  • பாடல் எண்ணிக்கை: 400
  • தொகுத்தவர்: பூரிக்கோ
  • பெண்பாற் புலவர்கள்: அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஔவையார், காக்கைப்பாடினியார்
  • குறவன்- நிலத்தை உழுது  தினை விதைப்பவன்
  • சேணான்- உயர்வான பரணின் மீது இருப்பவர்
  • கோடியர்– கூத்தர்
  • அணிகள்: தலையணிகள், காசுமாலைகள், பூங்குழை, மின்னிழை, சேயிழை, மாணிழை
  • ஆரியக்கூத்தர்- மூங்கிலில் கட்டிய கயிற்றின் மேல் ஆடுபவர்.
  • விழா நிறைந்த ஊர் – சாறு கொள் ஊர்
  • நாழிகைக் கணக்கர் – இரவில் தூங்காது காலக்கணக்கைக்  கூறுபவர்.
  • கடப்பாட்டளன் – தன் பொருள் பலருக்கும் பயன்பட வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்டவன்.

ஐங்குறுநூறு 

  • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 3-6
  • பாடல் எண்ணிக்கை: 500
  • பாடிய புலவர்கள்: 5
  • தொகுத்தவர்: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
  • தொகுப்பித்தவர்: யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • நொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்தது.
  • சொல்லாட்சியால் பெயர் வைத்தல் – வேட்கைப்பத்து, வேழப்பத்து, களவன்பத்து
  • போரில் இறந்த வீரர்களுக்கு கல்நட்டு அக்கல்லில் வீரரின் உருவத்தையும் பெயரையும் எழுதி, எழுத்துரை ‘நடுகல்’ என்னும் பெயருடன் வழிப்பட்டனர். 

கலித்தொகை

  • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: அகம்
  • பாடல் எண்ணிக்கை: 150
    • பாலை- 35 பாடல்கள்
    • குறிஞ்சி- 29 பாடல்கள்
    • மருதம்- 35 பாடல்கள்
    • முல்லை- 17 பாடல்கள்
    • நெய்தல்- 37 பாடல்கள்
  • பாடிய புலவர்கள்: 5
  • ‘ஏறுதழுவுதல்’ குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
  • போர்க்களத்தில் வெற்றிப் பெற்ற பின் ‘துணங்கை கூத்து’ ஆடுவது குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
  • மகாபாரதம், இராமாயண காப்பிய செய்திகள் இடம்பெற்றுள்ளது. 
  •  
  • உரை- நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

அகநானூறு

  • அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 13-31
  • பாடல் எண்ணிக்கை: 400
  • பாடிய புலவர்கள்: 145
  • தொகுத்தவர்: மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திர சன்மர்
  • தொகுப்பித்தவர்: பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
  • வேறுபெயர்: நெடுந்தொகை
  • நூல் அமைப்பு:
    • களிற்றியானை நிரை- 1-120
    • மணிமிடைப்பவளம்-121- 300
    • நித்திலக் கோவை – 301- 400
  • பாடல் வைப்புமுறை
    • பாலைத்திணை- 1,3,5,7,… ஒற்றைப்படை எண்ணாக வருபவை 
    • குறிஞ்சித்திணை – 2,8,12,18….
    • முல்லைத்திணை – 4,14,24,…
    • மருதத்திணை- 6,16,26,…..
    • நெய்தல் திணை – 10,20,30,……
  • குடவோலை முறை பற்றி குறிப்பிடுகிறது.
  • காவிரிக் கரையில் பங்குனி விழா நடைபெறுவது பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

புறம் சார்ந்த நூல்கள்

புறநானூறு

  • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: புறம் 
  • பாடல் எண்ணிக்கை – 400
  • வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு
  • புறநானூறு தோன்றிய காலம் தமிழகத்தின் வீரயுகம் என்றும் தமிழகத்தின் பொற்காலம் என்றும் அழைக்கபடுகிறது.
  • பண்டைய காலத்தில் வாழ்ந்த பேரரசர்கள்,சிற்றரசர்கள், வீரர்கள் பற்றிய செய்திகளையும் வழிபாட்டு முறைகள், மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பற்றி செய்திகளையும் தருவதால் தமிழரின் வரலாற்றுப் பெட்டகம் என்று அழைக்கபடுகிறது.
  • கடையேழு வள்ளல்கள்
    • பாரி-பறம்பு மலை
    • பேகன்-பழனி மலை
    • ஓரி- கொல்லிமலை
    • காரி- மலையமான் நாடு
    • ஆய்-பொதியமலை
    • அதியன்-தகடூர்
    • நள்ளி- தோட்டி மலை

பதிற்றுப்பத்து

  • பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: புறம் 
  • பாடல் எண்ணிக்கை- 100 (கிடைத்தவை 80 )
  • பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
  • இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.
  • ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை,வண்ணம், தூக்கு, பெயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
  • திருமணத்தின் போது அருந்ததி என்னும் விண்மீனைப் பார்க்கும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறது.
  • நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.

அகமும் புறமும் சார்ந்த நூல்

பரிபாடல்

  • பரிந்து செல்லும் ஓசையுடைய பாடல்களை கொண்டுள்ளதால் பரிபாடல் எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்- அகம் புறம் சார்ந்தது.
  • பாடல் எண்ணிக்கை-70(கிடைத்தவை 22)
    • திருமால்-6
    • முருகன்-8
    • வையை-8
  • அடிவரையறை – 25-40
  • பாடிய புலவர்கள்- 13
  • வல்லோன்- ஓவியம் வரைபவர்
  • உரை- பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.
  • அகலிகை, மன்மதன் ஓவியங்கள் திருபரங்குன்றத்தில் இடம்பெற்றிருந்ததை பரிபாடல் மூலம் அறிய முடிகிறது.

பத்துப்பாட்டு

  • திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது.
  • ஆற்றுப்படை நூல்கள்
    • திருமுருகாற்றுப்படைநக்கீரர்
    • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்
    • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
    • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
    • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்
  • அகம் சார்ந்த நூல்கள்
    • முல்லைப்பாட்டு : நப்பூதனார்
    • குறிஞ்சிப்பாட்டு – கபிலர்
    • பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  • புறம் சார்ந்த நூல்கள்
    • திருமுருகாற்றுப்படைநக்கீரர்
    • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்
    • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
    • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
    • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்
    • மதுரைக்காஞ்சி: மாங்குடி மருதனார்
  • அகம் புறம் சார்ந்த நூல்
    • நெடுநல்வாடை
  • பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது.

திருமுருகாற்றுப்படை

  • பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.
  • இது 317 அடிகள் கொண்டது. 
  • முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
  • இயற்றியவர் நக்கீரர். 
  •  இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

பொருநராற்றுப்படை

  • சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.
  • இயற்றியவர் – முடத்தாமக் கண்ணியார் 
  • இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
  • போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பெரும்பாணாற்றுப் படை

  • இயற்றியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
  • பாட்டுடைத் தலைவன் – காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.
  •  500 அடிகள் கொண்டது. 
  • பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.

சிறுபாணாற்றுப் படை

  • இயற்றியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
  • பாட்டுடைத் தலைவன் -ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்
  • இது 269 அடிகள் கொண்டது.
  • சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.

மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)

  • இயற்றியவர் – இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
  • பாட்டுடைத் தலைவன் – நன்னன் சேய் நன்னன்
  •  583 அடிகள் கொண்டது.
  • பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.
  • மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

மதுரைக் காஞ்சி

  • பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது.
  • இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றியது.
  • மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சி – நிலையாமை).

குறிஞ்சிப் பாட்டு

  • இயற்றியவர்  – கபிலர்
  • இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.
  • குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.
  • பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.
  • இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. 

முல்லைப் பாட்டு

  • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.

  • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.

  • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.

  • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.

பட்டினப்பாலை

  • பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது  பொருள். 
  • 301 அடிகள் கொண்டது.
  • இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.
  • இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.
  • இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
  • பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.
  • அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.

நெடுநல்வாடை

  • இது 188 அடிகள் கொண்டது.

  • இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

  • காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.



