பக்தி இலக்கியம் – குறிப்புகள்

  • பக்தி இலக்கியம் பெரிதும் வளர்ந்த காலம் பல்லவர் காலம் ஆகும்.
  • தேவாரம்
    • தே+வாரம்=தேவாரம்
    • கடவுளுக்கு சூட்டப்படுகின்ற பாமாலை என்று பொருள்.
  • சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான்
  • சிவபெருமானின் ஐன்தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

பன்னிரு திருமுறைகள் பகுப்பு

  • சைவ சமயப் பெரியவர்கள் பாடிய பாடல்கள் திருமுறைகள் எனப்படும்.
  • 1 , 2, 3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர் (சம்பந்தர் தேவாரம்)
  • 4, 5 , 6 திருமுறைகள் – திருநாவுக்கரசர் (தேவாரம்)
  • 7ம் திருமுறை – சுந்தரர் (சுந்தரர் தேவாரம்)
  • 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்-திருவாசகம் மற்றும் திருக்கோவையார்
  • ஒன்பதாம் திருமுறை – 9 பேர்
  • பத்தாம் திருமுறை – திருமூலர்
  • பதினொன்றாம் திருமுறை – திரு ஆலவாய் உடையார் முதலாக பன்னிருவர்
  • பன்னிரண்டாம் திருமுறை – சேக்கிழார் (பெரியபுராணம்)
  • திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
    இவர் 11 திருமுறைகளை மட்டுமே தொகுத்தார்
    பெரியபுராணம் பின்னால் எழுதப்பட்டது.
  • திருமுறைகளைதொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன்
    முதலாம் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் எனப்படுகிறான்
  • முதல் ஏழு திருமுறைகள் மூவர் தேவாரம் எனப்படும்.
    இதற்கு மூவர் தமிழ் என்று வேறு பெயரும் உண்டு.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் – மூவர் முதலிகள்எனப்படுவர்.
  • சைவ சமயக் குரவர்கள் நால்வர்

1. திருஞானசம்பந்தர்

2. திருநாவுக்கரசர்

3. சுந்தரர்

4. மாணிக்கவாசகர்

  • பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.

திருஞானசம்பந்தர்

  • இயற்பெயர் : ஆளுடைய பிள்ளை
  • பெற்றோர் – சிவபாத இருதயர் – பகவதி அம்மையார்
  • பிறந்த ஊர் – சீர்காழி 
  • இவர் பாடியவை: 1,2,3 திருமுறைகள்

சிறப்பு:

  • 23 இசைகளில் பாடியுள்ளார்.
  • யாழ்முறி இவருக்கு மட்டுமே உரியது.
  • திராவிட சிசு – ஆதிசங்கரரால்  போற்றப்பட்டார்.
  • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் – சுந்தரர்

செய்த அற்புதங்கள்

  • மழவன் மகளுக்கு ஏற்பட்ட கடுமையான முயலகன் என்னும் நோயைப் போக்கினார்.
  • கூன் பாண்டியன் வெப்பு நோயைப் நீக்கினார்.
  • திருமறைக்காட்டுக் கோவிலின் கதவை தம் பாட்டால் மூடும்படி செய்தார்.
  • திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் செய்தார்.

திருநாவுக்கரசர்

  • இயற்பெயர்: மருள் நீக்கியார்
  • பெற்றோர் : புகழனார், மாதினியார்
  • அக்கா : திலகவதியார்
  • பிறந்த ஊர்: திருவாமூர்
  • இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
  • சிறப்பு பெயர்கள்:
    திருநாவுக்கரசர்,
    வாகீசர்,
    அப்பர்,
    ஆளுடைய அரசு,
    தாண்டக வேந்தர்,
    தருமசேனர்
  • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர் -தமக்கை திலகவதியார்
  • முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் .
  • கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறியவர்
  • திங்களூரில் பாம்பு தீண்டி இறந்தவரை உயிர்ப்பித்தார்.
  • திருமறைக்காட்டுக் கோவில் கதவை திறக்க செய்தார்.