மூன்றாம் பருவம் – ஒளி/ஒலிப்பதிவுகள்

அலகு-1 ஒளிப்பதிவு

அலகு 1 ஒலிப்பதிவுகள்

 

  • தொல் பழங்கால வரலாறும் சங்க கால வரலாறும்

  • அகழ்வாராய்ச்சி

  • திணை வாழ்வியல்

  • களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை , எண்வகை மணங்கள்

  • உணவு , ஐவகை நிலங்களில் உணவு வகைகள்

  • அணிகலன்கள், கலை, விளையாட்டு

  • முச்சங்கங்கள், சங்க கால ஆட்சி முறை

  • அயல்நாட்டு வாணிகத் தொடர்பு

 

அலகு -2 ஒளிப்பதிவு
அலகு – 2 ஒலிப்பதிவு
  • சோழர் வரலாறு

 

  • சேரர் வரலாறு

 

  • பாண்டியர் வரலாறு

 

  • பல்லவர் வரலாறு

 

  • நாயக்கர் வரலாறு

 

  • முகமதியர் வரலாறு

 

அலகு - 3 - ஒளிப்பதிவு
அலகு – 3 ஒலிப்பதிவு
  • ஐரோப்பியர் வரலாறு

 

  • டச்சுக்காரர்கள்

 

  • பிரெஞ்சுக்காரர்

 

  • ஆங்கிலேயர் 

 

  • கர்நாடகப் போர்

 

  • பாளையக்காரர்கள்

 

  • விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு

 

அலகு - 4 ஒளிப்பதிவு
அலகு – 4 ஒலிப்பதிவு
  • விடுதலைக்குப் பின் தமிழகத்தின் வளர்ச்சி

 

  • மொழிப்போராட்டம்

 

  • கல்வி வளர்ச்சி

 

  • சமூக வளர்ச்சி

 

  • சமூக நலத்திட்டங்கள்

 

  • தொழில் வளர்ச்சி

 

  • இணைய வளர்ச்சி
அலகு- 5 மொழிப்பயிற்சி

சோழர்கள் வரலாறு

சோழர்கள்

  • சோழர்களின் தலைநகரம் : உறையூர், பூம்புகார்
  • கொடி: புலிக்கொடி
  • அடையாளப் பூ: ஆத்தி
  • பிற்கால சோழப் பேரரசின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்- விசயாலய சோழன்

விசயாலய சோழன்(846-881)

  • விசயாலய சோழன் பற்றியும் அவர் பாண்டியருடன் ஆற்றிய போர் பற்றியும் அன்பில் செப்பேடு, ஆனைமங்கலச் செப்பேடு, திருவாலங்காட்டுச் செப்பேடு ஆகியவற்றில் குறிப்புகள் உள்ளன. 

முதல் இராசராசன் (கி.பி. 985-1014)

  • இயற்பெயர்: அருண்மொழிவர்மன்
  • பெற்றோர்: இரண்டாம் பராந்தகன் (சுந்தரசோழன் ) – வானவன்மாதேவி
  • பட்டம்: இராசகேசரி

சிறப்புகள்

  • மெய்க்கீர்த்தியை அறிமுகப்படுத்தியவர்.
    • “திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்”
  • தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர்.

போர்கள்

  • சேர பாண்டியருடன் செய்த போரில் வெற்றி பெற்றார்.
  • கொல்லமும் குடகும் கங்கர் நாடும் கைப்பற்றினார். 
  • இலங்கை மீது படையெடுத்து சென்று வெற்றி கண்டார்.

சமய ஈடுபாடு: சைவ சமய ஈடுபாடு கொண்டவர்.  இவருடைய புனைப்பெயர் சிவபாதசேகரன் என்பதாகும்.

முதல் இராசேந்திரன் (கி.பி. 1012-1044)

  • இயற்பெயர்: மதுராந்தகன்
  • தந்தை: முதலாம் இராசராசன்
  • மெய்கீர்த்தி: “திருமன்னி வளர இருநில மடந்தையும்”
  • பட்டம் : கங்கை கொண்டான், கடாரம் கொண்டான்
  • போர்கள்:
    • மேலை சாளுக்கியருடன் போர்
    • இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனுடன் போர்
    • சேரபாண்டியருடன் போர்
  • சமயப்பணி: கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் சிவன் கோவிலைக் கட்டியுள்ளார்.
  • சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டுவித்தான். 

முதலாம் குலோத்துங்க சோழன்(கி.பி. 1070-1122)

  • கீழை சாளுக்கியரின் வழித்தோன்றல்
  • சிறப்புப்பெயர்
    • “சுங்கம் தவிர்த்த சோழன்” 
    • திருநீற்றுச்சோழன்
  • கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத்தலைவன் ஆவார்.
  • மெய்கீர்த்தி:
    • திருமன்னி விளங்கும்”
    • “புகழ்மாது விளங்க”
    • “பூமருவிய திருமடந்தை”
    • “திருமகள் செயமகள்”
    • “பூமேல் அரிவை”
    • “பூமியும் திருவும்”
    • “புகழ்சூழ்ந்த புணரி”
  • போர்கள்:
    • மேலை சாளுக்கியருடன் போர்
    • பாண்டிய நாட்டுடன் போர்
    • சேரருடன் செய்த போர்
    • கலிங்கத்துடன் போர்
  • சமயப்பணி: இவர் சிவபெருமான் மீது கொண்ட பக்தியால் “திருநீற்றுச்சோழன்” என்று அழைக்கப்பட்டார்.

சோழர்களின் நிர்வாக முறை

  • முதலாம் இராசராசனது ஆட்சி காலத்தில் சோழப்பேரரசு 9 மண்டலங்களாகப் பிரிந்து இருந்தது.
  • அந்தணர்கள் வழ்ந்த ஊர் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது.
  • அவ்வூரில் இருந்த அவை ‘பிரமதேய  அவை என்று அழைக்கப்பட்டது.
  • வாரியங்களின் கடமைகள்
    • சம்வத்சர வாரியம் – வழக்குகளுக்குத் தீர்ப்பளித்தல், அறநிலையங்களைப் பாதுகாத்தல்
    • ஏரி வாரியம் – விளைநிலங்களைப் பாதுகாத்தல், விளைவுக்கு நீர்ப்பாய்ச்சுதல்
    • தோட்ட வாரியம் – புன்செய் நிலங்களைப் பாதுகாத்தல்
    • பொன் வாரியம் – பொன் நாணயங்களை ஆராய்தல்

இரண்டாம் பருவம் அலகு 2 வினா விடை

அலகு- 1 : தமிழ் இலக்கிய வரலாறு அறிமுகம்

குறு வினா-விடை

  • குறவஞ்சி பெயர்க்காரணம் தருக.

       குற+வஞ்சி, குறவர் குளத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளைத் தரும். இவ்விலக்கியத்தில் குறத்தி குறி கூறுதல், குறத்தியின் செயல்கள் இடம்பெறுவதால் இப்பெயர் பெற்றது.