சுந்தரர்

  • இயற்பெயர்: நம்பி ஆரூரார் / ஆரூரார்
  • பெற்றோரோர்: சடையனார் – மாதினியார்
  • இவர் பாடியவை: 7 திருமுறை

சிறப்பு பெயர்கள் :

  • வன் தொண்டர்
  • தம்பிரான் தோழர்
  • திருத்தொண்டத்தொகை பாடியவர் சுந்தரர்

மாணிக்கவாசகர்

  • இயற்பெயர் தெரியவில்லை
  • பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
  • இவர் பாடியவை: 8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

  • அருள் வாசகர்
  • மணிவாசகர்
  • அழுது அடியடைந்த அன்பர்
  • தென்னவன் பிரமராயர்
  • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

நூல்கள்

  • திருக்கோவையாரும் திருவாசகமும் இவர் பாடியவை

ஒன்பதாம் திருமுறை ( திருவிசைப்பா

  • 9 பேர் பாடியது

பத்தாம் திருமுறை ( திருமந்திரம்) 

  • திருமூலர்
  • திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை
  • திருமந்திரத்தின் வேறு பெயர்கள்: தமிழ் மூவாயிரம்
  • முதல் சித்த நூல் யோக நெறியை கூறும் தமிழர் நூல்
    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்நூலின் சிறப்பு

பதினொன்றாம் திருமுறை (பிரபந்த மாலை)

  • 12 பேர் பாடியுள்ளனர்
  • 40 நூல்கள் உள்ளன
  • திருவாலவாயுடையார் (1)
  • காரைக்காலம்மையார் (நான்கு நூல்கள்)
  • கல்லாடர் (1)
  • நக்கீரர் (10)
  • கபிலர் (3)
  • பரணர் (1)
  • அதிரா அடிகள் 1
  • இளம்பெருமான் அடிகள் (1)
  • ஐயடிகள் (1)
  • சேரமான் பெருமான் நாயனார் (3)
  • பட்டினத்தார் (5)
  • நம்பியாண்டார் நம்பி (ஒன்பது நூல்கள் )
  • தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் நம்பியாண்டார் நம்பி
    64 நாயன்மார்களை பற்றி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்

காரைக்கால் அம்மையார்

  • இயற்பெயர் புனிதவதியார் 
  • காரைக்கால் – வணிக மரபினர்
  • சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி

12ம் திருமுறை (பெரியபுராணம்)

  • சேக்கிழார்
  • இயற்பெயர்: அருண்மொழித்தேவர்

சிறப்பு பெயர்கள் :

  • உத்தம சோழப் பல்லவன்
  • தொண்டர் சீர் பரவுவார்

நூல் அமைப்பு:

  • இரண்டு காண்டம் 13 சருக்கம் 4286 பாடல்கள்
  • உலகெலாம் என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்ட நூல்

 63 நாயன்மார்களில் மூவர் பெண்கள்

  • காரைக்கால்
  • அம்மையார்
  • இசைஞானியார்
  • மங்கையர்க்கரசி

நாலாயிர திவ்ய பிரபந்தம்

  • ஆழ்வார்களின் பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன. திராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
  • ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் – அன்பில் – அருளில் – தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம். 
  • முதலாழ்வார்கள்:
    பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

ஆழ்வார்கள் – பாசுரங்களின் எண்ணிக்கை

1.பொய்கை ஆழ்வார்- 100
2.பூதத்தாழ்வார்- 100
3.பேயாழ்வார்- 100
4.திருமழிசை ஆழ்வார்- 216
5.மதுரகவி ஆழ்வார்- 11
6.நம்மாழ்வார்- 1296
7.குலசேகர ஆழ்வார்-105
8.பெரியாழ்வார்- 473
9.ஆண்டாள்- 173
10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்- 55
11.திருப்பாணாழ்வார்- 10
12.திருமங்கை ஆழ்வார்- 1137
பொய்கையாழ்வார்
  • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
  • காலம் : 7ம்நூற்றாண்டு
  • நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் 
  • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பூதத்தாழ்வார்

  • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
  • காலம் :  7ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பேயாழ்வார்

  • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
  • காலம்: ஏழாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

திருமழிசையாழ்வார்

  • பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
  • காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
  • பாடல்கள் : 216

பெரியாழ்வார்

  • பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • காலம்: 9ம் நூற்றாண்டு 
  • எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
  • பாடிய பாடல் : 473

ஆண்டாள்

  • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
  • காலம் : 9ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
  • பாடிய பாடல் : 173

தொண்டரடி பொடியாழ்வார்

  • இயற்பெயர் : விப்ர நாராயணன்
  • பிறந்த ஊர் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு 
  • எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
  • பாடிய பாடல் : 55