  • குறவஞ்சி குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: குற+வஞ்சி, குறவர் குளத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளைத் தரும். இவ்விலக்கியத்தில் குறத்தி குறி கூறுதல், குறத்தியின் செயல்கள் இடம்பெறுவதால் இப்பெயர் பெற்றது.
    • காலம்: நாயக்கர் காலம்
    • வேறு பெயர்கள்: குறம், குறவஞ்சி நாடகம், குறத்திப் பாட்டு
    • முதல் குறவஞ்சி நூல்: திருக்குற்றாலக் குறவஞ்சி
  • கலம்பகம் பெயர்க்காரணம் கூறுக.
    • கலம்பகம் என்பதற்கு கலவை என்று பொருள். (கலம்-12, பகம்-6 = 18 உறுப்புகள் உடையது). பலவகையான ஓசை நயமுடைய பாக்களும் இனங்களும் உறுப்புகளும் பயின்றுவர பாடப்படுவது கலம்பகம் ஆகும்.
  • கலம்பகம் குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: கலம்பகம் என்பதற்கு கலவை என்று பொருள். (கலம்-12, பகம்-6 = 18 உறுப்புகள் உடையது). பலவகையான ஓசை நயமுடைய பாக்களும் இனங்களும் உறுப்புகளும் பயின்றுவர பாடப்படுவது கலம்பகம் ஆகும்.
    • கலம்பக உறுப்புகள்: புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல்.
  • கைக்கிளை என்றால் என்ன?
    • தலைவன் தலைவியை முதன்முறை கண்டு அவளறியாமல் அவளைக் காதலிப்பதாகச் செய்யுள் செய்வது.
  • உலா குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்:பாட்டுடைத் தலைவன் உலா வருவதாகப் பாடப்படும் இலக்கிய வகை ஆதலால், இதற்கு உலா இலக்கியம் என்ற பெயர் பெற்றது.
    • வேறு பெயர்கள்: பவனி, பெண்பாற் கைக்கிளை, உலாப்புறம், உலாமாலை, புற உலா
    • முதல் உலா நூல்  திருக்கைலாய ஞான உலா
  • பரணி பெயர்க்காரணம் தருக.
    • போர்க்களத்தில் பாடும் புலவன் வாள், வேல் முதலிய படைக் கருவிகளால் அமைக்கப்பட்ட பரண் மீது அமர்ந்து பாடுவர்.  வீரர்கள் யானை மீது அமர்ந்து வில் எறிந்தும், வாள் எறிந்தும் பகைவார்களை விரட்டுதலைக் கருவாகக் கொண்டு படைக்கப் பெறும் இலக்கியம் என்பதால் பரணி எனப் பெயர் பெற்றது.
    • பரணி என்பது நட்சத்திரத்தின் பெயர். இது காளியையும் எமனையும் தெய்வமாகக் கொண்ட நாள். காளியைத் தெய்வமாகக் கொண்டு பாடப்படுவதால் இப்பெயர் பெற்றது.
  • முதல் பரணி நூல் எது?
    • கலிங்கத்துப்பரணி
  • கலிங்கத்துப்பரணி குறிப்பு வரைக.
    • முதல் குலோத்துங்கன் அனுப்பிய படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் கலிங்க வேந்தன் அனந்தவர்ம சோடங்கனை வென்றதைப் பாடியது.
    • எழுதியவர்: செயங்கொண்டர்
    • “பரணிக்கோர் செயங்கொண்டர்” என்று புகழப்படுகிறார்.

 

  • பள்ளு பெயர்க்காரணம் தருக.
    • பெயர்க்காரணம்: பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம் என்பதால் பள்ளு என்ற பெயர் பெற்றது.
  • பள்ளு குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம் என்பதால் பள்ளு என்ற பெயர் பெற்றது.
    • வேறு பெயர்கள்: உழத்திப்பாட்டு, பள்ளேசல், பள்ளு நாடகம், பள்ளு மூவகைத்தமிழ், பள்ளிசை
    • முதல் பள்ளு நூல்: முக்கூடற்பள்ளு

 

  •  பிள்ளைத்தமிழ் குறிப்பு வரைக.

    • பெயர்க்காரணம்: பாட்டுடைத்தலைவனையோ அல்லது தலைவியையோ பிள்ளைப் பருவமாக நினைத்து பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும்.
    • வேறுபெயர்: பிள்ளைப் பாட்டு, பிள்ளைக் கவி
    • ஆண்பாற் பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்:காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வருகை,அம்புலி,சிற்றில்,சிறுபறை,சிறுதேர்
    • பெண்பாற் பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்:காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வருகை,அம்புலி,நீராடல்,அம்மானை,ஊசல்

 

  • தூது குறிப்பு வரைக.
    • பெயர்க்காரணம்: ஒருவரிடம் சென்று ஒரு செய்தியைச் சொல்லி வருவதற்கும், ஒரு பொருளை வாங்கி வருவதற்கும், பிரிந்த இதயங்களை ஒன்று சேர்ப்பதற்கும் மற்றொருவரை அனுப்புவது தூது ஆகும்.
    • வகைகள்: அகத்தூது, புறத்தூது
    • முதல் தூது நூல்: நெஞ்சுவிடு தூது

 

  • அந்தாதி குறிப்பு வரைக.
    • அந்தம் முதலாகத் தொடுக்கப்படுவது அந்தாதி ஆகும்.
    • ஒரு செய்யுளின் ஈற்றில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி இவற்றில் ஒன்று அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும் படி பாடுவது அந்ததியாகும்.
    • முதல் அந்தாதி நூல்: அற்புதத் திருவந்தாதி

 

  • முதல் தனிப்பாடல் திரட்டை வெளியிட்டவர் யார்?
    • பொன்னுசாமித் தேவர்

 

  • பாரதியார் குறிப்பு வரைக.
    • இயற்பெயர் : சுப்பிரமணியன்
    • பெற்றோர் : சின்னச்சாமி ஐயர – இலக்குமியம்மை
    • முப்பெரும் பாடல்கள் :கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் 
    • புனைபெயர்கள்: ஷெல்லிதாசன், காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி

 

  • பாரதிதாசன் குறிப்பு வரைக.
    • இயற்பெயர் : சுப்புரத்தினம்
    • நூல்கள்: பாண்டியன் பரிசு, குறிஞ்சித்திட்டு, குடும்பவிளக்கு, தமிழச்சியின் கத்தி, எதிர்பாராத முத்தம், இருண்டவீடு, அழகின் சிரிப்பு தமிழியக்கம்

 

  • நாமக்கல் கவிஞர் குறிப்பு வரைக.
    • இயற்பெயர் : வே. இராமலிங்கம் பிள்ளை
    • பெற்றோர் : வேங்கடராமபிள்ளை – அம்மணியம்மாள் 
    • காந்தியக் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
    • இலக்கிய இன்பம், தமிழன் இதயம் போன்ற படைப்புகளும், அவனும் அவளும் என்னும் காப்பியமும், ‘மலைக்கள்ளன்’ என்ற புதினத்தையும் படைத்துள்ளார். ‘என் கதை’ என்ற இவரது தன் வரலாறு நூலாகும்.

 

  • ஹைக்கூ என்றால் என்ன?
    • ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளே தமிழ் ஹைக்கூக்களுக்குக் காரணம் எனலாம்.
    • ஹைக்கூ மூன்று அடிகளில் அமைய வேண்டும்.
    • ஹைக்கூ கவிதைகளை வாமனக் கவிதை, துளிப்பா, மினிப்பா. குக்கூ. எனப் பல பெயர்களிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது.
  • தமிழில் வெளியான முதல் சிறுகதை எது?
    • குளத்தங்கரை அரசமரம்

 

  • கலிங்கத்துப் பரணி
    • பரணி நூல்களில் காலத்தால் முற்பட்டது இந்நூல். 
    • முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான். இந்த வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதே கலிங்கத்துப் பரணி ஆகும்.
    • சிறப்பு: “தென்தமிழ்த் தெய்வப்பரணி”
    • கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் செயங்கொண்டார் ஆவார்.

 

    • திருக்குற்றாலக் குறவஞ்சி குறித்து எழுதுக.
  • அஷ்டப்பிரபந்தம் என்று அழைக்கப்படும் நூல்கள் யாவை?

    • திருவரங்கக் கலம்பகம் 
    • திருவரங்கத்துமாலை
    • திருவரங்கத்தந்தாதி
    • சீரங்கநாயகர் ஊசல்திருநாமம்
    • திருவேங்கடமாலை
    • திருவேங்கடத்தந்தாதி
    • அழகர் அந்தாதி
    • நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி

 

  • ஆற்றில் வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள் யாவை?
    •  தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.
    • தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது.
    • நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது.
    • கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன.
    • நண்டுகள் தம் வளைகளுள் மழைநீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன.
    • மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன.

 

  • பதினாறு செல்வங்களில் எவையேனும் நான்கினை எழுதுக.
    •  கல்வி
    • நீண்ட ஆயுள்
    • உண்மையான நண்பர்கள்
    • நிறைந்த செல்வங்கள்
    • என்றும் குறையாத புகழ்
    • வாக்கு மாறாதிருத்தல்

எட்டுத்தொகை

அகம் சார்ந்த நூல்கள்

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • ஐந்குறுநூறு
  • கலித்தொகை
  • அகநானூறு

புறம் சார்ந்த நூல்கள்

  • புறநானூறு
  • பதிற்றுப்பத்து

அகமும் புறமும் சார்ந்த நூல்

  • பரிபாடல்

முக்கிய ​குறிப்புகள்

  • முழுவதும் கிடைத்தவை: நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு
  • நானூறு பாடல்களைக் கொண்ட நூல்கள் : நற்றிணை, குறுந்தொகை,அகநானூறு, புறநானூறு
  • பாவகையால் பெயர் பெற்றவை: கலித்தொகை, பரிபாடல்
  • முதலும் முடிவும் கிடைக்காதவை: பதிற்றுப்பத்து, பரிபாடல்
  • பாடல்களின் எண்ணிக்கை: 2352
  • 2352 + 5 கடவுள் வாழ்த்து– 2358

முதல் பருவம் அலகு -2 வினா விடை

    குறுவினாக்கள்

    • உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்கும் மொழி எது?
      • உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்கும் மொழி தமிழ் ஆகும்.
    • “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே….” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
      • கல்தோன்றி மண்தோன்றா காலத்தே …. என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறப்பொருள் வெண்பாமாலைஆகும்.
    • தமிழின் பழமை குறித்த புறப்பொருள் வெண்பாமாலை பாடல் வரிகளை எழுதுக.
      • தமிழின் பழமை குறித்த புறப்பொருள் வெண்பாமாலை பாடல் வரி “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்பதாகும்.
    • சங்க இலக்கியத்தின் வேறு பெயர்களை எழுதுக.
      • சங்க இலக்கியத்தின் வேறு பெயர்கள் பாட்டுதொகை, பதினெண்மேல்கணக்கு என்பதாகும். பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும்.
    • எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை எழுதுக.
      • எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐந்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் என்பதாகும்.
    • நற்றிணையின் பெயர்க்காரணம் கூறுக.
      • நல்ல திணை’ என்பது நற்றிணை என்றழைக்கப்படுகிறது.
    • நற்றிணை குறிப்பு வரைக.
      • நல்ல திணை’ என்பது நற்றிணை என்றழைக்கப்படுகிறது.
      • 9 அடி முதல்  12 அடி வரையுள்ள 400 பாடல்களைக் கொண்டுள்ளது.
      • நற்றிணை நானூறு என்று அழைக்கப்படுகிறது.
      • தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார்.
    • “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
      •   “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் கபிலர் ஆவார்.
    • “நின்ற சொல்லர்….” எனத் தொடங்கும் பாடலின் திணை, துறை குறித்து எழுதுக. (அல்லது) நற்றிணையில் உங்கள் பாடப்பகுதியாக அமைந்துள்ள பாடலின் திணை, துறை குறித்து எழுதுக.
      • திணை: குறிஞ்சி,
      • துறை: பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியது.
    • “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடல் யாருடைய கூற்று?
      • “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடல் தலைவி  கூற்று ஆகும்.
    • சாந்தில் தொடுத்த தீம்தேன் போன்றது எது? 
      • சாந்தில் தொடுத்த தீம்தேன் போன்றது  தலைவன் தலைவி மீது கொண்ட நட்பு ஆகும்.
    • குறுந்தொகை குறிப்பு வரைக.
      • பெயர்க்காரணம்: குறுகிய அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.
      • அடிவரையறை: 4-8
      • பாடல் எண்ணிக்கை: 4௦௦
      • வேறுபெயர்: நல்ல குறுந்தொகை
      • தொகுத்தவர்: பூரிக்கோ
    • நிலத்தினும் பெரியது எது?
      • தலைவன் மீது தலைவி கொண்ட நட்பானது நிலத்தைவிடப் பெரியது.
    • வானைவிட உயர்ந்தது எது?
      • தலைவன் மீது தலைவி கொண்ட நட்பானது வானைவிட உயர்ந்தது.
    • கடலைவிட ஆழமானது எது?
      • தலைவன் மீது தலைவி கொண்ட நட்பானது கடலைவிட ஆழமானது.
    • நிலத்தினும் பெரிதே எனத் தொடங்கும் பாடல் யாருடைய கூற்று? ஆசிரியர் யார்?(அல்லது) பாடியவர் யார்?
      • நிலத்தினும் பெரிதே எனத் தொடங்கும் பாடல் தலைவி கூற்று
      • நிலத்தினும் பெரிதே எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் தேவகுலத்தார்
    • ஐங்குறுநூறு குறித்து எழுதுக.
      • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: அகம்
      • அடிவரையறை : 3-6
      • பாடல் எண்ணிக்கை: 500
      • பாடிய புலவர்கள்: 5
    • “வாழி ஆதன் வாழி அவினி…” எனப் பாடியவர் யார்? யாருடைய கூற்று?
      • “வாழி ஆதன் வாழி அவினி…” எனப் பாடியவர் ஓரம்போகியார்
      • “வாழி ஆதன் வாழி அவினி…” என்றப் பாடல் தோழி தலைவனிடம் கூறியது.
    • கலித்தொகை குறிப்பு வரைக.
      • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: அகம்
      • பாடல் எண்ணிக்கை: 150
      • பாடிய புலவர்கள்: 5
    • “சுடர்த்தொடீஇ கேளாய்…..” எனத்தொடங்கும் பாடல் யாருடைய கூற்று?
      • “சுடர்த்தொடீஇ கேளாய்…..” எனத்தொடங்கும் பாடல் தலைவி கூற்று
    • புறநானூறு குறிப்பு வரைக.
      • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: புறம் 
      • பாடல் எண்ணிக்கை – 400
      • வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு
    • “தெண்கடல் வளாகம்….” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
      • “தெண்கடல் வளாகம்….” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர்
    • முல்லைப்பாட்டு குறித்து எழுதுக.
      • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.
      • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
      • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
      • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.

    நெடுவினாக்கள்

    • நற்றிணைப் பாடலின் பொருளினை எழுதுக. (அல்லது) “நின்ற சொல்லர் …” எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக. (அல்லது)நற்றிணை தலைவி கூறும் தலைவனின் நட்பு குறித்து எழுதுக. 

    நற்றிணை

      • பாடுபொருள்: அகம்
      • அடிவரையறை : 9-12
      • பாடல் எண்ணிக்கை: 400
      • பாடிய புலவர்கள்:175
      • வேறுபெயர்: நற்றிணை நானூறு
      • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
      • திணை – குறிஞ்சி
      • பாடியவர் கபிலர்
      • கூற்று – பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.
      • கூற்று விளக்கம் பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிய எண்ணியதைத் தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி தலைவன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்எனத் தலைவனைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

    பாடலின் விளக்கம்

            “தோழி என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய வாய்மையுடையவர். நீண்ட காலம் பழகுவதற்கு மிக இனிமையானவர். எப்போதும் என் தோள்களைப் பிரியும் எண்ணம் இல்லாதவர். அத்தகையவருடைய நட்பு, தேனீக்கள் தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை ஊதி, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு சென்று சேர்த்து வைத்த தேனைப் போல உறுதியாக உயர்ந்தது. தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காதது போல, அவர் இல்லாமல் நான் வாழ மாட்டேன் என்பதை நன்கு உணர்ந்தவர். என் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். என்னைப் பிரிந்து சென்றால் என் நெற்றியில் பசலை நோய் படரும் என்று அஞ்சி தடுமாற்றம் அடைந்து என்னை விட்டு நீங்கிச் செல்ல மாட்டார்என்று தலைவி கூறுகின்றாள்.

    குறிப்பு

    இப்பாடலில், தாமரைத் தாது தலைவன் உள்ளத்தையும், சந்தனத்தாது தலைவியின் உள்ளத்தையும் குறிப்பிடுகின்றது. சந்தன மரத்தில் இனிய தேனடை வைத்தது போலத் தலைவன் தலைவியிடம் அன்பு வைத்துள்ளான் என்பது கருத்து.        

    • குறுந்தொகை பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) “நிலத்தினும் பெரிதே…” எனத்தொடங்கும்பாடலின் பொருளினை எழுதுக.

    குறுந்தொகை

      • நல்ல குறுந்தொகை
      • பாடுபொருள்: அகம்
      • அடிவரையறை : 4 – 8
      • பாடல் எண்ணிக்கை: 400
      • தொகுத்தவர்: பூரிக்கோ
      • திணை குறிஞ்சி
      • பாடியவர் தேவகுலத்தார்
      • துறை – தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.
      • துறை விளக்கம் தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான்.  தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

    பாடல் விளக்கம்

      • எம் தோழியே! கரிய கொம்புகளில்  பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற  மலைநாட்டில் வாழ்கின்றவன் எம் தலைவன்.  அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானதுஎன்று தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்.
    • ஐங்குறுநூறு பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) “வாழி ஆதன் வாழி அவினி….”எனத்தொடங்கும்பாடலின் பொருளினை எழுதுக.