திருமங்கையாழ்வார்

  • பிறந்த இடம் : திருக்குறையலூர்
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,   திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை,  பெரிய திருமடல்,சிறிய திருமடல்.
  • பாடிய பாடல் : 1253 
திருப்பாணாழ்வார்
  • பிறந்த ஊர் : உறையூர் (திருச்சி)
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : அமலனாதிபிரான்
  • பாடிய பாடல் : 10

குலசேகர ஆழ்வார்

  • பிறந்த இடம் : திருவஞ்சைக்களம்
  • காலம் : எட்டாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
  • பாடிய பாடல்  : 105

நம்மாழ்வார்

  • பிறந்த ஊர் : ஆழ்வார் திருநகரி
  • பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
  • எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
  • பாடல்கள் : 1296

மதுரகவி ஆழ்வார்

  • பிறந்த ஊர் : திருக்கோளூர்
  • காலம் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி
  • எழுதிய நூல் : கண்ணி நுண் சிறுத்தாம்பு
  • பாடல்கள் : 96

ஐஞ்சிறுகாப்பியங்கள் – குறிப்புகள்

நாககுமார காவியம்

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – கி.பி.16ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 170
    சருக்கம் – 5
    பாவகை – விருத்தப்பா
  • சமயம் – சமணம்
  • பெயர்க்காரணம்:
    கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.
  • வேறு பெயர்:
    நாகபஞ்சமி கதை

உதயணகுமார காவியம்

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – கி.பி.15ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 369
    காண்டம் = 6
    காண்டங்கள்:
    • உஞ்சைக் காண்டம்
    • இலாவண காண்டம்
    • மகத காண்டம்
      வத்தவ காண்டம்
    • நரவாகன காண்டம்
    • துறவுக் காண்டம்
  • வேறு பெயர்: உதயணன் கதை

யசோதர காவியம்

  • ஆசிரியர் – வெண்ணாவலூர் உடையார் வேள்
  • காலம் – 13ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 320
    சருக்கங்கள் – 5
  • பாவகை – விருத்தம்
  • சமயம் – சமணம்

நீலகேசி

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – 6ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 894
    சருக்கம் – 10
  • பாவகை – விருத்தம்
  • சமயம் = சமணம்
  • வேறு பெயர்:
    நீலகேசி தெருட்டு
    நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)
  • நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்

சூளாமணி

  • ஆசிரியர் – தோலாமொழித் தேவர்
  • காலம் – கி.பி.பத்தாம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 2330
    சருக்கம் – 12
  • பாவகை – விருத்தம்
  • சமயம் – சமணம்
  • பெயர்க்காரணம்: மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.

 

நூல்

சமயம் பாவகை ஆசிரியர் அமைப்பு

நாக குமார காவியம்

சமணம் விருத்தம்  

5 சருக்கம், 170 பாடல்

உதயன குமார காவியம் சமணம் விருத்தம்  

6 காண்டம், 369 பாடல்

யசோதர காவியம்

சமணம் விருத்தம் வெண்ணாவலூர் உடையார் வேள் 5 சருக்கம், 320 பாடல்
நீலகேசி சமணம் விருத்தம்  

10 சருக்கம், 894 பாடல்

சூளாமணி

சமணம் விருத்தம் தோலாமொழித்தேவர்

12 சருக்கம்,  2330 விருதப்பாக்கள்

சங்க இலக்கியம் – குறிப்புகள்

  • கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி”- புறப்பொருள் வெண்பாமாலை (ஐயனாரிதனார்)
  • சங்கத்தால் ஆய்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் சங்க இலக்கியம் ஆகும்.
  • சங்க இலக்கியம் வேறுபெயர் – திணை இலக்கியம், பதினெண்மேற் கணக்கு, பாட்டுத்தொகை (பாட்டு- பத்துப்பாட்டு, தொகை- எட்டுத்தொகை)

எட்டுத்தொகை 

    • அகம் சார்ந்த நூல்கள்
      1. நற்றிணை
      2. குறுந்தொகை
      3. ஐங்குறுநூறு
      4. கலித்தொகை
      5. அகநானூறு
    • புறம் சார்ந்த நூல்கள்
      1. புறநானூறு
      2. பதிற்றுப்பத்து
    • அகமும் புறமும்  சார்ந்த நூல்
      1. பரிபாடல்

அகம் சார்ந்த நூல்கள்

நற்றிணை

  • நல்ல திணை 
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 9-12
  • பாடல் எண்ணிக்கை: 400
  • பாடிய புலவர்கள்:175
  • வேறுபெயர்: நற்றிணை நானூறு
  • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • நற்றிணையில் இடம்பெற்றுள்ள இசைக்கருவிகள் – முழவு, முரசு, தண்ணுமை, கிணைப்பாறை, சிறுபறை, குழல் 
  • அறவோன்- மருத்துவன்
  • கணியர் – சோதிடம் பார்ப்பவர்
  • படிவ மகளிர்– தவம் செய்யும் பெண்கள்

குறுந்தொகை

  • நல்ல குறுந்தொகை
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 4 – 8
  • பாடல் எண்ணிக்கை: 400
  • தொகுத்தவர்: பூரிக்கோ
  • பெண்பாற் புலவர்கள்: அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஔவையார், காக்கைப்பாடினியார்
  • குறவன்- நிலத்தை உழுது  தினை விதைப்பவன்
  • சேணான்- உயர்வான பரணின் மீது இருப்பவர்
  • கோடியர்– கூத்தர்
  • அணிகள்: தலையணிகள், காசுமாலைகள், பூங்குழை, மின்னிழை, சேயிழை, மாணிழை
  • ஆரியக்கூத்தர்- மூங்கிலில் கட்டிய கயிற்றின் மேல் ஆடுபவர்.
  • விழா நிறைந்த ஊர் – சாறு கொள் ஊர்
  • நாழிகைக் கணக்கர் – இரவில் தூங்காது காலக்கணக்கைக்  கூறுபவர்.
  • கடப்பாட்டளன் – தன் பொருள் பலருக்கும் பயன்பட வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்டவன்.

ஐங்குறுநூறு 

  • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 3-6
  • பாடல் எண்ணிக்கை: 500
  • பாடிய புலவர்கள்: 5
  • தொகுத்தவர்: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
  • தொகுப்பித்தவர்: யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • நொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்தது.
  • சொல்லாட்சியால் பெயர் வைத்தல் – வேட்கைப்பத்து, வேழப்பத்து, களவன்பத்து
  • போரில் இறந்த வீரர்களுக்கு கல்நட்டு அக்கல்லில் வீரரின் உருவத்தையும் பெயரையும் எழுதி, எழுத்துரை ‘நடுகல்’ என்னும் பெயருடன் வழிப்பட்டனர். 

கலித்தொகை

  • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: அகம்
  • பாடல் எண்ணிக்கை: 150
    • பாலை- 35 பாடல்கள்
    • குறிஞ்சி- 29 பாடல்கள்
    • மருதம்- 35 பாடல்கள்
    • முல்லை- 17 பாடல்கள்
    • நெய்தல்- 37 பாடல்கள்
  • பாடிய புலவர்கள்: 5
  • ‘ஏறுதழுவுதல்’ குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
  • போர்க்களத்தில் வெற்றிப் பெற்ற பின் ‘துணங்கை கூத்து’ ஆடுவது குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
  • மகாபாரதம், இராமாயண காப்பிய செய்திகள் இடம்பெற்றுள்ளது. 
  •  
  • உரை- நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

அகநானூறு

  • அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டுள்ளமையால் அகநானூறு எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: அகம்
  • அடிவரையறை : 13-31
  • பாடல் எண்ணிக்கை: 400
  • பாடிய புலவர்கள்: 145
  • தொகுத்தவர்: மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திர சன்மர்
  • தொகுப்பித்தவர்: பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
  • வேறுபெயர்: நெடுந்தொகை
  • நூல் அமைப்பு:
    • களிற்றியானை நிரை- 1-120
    • மணிமிடைப்பவளம்-121- 300
    • நித்திலக் கோவை – 301- 400
  • பாடல் வைப்புமுறை
    • பாலைத்திணை- 1,3,5,7,… ஒற்றைப்படை எண்ணாக வருபவை 
    • குறிஞ்சித்திணை – 2,8,12,18….
    • முல்லைத்திணை – 4,14,24,…
    • மருதத்திணை- 6,16,26,…..
    • நெய்தல் திணை – 10,20,30,……
  • குடவோலை முறை பற்றி குறிப்பிடுகிறது.
  • காவிரிக் கரையில் பங்குனி விழா நடைபெறுவது பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