    ஐங்குறுநூறு

      • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: அகம்
      • அடிவரையறை : 3-6
      • பாடல் எண்ணிக்கை: 500
      • பாடிய புலவர்கள்: 5
      • திணை – மருதம்
      • பாடியவர் – ஓரம்போகியார்
      • கூற்று – புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, “இது தகாதுஎனத் தெளிந்த மனத்தனாய் மீண்டு தலைவியோடு கூடி ஒழுகா நின்ற தலைமகள் தோழியோடு சொல்லாடி யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்கு அவள் சொல்லியது.
      • கூற்று விளக்கம் – பரத்தையர் உறவில் நெடுநாள் வாழ்ந்த தலைமகன் தன் பிழையுணர்ந்து தன் மனைவியை மீண்டும் கூடினாள். அப்பொழுது தோழியை நோக்கி, “நான் உங்களைப் பிரிந்து வாழும் நாட்களில் நீங்கள் என்ன எண்ணியிருந்தீர்கள்?” என வினவினான். அதற்கு விடையாகத் தோழி சொல்லியது.
      • கூற்று – தோழி தலைவனிடம் கூறியது.

    பாடல் விளக்கம்

      • தலைவனே! எம் மன்னனாகிய ஆதன் அவினி நெடிது வாழ்க! எம் நாட்டு வயல்களில் நெல்வளம் சிறக்கட்டும்! நாட்டில் பொன் வளம் பெருகட்டும் என்று விரும்புகின்றாள் எம் தாய் (தலைவி). அரும்புகள் நிரம்பிய புன்னை மரங்களும், முட்டைகளை மிகுதியாகக் கொண்ட சிறுமீன்களும் நிறைந்த ஊரின் தலைவன் வாழட்டும்! அவனுடன் அவன் பாணனும் வாழட்டும் என விரும்புகிறேன் எனத் தலைவி கூறினாள்என்று தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.

    குறிப்பு

      • சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்று அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  முதல் வரி மன்னனை வாழ்த்துகின்றது. தோழி, தலைவியைத் தாய் என்று குறிப்பிடுகின்றாள்.
    • கலித்தொகை பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) “சுடர்த்தொடீஇ கேளாய்….” எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.

    கலித்தொகை

      • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: அகம்
      • பாடல் எண்ணிக்கை: 150
      • பாடிய புலவர்கள்: 5
      • பாடியவர்  – கபிலர்
      • திணை  – குறிஞ்சி
      • துறை – புகாஅக்காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி பகாவிருந்தின்  பகுதிக்கண்தலைவி தோழிக்குக் கூறியது.
      • துறை விளக்கம் – தலைவன் தலைவியைக் காண வேண்டும் என ஆசையுற்றான். அதனால் தான் புகுதற்குத் தகுதியில்லாத பகற்பொழுதில் தலைவன், உணவு நேரத்தில் தலைவியின் வீட்டுக்குள் புகுதல். அவ்வாறு புகுந்தவனைத் தலைவி காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளல்.

    பாடல் விளக்கம்

      • ஒளிமிக்க வளையல் அணிந்த தோழியே! நான் சொல்வதைக் கேள். தெருவில் நாம் மணலால் செய்த சிறுவீட்டைத் தன்காலால் கலைத்தும், நாம் கூந்தலில் சூடிய மலர்மாலையை அறுத்தும், வரியை உடைய நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் வருந்தத் தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாகக் கட்டுக்கடங்காமல் திரிந்தான். முன்பு ஒருநாள் தாயும் (அம்மாவும்) நானும் வீட்டில் இருந்தபோது வந்தான். வீட்டின் வாசலில் நின்று, “வீட்டில் இருப்பவர்களே! உண்ணும் நீரை உண்ண விரும்பினேன்என்று குரல் கொடுத்தான். அவ்வாறு வந்து கேட்டவனுக்கு என் தாய், என்னிடம், “ஒளி வீசும் அணிகலன்களை அணிந்தவளே. தங்கத்தாலான குவளையில் கொண்டு போய் நீர் கொடுத்து வாஎன்றாள். அவ்வாறு தாய் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மை அறியாமல் தண்ணீர் கொண்டு போனேன். நான் சென்றதும் வளையல் அணிந்த முன் கையைப் பிடித்து இழுத்தான். (சிறுபட்டி எனில் பட்டியில் அகப்படாத மாடு போன்றவன் எனப் பொருள்) அதனால் நான் வருந்தி அம்மா என அலறி இவன் செய்த செய்த செயலைப் பார்த்தாயா? என்றேன். அம்மா அலறிக்கொண்டு ஓடி வந்தாள். நான் அவன் செய்த குறும்புச் செயலை மறைத்து, இவன் நீர் குடிக்கும் போது விக்கல் எடுத்து வருந்தினான், அதனால் கத்தினேன்என்றேன். நான் மறைத்துக் கூறியதை ஏற்று அம்மாவும் அவன் முதுகைப் பலமுறை தடவிக் கொடுத்தாள். அப்போது அக்கள்வன் மகன் (அந்தத் திருடன்) தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது போல் திருட்டுப்பார்வை பார்த்தான். தன் புன்முறுவலால் என்னை மயக்கி என்னுள்ளத்தில் புகுந்தான்என்று தன் தோழியிடம் தலைவி கூறுகின்றாள்.
    • புறநானூறு பாடலின் பொருளினை எழுதுக.

    புறநானூறு

      • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: புறம் 
      • பாடல் எண்ணிக்கை – 400
      • வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு

    பாடல்:1 

      • பாடியவர்: ஔவையார்
      • திணை: பொதுவியல்.
      • திணை விளக்கம்: வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
      • துறை: பொருண்மொழிக்காஞ்சி.
      • துறை விளக்கம்: துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்.

    பாடல் விளக்கம்

      • நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக (அவலாக) – பள்ளமாக – இருந்தாலும், மேடான நிலமாக (மிசையாக) இருந்தாலும், எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே!

    பாடல்:2

      • பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
      • திணை விளக்கம்வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
      • துறை: பொருண்மொழிக்காஞ்சி.
      • துறை விளக்கம்துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்

    பாடல் விளக்கம்

      • இந்த உலகம் முழுவதையும் தனக்கே உரிமை கொண்டு ஆட்சி செய்கின்ற மன்னனாக இருந்தாலும், இரவிலும் பகலிலும் உறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரிகின்ற கல்வியறிவற்ற வேடனாக இருந்தாலும் இவ்விருவருக்கும் உண்பது, உடுப்பது ஆகிய இரண்டு செயல்களும் பொதுவானதே. இதைப் போன்றே பிற தேவைகளும் பொதுவானதாகவே இருக்கும். இதுவே இயற்கையின் நியதி. ஆதலால், தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுவதே வாழ்வின் பயனாகும். அதை விடுத்து, தான் ஈட்டிய செல்வத்தைத் தானே அனுபவிப்பேன் என்று இறுமாப்பு கொண்டு வாழ்ந்தால் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வின் உறுதிப் பொருளை இழக்க நேரிடும் என்று கூறுகின்றார் நக்கீரர்.
    • “தெண்கடல் வளாகம்…” எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக. 
      • பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
      • திணை விளக்கம்வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
      • துறை: பொருண்மொழிக்காஞ்சி.
      • துறை விளக்கம்துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்

    பாடல் விளக்கம்

      • இந்த உலகம் முழுவதையும் தனக்கே உரிமை கொண்டு ஆட்சி செய்கின்ற மன்னனாக இருந்தாலும், இரவிலும் பகலிலும் உறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரிகின்ற கல்வியறிவற்ற வேடனாக இருந்தாலும் இவ்விருவருக்கும் உண்பது, உடுப்பது ஆகிய இரண்டு செயல்களும் பொதுவானதே. இதைப் போன்றே பிற தேவைகளும் பொதுவானதாகவே இருக்கும். இதுவே இயற்கையின் நியதி. ஆதலால், தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுவதே வாழ்வின் பயனாகும். அதை விடுத்து, தான் ஈட்டிய செல்வத்தைத் தானே அனுபவிப்பேன் என்று இறுமாப்பு கொண்டு வாழ்ந்தால் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வின் உறுதிப் பொருளை இழக்க நேரிடும் என்று கூறுகின்றார் நக்கீரர்.
    • “நாடா கொன்றோ…..” எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.
    • பாடியவர்: ஔவையார்
    • திணை: பொதுவியல்.
    • திணை விளக்கம்: வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
    • துறை: பொருண்மொழிக்காஞ்சி.
    • துறை விளக்கம்: துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்.

    பாடல் விளக்கம்

    நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக (அவலாக) – பள்ளமாக – இருந்தாலும், மேடான நிலமாக (மிசையாக) இருந்தாலும், எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே!

    • முல்லைப்பாட்டு கார்கலத்தின் தொடக்கமும் தலைவன் வருகையும் குறித்து எழுதுக.(அல்லது) தலைவன் வரவிற்காக காத்திருந்த தலைவியின் நிலை குறித்து விவரி.

    முல்லைப்பாட்டு

      • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.
      • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
      • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
      • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.
      • மழைப் பொழிவு
        • அலை ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடல் நீரைக் குடித்து எழுந்தது மேகம். அகன்ற உலகை வளைத்தது. வலப்பக்கமாக உயர்ந்தெழுந்தது. மலையில் தங்கியது. மாலைக்காலத்தில் பெருமழையாகப் பொழிந்தது. இக்காட்சி திருமால் வாமன அவதாரம் கொண்டபோது, மாவலிசக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க, மாவலி மூன்றடி மண் கொடுக்கும் பொருட்டு வாமனரின் கரங்களில் நீர் வார்த்தார். அந்நீர் வாமனரின் கைகளில் பட்டவுடன் திருமால், விண்ணையும் மண்ணையும் அளக்கும்படி உயர்ந்து எழுந்ததுபோலக் காட்சியளித்தது.
      • தெய்வத்தை வணங்குதல் 
        • மாலைப்பொழுதில் பெண்கள் காவல் கொண்ட பழமையான ஊருக்கு வெளியே உள்ள தெய்வத்தை நோக்கிச் சென்றனர்.  யாழிசை போன்று முரலுகின்ற வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும்படியாக முல்லைப்பூக்கள் மலர்ந்தன. அம்மலர்களையும், நெல்லையும் கொண்டு வந்து தூவி தெய்வத்தை வணங்கி நற்சொல் எதிர்பார்த்து நின்றனர்.
      • நற்சொல் (விரிச்சி) கேட்டல்
        • ஆயர் மகள் இளங்கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றில் கட்டி வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் கன்றின் கழுத்தைத் தன் கைகளில் அணைத்துக்கொண்டு கோவலர் பின்னிருந்து ஓட்டிக் கொண்டு வர உன் தாய்ப்பசு இப்பொழுதே வந்துவிடும்என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள். இந்நற்சொற்கள் தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த பெண்களின் காதில் விழுந்தது. இதுவே தாங்கள் எதிர்பார்த்த நற்செய்தி என்று மகிழ்வுடன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.

     