புறம் சார்ந்த நூல்கள்

புறநானூறு

  • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: புறம் 
  • பாடல் எண்ணிக்கை – 400
  • வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு
  • புறநானூறு தோன்றிய காலம் தமிழகத்தின் வீரயுகம் என்றும் தமிழகத்தின் பொற்காலம் என்றும் அழைக்கபடுகிறது.
  • பண்டைய காலத்தில் வாழ்ந்த பேரரசர்கள்,சிற்றரசர்கள், வீரர்கள் பற்றிய செய்திகளையும் வழிபாட்டு முறைகள், மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பற்றி செய்திகளையும் தருவதால் தமிழரின் வரலாற்றுப் பெட்டகம் என்று அழைக்கபடுகிறது.
  • கடையேழு வள்ளல்கள்
    • பாரி-பறம்பு மலை
    • பேகன்-பழனி மலை
    • ஓரி- கொல்லிமலை
    • காரி- மலையமான் நாடு
    • ஆய்-பொதியமலை
    • அதியன்-தகடூர்
    • நள்ளி- தோட்டி மலை

பதிற்றுப்பத்து

  • பத்து சேரமன்னர்களையும் பத்துப் பத்தாக நூறு பாடல்களில் பாடியுள்ளமையால் பதிற்றுப்பத்து எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்: புறம் 
  • பாடல் எண்ணிக்கை- 100 (கிடைத்தவை 80 )
  • பாடாண் திணையில் மட்டுமே அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
  • இரும்புக்கடலை என்றும் அழைக்கபடுகிறது.
  • ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை,வண்ணம், தூக்கு, பெயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
  • திருமணத்தின் போது அருந்ததி என்னும் விண்மீனைப் பார்க்கும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறது.
  • நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.

அகமும் புறமும் சார்ந்த நூல்

பரிபாடல்

  • பரிந்து செல்லும் ஓசையுடைய பாடல்களை கொண்டுள்ளதால் பரிபாடல் எனும் பெயர் பெற்றது.
  • பாடுபொருள்- அகம் புறம் சார்ந்தது.
  • பாடல் எண்ணிக்கை-70(கிடைத்தவை 22)
    • திருமால்-6
    • முருகன்-8
    • வையை-8
  • அடிவரையறை – 25-40
  • பாடிய புலவர்கள்- 13
  • வல்லோன்- ஓவியம் வரைபவர்
  • உரை- பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.
  • அகலிகை, மன்மதன் ஓவியங்கள் திருபரங்குன்றத்தில் இடம்பெற்றிருந்ததை பரிபாடல் மூலம் அறிய முடிகிறது.

பத்துப்பாட்டு

  • திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது.
  • ஆற்றுப்படை நூல்கள்
    • திருமுருகாற்றுப்படைநக்கீரர்
    • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்
    • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
    • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
    • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்
  • அகம் சார்ந்த நூல்கள்
    • முல்லைப்பாட்டு : நப்பூதனார்
    • குறிஞ்சிப்பாட்டு – கபிலர்
    • பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  • புறம் சார்ந்த நூல்கள்
    • திருமுருகாற்றுப்படைநக்கீரர்
    • பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்
    • சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
    • பெரும்பாணாற்றுப்படை:கடியலூர் உருத்திரங்கண்ணனார்
    • மலைபடுகடாம்பெருங்கெளசிகனார்
    • மதுரைக்காஞ்சி: மாங்குடி மருதனார்
  • அகம் புறம் சார்ந்த நூல்
    • நெடுநல்வாடை
  • பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது.

திருமுருகாற்றுப்படை

  • பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை.
  • இது 317 அடிகள் கொண்டது. 
  • முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
  • இயற்றியவர் நக்கீரர். 
  •  இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

பொருநராற்றுப்படை

  • சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவன் ஆவார்.
  • இயற்றியவர் – முடத்தாமக் கண்ணியார் 
  • இப்பாட்டு 248 அடிகள் கொண்டது.
  • போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம் இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது இது.

பெரும்பாணாற்றுப் படை

  • இயற்றியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
  • பாட்டுடைத் தலைவன் – காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன்.
  •  500 அடிகள் கொண்டது. 
  • பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.

சிறுபாணாற்றுப் படை

  • இயற்றியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
  • பாட்டுடைத் தலைவன் -ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடன்
  • இது 269 அடிகள் கொண்டது.
  • சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.

மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)

  • இயற்றியவர் – இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
  • பாட்டுடைத் தலைவன் – நன்னன் சேய் நன்னன்
  •  583 அடிகள் கொண்டது.
  • பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது.
  • மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

மதுரைக் காஞ்சி

  • பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது.
  • இது, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றியது.
  • மதுரை மன்னனுக்குக் கூறிய காஞ்சியாகையால் மதுரைக்காஞ்சியாயிற்று (காஞ்சி – நிலையாமை).

குறிஞ்சிப் பாட்டு

  • இயற்றியவர்  – கபிலர்
  • இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.
  • குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று.
  • பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு.
  • இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. 

முல்லைப் பாட்டு

  • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.

  • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.

  • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.

  • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.

பட்டினப்பாலை

  • பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது  பொருள். 
  • 301 அடிகள் கொண்டது.
  • இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர்.
  • இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான்.
  • இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
  • பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது.
  • அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.

நெடுநல்வாடை

  • இது 188 அடிகள் கொண்டது.

  • இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

  • காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.



திருமுருகாற்றுப்படை

  •  ஆசிரியர் நக்கீரர். நெடுநல்வாடையைப் பாடியவரும் இவரே.
  • 317 அடிகளைக் கொண்டது.
  • பாடப்பட்டவன் முருகன். ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போன்(முருகன்) பெயர் பெற்றது.
  • ஆசிரியப்பாவால் ஆனது.
  • திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்துப் போன்று அமைந்துள்ளது.
  • இதை புலவராற்றுப்படை எனவும் வழங்குவர்.
  • முருகனிடம் அருள் பெற்ற ஒருவர் அருள் வேண்டும் ஒருவரை ஆற்றுப்படுத்தும் விதமாக அமைகிறது.
  • பத்துப்பாட்டுள் முதலில் பதிப்பிக்கப் பெற்றது திருமுருகாற்றுப்படை(1851- ஆறுமுக நாவலர்). இந்நூல் அறுபத்தி இரண்டு பதிப்புகளைக் கண்டுள்ளது.
  • பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல். கடவுள் வாழ்த்தாகக் கருதி முதலில் வைக்கப்பட்டது.
  • முதற்பகுதி: திருப்பரங்குன்றம் மலை: அதனைச் சூழ்ந்த இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் செய்த போர் ஆகியன இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன.
  • இரண்டாம் பகுதி: முருகனின் ஆறு திருமுகங்களின் சிறப்பு, பன்னிரு கைகளின் செயல், திருச்செந்தூர் சிறப்பு ஆகியன கூறப்பட்டுள்ளன.
  • மூன்றாம் பகுதி: முருகனை வழிபடும் முனிவர்களின் பெருமை, பழனியில் வழிபாட்டிற்கு வரும் மகளிரின் இயல்பு ஆகியன கூறப்பட்டுள்ளன.
  • நான்காம் பகுதி: திருவேரகத்தில் முருகனை வழிபடுவோரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
  • ஐந்தாம் பகுதி : மலை நாட்டு மக்கள் குரவைக் கூத்தாடி வணங்கும் முறைகள் முதலியன கூறப்பட்டுள்ளன.
  • ஆறாம் பகுதி: முருகன் எழுந்தருளும் இடங்களும், அவனிடம் சென்று அருள்பெறும் முறைகளும் பழமுதிர்ச்சோலையின் அருவிச் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.
  • திருமுருகாற்றுப்படை கூறம் முருகனின் அறுபடை வீடுகள்
      1.  திருப்பரங்குன்றம்
      2.  திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
      3.  திருஆவினன் குடி (பழனிமலை, சித்தன்வாழ்வு)
      4. திருவேரகம் (சுவாமி மலை)
      5.  குன்றுதோறாடல்
      6.  பழமுதிர் சோலை
  •  11ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல். இருதொகுப்பில் (பத்துப்பாட்டு, திருமுறைகள் ) இடம் பெற்ற ஒரே நூல் திருமுருகாற்றுப்படை

பாடல் வரிகள்

  • “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு”- தொடக்கம்
  • “பழமுதிர் சோலை மலைகிழவோனே” முடிவு
  • “கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு”
  • “ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆல்அமர் செல்வ”
wpChatIcon
error: Content is protected !!