      • தலைவியைத் தேற்றுதல்
        • நற்சொல் கேட்ட பிறகு அப்பெண்கள் யாவரும், போரின் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவனை எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கும் தலைவியை நோக்கிச் சென்றனர். தாங்கள் கேட்ட நற்சொற்களைக் கூறி தலைவன் தான் மேற்கொண்ட வினை முடிந்து பகைவரிடம் திறைப் பொருள் பெற்று விரைந்து வந்து உன்னைச் சந்திப்பார். ஆதலால், நீ உன் மனத்தடுமாற்றத்தால் அடையும் துன்பத்தைப் போக்கிக் கொள்எனப் பன்முறை கூறித் தேற்றினர். அவர்களின் சொற்களைக் கேட்டு மனம் ஆற்றாதவளான தலைவியின் கண்களிலிருந்து முத்துப்போன்ற கண்ணீர்த் துளிகள் விழுந்தன.
      • பாசறையின் அமைப்பு 
        • காட்டாறு பாய்கின்ற முல்லைக் காட்டில், மணம் வீசும் பிடவம்பூச் செடிகள் களையப்பட்டு, வேடருடைய அரண்கள் அழிக்கப்பட்டு, வேட்டையாடும் விலங்குகள் உள்ளே வராத வண்ணம் முள் வேலியை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமாக பாசறை வீடு உருவாக்கப்பட்டது. அது பாடி வீடு என்று அழைக்கப்படும். அவ்வீட்டில் தலைவன் தங்கியிருந்தான்.
      • போர் யானையும் யானைப் பாகனும் 
        • பாசறை அமைக்கப்பட்ட தெருக்களில் உவலைக் கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன. தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த யானைகளுக்குக் கம்பும், கதிரோடு கூடிய நெற்கதிர்க் கட்டுகளும், அதிமதுரத் தழையும் உணவாகக் கொடுக்கப்பட்டன. அந்த யானைகள் அவற்றைத் தன் கைகளால் வாங்கி, உண்ணாமல் அவற்றால் தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டன. கையில் அங்குசம் வைத்திருந்த இளைஞர்களான பாகர்கள் யானைகளுக்குப் புரிகின்ற வடமொழிச் சொற்களைக் கூறி அவற்றை உண்ணும்படிப் பயிற்றுவித்தனர்.
      • அரண்
        • தவம் பூண்ட அந்தணர் மூன்று கோல்கள் இணைந்த முக்கோலைக் கையில் வைத்திருப்பர். அந்தக் கோலில் தங்கள் காவி ஆடையைத் தொங்க விடுவர். அதுபோல  போர் வீரர்கள் தங்கள் வில்லினை நிலத்தில் ஊன்றி அவற்றின்மேல் தங்கள் அம்புகள் வைத்திருக்கும் தூணியைத் தொங்க விட்டனர். தங்கள் வேல்களை வரிசையாக நட்டுக் கயிற்றால் இறுகக் கட்டிக் கூடாரம் அமைத்தனர்.  பின்னர் எறிகோல்களை அதன்மீது நட்டு தோலால் ஆன  கருவிகளை வரிசையாகப் பரப்பிப் பிணைத்து இருக்கை அமைத்தனர். இவ்வாறு வில்லால் செய்யப்பட்ட அரணில் தலைவனை அமர வைத்தனர்.
      • அரசனுக்கு அமைத்த பாசறை 
        • பல்வேறு படை வீரர்களின் இருக்கைக்கு நடுவே, வேறு ஒரு தனி இடத்தில் தலைவனுக்கென்று தனிப் பாசறையை அமைத்தனர். பலநிறமுடைய மதில் திரையை வளைத்து அதன் உள்ளே அரசனுக்கு இருக்கை அமைத்தனர். பல்வேறு படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.
      • மங்கையர் விளக்கு ஏற்றுதல் 
        • முதுகில் கூந்தல் புரள, கையில் வளையலுடன், தன் கச்சோடு வாளினைச் சேர்த்துக் கட்டிய மங்கையர் அரசனுக்கென்று அமைத்த பாசறையில் உள்ள பாவை விளக்கில் நீண்ட திரியை இட்டனர். நெய் வார்த்து விளக்கேற்றினர். விளக்கின் சுடர் மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர்.
      • மெய்க்காப்பாளர் காவல் புரிதல் 
        • நீண்ட நாக்கினை உடைய மணி இது நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது. புனலிப்பூக்கள் பூத்த சிறு செடிகள், மழைத் தூறலுடன் வீசுகின்ற காற்றில் அசைந்தாடுவதைப் போன்று, தம் தலையைத் துகிலால் மயிர்க்கட்டுக் கட்டியிருக்கும் வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்கள் தூக்க மயக்கத்துடன் ஆடி அசைந்து கொண்டே மன்னனைச் சூழ்ந்து காவலாக நின்றனர். அவர்கள் மெய்ப்பை எனப்படும் சட்டை அணிந்திருந்தனர்.
      • நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல் 
        • பிழையின்றி காலத்தைக் கணிக்கும் நாழிகைக் கணக்கர் மன்னனைத் தம் கையால் தொழுது வணங்கினார். மன்னனை வாழ்த்திவிட்டு கடல் சூழ்ந்த உலகத்தை வெல்ல வந்தவரே உன்னுடைய நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை இதுவே. காண்பாயாகஎன்று மன்னனுக்கு அறிவிக்கின்றார். (நாழிகை வட்டில் வட்டிலில் நீரிட்டு ஒரு சிறு துளை வழியாக அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசிய விட்டு அந்நீரை அளந்து காணும் கருவி)
      • யவனர் செயல் 
        • வலிமையான கயிற்றால் திரைகள் இழுத்துக் கட்டப்பட்ட அரசனின் பாசறையில் உள் அறை, புற அறை என இரண்டு அறைகள் இருந்தன. அவை புலிச் சங்கிலியால் ஒப்பனை செய்யப்பட்டிருந்தன. உள் அறையாகிய பள்ளி அறையில் அரசன் படுத்திருந்தான். அவனருகில் வாய் பேச முடியாத ஊமை வீரர்கள் பாதுகாவலுக்காக நின்றனர். அவர்களின் தோற்றம் அச்சம் கொள்ளத்தக்கதாக இருந்தது. மடங்கிப் புடைத்துத் தோன்றும்படி நெருங்கிக் கட்டின ஆடை அணிந்திருந்தனர். அவ் ஆடைமேல் குதிரைச் சவுக்கு வளைந்து கிடக்கிறது. வலிமை மிக்க உடம்பில் தங்கள்  உடம்பில் சட்டை அணிந்திருந்தனர். பாசறையின் மணி விளக்கை எரிய வைத்துக் கொண்டிருந்தனர்.
      • மன்னன் நிலை 
        • மன்னன் ஒரு கையைப் படுக்கை மேல் வைத்து, கடகம் அணிந்த மற்றொரு கையால் தலையைத் தாங்கியவனாய் உறக்கம் கொள்ளாமல் இரவு முழுவதும் முன்நாளில் நடந்த போர் நிகழ்ச்சிகளை நினைத்தவனாய்ப் படுத்திருந்தான். 
        • போரில் பகைவர் எறிந்த வேல் உடலைக் கிழித்தமையால் புண் மிகுந்து தம் பிடி யானைகளை மறந்து நின்ற களிறுகளை நினைக்கின்றான். 
        • அடிபட்ட பாம்பு துடிப்பதைப்போல களிறுகள் தம் வெட்டுப்பட்டுக் கைகளை இழந்து வருந்தும் காட்சியை நினைக்கின்றான்.
        • தாம் அணிந்த வஞ்சி மாலைக்கு வெற்றியைத் தேடித் தந்து, செஞ்சோற்றுக் கடன் தீர்த்து போரில் இறந்த வீரரை நினைக்கின்றான்.
        • கூர்மையான அம்பின் நுனிகள் தோலில் பாய்ந்ததால் வலி பொறுக்காது தம் செவியைச் சாய்த்துப் புல் உண்ண இயலாமல் வருந்தும் குதிரைகளை நினைக்கின்றான். இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டே உறக்கம் கொள்ளாமல் தவிக்கின்றான்.
      • பாசறையில் வெற்றி முழக்கம் 
        • மறுநாள் போரில், படைக்கருவியால் பகைவரை வென்று வெற்றி தேடித் தந்த போர் வீரர்கள் பகை மன்னர்கள் நடுங்கும்படி வெற்றி முரசை முழங்கினர். பாசறையில் அவ்வெற்றி முழக்கத்தைக் கேட்டுக் கொண்டே வினை முடித்த மனநிறைவோடு இனிதாகத் துயில் கொள்கின்றான் மன்னன்.
      • தலைவியின் துயரம்
        • பாவை விளக்குகள் ஒளி வீசும் உயர்ந்த ஏழடுக்கு மாளிகையில் அமர்ந்திருக்கும் தலைவி தலைவனின் பிரிவை ஆற்றாதவளாய் மனம் வருந்துகின்றாள்.  நான் வரும் வரை பிரிவை ஆற்றியிருஎனக் கூறிச் சென்ற தலைவனின் சொல்லை மீறுவது கற்பிற்கு இழுக்காகும் என்று தம் மனத்தைத் தேற்றுகின்றாள். எனினும், பிரிவாற்றாமையால் வருத்தம் கொண்டு மீண்டும் தலைவனை எண்ணி மயங்குகின்றாள். பிரிவின் துயரால் உடல் மெலிந்து போனதால் அவள் அணிகலன்கள் கழண்டு விழுகின்றன. அம்பு தைத்த மயில்போல நடுங்கி நிற்கிறாள். மழைநீர் கூரை மேல் அருவி போன்று விழுகின்ற ஓசையைக் கேட்டவாறு நெஞ்சம் ஆற்றுகின்றாள். அப்போது அவள் காதுகளில் தலைவன் வரும் ஆரவார ஓசை கேட்டது.
      • அரசன் மீண்டு வருதல் 
        • பகைவரை வென்று அவர்தம் நிலங்களைக் கவர்ந்து திரண்ட படையோடு வெற்றிக் கொடி உயர்த்தி ஊது கொம்பும் சங்கும் முழங்க வருகின்றான் தலைவன்.
      • மழையால் செழித்த முல்லைநிலம்
        • அரசன் வரும் வழியில் காயா மலர்கள் மலர்ந்திருக்கின்றன. கொன்றை மலர்கள் பூத்திருக்கின்றன. வெண் காந்தள் மொட்டுக்கள் விரிந்திருக்கின்றன. தோன்றி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. முல்லை நில வழியில் பருவ மழை பெய்த காரணத்தால் நன்கு விளைந்த கதிர்கள் காணப்படுகின்றன. அதனருகில் கொம்புகள் கொண்ட இரலை மான்களுடன் (ஆண்) மடப்பம் பொருந்திய மான்கள் (பெண்) துள்ளி குதித்து விளையாடுகின்றன. மழை மெதுவாகப் பொழிந்து கொண்டிருந்தது.
      • தேர் வருகை 
        • வள்ளிக்கிழங்கு முதிர்ந்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனது தேர்க்குதிரைகளைத் தேரோட்டி விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். அந்த ஓசைகளால் தலைவியின் காதுகள் குளிர்ந்து மகிழ்ந்தன.

    நற்றிணை

    • வேறுபெயர் : நற்றிணை நானூறு
    • அடிவரையறை: 9-12
    • பாடல் எண்ணிக்கை: 400
    • பாடிய புலவர்கள்: 175
    • தொகுத்தவர் : பெயர் தெரியவில்லை
    • தொகுப்பித்தவர் : பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
    • கடவுள் வாழ்த்துப் பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்
    • கடவுள் வாழ்த்தில் போற்றப்படும் தெய்வம் : திருமால்
    • பதிப்பு: 1914 பின்னத்தூர் நாராயணசுவாமி ஐய்யர்
    • முதல் உரை – பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்​
    • பாடலின் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள்:  தனிமகனார், தேய்புரிப் பழங்கயிற்றியனார், விழிக்கண் பேதை பெருங்கண்ணனார்.

    செய்திகள்

    • வணிகர்களுக்குக் கொடுக்கும் பட்டம் காவிதி, எட்டி
    • அன்னி, மிஞிலி இருவரும் சிற்றரசர்கள்
    • தொண்டி -சேரநாட்டுத் துறைமுகம்
    • கொற்கை – பாண்டி நாட்டுத் துறைமுகம்
    • மாந்தை – சேரநாட்டுக் கடற்கரை ஊர்
    • மருகூர்ப்பட்டினம் – பாண்டி நாட்டுக் கடற்கரை நகரம்
    • மருத்துவன் அறவோன் எனப்பட்டான்
    • கணியன் என்பதற்குச் சோதிடன் என்று பொருள்
    • “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்”
    • நீரின்றி அமையாது உலகு போல் தம்மின்று அமையா நம் நயந்தருளி” – கபிலர்
    • ஒருமுலை அறுத்த திருமா உண்ணி” – மதுரை மருதன் இளநாகனார்
    • “கொண்ட கொழுநன் குடிவரன் உற்றேனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்” – போதனார் 

    திருமுருகாற்றுப்படை

    •  ஆசிரியர் நக்கீரர். நெடுநல்வாடையைப் பாடியவரும் இவரே.
    • 317 அடிகளைக் கொண்டது.
    • பாடப்பட்டவன் முருகன். ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போன்(முருகன்) பெயர் பெற்றது.
    • ஆசிரியப்பாவால் ஆனது.
    • திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்துப் போன்று அமைந்துள்ளது.
    • இதை புலவராற்றுப்படை எனவும் வழங்குவர்.
    • முருகனிடம் அருள் பெற்ற ஒருவர் அருள் வேண்டும் ஒருவரை ஆற்றுப்படுத்தும் விதமாக அமைகிறது.
    • பத்துப்பாட்டுள் முதலில் பதிப்பிக்கப் பெற்றது திருமுருகாற்றுப்படை(1851- ஆறுமுக நாவலர்). இந்நூல் அறுபத்தி இரண்டு பதிப்புகளைக் கண்டுள்ளது.
    • பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல். கடவுள் வாழ்த்தாகக் கருதி முதலில் வைக்கப்பட்டது.
    • முதற்பகுதி: திருப்பரங்குன்றம் மலை: அதனைச் சூழ்ந்த இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் செய்த போர் ஆகியன இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன.
    • இரண்டாம் பகுதி: முருகனின் ஆறு திருமுகங்களின் சிறப்பு, பன்னிரு கைகளின் செயல், திருச்செந்தூர் சிறப்பு ஆகியன கூறப்பட்டுள்ளன.
    • மூன்றாம் பகுதி: முருகனை வழிபடும் முனிவர்களின் பெருமை, பழனியில் வழிபாட்டிற்கு வரும் மகளிரின் இயல்பு ஆகியன கூறப்பட்டுள்ளன.
    • நான்காம் பகுதி: திருவேரகத்தில் முருகனை வழிபடுவோரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
    • ஐந்தாம் பகுதி : மலை நாட்டு மக்கள் குரவைக் கூத்தாடி வணங்கும் முறைகள் முதலியன கூறப்பட்டுள்ளன.
    • ஆறாம் பகுதி: முருகன் எழுந்தருளும் இடங்களும், அவனிடம் சென்று அருள்பெறும் முறைகளும் பழமுதிர்ச்சோலையின் அருவிச் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.
    • திருமுருகாற்றுப்படை கூறம் முருகனின் அறுபடை வீடுகள்
        1.  திருப்பரங்குன்றம்
        2.  திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
        3.  திருஆவினன் குடி (பழனிமலை, சித்தன்வாழ்வு)
        4. திருவேரகம் (சுவாமி மலை)
        5.  குன்றுதோறாடல்
        6.  பழமுதிர் சோலை
    •  11ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல். இருதொகுப்பில் (பத்துப்பாட்டு, திருமுறைகள் ) இடம் பெற்ற ஒரே நூல் திருமுருகாற்றுப்படை

    பாடல் வரிகள்

    • “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு”- தொடக்கம்
    • “பழமுதிர் சோலை மலைகிழவோனே” முடிவு
    • “கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு”
    • “ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆல்அமர் செல்வ”

    பத்துப்பாட்டு

                  பாட்டு என்றாலே பத்துப்பாட்டைத்தான் குறிக்கும். அதற்கு காரணம் சங்க காலத்தில் தோன்றிய நெடும்பாட்டுகள் இவை. சான்றோர் உரைத்த தண்தமிழ் தெரியல் ஒருபது பாட்டும்”நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரம் பத்துப்பாட்டு பற்றி குறிபிடுகிறது.

    பழைய வெண்பா

    “முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

    பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய 

    கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் 

    பாலை கடாத்தொடும் பத்து.”  

    1. திருமுருகாற்றுப்படை – புலவராற்றுப்படை

    2. பொருநராற்றுப்படை

    3. சிறுபாணாற்றுப்படை

    4. பெரும்பாணாற்றுப்படை – பாணாறு

    5. முல்லைப்பாட்டு – நெஞ்சாற்றுப்படை

    6. மதுரைக் காஞ்சி

    7. நெடுநல்வாடை

    8. குறிஞ்சிப் பாட்டு – பெருங்குறிஞ்சி

    9. பட்டினப்பாலை – வஞ்சிநெடும்பாட்டு

    10. மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை

    பொதுவான தகவல்கள்

    • பத்துப்பாட்டில் அக நூல்கள் – 3. அவை: முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
    • பத்துப்பாட்டில் புறநூல்கள் 6. அவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி,மலைபடுகடாம்.
    • பத்துப்பாட்டில் அகமும் புறமும் சார்ந்த நூல் ஒன்று. நெடுநல்வாடை
    • ஆற்றுப்படை நூல்கள் 5.
    • ஆற்றுப்படை என்று பெயர்பெற்ற நூல்கள் 4
    • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் முல்லைப்பாட்டு (103அடி)
    • பத்துப்பாட்டில் அதிக அடிகளைக் கொண்ட நூல் மதுரைக் காஞ்சி (782 அடி)
    • ஆற்றுப்படை நூல்களுள் குறைந்த அடிகள் கொண்ட நூல் பொருநராற்றுப்படை (248அடி)
    • ஆற்றுப்படை நூல்களுள் அதிக அடிகளைக் கொண்ட நூல் மலைபடுகடாம் (583அடி)
    • திணையால் பெயர் பெற்ற நூல்கள் 4. அவை: அகத்திணை 3 (முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ),          புறத்திணை 1. மதுரைக் காஞ்சி
    • காலத்தால் (அ) பருவத்தால் பெயர் பெற்ற நூல் 1. நெடுநல்வாடை
    • பத்துப்பாட்டை எழுதிய புலவர்கள் 8 பேர். இரண்டு, இரண்டு பாடல்கள் பாடியவர்கள் இரண்டு பேர். நக்கீரர் பாடிய நூல்கள் இரண்டு திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய நூல்கள் இரண்டு: பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
    • பத்துப்பாட்டு என்ற தொடரை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் நன்னூலின் முதல் உரையாசிரியராகிய மயிலைநாதர் ஆவார்.
    • அறத்தொடு நிற்றல் என்ற துறையில் அமைந்த நூல் குறிஞ்சிப்பாட்டு
    • செலவழுங்கல் துறையில் அமைந்த நூல் பட்டினப்பாலை
    • பத்துப்பாட்டில் வீடு பேற்றிற்கு முதன்மை கொடுக்கும் நூல் மதுரைக்காஞ்சி
    • பத்துப்பாட்டில் அகநூலாக இருந்தும் புறச்செய்திகளை மிகுதியாகக் கூறும் நூல் பட்டினப்பாலை
    • பத்துப்பாட்டில் பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் வஞ்சியடி கலந்த ஆசிரியப்பா; மற்ற எட்டும் ஆசிரியப்பா.
    • பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் திருமுருகாற்றுப்படை
    • ஆற்றுப்படை என்பதில் ஆறு என்பதற்கு வழி என்றும் படை என்பதற்கு படுத்துதல் (செலுத்துதல்) என்றும் பொருள்
    • பண்பாடுவோன் பாணன், பாணன் மனைவி பாடினி, விறலி
    • பாணனுடன் சேர்ந்து பாடுபவள் பாடினி
    • பாணனின் பாட்டுக்கு ஆடுபவள் விறலி
    • ஆடும் ஆண்கள் கூத்தர்கள்
    • வேடந்தாங்கி நடிப்போன் பொருநன்
    • ஆற்றுப்படை நூல்களில் மட்டும் முன்னிலை ஒருமைக்குப் பன்மைப் பயனிலை வரும் என்று தொல்காப்பியம் கூறுகிறது. “முதுவாய் இரவல… செல்குவீராயின்” (சிறுபாணாற்றுப்படை)
    • பாவை விளக்கையும் அன்னப் பறவையையும் கொண்டு வந்தவர்கள் யவனர்கள்.

    யாதும் ஊரே யாவரும் கேளீர்

    உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் பிறப்பதும் 

    இருப்பதும் இறப்பதும்

    வாழ்வதும் வீழ்வதும்

    உயர்வதும் தாழ்வதும் என

    நடப்பது அனைத்தும் 

    நாம்செய்த வினைப்பயன் 

    என்பதை உணர்ந்து

    உலகினர் அனைவரும்

    உறவினராய் ஒரு தாய்ப் 

    பெற்ற பிள்ளைகளாய்

    அமெரிக்கா முதல்

    ஆண்டிப்பட்டி வரையுள்ள

    ஆயிரம் சாதிகளழிய

    இனம் மொழி

    மதம் கடந்து

    அனைவரும் சகோதரர்களென

    அன்பால் இணைந்து வாழ

    அகிலம் ஆனது அன்னை மடியாய்!

    wpChatIcon
    error: Content is protected !!